|
Post by sundar on Mar 5, 2012 16:35:03 GMT 5.5
சந்நியாசம் ஏற்றது குறித்து மகா ஸ்வாமிகள், சில கருத்துகளைச் சொல்லியிருந்தார்...
''நானாகத் துறவு பூண்டுசந்நியாச ஆடை அணியவில்லை;கொஞ்ச காலத்துக்கேனும் ஒரு குருவின் கீழே பயிலும் பாக்கியமும் எனக்குக் கிடைத்ததில்லை. சந்நியாசம் ஏற்ற முதல் நாளே ஒரு மாபெரும் சமஸ்தானத்தின் வசதிகளும் பொறுப்புகளும் என்னைச் சூழ்ந்து கொண்டன.
நான் சந்நியாச ஆசிரமம் ஏற்றபோது தும்முலூர் ராமகிருஷ்ணய்யாவும் பசுபதி ஐயரும் கலவையில் இருந்தனர். இருவரும் தென்னாற்காடு ஜில்லா கோர்ட்டில் பணியாற்றி வந்தனர். இவர்கள், என் குருவின் குருவுக்கு அத்யந்த சீடர்களாக விளங்கி யவர்கள்! என் இளமை வாழ்வை சிறப்பாக உருவாக்குவதற்கு இவர்கள் இருவரும் பெருமளவில் உதவினார்கள் என்பது பிற்பாடுதான் தெரிந்தது.
பசுபதி அடிக்கடி என்னைத் தனியே சந்திப்பார். அவர் என்னை சந்திக்கும் வேளைகளில் என்னிடம் என்னென்ன பலவீனத்தைக் கவனித்திருந்தாரோ அதையெல்லாம் ஒவ்வொன்றாகச் சுட்டிக் காட்டு வார். அவற்றைக் களைவதற்கு, தான் கூறும் யோச னைகளைக் கேட்கும்படி மன்றாடுவார். இதற்காக, அவர் என்னிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டியும் இருந்தது. இதுகுறித்து அவர் வேடிக்கையாக ஒரு பதில் சொல்வார்...அதாவது, சந்நியாச ஆசிரமத்தில் இருக்கும் என்னிடம், சில நேரங்களில் கண்டிப்பாக நடந்து கொண்டதால், பிற்பாடு அவர் மனம் வேதனைப்படுமாம்... எனவே, அதற்குண்டான பிராயச்சித்தங்களை யும் அன்றிரவே செய்து விடுவாராம்! இதிலிருந்து வாழ்க்கை எனக்குக் கற்பித்த பாடமாக ஒன்றே ஒன்றைப் புரிந்து கொண்டேன். மற்றவர் களுக்காக மட்டுமே வாழ்வதற்காகவே இறைவன் சிலரைப் படைக்கிறான்; படைத்தும் வருகிறான்.''
Sundar
|
|
|
Post by krsiyer on Mar 6, 2012 11:04:49 GMT 5.5
His Greatness ! Thanks for sharing. Jaya Jaya Sankara, Hara Hara Sankara !
|
|