|
Post by saidevo on Sept 9, 2013 8:27:55 GMT 5.5
அனைவருக்கும் இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
60. பிள்ளையார் போற்றுவோம் (அறுசீர் விருத்தம்: காய் மா விளம் காய் காய் காய்)
ஆனைமுகம் பார்த்தால் தடையெலாம் .. காலடியில் மூஞ்சூறாய் ஓடிவிடும் பானைவயின் பார்த்தால் பகையெலாம் .. ஆதவன்முன் பனியெனவே ஓடிவிடும் கானமதைக் கேட்டால் பிள்ளையார் .. காதுகளில் தேனருவி வந்துவிழும் நானவனை இன்றே போற்றுவேன் .. பானகமும் மோதகமும் முன்வைத்தே.
மாணவரின் கல்வி யோங்குமே .. காணவரின் பிள்ளையாரின் உருவினையே கோணலெலாம் மாறிச் சீர்ப்படும் .. கோலவிழிக் கோமகனை வழிபடவே சாணேறில் மீண்டும் சறுக்கிடும் .. சாதனைகள் கொடிமரமாய் உயர்ந்திடுமே நாணமுறும் மாதர் வாழ்வினில் .. நாலுவகைப் பேறுகளும் கூடிடுமே.
கணபதியை நாளும் போற்றுவோம் .. காலமெலாம் கவலையின்றி வாழ்வோமே குணநலன்கள் யாவும் சேருமே .. கூப்பிட்டுத் துதிசெய்து பாடிடவே கணப்பொழுதில் நீங்கும் தடையெலாம் .. கணபதியே சுற்றமெனக் கொண்டாலே வணங்கிடுவோம் சென்னி நிலம்பட .. மணமெல்லாம் வாழ்வினிலே பெற்றிடவே.
--ரமணி, 09/09/2013, கலி.24/05/5114 --(பிள்ளையார் சதுர்த்தி தினம்)
*****
|
|
|
Post by Kanchi Periva on Sept 9, 2013 9:07:54 GMT 5.5
Brilliant composition, many thanks for sharing Sri saidevo
|
|
|
Post by Sumi on Sept 9, 2013 11:19:05 GMT 5.5
அருமை Sri saidevo. இதுவரை, தங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பின் அழகை கண்டு வியந்திரிகின்றோம். ஆனால், சமீபகாலமாக தாங்கள் இயற்றும் தமிழ் கவிதைகள் அழகோ அழகு. மிக்க நன்றி. தங்களின் தன்னலமற்ற இறைப்பணி தொடர எங்களது வாழ்த்துகள். மஹா கணபதியின் அருளும், நம் மஹா பெரியவாளின் ஆசியும் தங்களுக்கு என்றும் துணை நிற்கட்டும் என்று மனமாற வாழ்த்துகிறோம்.
|
|
|
Post by saidevo on Sept 10, 2013 9:34:37 GMT 5.5
என் கவிதையைப் பாராட்டிய காஞ்சி பெரியவா, சுமி அவர்களுக்கு நன்றி. சில மாதங்களுக்கு முன்பிருந்து யாப்பு பயிலத் தொடங்கி இன்னும் கற்று வருகிறேன். யாப்பு பற்றி நான் கவிதையில் எழுதிய குறிப்புகளை இந்த வலைதளத்தில் பதிப்பித்து வருகிறேன்: www.eegarai.net/t91128-topicஇன்னமும் என் யாப்பிலக்கண சுயகல்வி தொடர்கிறது, பாதிகூட முடியவில்லை. கற்றவை முயலும் அளவிலேயே அமைவன என் இப்போதய கவிதைகள். ஏதேனும் சொற்பொருளொசை நலன்கள்/நயங்கள் இருந்தால் அவற்றை என் முயற்சிகளுக்குக் கிடைத்த வாழ்த்தாகக் கருதுகிறேன். தொடர்ந்து என்னுடைய ஆன்மீகக் கவிதைகளை இத்தளத்திலும் இடுகிறேன். அன்பர்கள் படித்துக் கருத்துச் சொன்னால் மகிழ்வேன்.
|
|
|
Post by sukam7129 on Sept 10, 2013 12:52:00 GMT 5.5
We are enjoying all the contributions because of the team work of a few individuals of Periyava Forum. My sincere pranams to all the Contributors and let me pray for their good health and all the prosperity in life.Hara Hara Shankara and Jaya Jaya Shankara. Sukam 7129
|
|
|
Post by kahanam on Dec 28, 2013 12:08:34 GMT 5.5
Sri Saidevo writes as Sri Ramani in Tamil so beautifully. Maha Ganapathiyee Namaha! Jaya Jaya Shankara, Hara Hara Shankara!
|
|