Deleted
Deleted Member
Posts: 0
|
Post by Deleted on Dec 16, 2019 10:17:13 GMT 5.5
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
தென்னாடுடைய பெரியவா போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி பொன்னார் மேனியனே போற்றி அண்ணாமலையானே போற்றி போற்றி
நதியொன்று கண்டீரோ ஜீவ நதியது கண்டீரோ மதியிழந்து வாடும் மரங்களையும் நற்கதிசேர்க்கும் நதியது கண்டீரோ
பசுமை எழில் பொழிந்து பசுவினங்கள் மேய்ந்து திரிந்து வசித்துறங்கும் இடமது கண்டீரோ
பழமரங்கள் பரந்து விரிந்து நிழகங்கள் குடைவிரித்து புல்லாங் குழலோன் கீதைசொல்லக் கேட்டீரோ
மலரினங்கள் இதழ் விரித்து நறுமணங்கள் கமழ சிரிக்கும் மறுமலர்ச்சி நதியது கண்டீரோ
குயிலினங்கள் கூடிப்பாட தோகை மயிலினங்கள் நற்றுணை கொண்டு மானினங்கள் மகிழ்ந்தாடக் கண்டீரோ
பன்னிரு வேட்கை தீர்த்து மண்ணாற மகிழ்ந்து நடக்கதற் கண்ணுரும் கருணையது கண்டீரோ
வேதங்கள் துள்ளிக் குதிக்க ஆகமங்கள் அள்ளி அணைத்துப்பல மகத்துவங்கள் மிகுந்தோடக் கண்டீரோ
துதிக்கையுடை யானைப் பாடி துதிப்போரைக் கவர்ந் தோடும் முழுமதியதிற் காணும் கண்டீரோ
கரையென அரியவர் கோடி வரையற வணங்கி நிற்க மறையது மகிழ்ந்தோடக் கண்டீரோ
பாலும் தேனும் இன்னமுதும் நாளும் நமக்கென சுமந்தோடும் வாழும் தெய்வமது கண்டீரோ
கண்ணிரு தேவியராகி அன்றில் இன்றுணை காமாக்ஷி கண்ணார்வக் காஞ்சி மகாநதியது கண்டீரோ
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
|
|
|
Post by padhu on Dec 16, 2019 14:21:51 GMT 5.5
மஹா பெரியவா வற்றாத மஹா நதி.
|
|