|
Post by radha on Jan 15, 2020 19:49:34 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA AND SRI RAMANA MAHA RISHI
தீராத வயிற்று வலி பகவான் ஸ்ரீ ரமணரின் கருணையால் குணமானது ! மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக இருந்தவர் N.R. கிருஷ்ணமூர்த்தி அய்யர். இவர் நோபல் பரிசு பெற்ற சர் சி.வி. ராமனிடம் மாணவராகப் பயின்றவர். ஒரு முறை இவருக்கு கடுமையான வயிற்று வலியும் வயிற்றுப் போக்கும் வந்து மிகவும் கஷ்டப்பட்டார். ஆயினும் வழக்கம் போல் விடுமுறைக்கு திருவண்ணாமலை வந்தார். அன்று பகல் சாப்பாட்டுப் பந்தியில் ஸ்ரீ பகவான் எதிரில் இடம் கிடைத்தது. மற்ற அன்பர்களுடன் உட்கார்ந்திருக்கும்போது வெறும் மோர்ச் சாதம் மட்டும் சாப்பிட எண்ணினார். சாதம் பரிமாறப் பட்டது. அவருடைய நண்பர் வெங்கட் ராமையா வரிசையாக சாம்பார் பரிமாறினார். அவருடைய இலையில் இரண்டு கரண்டி சாம்பாரை ஊற்றி விட்டுச் சென்று விட்டார். எதையும் வீணடிப்பது ஸ்ரீ பகவானுக்குப் பிடிக்காது. அதனால் கிருஷ்ணமூர்த்தி அய்யர் அவ்வளவு சாம்பார் சாதத்தையும் சாப்பிட்டு முடித்தார். மீண்டும் அவர் இலையில் வெங்கட் ராமையா சாதத்தைப் பரிமாறினார். இரண்டு கரண்டி ரசத்தையும் வார்த்து விட்டு போய்விட்டார். அய்யர் ஆத்திரத்துடன் சத்தமாக ----ஏன் இப்படி மொண்டு ஊற்றுகிறீர் ? ---- என்றார். இது ஸ்ரீ பகவான் காதிலும் விழுந்தது. உடனே ஸ்ரீ பகவான் சிரித்துக் கொண்டே ----என்ன செய்வது ? எல்லாவற்றையும் தொலைக்கத்தானே இங்கு வந்திருக்கிறீர் ! சாப்பிடுங்கள் ! ஒன்றும் செய்யாது ! ----என்று கூறினார். அவர் ஒன்றும் பேசாமல் சாப்பிட்டு முடித்தார். என்ன அதிசயம் ! பல நாட்களாகக் கஷ்டப் படுத்திய அவருடைய வயிற்றுக் கோளாறுகள் அன்றிலிருந்து போன மாயம் தெரியவில்லை. ஸ்ரீ பகவான் பார்வையில் பட்டு அவர்கள் வாக்கினாலும் அருளிய பிறகும் எந்த நோய்க்கும் இடம் ஏது ? ஸ்ரீ குஞ்சு சுவாமிகள் எழுதியுள்ள ----எனது நினைவுகள் ----என்ற நூலில் இந்த விபரங்கள் தரப்பட்டுள்ளன. SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
|
|
Deleted
Deleted Member
Posts: 0
|
Post by Deleted on Jan 16, 2020 8:23:21 GMT 5.5
அப்பா ரமணா திரிபுர ரகசியம் தங்கள் அருளாளே மொழி பெயர்க்கப் பெற்றதே கோடான கோடி மரியாதைக்குரிய வணக்கங்கள் ஆதிசங்கர பகவத் பாதர் அருளிய தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தின் உட்பொருளை உணர்த்தியமைக்கும் கோடான கோடி மரியாதைக்குரிய வணக்கங்கள் ஆதிசங்கர பகவத் பாதர் அருளிய விவேகசூடாமணியை தமிழில் மொழிபெயர்த்தமைக்கும் கோடான கோடி மரியாதைக்குரிய வணக்கங்கள் உள்ளது நாற்பது (அனுபந்தம்) ஆகிய நுால்களை இயற்றியமைக்கும் கோடான கோடி மரியாதைக்குரிய வணக்கங்கள் இன்னும் அடியார்களுக்கு வழித்துனையாய் விளங்கும் அனைத்து படைப்புகளுக்கும் கோடான கோடி மரியாதைக்குரிய வணக்கங்கள்
அரிய பொருளே அருணாச்சலா! ஆனந்த வடிவே அருணாச்சலா! தென்திசை நோக்கியே அருணாச்சலா! தெளிந்த குருவே அருணாச்சலா!
|
|
|
Post by radha on Jan 16, 2020 13:10:11 GMT 5.5
Sri Arunachalam ,Sri Arunachala Shiva ,Sri Arunachala RamanaRishi THIRUVADIGAL CHARANAM
Sudhanji, your poem is fine. A typical prayer of Surrender to Para Brahman Sri RAMANA wrote in TAMIL what Adi Sankara Baghavat PADAAL wrote in Samskritham. Thus Sri RAMANA made us understand well the essence of writings of Adi Sankarar I had the privilege of being with Sri RAMANA in his ASHRAMAM during my childhood. Similarly I had the privilege of being with Sri Kanchi Maha Periva on number of occasion This I consider the best part of my life .hope I have their blessings
|
|
Deleted
Deleted Member
Posts: 0
|
Post by Deleted on Jan 16, 2020 15:07:26 GMT 5.5
wow, that's a great privilege. why do you doubt, being in their presence itself is more than enough a blessing for spiritual elevation, you'd darshan of both the divine manifestations, most fortunate of you.
"Sri RAMANA wrote in TAMIL what Adi Sankara Baghavat PADAAL wrote in Samskritham." that's the clarity of a self realised one, brimming with profoud insight, thanks for typing the sentence
if i'm permitted to ask, are you the Radha who got kannan as partner and parameshwaran as father-in-law after reciting thiruppavai and thiruvembavai on HH Sri Maha Periyavar's advice
|
|