|
Post by radha on Jan 5, 2020 9:32:28 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
பக்தி இருக்குமிடத்தில் பகை இருப்பதில்லை ஜனவரி 03,2020,13:06 IST
* பக்தி மனதில் வேரூன்றினால் பகைவன் மீதும் அன்பு செலுத்தும் பண்பு வரும். * கடவுளைப் பூஜிப்பதால் மனம் துாய்மை அடைவதோடு புண்ணியமும் உண்டாகிறது. * எந்த செயலையும் அதற்குரிய முறையோடு தான் செய்ய வேண்டும். அதுவே நியாயமான வழி.. * ஒவ்வொருவரின் பார்வைக்கும் நியாயம் வெவ்வேறானதாக தோன்றினாலும் பொது நியாயத்தைச் செய்வது நல்லது. * சாப்பிடும் போது 'கருணையுடன் அன்னம் கொடுத்த கடவுளுக்கு நன்றி' என சிந்திப்பது நல்லது. * பக்தியோடு உண்பதால் நல்லெண்ணம் வளரும். இந்த பழக்கம் நல்லவர்களாக வாழ்வதற்கு வழிவகுக்கும். * உலகிலுள்ள அனைத்தும் கடவுளுக்கு சொந்தமானது. நாம் அனுபவிக்கும் எல்லாவற்றையும் அவருக்கு சமர்ப்பித்த பின்னரே பயன்படுத்த வேண்டும். * உடலால் தீமை செய்வது போலவே, மனதால் தீமையைச் சிந்தித்தாலும் பாவமே. * மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் விளைவு ஏற்பட்டே தீரும். இதை 'கர்ம கோட்பாடு' என்கிறோம். * அளந்து பேசினால் புத்தியில் தெளிவும், வாக்கில் பிரகாசமும் உண்டாகும். * மவுனமாக இருந்தால் கலகம் உண்டாகாது. * அன்றாடம் கடவுளைத் தியானம் செய்யப் பழகினால், பாவ விஷயங்களில் மனம் ஈடுபடாது. * கல்வியை பணிவுடன் மாணவன் கற்க வேண்டும். பணிவு இல்லாத கல்வியால் பயன் உண்டாகாது. * கடவுளின் இருப்பிடமான மனதைப் பாதுகாக்க தியானம் செய்யுங்கள்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
|
|
|
Post by padhu on Jan 5, 2020 13:46:01 GMT 5.5
Kanchi Mahan chonnathai ellorum kadaippidippom.
|
|
Deleted
Deleted Member
Posts: 0
|
Post by Deleted on Jan 6, 2020 22:16:38 GMT 5.5
"indriyanam manas casmi"
"இந்திரியங்களில் நான் மனமாவேன்"
"of the senses I am the mind"
(ஶ்ரீ மத் பகவத் கீதை)
|
|