|
Post by madambakkamshanks on Feb 20, 2013 22:23:18 GMT 5.5
மஹாபெரியவா காஞ்சி மஹாபெரியவா மண்ணுலகம் வந்த சிவனே மஹா பெரியவா மஹாபெரியவா காஞ்சி மஹாபெரியவா மனக்குறைகள் தீர்த்து மகிழும் மஹா பெரியவா
சந்திரப் ப்ரகாஸரே மஹாபெரியவா சாந்த ஸ்வரூபியே மஹாபெரியவா சிருங்கார காமாக்ஷியே மஹாபெரியவா சீர் செய்வார் நம் வாழ்வை மஹாபெரியவா சுற்றி சுற்றி வந்தாரே மஹா பெரியவா சூழ்ந்த துன்பம் நீக்கிடவே மஹாபெரியவா சென்ற இடம் யாவிலும் மஹாபெரியவா சேவிப்போர் குறை தீர்த்தார் மஹாபெரியவா சைதன்யம் மிகுந்தவரே மஹாபெரியவா சொக்கிடும் மகிமை புரிவார் மஹாபெரியவா சோகங்கள் தீர்த்திடுவார் மஹாபெரியவா சௌக்கியமாய் வாழ வைப்பார் மஹாபெரியவா
மஹாபெரியவா காஞ்சி மஹாபெரியவா மஹான்களின் மஹானே மஹாபெரியவா மஹாபெரியவா காஞ்சி மஹாபெரியவா மஹிமை பல புரிந்தவரே மஹாபெரியவா
தங்கிடும் அருள் தருவார் மஹாபெரியவா தாங்கிடுவார் நம் துன்பம் மஹாபெரியவா திண்ணமாய் வாழச்செய்வார் மஹாபெரியவா தீர்த்திடுவார் ஐயங்களை மஹாபெரியவா துன்பக் கடலில் வீழ்ந்தோரை மஹாபெரியவா தூக்கி விட்டே அருள் புரிவார் மஹாபெரியவா தெற்றுப் பல் தெரிய சிரிப்பார் மஹாபெரியவா தேற்றிடுவார் நம் மனதை மஹாபெரியவா தைரியம் அளிப்பாரே மஹாபெரியவா தொங்கிய முகம் கண்டால் மஹாபெரியவா தோணியாய் உதவிடுவார் மஹாபெரியவா தோற்கச் செய்வார் தோல்வியை மஹாபெரியவா
மஹாபெரியவா காஞ்சி மஹாபெரியவா மஹாவித்யை நிறைந்தவரே மஹாபெரியவா மஹாபெரியவா காஞ்சி மஹாபெரியவா மஹாசிவ தரிசனமே மஹாபெரியவா
நம்பியே கும்பிட்டால் மஹாபெரியவா நாளும் நம்மை காப்பாரே மஹாபெரியவா நிலவு முகம் கொண்டவரே மஹாபெரியவா நீலகண்ட சிவனுருவே மஹாபெரியவா நுரை போல கரையச் செய்வார் மஹாபெரியவா நூல் சிக்கல் வாழ்வினையே மஹாபெரியவா நெற்றி காண வெற்றி தருவார் மஹாபெரியவா நேத்திர தீட்சை அளிப்பார் மஹாபெரியவா நைந்த வாழ்வை பூக்கச் செய்வார் மஹாபெரியவா நொடிப் பொழுதில் வினை தீர்ப்பார் மஹாபெரியவா நோகாமல் நோய் தீர்ப்பார் மஹாபெரியவா நோக்கிட அவர் நவ நிதி தரும் மஹாபெரியவா
|
|
|
Post by pannvalan on Feb 20, 2013 23:00:01 GMT 5.5
நீங்கள் எழுதிய இப்பாடலை, கீழ்க்காணும் ஓசைநயத்திலேயே கொண்டு போயிருந்தால், இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.
காடுமலை ஏறிவந்தோம், சரணம் ஐயப்பா காத்திடவே வேண்டுமய்யா, சரணம் ஐயப்பா
அன்புடன், பண்வளன்
|
|
|
Post by Sumi on Feb 21, 2013 8:19:36 GMT 5.5
Beautiful verses on our Mahaswami. Periva's kalayana gunangal is very nicely written. Thank you Sir.
|
|
|
Post by nyogeshwaran on Feb 21, 2013 10:01:16 GMT 5.5
Excellent Slogam!
|
|
|
Post by kramans on Feb 21, 2013 10:47:36 GMT 5.5
நல்ல கோர்வையான, அர்த்தமுள்ள பாடல் !!! நல்ல கற்பனையும் சிந்திக்க வைக்கும் பாடல்.நன்றி .
|
|
|
Post by kahanam on Mar 17, 2013 12:26:40 GMT 5.5
Great devotional verses full of feeling> Maha Periyava Bless us all. Jaya Jaya Shankara, Hara Hara Shankara!
|
|
|
Post by krsiyer on Mar 18, 2013 17:00:57 GMT 5.5
அருமை.
|
|
|
Post by balasubramani1956 on Mar 28, 2013 16:39:53 GMT 5.5
Great devotional verses full of feeling in what ragga we sing if any body knows please post. Jaya Jaya Shankara, Hara Hara Shankara! Maha Periava Thiruvadigale Saranam
|
|
|
Post by madambakkamshanks on Apr 3, 2013 12:46:55 GMT 5.5
Shivaaya Namaha,
Actually, I caught the raaga of "anburuvam aanavare raghavendira" song by bombay sisters.... I was very much impressed of that raaga and wrote more than 10-15 songs in the same mettu for all gods. Even Olipadaitha kanninaai va va va will also be suitable for this song if we sing in high tone and tempo...
|
|