Post by Kalakad S.S.Mani on Feb 1, 2012 6:50:13 GMT 5.5
நமஸ்காரம்.
வேறு வீடு மாறி செல்ல நேரிட்டதால் நான் சேர்த்து வைத்திருந்த, ஆனால் மறந்தேபோயிருந்த பலசாமான்கள் வெளியே வர ஆரம்பித்தன. அவற்றில் சில புத்தகங்களிலிருந்து கிழித்துஎடுக்கப்பட்ட பக்கங்களில் நான் கண்ட ஒரு கட்டுரையை, என்னால் இயன்ற வரை கணினிப்படுத்தி சமர்ப்பிக்கிறேன். (மூலப்புத்தகத்தின் பெயர் என்ன என்று தெரியவில்லை)
ஸமஸ்கிருத எழுத்துக்களைப் எனக்கு படிக்கத்தெரியாததால் இடையிடையே வரும் ஸ்லோகங்களை விட்டுவிட்டு சிறு குறிப்பு மட்டுமே அங்கெல்லாம் கொடுத்துள்ளேன்.
============================================
யுகயுகமாய் கணக்கற்ற ரிஷிகளையும் முனிவர்களையும் தன்னகத்தே நிறுத்தி, மறுமைக்கு வேண்டிய நற்பணிகளை நாள்தோறும் நாட்ட ரமணீயமானை இடத்தை இப்புண்ணிய பாரதத்தில் அளித்து வருகிறது புண்ணிய நர்மதை நதி தீரம். தவத்திற்குகந்த இடம் ரேவா (நர்மதை) கரைகள் என்று புராணங்கள் கூறும். இதன் இரு கரைகளும் தபோபூமியாகும். இந்துஜா, சுஜாரி, சிவகன்யா, மேகஸுதா, ருத்ரரேகா, ரேவா என்று பலவிதமாக அழைக்கப்படும் நர்மதைக்கரைகளில் நெடிதுயர்ந்த மரங்கள் அடர்ந்த வனங்களும், வானளாவும் பர்வதங்களும், ஆழ்ந்த குகைளும் உள்ளன. ராஜபோகம், நல்வாழ்வு, பெறும்புகழ், புனித பேறு இவைகளனைத்தையும் ஒருங்கேபெற்ற மாந்தர்களும் இந்நதியை நாடி சத்சித் ஆனந்தம் எய்தினர். இந்திரன், வருணன், அக்னி, முதலிய தேவர்களும், சூரியன், சந்திரன், செவ்வாய், சனி முதலிய க்ரகங்களும், நாரதர், வியாசர், கபிலர், மார்க்கண்டேயர், பராசரர், ச்யவனர், ஜமதக்னி, கௌதமர், வால்மீகி, ததீசி, மாதங்கர், ஜாபாலி, சாண்டில்யர், சப்தரிஷிகள் முதலிய தவச்ரேஷ்டர்களும், பர்த்ருஹரி, பாண்டவர், திலீபன் முதலிய பேரரசர்களும் இந்நதிக்கரைகளில் பெருந்தவமியற்றி பெறும்பேறு பெற்றுள்ளனர்.
(ஸ்கந்த புராணம் ரேவா காண்டத்திலிருந்து இரண்டு வரிகளில் உள்ள ஒரு ஸ்லோகம் இங்கு உள்ளது)
இப்படியாக ஸ்கந்த புராணத்தில் ரேவா காண்டம் முழுவதும் நர்மதையின் மகிமைகளைக்காணலாம். இந்நதியின் இருமறுங்கிலும் கணக்கற்ற ஆண்டுகளகாக இருந்து வரும் யாக குண்டங்களையும் பர்ணசாலைகளையும் இன்றும் தரிசிக்கலாம்.
நர்மதையின் மகத்துவத்தை அறிந்துதான் காலடி கொடுத்த பாலகன் தன் குருவை இந்நதிக்கரைகளில் தேடினான் போலும்.
ஆதிசங்கரருக்கு சந்யாசம் அளித்து, சாஸ்த்திரங்களை கசடறக்கற்றுக் கொடுத்த குருகோவிந்த பகவத்பாதர் குகை, நர்மதைக்கரையில் தான் இருந்த்து என்று பல சங்கரவிஜய நூல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் குகையின் இருப்பிடத்தையோ, அதனைப்பற்றிய ஏனைய விவரங்களையோ திட்டவட்டமாக அந்நூல்கள் தெரிவிக்கவில்லை.
ஆதிசங்கரருக்குப் பிறகு இக்குகைகளைப் பற்றி எவரும் சிரத்தை காட்டியதாகக் காணவில்லை. இவ்விவகாரம் அப்படியே மங்கிவிட்டது.
நர்மதையக்கொண்டுள்ள மாநிலத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்த்தால், நானே இக்குகையின் சிறப்பை வெளிஉலகுக்குக் கொண்டு வரக்கூடாதா என்றகேள்வி என் மனதை அறிக்கவே அதையே ஏற்று, கண்டுபிடித்துவிட்டுத்தான் மறுகாரியம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு, 1971-ஆம் ஆண்டு இவ்வாராய்ச்சியைத்தொடங்கினேன். அனந்தஸ்ரீ விபூஷித ஜகத்குரு சங்கராச்சாரியாள் ஜ்யோதி பீடாதீஷ்வர் ஸ்வாமி ஸ்வருபானந்த ஸரஸ்வதி மகராஜ் அவர்கள் துவக்கத்திலிருந்தே என் பணிக்கு ஊக்கம் அளித்து வந்தனர். அவரது அபிப்ராயப்படி முதலில் சாங்கல்காட் என்ற குக்கிரமத்தை அடைந்தேன். கோட்டேகாவுங் என்னும் ரயில் நிலையத்திலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள அக்கிராமத்துக்கு நடந்துதான் செல்லமுடியும். நர்மதையோடு ஹிரன் என்ற ஆறு கலக்கும் இடமான சாங்கல்காட் முற்பெயர் சங்கர்காட் என்று கூறுவார்கள். நர்மதை ரகசியம் என்ற இந்தி புத்தகத்தில் ஆதிசங்கரர் இங்கு இருந்து உள்ளார் என்று படித்தவுடனேயே என் உற்சாகம் கரைபுரண்டோடியது. கிராமத்தை அடைந்த போது இரவாகிவிட்டது. மறுநாள் காலை உள்ளூர்வாசிகளின் உதவியோடு அங்குள்ள குகையைக் காணச்சென்றேன். நர்மதையின் மறுகரையில் குகை இருந்த்தால் நதியைக்கடக்கவேண்டியதாயிற்று. அதற்காக அங்கு “டோங்கா” என்ற குறுகிய படகின் உதவியோடு ஆற்றைக்கடக்கலானோம். அதில் இரு நபர்கள் மட்டுமே உட்காரலாம். அதற்கு அனுபவமும் வேண்டும். சைக்கிள் பாலன்ஸைப்போல இந்த டோங்காவிலும் பாலன்ஸ் முக்கியம். நடு நர்மதையில் என் பாலன்ஸ் திவாலாகி விடவே நானும் படகோட்டியும் கவிழ்ந்து டோங்காவோடு ஆற்றில் மூழ்கினோம்! காவேரியின் நீச்சல் பழக்கம் அப்போது கைகொடுக்கவே உயிர் தப்பினேன். மேற்கொண்டு பிரயாணம் சொட்ட சொட்ட ஈர உடையோடுதான்: அதுவும் கடுங்குளிர் காலத்தில்!
நர்மதைக்கரையோடு சுமார் 4 கி.மீ.நடந்தபிறகு ஒரு மலை மேட்டை அடைந்தோம். அங்குதான் ஒரு குகை தென்பட்டது. நதியிலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திலிருந்தது. புலி முதலிய துஷ்ட மிருகங்கள் அக்குகையில் பதுங்கி இருந்து, கால்நடைகளைத்தாக்கி வந்ததால் குகையின் முகப்பு பல ஆண்டுகளாக மூடப்பட்டுவிட்டதாக அறிந்தேன். குகையின் வாசலில் ஓர் பெரிய மணி கட்டியிருப்பது போல் கற்பாறை ஊசலாடியது. அதைத்தட்டினால் சங்கநாதம்போல் ஒலி வெளிப்பட்ட்து. அப்பிராந்தியம் முழுவதுமே காலை அழுத்திவைத்து நடந்தால் வெண்கலத்வனி எழும்புகிறது. குகை மிக நீளமானது என்றும், குகைக்குள் வெளிச்சம் வர மேற்புரம் துளைகள் இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் இரண்டு நாட்கள் தங்கி வேறு சில குகைகளையும் கண்டு, கிடைத்த விவரங்களை ஸ்வாமி ஸ்வரூபானந்தர் அவர்களிடம் சமர்ப்பித்தேன். ‘சங்கர்ரும் ஷண்மதமும்’ என்ற ஆங்கிலப்புத்தகத்தில் ’சங்கர கங்கா’ என்ற இடத்தில்தான் ஆதிசங்கரர் தன்குருவைச் சந்தித்தார் என்றும், அந்த இடம் காஞ்சி பரமாச்சார்யாளுக்கு மட்டுமே தெரியும் என்று குறிப்பேடு இருப்பதையும் ஸ்வாமிகளிடம் தெரிவித்தேன். இதற்காக ஒருமுறை காஞ்சி சென்று பரமாச்சார்யாளைத் தரிசனம் செய்துவிட்டு வரும்படி அவர் என்னைப்பணித்தார்.
பலமாதங்களாக தேனம்பாக்கத்தில் மௌனமேற்று வந்த மாமுனிவரைக்காண்பதே அரிது என்றும் அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி வந்தபோது கூட அவரிடம் ஏதும் பேசவில்லை என்றும் சென்னை அடைந்த என்னை என் உறவினர்கள் உற்சாகமிழக்கச்செய்தனர். இதனால் மனந்தளராமல் மறுநாள் காலையில் தேனம்பாக்கத்தை அடைந்தேன். அங்கே யாரோ உரக்கப்பேசிக்கொண்டிருந்தது காதில் விழவே, அருகில் இருந்த நபரிடம் பெரியவாள் சந்நிதானத்தில் ஏன் இப்படி சத்தம் போட்டுப் பேசுகிறார்கள் என்று வினவினேன்.
உடனே அவர் என் வாயைப்பொத்தி, “ அபச்சாரம்! நீங்கள் இவ்வாறு கேட்பது அபச்சாரம்!! பல நாட்கள் கழித்து இன்றுதான் பெரியவாள் மௌனத்தை கலைத்திருக்கிறார்கள். அத்தெய்வத்திருக்குரலைக் கேட்க நீங்கள் பாக்யம் செய்து இருக்கிறீர்களே! அவர் தான் இப்போது பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார். என் ரோமம் சிலிர்த்தது. இறையருளைக்கண்டு வியந்தேன். சிஷ்யர் மூலமாக நான் வந்திருப்பதை அறிந்த அச்சிரேஷ்டர், என்னை பிற்பாடு கூப்பிடுவதாகவும், அதுவரை நேரத்தை வீணடிக்காமல் நான் எடுத்துப்போன புத்தகங்கள், குறிப்புக்கள், வரைபடங்கள் முதலியவற்ரை நன்றாக பார்த்துவைத்துக்கொள்ளும் படியாகவும் ஆணை பிறப்பித்தார்கள். எனக்கோ தூக்கிவாரிப்போட்டது.
எதற்காக நான் வந்துள்ளேன் என்பதையே அவருக்குத் தெரிவிக்கவில்லை. நான் இந்த விஷயமாகப் புத்தகங்களோடு அங்கு வந்திருப்பது எப்படி இம்மகானுக்கு தெரிந்தது என்ற ஆச்சர்யத்தால் திக்குமுக்காடினேன். பரிட்சைக்கூட்த்தில் நுழையும் முன் பரபரப்புடன் புத்த்கங்களைபுரட்டி மனப்பாடம் புரியும் மாணாக்கனைப்போல் நான் திரட்டியவைகளை அவசரமாக அசை போடலானேன்.
நான் ஆவலுடன் எதிபார்த்துக்கொண்டிருந்த அச்சுப நேரம் வந்தது. பெரியவாள் என்னை உள்ளேயே அனுமதித்து நேருக்கு நேர் உட்கார்ந்து அவருடன் பேச வசதி செய்து தந்தார். பேச்சு துவங்கியது.
“நீ எவ்வளவு தூரம் இதைப்பற்றி ஆராய்ந்து இருக்கிறாய்? அதைக் சொல்லு!”
ஆக்ஞை பிறந்தது. ஆனால் நான் தயங்கினேன். அதைக்கூற ஆரம்பித்தால் நேரம் போவது தெரியாது. மேலும் மிகத்தொலைவான இடங்களிலிருந்து வந்திருக்கும் பக்தர்கள் தங்கள் துயரங்களை அவரிடம் எடுத்துக்கூறக் காத்திருக்கும் போது அவர்களது அரிய நேரத்தை அபகரிப்பது எனக்கு அழகா என்று எண்ண ஆரம்பித்தேன்.
பெரியவாள் மீண்டும் கேட்டார்.
“ஏன் பேசாமலிருக்கே! தைரியமாகச்சொல். மற்றவர்களைப்பற்றி நீ கவலைபடாதே. அவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே!’
என் யோக்யதையை மற்றவர்களும் அறிந்து கொள்ளட்டுமே என்று அவர் கூறுவதாக எண்ணி சுமார் 20 நிமிடங்கள் இதைப்பற்றி விவரித்தேன். விஷயத்தை எடுத்துக்கூறும் போது தட்டுமாறிய இடங்களைச்சரிப்படுத்தியும், உச்சரிப்பில் எழும் குற்றங்களைத்திருத்தியும் என்னை ஊக்குவித்தார். முடிவில் சுமார் ஐந்து நிமிடங்கள் தியானத்திலிருந்துவிட்டு அருளுரை வழங்கினார்கள்.
”நீ பார்த்த சாங்கல்காட் குகை நதியிலிருந்து தூரத்தில் இருக்கிறது என்கிறாய். ஆகையால் அந்த குகையாக இருக்காது. குகை நதியின் பக்கத்திலேயே இருக்க வேண்டும். நதியின் நீர் குகைக்கு கொண்டுவர ஓர் வசதியும் அக்குகையில் இருக்க வேண்டும். ஸ்வரூபானந்தர் அந்தப்பக்கத்துக்காரர் தானே, நான் சொன்னதை வைத்துக் கொண்டு மீண்டும் அவரையே பார்.”
திருப்பி உதைக்கப்பட்ட பந்து போல் ஸ்வாமி ஸ்வரூபானந்தர் காலடியில் வந்து வீழ்ந்தேன். ஆராய்ச்சியும் தொடர்ந்தது. சில ஆண்டுகள் இவ்வாறு கழிந்தன. இதற்கிடையில் தண்டலம் ஸ்ரீ சங்கரநாராயண சாஸ்திரிகளால் எழுதி 1916ல் வெளியிடப்பட்ட ‘சங்கரர் காலம்’ என்ற ஆங்கில நூலைக்காண நேர்ந்த்து. இதில் குகையைபற்றிய உண்மை விவரங்களை அறிந்தேன்.
ஆதிசங்கர்ரின் குரு ஸ்ரீ கோவிந்த பகவத்பாதர் அவருடைய குரு ஸ்ரீ கௌடபாதரும் எந்தக்குகையில் தவமியற்றினரோ அதேகுகையில் தான் ஆதிசங்கரரும் தங்கினார் என்றும், அங்குதான் ஸ்ரீ கோவிந்த பகவத்பாதர் ஸித்தி அடைந்தார்கள் என்றும், அக்குகை எங்குள்ளது என்றும், மேலும் சில விவரங்களும் அப்புத்தகத்தின் மூலம் எனக்குப்புலப்படலாயின. இதன் அடிப்படையில் அக்குகை கொண்ட அருந்தலத்தை 1978ம் ஆண்டு சிவராத்திரி நன்னாள் அன்று காண பெறும் பேறு பெற்றேன்.
(To be contd in part II)
வேறு வீடு மாறி செல்ல நேரிட்டதால் நான் சேர்த்து வைத்திருந்த, ஆனால் மறந்தேபோயிருந்த பலசாமான்கள் வெளியே வர ஆரம்பித்தன. அவற்றில் சில புத்தகங்களிலிருந்து கிழித்துஎடுக்கப்பட்ட பக்கங்களில் நான் கண்ட ஒரு கட்டுரையை, என்னால் இயன்ற வரை கணினிப்படுத்தி சமர்ப்பிக்கிறேன். (மூலப்புத்தகத்தின் பெயர் என்ன என்று தெரியவில்லை)
ஸமஸ்கிருத எழுத்துக்களைப் எனக்கு படிக்கத்தெரியாததால் இடையிடையே வரும் ஸ்லோகங்களை விட்டுவிட்டு சிறு குறிப்பு மட்டுமே அங்கெல்லாம் கொடுத்துள்ளேன்.
============================================
குருவின் குகையைத்தேடி…..
ஜபல்பூர் நாகராஜ சர்மா
யுகயுகமாய் கணக்கற்ற ரிஷிகளையும் முனிவர்களையும் தன்னகத்தே நிறுத்தி, மறுமைக்கு வேண்டிய நற்பணிகளை நாள்தோறும் நாட்ட ரமணீயமானை இடத்தை இப்புண்ணிய பாரதத்தில் அளித்து வருகிறது புண்ணிய நர்மதை நதி தீரம். தவத்திற்குகந்த இடம் ரேவா (நர்மதை) கரைகள் என்று புராணங்கள் கூறும். இதன் இரு கரைகளும் தபோபூமியாகும். இந்துஜா, சுஜாரி, சிவகன்யா, மேகஸுதா, ருத்ரரேகா, ரேவா என்று பலவிதமாக அழைக்கப்படும் நர்மதைக்கரைகளில் நெடிதுயர்ந்த மரங்கள் அடர்ந்த வனங்களும், வானளாவும் பர்வதங்களும், ஆழ்ந்த குகைளும் உள்ளன. ராஜபோகம், நல்வாழ்வு, பெறும்புகழ், புனித பேறு இவைகளனைத்தையும் ஒருங்கேபெற்ற மாந்தர்களும் இந்நதியை நாடி சத்சித் ஆனந்தம் எய்தினர். இந்திரன், வருணன், அக்னி, முதலிய தேவர்களும், சூரியன், சந்திரன், செவ்வாய், சனி முதலிய க்ரகங்களும், நாரதர், வியாசர், கபிலர், மார்க்கண்டேயர், பராசரர், ச்யவனர், ஜமதக்னி, கௌதமர், வால்மீகி, ததீசி, மாதங்கர், ஜாபாலி, சாண்டில்யர், சப்தரிஷிகள் முதலிய தவச்ரேஷ்டர்களும், பர்த்ருஹரி, பாண்டவர், திலீபன் முதலிய பேரரசர்களும் இந்நதிக்கரைகளில் பெருந்தவமியற்றி பெறும்பேறு பெற்றுள்ளனர்.
(ஸ்கந்த புராணம் ரேவா காண்டத்திலிருந்து இரண்டு வரிகளில் உள்ள ஒரு ஸ்லோகம் இங்கு உள்ளது)
இப்படியாக ஸ்கந்த புராணத்தில் ரேவா காண்டம் முழுவதும் நர்மதையின் மகிமைகளைக்காணலாம். இந்நதியின் இருமறுங்கிலும் கணக்கற்ற ஆண்டுகளகாக இருந்து வரும் யாக குண்டங்களையும் பர்ணசாலைகளையும் இன்றும் தரிசிக்கலாம்.
நர்மதையின் மகத்துவத்தை அறிந்துதான் காலடி கொடுத்த பாலகன் தன் குருவை இந்நதிக்கரைகளில் தேடினான் போலும்.
ஆதிசங்கரருக்கு சந்யாசம் அளித்து, சாஸ்த்திரங்களை கசடறக்கற்றுக் கொடுத்த குருகோவிந்த பகவத்பாதர் குகை, நர்மதைக்கரையில் தான் இருந்த்து என்று பல சங்கரவிஜய நூல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் குகையின் இருப்பிடத்தையோ, அதனைப்பற்றிய ஏனைய விவரங்களையோ திட்டவட்டமாக அந்நூல்கள் தெரிவிக்கவில்லை.
ஆதிசங்கரருக்குப் பிறகு இக்குகைகளைப் பற்றி எவரும் சிரத்தை காட்டியதாகக் காணவில்லை. இவ்விவகாரம் அப்படியே மங்கிவிட்டது.
நர்மதையக்கொண்டுள்ள மாநிலத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்த்தால், நானே இக்குகையின் சிறப்பை வெளிஉலகுக்குக் கொண்டு வரக்கூடாதா என்றகேள்வி என் மனதை அறிக்கவே அதையே ஏற்று, கண்டுபிடித்துவிட்டுத்தான் மறுகாரியம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு, 1971-ஆம் ஆண்டு இவ்வாராய்ச்சியைத்தொடங்கினேன். அனந்தஸ்ரீ விபூஷித ஜகத்குரு சங்கராச்சாரியாள் ஜ்யோதி பீடாதீஷ்வர் ஸ்வாமி ஸ்வருபானந்த ஸரஸ்வதி மகராஜ் அவர்கள் துவக்கத்திலிருந்தே என் பணிக்கு ஊக்கம் அளித்து வந்தனர். அவரது அபிப்ராயப்படி முதலில் சாங்கல்காட் என்ற குக்கிரமத்தை அடைந்தேன். கோட்டேகாவுங் என்னும் ரயில் நிலையத்திலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள அக்கிராமத்துக்கு நடந்துதான் செல்லமுடியும். நர்மதையோடு ஹிரன் என்ற ஆறு கலக்கும் இடமான சாங்கல்காட் முற்பெயர் சங்கர்காட் என்று கூறுவார்கள். நர்மதை ரகசியம் என்ற இந்தி புத்தகத்தில் ஆதிசங்கரர் இங்கு இருந்து உள்ளார் என்று படித்தவுடனேயே என் உற்சாகம் கரைபுரண்டோடியது. கிராமத்தை அடைந்த போது இரவாகிவிட்டது. மறுநாள் காலை உள்ளூர்வாசிகளின் உதவியோடு அங்குள்ள குகையைக் காணச்சென்றேன். நர்மதையின் மறுகரையில் குகை இருந்த்தால் நதியைக்கடக்கவேண்டியதாயிற்று. அதற்காக அங்கு “டோங்கா” என்ற குறுகிய படகின் உதவியோடு ஆற்றைக்கடக்கலானோம். அதில் இரு நபர்கள் மட்டுமே உட்காரலாம். அதற்கு அனுபவமும் வேண்டும். சைக்கிள் பாலன்ஸைப்போல இந்த டோங்காவிலும் பாலன்ஸ் முக்கியம். நடு நர்மதையில் என் பாலன்ஸ் திவாலாகி விடவே நானும் படகோட்டியும் கவிழ்ந்து டோங்காவோடு ஆற்றில் மூழ்கினோம்! காவேரியின் நீச்சல் பழக்கம் அப்போது கைகொடுக்கவே உயிர் தப்பினேன். மேற்கொண்டு பிரயாணம் சொட்ட சொட்ட ஈர உடையோடுதான்: அதுவும் கடுங்குளிர் காலத்தில்!
நர்மதைக்கரையோடு சுமார் 4 கி.மீ.நடந்தபிறகு ஒரு மலை மேட்டை அடைந்தோம். அங்குதான் ஒரு குகை தென்பட்டது. நதியிலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திலிருந்தது. புலி முதலிய துஷ்ட மிருகங்கள் அக்குகையில் பதுங்கி இருந்து, கால்நடைகளைத்தாக்கி வந்ததால் குகையின் முகப்பு பல ஆண்டுகளாக மூடப்பட்டுவிட்டதாக அறிந்தேன். குகையின் வாசலில் ஓர் பெரிய மணி கட்டியிருப்பது போல் கற்பாறை ஊசலாடியது. அதைத்தட்டினால் சங்கநாதம்போல் ஒலி வெளிப்பட்ட்து. அப்பிராந்தியம் முழுவதுமே காலை அழுத்திவைத்து நடந்தால் வெண்கலத்வனி எழும்புகிறது. குகை மிக நீளமானது என்றும், குகைக்குள் வெளிச்சம் வர மேற்புரம் துளைகள் இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் இரண்டு நாட்கள் தங்கி வேறு சில குகைகளையும் கண்டு, கிடைத்த விவரங்களை ஸ்வாமி ஸ்வரூபானந்தர் அவர்களிடம் சமர்ப்பித்தேன். ‘சங்கர்ரும் ஷண்மதமும்’ என்ற ஆங்கிலப்புத்தகத்தில் ’சங்கர கங்கா’ என்ற இடத்தில்தான் ஆதிசங்கரர் தன்குருவைச் சந்தித்தார் என்றும், அந்த இடம் காஞ்சி பரமாச்சார்யாளுக்கு மட்டுமே தெரியும் என்று குறிப்பேடு இருப்பதையும் ஸ்வாமிகளிடம் தெரிவித்தேன். இதற்காக ஒருமுறை காஞ்சி சென்று பரமாச்சார்யாளைத் தரிசனம் செய்துவிட்டு வரும்படி அவர் என்னைப்பணித்தார்.
பலமாதங்களாக தேனம்பாக்கத்தில் மௌனமேற்று வந்த மாமுனிவரைக்காண்பதே அரிது என்றும் அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி வந்தபோது கூட அவரிடம் ஏதும் பேசவில்லை என்றும் சென்னை அடைந்த என்னை என் உறவினர்கள் உற்சாகமிழக்கச்செய்தனர். இதனால் மனந்தளராமல் மறுநாள் காலையில் தேனம்பாக்கத்தை அடைந்தேன். அங்கே யாரோ உரக்கப்பேசிக்கொண்டிருந்தது காதில் விழவே, அருகில் இருந்த நபரிடம் பெரியவாள் சந்நிதானத்தில் ஏன் இப்படி சத்தம் போட்டுப் பேசுகிறார்கள் என்று வினவினேன்.
உடனே அவர் என் வாயைப்பொத்தி, “ அபச்சாரம்! நீங்கள் இவ்வாறு கேட்பது அபச்சாரம்!! பல நாட்கள் கழித்து இன்றுதான் பெரியவாள் மௌனத்தை கலைத்திருக்கிறார்கள். அத்தெய்வத்திருக்குரலைக் கேட்க நீங்கள் பாக்யம் செய்து இருக்கிறீர்களே! அவர் தான் இப்போது பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார். என் ரோமம் சிலிர்த்தது. இறையருளைக்கண்டு வியந்தேன். சிஷ்யர் மூலமாக நான் வந்திருப்பதை அறிந்த அச்சிரேஷ்டர், என்னை பிற்பாடு கூப்பிடுவதாகவும், அதுவரை நேரத்தை வீணடிக்காமல் நான் எடுத்துப்போன புத்தகங்கள், குறிப்புக்கள், வரைபடங்கள் முதலியவற்ரை நன்றாக பார்த்துவைத்துக்கொள்ளும் படியாகவும் ஆணை பிறப்பித்தார்கள். எனக்கோ தூக்கிவாரிப்போட்டது.
எதற்காக நான் வந்துள்ளேன் என்பதையே அவருக்குத் தெரிவிக்கவில்லை. நான் இந்த விஷயமாகப் புத்தகங்களோடு அங்கு வந்திருப்பது எப்படி இம்மகானுக்கு தெரிந்தது என்ற ஆச்சர்யத்தால் திக்குமுக்காடினேன். பரிட்சைக்கூட்த்தில் நுழையும் முன் பரபரப்புடன் புத்த்கங்களைபுரட்டி மனப்பாடம் புரியும் மாணாக்கனைப்போல் நான் திரட்டியவைகளை அவசரமாக அசை போடலானேன்.
நான் ஆவலுடன் எதிபார்த்துக்கொண்டிருந்த அச்சுப நேரம் வந்தது. பெரியவாள் என்னை உள்ளேயே அனுமதித்து நேருக்கு நேர் உட்கார்ந்து அவருடன் பேச வசதி செய்து தந்தார். பேச்சு துவங்கியது.
“நீ எவ்வளவு தூரம் இதைப்பற்றி ஆராய்ந்து இருக்கிறாய்? அதைக் சொல்லு!”
ஆக்ஞை பிறந்தது. ஆனால் நான் தயங்கினேன். அதைக்கூற ஆரம்பித்தால் நேரம் போவது தெரியாது. மேலும் மிகத்தொலைவான இடங்களிலிருந்து வந்திருக்கும் பக்தர்கள் தங்கள் துயரங்களை அவரிடம் எடுத்துக்கூறக் காத்திருக்கும் போது அவர்களது அரிய நேரத்தை அபகரிப்பது எனக்கு அழகா என்று எண்ண ஆரம்பித்தேன்.
பெரியவாள் மீண்டும் கேட்டார்.
“ஏன் பேசாமலிருக்கே! தைரியமாகச்சொல். மற்றவர்களைப்பற்றி நீ கவலைபடாதே. அவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே!’
என் யோக்யதையை மற்றவர்களும் அறிந்து கொள்ளட்டுமே என்று அவர் கூறுவதாக எண்ணி சுமார் 20 நிமிடங்கள் இதைப்பற்றி விவரித்தேன். விஷயத்தை எடுத்துக்கூறும் போது தட்டுமாறிய இடங்களைச்சரிப்படுத்தியும், உச்சரிப்பில் எழும் குற்றங்களைத்திருத்தியும் என்னை ஊக்குவித்தார். முடிவில் சுமார் ஐந்து நிமிடங்கள் தியானத்திலிருந்துவிட்டு அருளுரை வழங்கினார்கள்.
”நீ பார்த்த சாங்கல்காட் குகை நதியிலிருந்து தூரத்தில் இருக்கிறது என்கிறாய். ஆகையால் அந்த குகையாக இருக்காது. குகை நதியின் பக்கத்திலேயே இருக்க வேண்டும். நதியின் நீர் குகைக்கு கொண்டுவர ஓர் வசதியும் அக்குகையில் இருக்க வேண்டும். ஸ்வரூபானந்தர் அந்தப்பக்கத்துக்காரர் தானே, நான் சொன்னதை வைத்துக் கொண்டு மீண்டும் அவரையே பார்.”
திருப்பி உதைக்கப்பட்ட பந்து போல் ஸ்வாமி ஸ்வரூபானந்தர் காலடியில் வந்து வீழ்ந்தேன். ஆராய்ச்சியும் தொடர்ந்தது. சில ஆண்டுகள் இவ்வாறு கழிந்தன. இதற்கிடையில் தண்டலம் ஸ்ரீ சங்கரநாராயண சாஸ்திரிகளால் எழுதி 1916ல் வெளியிடப்பட்ட ‘சங்கரர் காலம்’ என்ற ஆங்கில நூலைக்காண நேர்ந்த்து. இதில் குகையைபற்றிய உண்மை விவரங்களை அறிந்தேன்.
ஆதிசங்கர்ரின் குரு ஸ்ரீ கோவிந்த பகவத்பாதர் அவருடைய குரு ஸ்ரீ கௌடபாதரும் எந்தக்குகையில் தவமியற்றினரோ அதேகுகையில் தான் ஆதிசங்கரரும் தங்கினார் என்றும், அங்குதான் ஸ்ரீ கோவிந்த பகவத்பாதர் ஸித்தி அடைந்தார்கள் என்றும், அக்குகை எங்குள்ளது என்றும், மேலும் சில விவரங்களும் அப்புத்தகத்தின் மூலம் எனக்குப்புலப்படலாயின. இதன் அடிப்படையில் அக்குகை கொண்ட அருந்தலத்தை 1978ம் ஆண்டு சிவராத்திரி நன்னாள் அன்று காண பெறும் பேறு பெற்றேன்.
(To be contd in part II)