|
Post by radha on Dec 17, 2019 20:56:03 GMT 5.5
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்; நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன், ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம், கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் நாரா யணனே, நமக்கே பறைதருவான், பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.
2. வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச் செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி, நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்; செய்யா தனசெய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்; ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.
|
|
Deleted
Deleted Member
Posts: 0
|
Post by Deleted on Dec 18, 2019 6:09:24 GMT 5.5
1. சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்களே! சிறப்புகள் மிகுந்த ஆயர்பாடியில் வாழும் செல்வச் சிறுமிகளே! இது மார்கழி மாதம். முழு நிலவு தோன்றும் பௌர்ணமி நாள். நீராட விரும்பி வரும் பெண்களே வாருங்கள். கூர்மையான வேலாயுதத்தை உடைய நந்த கோபன் - அழகான கண்களையுடைய யசோதை ஆகியோரின் மகன் கண்ணன். சிவந்த கண்களையும் ஒளி வீசும் நிலவைப் போன்ற முகத்தையும் உடையவன். அவனே நாராயணன்.அவன் நமக்கே பறையைத் தருவான். இந்த உலகத்தில் உள்ளவர்கள் நம்மைப் போற்றிப் புகழுமாறு நீராடுவோம் வாருங்கள்.
2. இவ்வுலகில் வாழ்பவர்களே! நாம் நமது பாவை நோன்பில் பின்பற்ற வேண்டிய செயல் முறைகளைக் கேளுங்கள். பாற்கடலில் அழகாகக் கண்ணுறங்குகின்ற பரமனின்(திருமாலின்) திருவடிகளைப் பாட வேண்டும. நெய், பால் இவற்றை உண்ணக் கூடாது. விடியற்காலையில் எழுந்து நீராட வேண்டும் கண்களுக்கு மை தீட்டுதல் கூடாது. செய்யத்தகாத செயல்களைச் செய்ய மாட்டோம். சொல்லக் கூடாத சொற்களைச் சொல்ல மாட்டோம். நம்மால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்ய வேண்டும்.
|
|
|
Post by radha on Dec 18, 2019 9:49:10 GMT 5.5
THIRUPAVAI-3
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால், தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயல் உகளப் பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப, தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.
|
|
Deleted
Deleted Member
Posts: 0
|
Post by Deleted on Dec 18, 2019 15:48:50 GMT 5.5
3. உயர்ந்த உருவம் எடுத்துக்கொண்டு உலகை தனது காலால் அளந்த உத்தமனுடைய பெயரைப் பாடி நமது பாவை நோன்பிற்காக நீராடுவோம். அவ்வாறு நீராடிப் பாவை நோன்பு நோற்றால் கிடைக்கும் நன்மைகள் பல. நாம் நமது ஊரில் நோற்கும் பாவை நோன்பின் பயனால் நாடு முழுவதும் மாதம் மூன்று மழை பொழியும்.அதனால் வயலில் நீர்வளம் பெருகி செந்நெல் ஓங்கி வளரும். அந்த நெற்பயிர்களுக்கு இடையில் மீன்கள் துள்ளி விளையாடும். மென்மையான குவளை(நெய்தல்) மலர்களில் புள்ளிகள் உடைய வண்டுகள் கண்ணுறங்கும். ஆயர்கள் வள்ளல் தன்மையுடைய பசுக்களின் மடியில் ஓயாமல் சுரக்கும் பால்மடி பற்றிப் பால் குடங்களை நிறைப்பர். இவ்வளவு வளமை ஏற்படுவதால் நமது இல்லங்களில் நீங்காத செல்வம் நிறையும்.
|
|
|
Post by radha on Dec 19, 2019 6:33:34 GMT 5.5
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி, ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து, தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். THIRUPAVAI -4
|
|
Deleted
Deleted Member
Posts: 0
|
Post by Deleted on Dec 19, 2019 7:32:16 GMT 5.5
4.
கடல் போன்ற அகன்ற பரப்புடைய நீரைக் கொடுக்கக்கூடிய மழைக் கடவுளே! நீ எதனையும் மூடி மறைக்காதே. நீ கடலில் மூழ்கி நீரை முகந்து கொண்டு வானத்தை அடைய வேண்டும். படைப்புகள் எல்லாம் அழியும் காலத்தில் கூட தான் அழியாத முழுமுதற் பொருளைப் போலக் கரிய நிறமுடைய மேகமாக மாறவேண்டும். அழகான தோள்களையுடைய பத்மநாபனின் (திருமாலின்) ஒரு கையில் உள்ள சக்கரத்தைப் போல் மின்ன வேண்டும். மற்றொரு கையில் உள்ள வலம்புரிச் சங்கைப் போல ஓசை இடவேண்டும். திருமாலின் 'சாரங்கம்' என்று சொல்லக் கூடிய வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல நாங்கள் வாழ மழை பொழிவாயாக. நாங்கள் மார்கழி நீராடி மகிழ்வோம்.
|
|
|
Post by radha on Dec 20, 2019 5:41:46 GMT 5.5
THIRUPAVAI-5
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை, தூய பெருநீர் யமுனைத் துறைவனை, ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை, தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை, தூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய்.
|
|
Deleted
Deleted Member
Posts: 0
|
Post by Deleted on Dec 20, 2019 6:03:50 GMT 5.5
5 மாயச் செயல்கள் செய்பவன். அவன் வடமதுரைக்குத் தலைவன். தூய்மையான பெரிய நீர்ப்பரப்பினையுடைய யமுனை ஆற்றின் கரையில் வாழ்பவன். ஆயர்களுடைய குடியிலே தோன்றிய அழகான விளக்கைப் போன்றவன். தன்னைப் பெற்றெடுத்த தேவகி, வளர்த்துவிட்ட யசோதை ஆகியவர்களின் புகழை உலக மக்கள் அறியும்படிச் செய்தவன். அவன் தாமோதரன் அப்படிப்பட்ட இறைவனை நாம் தூய்மையானவர்களாக வந்து, தூயமலர்களைத் தூவித் தொழுதல் வேண்டும். அவனது புகழை வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க வேண்டும். அவ்வாறு செய்தால் ஏற்கனவே நாம் செய்த பிழைகளும் நெருப்பில் விழுந்த பஞ்சு போல மறைந்துவிடும். ஆகவே அவனது சிறப்பைச் சொல்வோமாக.
|
|
|
Post by radha on Dec 21, 2019 5:54:55 GMT 5.5
THIRUPAVAI- 6
திருப்பாவை பாசுரம் 6 புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சி வெள்ளத் தரவில் துயில் அமர்ந்த வித்தினை உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய். புள்ளும் - பறவைகளும்; சிலம்பின - கூவிக் கொண்டுள்ளன; கலக்கு அழிய - கட்டுக் குலையும்படி
|
|
Deleted
Deleted Member
Posts: 0
|
Post by Deleted on Dec 22, 2019 7:04:05 GMT 5.5
பெண்ணே! பொழுது விடிந்து விட்டதால் பறவைகளும் ஓசையிடத் தொடங்கி விட்டன. கருடனின் தலைவனாகிய திருமாலின் கோயிலில் இருந்து ஒலிக்கின்ற வெண்சங்கின் பேரொலியை நீ கேட்கவில்லையா? எழுந்திரு. "பூதகி" என்னும் பேயின் மார்பில் இருந்து சுரந்த பாலை உண்டவன். சகடாசூரன் என்பவன் சக்கர வடிவில் வந்தபோது தனது காலால் உதைத்துக் கொன்றவன். திருப்பாற்கடலில் பாம்புப் படுக்கையில் துயில் கொள்ளும் மூலப் பொருள். இவ்வளவு சிறப்புகள் உடைய இறைவனை முனிவர்களும் யோகிகளும் தூக்கம் களைந்து மெள்ள எழுந்து 'அரி' என்று கூறும் பேரொலி உள்ளத்தில் புகுந்து குளிர்விக்கிறதே.
|
|
|
Post by radha on Dec 22, 2019 9:57:11 GMT 5.5
கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ? நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ? தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய். THIRUPAVAI-7
|
|
Deleted
Deleted Member
Posts: 0
|
Post by Deleted on Dec 22, 2019 9:59:41 GMT 5.5
பேய் போல் உறங்கும் பெண்ணே! ஆனைச்சாத்தான் என்று சொல்லக் கூடிய பறவைகள் ஒன்றுடன் ஒன்று கலந்து "கீசு கீசு" என்று எங்கும் ஒலி எழுப்பிப் பேசிக் கொள்ளும் ஒலி உனது காதில் விழவில்லையா? ஆயர்ப் பெண்கள், தாங்கள் அணிந்துள்ள காசு, பிறப்பு ஆகிய அணிகலன்கள் 'கலகல' என்று ஓசையை எழுப்பும்படி மத்தினால் தயிர் கடையும் ஓசையும் உனக்குக் கேட்கவில்லையா? ஆயர்ப் பெண்களுக்கெல்லாம் நீ தலைவி என்று சொல்லிக் கொள்பவளே! நாராயணன் மூர்த்தியாகிய கேசவனை நாங்கள் பாடுகிறோம் அதைக் கேட்டும் படுக்கையிலிருந்து எழாமல் இருக்கிறாயோ? ஒளி வீசும் மேனியை உடையவளே! கதவைத் திறப்பாயாக.
|
|
|
Post by radha on Dec 23, 2019 6:05:20 GMT 5.5
THIRUPAVAI-8
கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண்; மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக் கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடைய பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால் ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.
|
|
Deleted
Deleted Member
Posts: 0
|
Post by Deleted on Dec 23, 2019 10:47:16 GMT 5.5
நாரினால் கட்டப்பட்ட அணிகலன்களை அணிந்த பாவையே! கிழக்கு வானம் வெளுத்து விட்டது. எருமைகள் தங்கள் தொழுவத்திலிருந்து விடுதலை பெற்று மேய்ச்சலுக்காக கிளம்பிச் சென்றுவிட்டன. ஆயர்க் குலப் பெண்கள் பாவை நோன்புக்காகப் புறப்பட்டுச் சென்று விட்டார்கள். உன்னையும் அழைத்துச் செல்வதற்காக மற்ற பெண்களைப் போகவிடாமல் காக்க வைத்துள்ளோம். இப்போது உன்னைக் கூவி அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளோம். பெண்ணே! எழுவாயாக. இசைக் கருவிகளுடன் அவனைப் பாடுவோம். குதிரை வடிவம் எடுத்துக் கொண்டு வந்த அரக்கனின் வாயைப் பிளந்தவனும், மல்யுத்தம் செய்ய வந்தவர்களைக் கொன்றவனுமாகிய, தேவர்களுக்கு எல்லாம் தேவனாகிய கண்ணனை நாம் வணங்கினால் நமது குறைகளைக் கேட்டு ஆராய்ந்து அருள் செய்வான்.
|
|
|
Post by radha on Dec 24, 2019 6:31:43 GMT 5.5
HARI OM !
THIRUPAVAI-9
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய, தூமங் கமழத் துயிலணைமேல் கண்வளரும் மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்; மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான் ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ? ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ? 'மாமாயன், மாதவன், வைகுந்தன்' என்றென்று நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.
|
|