Post by hemalathak on Aug 12, 2012 7:28:10 GMT 5.5
SHRI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
காஞ்சி மா முனி கனிவாய் குரல் மழை
கொஞ்சும் தமிழுக்கு வாய்த்த பொருள் மழை
விஞ்ச வேறில்லை மற்றவர் சொல் மழை
நெஞ்சில் பதிபவர்க்கு என்றும் அருள் மழை
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
வைதிக மதம்
நம் மதத்தின் தனி அம்சங்கள் ஆனால், அவர்கள் நம்பிக்கை சர்தானா. கிறிஸ்துவ, நபியைப் பின்பற்றா விட்டால் நகரந்தானா. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இந்தத் தனி பாத்தியதை (exclusive right) செல்லுபடியாகாது என்று தெரிகிறது. ஏனென்றால் கிறிஸ்து வந்து இரண்டாயிரம் வருஷங்கள்தான் ஆகிறது. நபி பிறந்து 1400 வருஷங்கள்தான் ஆகிறது. அதற்குமுன் ஆயிரம், பதினாராயிரம், லக்ஷம் வருடங்களாகப் பிறந்து செத்துப் போனவர்கள் எல்லோரும் என்ன ஆனார்கள். இவர்களுடைய சித்தாந்தப்படி அவர்கள் கிறிஸ்து அல்லது நபியை தங்கள் ரக்ஷகராகக் (Saviour) கொள்ளாததால், சிருஷ்டி தோன்றிய நாளிலிருந்து அன்றுவரை வந்தவர்களெல்லாம் நரகத்துக்குத்தான் போயிருக்க வேண்டும். இப்போது இந்த மதங்களில் இருக்கிறவர்களின் முன்னோடிகள் இந்த மத ஸ்தாபகர்களின் முன்னோர்கூடத்தான் ஸ்வர்கம் போயிருக்க முடியாது.
இவர்கள் ஹிந்துக்களைப் போல்ப் பல ஜன்மங்கள் உண்டு என்பதையும் ஒப்புக் கொள்ளவில்லை. அப்படி ஒப்புக் கொண்டாலாவது கிறிஸ்துவுக்கும், நபிக்கும் முற்பட்டவர்கள் மறுபடி மறுபடி பிறக்கிறபோது இந்த இரண்டு பேருக்குப் பிற்பாடும் ஜன்மா எடுத்து, இவர்களை அநுசரிக்கிற வாய்ப்பு (chance) பெற்று, கதிமோக்ஷம் அடைய வழியிருக்கிறது என்று சமாதானம் சொல்லலாம். ஆனால் இந்த மதங்களிலோ ஜீவனுக்கு ஒரே ஜன்மாதான் என்று சொல்லியிருக்கிறது. ஆதலினால், எத்தனையோ ஆயிரம், பல்லாயிரம் ஆண்டுகளாகத் தோன்றிய இத்தனை ஜன்மங்களும் கூண்டோடு நகரத்துக்குத்தான் நிரந்தர வாசமாகப் போயிருக்க வேண்டும் என்றாகிறது. தான் சிருஷ்டித்த ஜனங்களுக்கு லக்ஷே£பலக்ஷம் வருஷங்கள் வழிகாட்டுகிற ஆச்சார்யர்களையே அனுப்பி வைக்காமல், அவர்களை மீளா நரரத்தில் போடுபவனாக ஒரு கடவுள் இருக்கிறான் என்றால், அப்படிப்பட்ட இரக்கமே இல்லாத கடவுளை எதற்காக ஆராதிக்க வேண்டும். அதாவது கடவுளை அடைவதற்காக ஏற்பட்ட மதமே வேண்டாம் என்று சொல்லி விடலாம்.
பலவிதமான தேசங்கள், அவற்றில் பலவிதமான சீதோஷ்ண ஸ்திதிகள், அதற்கேற்ற பயிர் பச்சைகள், இவை எல்லாவற்றுக்கும் அநுகுணமாக பிற்பாடு ஒரு பண்பாடு என்று லோகத்தில் இருக்கிறது. இதில் எல்லாவற்றுக்கும் இடம் கொடுப்பதான வேதம்தான் ஆதியில் எல்லாவிடத்திலும் இருந்திருக்கிறது. பிற்பாடு அங்கங்கே ஜனங்களின் ஆசை அபிலாஷைகள் மாறி மாறி, அதிலிருந்தே அந்தந்தச் சூழலுக்கு ஏற்ற அநுஷ்டானங்களை உடைய வேறு மதங்கள் வந்திருக்கின்றன. அதனால்தான் எந்த மதத்தைப் பார்த்தாலும் இப்போது அநுஷ்டானத்தில் இருக்கப்பட்ட மதங்கள், இந்த மதங்களுக்கு முன்னால் அந்த தேசங்களில் இருந்த பூர்வீக மதங்கள் இவற்றில் எதைப் பார்த்தாலும் அதிலெல்லாம் வைதிக மதத்தின் அம்சங்கள், சின்னங்கள் இருக்கின்றன. பாரத தேசத்தில் மட்டும் அந்த ஆதி மதமே தங்கி விட்டது. அதற்கப்புறமும் அது காலத்தால் தனக்கு பிற்பட்ட மதங்களை கௌரவ புத்தியுடனேயே பார்த்திருக்கிறது. அந்த அன்னிய ஜனங்களின் பக்குவத்தை ஒட்டியே இந்த அன்னிய மதங்கள் தோன்றியிருக்கின்றன. இவையே அவர்களுக்கு சிரேயஸைத் தரும் என்று கருதியிருக்கிறது. தான் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ விடுவது. (live and let live)
என்று சொல்கிறார்களே அந்த உத்திஷ்டமான கருத்தே ஹிந்து மதத்தின் லட்சியமாக இருந்திருக்கிறது. அதோடுகூட மற்ற தேசத்தினருக்கு ஆத்மசிரேயஸ் அளிக்கக் கூடிய பௌத்தம், ஜைனம் முதலிய மதங்களையும் தானே பெற்றெடுத்து வெளி நாடுகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.
இது வரையில் தத்வ ரீதியில் ( philosophical ) , வழிபாட்டு ரீதியில் ( theological ) ஹிந்து மதத்தில் இருக்கிற விசேஷ அம்சங்கள் சிலதைச் சொன்னேன்.
இவற்றோடு சமூக ரீதியில் (sociological) நம் மதத்துக் கென்று ஒரு பெரிய தன் அம்சம் இருக்கிறது.
எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும் சரி, அதில் ஃபிலாஸஃபி (தத்வம்) , தியாலஜி (தெய்வ வழிபாடு) இரண்டும் வரும். அதோடு தன் மனிதர் ஒழுக்கம் பற்றியும் ஏதோ கொஞ்சம் வரும். அண்டை வீட்டுக்காரனைச் சகோதரனாக எண்ணு விரோதியையும் நண்பனாக நினை. உன்னிடம் மற்றவர் எப்படியிருக்க வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படியே c மற்றவர்களிடம் இரு. ஜீவ குலத்திடம் எல்லாம் அன்பாக இரு. சத்தியமே பேசு. அஹிம்சையை கடைபிடி. என்று உபதேசிக்கிற நெறிகள் - ethics- ஒவ்வொரு மதத்திலும் இருக்கும். தர்மம் morality எல்லாம் இதில் சேரும். ஒரளவுக்கு இத்லேயே சமூக அம்சம் (ஸோஷாலாஜிகல் என்று சொன்னேனே அந்த அம்சம்) இருக்கிறது எனலாம். ஆனால் ஒரளவுக்குத்தான். மற்ற மதங்களில் சமூக வாழ்க்கையியல் அமைப்பைப் பற்றிய விஸ்தாரமான பிரஸ்தாபம் கிடையாது.
ஆனால் ஹிந்து மதத்தில் மட்டும் சமூக வாழ்வுக்கான அடிப்படை (sociological foundation) ரொம்பவும் கெட்டியாக, வர்ணாச்ரம தர்மம் என்ற விசேஷமான அம்சம் உண்டாயிருக்கிறது.
வர்ண தர்மம் என்பது ஒன்று. ஆசாரம தர்மம் என்பது இன்னொன்று, தனி மநுஷ்யன் இன்னின்ன பிராயத்தில் இப்படியிப்படி இருக்க வேண்டும் என்பது ஆசிரம தர்மம். முதலில், சின்ன வயசில் பிரம்மச்சாரியாக இருந்து குருகுலத்தில் வித்தியாப்பியாசம் பண்ண வேண்டும். இரண்டாவது யௌவனத்தில் கல்யாணம் பண்ணிக் கொண்டு குடித்தனம் நடத்திப் பிரஜாவிருத்தி செய்ய வேண்டும். முன்றாவதாக வயசான பின் வீட்டு வாசலை விட்டு, லௌகீக சம்பந்தங்களை அடியோடு கத்தரித்துவிட்டு, சன்யாசியாகிப் பரமாத்மாவிடமே மனஸைச் செலுத்த வேண்டும் என்று விதிப்பது ஆசிரம தர்மம். இந்த ஆசிரமங்களுக்கு பிரம்மச்சர்யம், கார்ஹஸ்தானம் (க்ருஹஸ்த தர்மம்) வானப்ரஸாதம், ஸந்நியாசம் என்று பெயர். இது தனி மனிதனுக்கான தர்மம்.
சமூகம் society முழுவதற்குமான ஏற்பாடுதான் வர்ண தர்மம் என்பது. இப்போது ரொம்பவும் கண்டனத்துக்கு ( criticism ) ஆளாகியிருப்பது இந்த வர்ண தர்மம்தான். வர்ண தர்மத்தை ஜாதிப் பிரிவினை என்று பொதுவில் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் வர்ணம் வேறு. ஜாதி வேறு. வர்ணங்கள் நாலுதான். ஜாதிகளோ ஏகப்பட்டவை, பிராம்மணர் என்ற ஒரே வர்கத்தில் அய்யர், அய்யங்கார், ராவ் என்று பல ஜாதிகள் இருக்கிறது. நாலாவது வர்ணம் ஒன்றிலேயே பிள்ளா, ரெட்டியார், நாயகர் என்று பல ஜாதிகள் வருகின்றன. வேதத்திலும் (யஜுர் வேதம் - முன்றாவது அஷ்டகம் - நாலாவது ப்ரச்னம்) தர்ம சாஸ்திரத்திலும் பல
ஜாதிகள் பேசப்படுகின்றன. அந்தப பெயருள்ள ஜாதிகள் இப்போது இல்லை. அதெப்படியானாலும் ஜாதிகள் பல. வர்ணங்கள் நாலே நாலுதான். நம் மதத்துக்கே பெரிய களங்கம். மநுஷ்யர்களிடையே உசத்தி - தாழ்த்தி என்று பேதம் கற்பிக்கிற பொல்லாத ஏற்பாடு என்று இப்போது நினைக்கப்படுகிற வர்ண தர்மம் என்ன என்று, நன்றாக பக்ஷபாதமில்லாமல் ஆராயாந்து பார்த்தால், சமுதாய வாழ்வின் ஒழுங்குக் காகவே ஏற்பட்ட ஒப்பற்ற சாதனம் அது என்று தெளிவாகும்.
காஞ்சி மா முனி கனிவாய் குரல் மழை
கொஞ்சும் தமிழுக்கு வாய்த்த பொருள் மழை
விஞ்ச வேறில்லை மற்றவர் சொல் மழை
நெஞ்சில் பதிபவர்க்கு என்றும் அருள் மழை
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
வைதிக மதம்
நம் மதத்தின் தனி அம்சங்கள் ஆனால், அவர்கள் நம்பிக்கை சர்தானா. கிறிஸ்துவ, நபியைப் பின்பற்றா விட்டால் நகரந்தானா. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இந்தத் தனி பாத்தியதை (exclusive right) செல்லுபடியாகாது என்று தெரிகிறது. ஏனென்றால் கிறிஸ்து வந்து இரண்டாயிரம் வருஷங்கள்தான் ஆகிறது. நபி பிறந்து 1400 வருஷங்கள்தான் ஆகிறது. அதற்குமுன் ஆயிரம், பதினாராயிரம், லக்ஷம் வருடங்களாகப் பிறந்து செத்துப் போனவர்கள் எல்லோரும் என்ன ஆனார்கள். இவர்களுடைய சித்தாந்தப்படி அவர்கள் கிறிஸ்து அல்லது நபியை தங்கள் ரக்ஷகராகக் (Saviour) கொள்ளாததால், சிருஷ்டி தோன்றிய நாளிலிருந்து அன்றுவரை வந்தவர்களெல்லாம் நரகத்துக்குத்தான் போயிருக்க வேண்டும். இப்போது இந்த மதங்களில் இருக்கிறவர்களின் முன்னோடிகள் இந்த மத ஸ்தாபகர்களின் முன்னோர்கூடத்தான் ஸ்வர்கம் போயிருக்க முடியாது.
இவர்கள் ஹிந்துக்களைப் போல்ப் பல ஜன்மங்கள் உண்டு என்பதையும் ஒப்புக் கொள்ளவில்லை. அப்படி ஒப்புக் கொண்டாலாவது கிறிஸ்துவுக்கும், நபிக்கும் முற்பட்டவர்கள் மறுபடி மறுபடி பிறக்கிறபோது இந்த இரண்டு பேருக்குப் பிற்பாடும் ஜன்மா எடுத்து, இவர்களை அநுசரிக்கிற வாய்ப்பு (chance) பெற்று, கதிமோக்ஷம் அடைய வழியிருக்கிறது என்று சமாதானம் சொல்லலாம். ஆனால் இந்த மதங்களிலோ ஜீவனுக்கு ஒரே ஜன்மாதான் என்று சொல்லியிருக்கிறது. ஆதலினால், எத்தனையோ ஆயிரம், பல்லாயிரம் ஆண்டுகளாகத் தோன்றிய இத்தனை ஜன்மங்களும் கூண்டோடு நகரத்துக்குத்தான் நிரந்தர வாசமாகப் போயிருக்க வேண்டும் என்றாகிறது. தான் சிருஷ்டித்த ஜனங்களுக்கு லக்ஷே£பலக்ஷம் வருஷங்கள் வழிகாட்டுகிற ஆச்சார்யர்களையே அனுப்பி வைக்காமல், அவர்களை மீளா நரரத்தில் போடுபவனாக ஒரு கடவுள் இருக்கிறான் என்றால், அப்படிப்பட்ட இரக்கமே இல்லாத கடவுளை எதற்காக ஆராதிக்க வேண்டும். அதாவது கடவுளை அடைவதற்காக ஏற்பட்ட மதமே வேண்டாம் என்று சொல்லி விடலாம்.
பலவிதமான தேசங்கள், அவற்றில் பலவிதமான சீதோஷ்ண ஸ்திதிகள், அதற்கேற்ற பயிர் பச்சைகள், இவை எல்லாவற்றுக்கும் அநுகுணமாக பிற்பாடு ஒரு பண்பாடு என்று லோகத்தில் இருக்கிறது. இதில் எல்லாவற்றுக்கும் இடம் கொடுப்பதான வேதம்தான் ஆதியில் எல்லாவிடத்திலும் இருந்திருக்கிறது. பிற்பாடு அங்கங்கே ஜனங்களின் ஆசை அபிலாஷைகள் மாறி மாறி, அதிலிருந்தே அந்தந்தச் சூழலுக்கு ஏற்ற அநுஷ்டானங்களை உடைய வேறு மதங்கள் வந்திருக்கின்றன. அதனால்தான் எந்த மதத்தைப் பார்த்தாலும் இப்போது அநுஷ்டானத்தில் இருக்கப்பட்ட மதங்கள், இந்த மதங்களுக்கு முன்னால் அந்த தேசங்களில் இருந்த பூர்வீக மதங்கள் இவற்றில் எதைப் பார்த்தாலும் அதிலெல்லாம் வைதிக மதத்தின் அம்சங்கள், சின்னங்கள் இருக்கின்றன. பாரத தேசத்தில் மட்டும் அந்த ஆதி மதமே தங்கி விட்டது. அதற்கப்புறமும் அது காலத்தால் தனக்கு பிற்பட்ட மதங்களை கௌரவ புத்தியுடனேயே பார்த்திருக்கிறது. அந்த அன்னிய ஜனங்களின் பக்குவத்தை ஒட்டியே இந்த அன்னிய மதங்கள் தோன்றியிருக்கின்றன. இவையே அவர்களுக்கு சிரேயஸைத் தரும் என்று கருதியிருக்கிறது. தான் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ விடுவது. (live and let live)
என்று சொல்கிறார்களே அந்த உத்திஷ்டமான கருத்தே ஹிந்து மதத்தின் லட்சியமாக இருந்திருக்கிறது. அதோடுகூட மற்ற தேசத்தினருக்கு ஆத்மசிரேயஸ் அளிக்கக் கூடிய பௌத்தம், ஜைனம் முதலிய மதங்களையும் தானே பெற்றெடுத்து வெளி நாடுகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.
இது வரையில் தத்வ ரீதியில் ( philosophical ) , வழிபாட்டு ரீதியில் ( theological ) ஹிந்து மதத்தில் இருக்கிற விசேஷ அம்சங்கள் சிலதைச் சொன்னேன்.
இவற்றோடு சமூக ரீதியில் (sociological) நம் மதத்துக் கென்று ஒரு பெரிய தன் அம்சம் இருக்கிறது.
எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும் சரி, அதில் ஃபிலாஸஃபி (தத்வம்) , தியாலஜி (தெய்வ வழிபாடு) இரண்டும் வரும். அதோடு தன் மனிதர் ஒழுக்கம் பற்றியும் ஏதோ கொஞ்சம் வரும். அண்டை வீட்டுக்காரனைச் சகோதரனாக எண்ணு விரோதியையும் நண்பனாக நினை. உன்னிடம் மற்றவர் எப்படியிருக்க வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படியே c மற்றவர்களிடம் இரு. ஜீவ குலத்திடம் எல்லாம் அன்பாக இரு. சத்தியமே பேசு. அஹிம்சையை கடைபிடி. என்று உபதேசிக்கிற நெறிகள் - ethics- ஒவ்வொரு மதத்திலும் இருக்கும். தர்மம் morality எல்லாம் இதில் சேரும். ஒரளவுக்கு இத்லேயே சமூக அம்சம் (ஸோஷாலாஜிகல் என்று சொன்னேனே அந்த அம்சம்) இருக்கிறது எனலாம். ஆனால் ஒரளவுக்குத்தான். மற்ற மதங்களில் சமூக வாழ்க்கையியல் அமைப்பைப் பற்றிய விஸ்தாரமான பிரஸ்தாபம் கிடையாது.
ஆனால் ஹிந்து மதத்தில் மட்டும் சமூக வாழ்வுக்கான அடிப்படை (sociological foundation) ரொம்பவும் கெட்டியாக, வர்ணாச்ரம தர்மம் என்ற விசேஷமான அம்சம் உண்டாயிருக்கிறது.
வர்ண தர்மம் என்பது ஒன்று. ஆசாரம தர்மம் என்பது இன்னொன்று, தனி மநுஷ்யன் இன்னின்ன பிராயத்தில் இப்படியிப்படி இருக்க வேண்டும் என்பது ஆசிரம தர்மம். முதலில், சின்ன வயசில் பிரம்மச்சாரியாக இருந்து குருகுலத்தில் வித்தியாப்பியாசம் பண்ண வேண்டும். இரண்டாவது யௌவனத்தில் கல்யாணம் பண்ணிக் கொண்டு குடித்தனம் நடத்திப் பிரஜாவிருத்தி செய்ய வேண்டும். முன்றாவதாக வயசான பின் வீட்டு வாசலை விட்டு, லௌகீக சம்பந்தங்களை அடியோடு கத்தரித்துவிட்டு, சன்யாசியாகிப் பரமாத்மாவிடமே மனஸைச் செலுத்த வேண்டும் என்று விதிப்பது ஆசிரம தர்மம். இந்த ஆசிரமங்களுக்கு பிரம்மச்சர்யம், கார்ஹஸ்தானம் (க்ருஹஸ்த தர்மம்) வானப்ரஸாதம், ஸந்நியாசம் என்று பெயர். இது தனி மனிதனுக்கான தர்மம்.
சமூகம் society முழுவதற்குமான ஏற்பாடுதான் வர்ண தர்மம் என்பது. இப்போது ரொம்பவும் கண்டனத்துக்கு ( criticism ) ஆளாகியிருப்பது இந்த வர்ண தர்மம்தான். வர்ண தர்மத்தை ஜாதிப் பிரிவினை என்று பொதுவில் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் வர்ணம் வேறு. ஜாதி வேறு. வர்ணங்கள் நாலுதான். ஜாதிகளோ ஏகப்பட்டவை, பிராம்மணர் என்ற ஒரே வர்கத்தில் அய்யர், அய்யங்கார், ராவ் என்று பல ஜாதிகள் இருக்கிறது. நாலாவது வர்ணம் ஒன்றிலேயே பிள்ளா, ரெட்டியார், நாயகர் என்று பல ஜாதிகள் வருகின்றன. வேதத்திலும் (யஜுர் வேதம் - முன்றாவது அஷ்டகம் - நாலாவது ப்ரச்னம்) தர்ம சாஸ்திரத்திலும் பல
ஜாதிகள் பேசப்படுகின்றன. அந்தப பெயருள்ள ஜாதிகள் இப்போது இல்லை. அதெப்படியானாலும் ஜாதிகள் பல. வர்ணங்கள் நாலே நாலுதான். நம் மதத்துக்கே பெரிய களங்கம். மநுஷ்யர்களிடையே உசத்தி - தாழ்த்தி என்று பேதம் கற்பிக்கிற பொல்லாத ஏற்பாடு என்று இப்போது நினைக்கப்படுகிற வர்ண தர்மம் என்ன என்று, நன்றாக பக்ஷபாதமில்லாமல் ஆராயாந்து பார்த்தால், சமுதாய வாழ்வின் ஒழுங்குக் காகவே ஏற்பட்ட ஒப்பற்ற சாதனம் அது என்று தெளிவாகும்.