Deleted
Deleted Member
Posts: 0
|
Post by Deleted on Dec 16, 2019 14:28:58 GMT 5.5
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
தென்னாடுடைய பெரியவா போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி
பொன்னார் மேனியனே போற்றி அண்ணாமலையானே போற்றி போற்றி
நெஞ்சே நீ கேளாய்
வினைப்பஞ்சணை மீதுறக்கம்
வீண்வஞ்சனை செய்துனைமயக்கும்
நஞ்சிருள் சூழும்முன்னே
மஞ்சள் வெயில் மாலைக் கதிரவன்
காஞ்சி மகாதீபம் ஏற்றே
கண்ணே நீ கேளாய்
முப்பொருளும் உனையீர்க்கும்
எப்பொழுதும் வழிமறிக்கும்
அப்பொழுதும் அடம்பிடித்து
மஞ்சள் வெயில் மாலைக் கதிரவன்
காஞ்சி மகாதீபம் காணே
கரமே நீ கேளாய்
வரவொன்றும் பாராதே
உறவொன்றும் தேடாதே
சிரமேற் கூடிநின்று
மஞ்சள் வெயில் மாலைக் கதிரவன்
காஞ்சி மகாதீபம் வணங்கே
செவியே நீ கேளாய்
கவிசொல்வ தொருதுளியேயிப்
புவியவனி லொருமணியே
பாவிகள்சொல் கேளாது
மஞ்சள் வெயில் மாலைக் கதிரவன்
காஞ்சி மகான்சொல் கேளே
பாதமே நீ கேளாய்
பாதகம் தேடாதேவினைப்
பாம்பது தீண்டும்
பார்போற்றும் பரந்தாமன்
மஞ்சள் வெயில் மாலைக் கதிரவன்
காஞ்சி மகானடி சார்ந்திடே
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
|
|
|
Post by padhu on Dec 16, 2019 19:05:47 GMT 5.5
மஹானடி பணிந்திடுவோம்.
|
|
Deleted
Deleted Member
Posts: 0
|
Post by Deleted on Dec 16, 2019 19:44:51 GMT 5.5
hi padhu, i would like to remind you of sri Ramana Maharishis's answer for guru pooja, Maharishi said that real guru pooja is to follow Their path without any deviations with utmost devotion
|
|