Deleted
Deleted Member
Posts: 0
|
Post by Deleted on Dec 13, 2019 20:02:54 GMT 5.5
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
தென்னாடுடைய பெரியவா போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பொன்னார் மேனியனே போற்றி அண்ணாமலையானே போற்றி போற்றி
இன்னுமோர் விடியல் கண்டனங்கன் நினைவோ டெழுதல் இருள்சேராது ஒளியு மாதவன் என்றவாறே
ஆரிருள்களைந்து மனம் நாடுமகிலன் பொற்பாதம் பேரின்பத் தேன்சொரிந்து நிற்கும் மலர் என்றவாறே
கண்மூடிக்காக்கும் இமை திறந்தனந்தன் திருமேனி கண்டுய்ப்பது தேனுண்டு ஆறும் சிறுவண் டென்றவாறே
இருகரம் கூப்பி வணங்கினாளுந்தன் திருமுகம் கண்டே மண்ணின்று எழுந்த விதை என்றவாறே
மண்ணிலோர் காலூன்றி புவியில் நல்வழி நிற்பது வேரூன்றி நின்ற மரம் என்றவாறே
முன்னிலோர் அடி வைத்தருகன் அறவழி நடப்பது தேடிக் கன்றோடிச்சேரும் தாய் என்றவாறே
நன்னீர் கொண்டாடி நல்லாடை உடுப்பது பன்னீர் வடிந்தோடும் பொற்பாத மலர் சேருமாறே
வெண்ணீர் பூசி மகிழ்ந்து மனமுவந்து போற்றுதல் செம்பசுவின் பால் கொண்டு காய்ச்சினவாறே
அலையாடும் மனம் கொண்டந்தணன் பொன்னடி அமைதல் ஆசைக் காற்றில்லாது கிளை நின்றவாறே
இன்னமுதன் சொல் கேட்டழகன் திருவடி உரைதல் பாலமுதொடு கற்கண்டுந் தேன் கலந்தவாறே
மெய்யே உந்தன் என்னத்தே நனைந் திருப்பின் திரியிட்டு நெய் சுடர் ஏற்றினவாறே
நற்கவி மாலை கொண்டமிர்தன் திருப்புகழ் பாடல் இன்செவி பசித் தொரு விருந்திட்டவாறே
குழலூதும் கண்ணன் கார்மேக வண்ணன் தாள்பற்றி ஆடல் தோகை மயில் ஆடினவாறே
வேலிரு கண்கள் இருள்மாய்த் தருளும் காருண்யம் பொய்யாக் கார்மேகம் மழை பொழிந்தவாறே
எக்கனமும் எப்பொருளும் உமையாள்பாகன் அமுதக் கதிரோன் இன்னருளே தேன்விட்டின் சுவை பிரியாதவாறே
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
|
|
|
Post by padhu on Dec 14, 2019 15:35:47 GMT 5.5
யார் உண்டாக்கிய பாட்டு. ரொம்ப நன்றாக இருக்கு. ஸர்வேஸ்வரா சரணம்.
|
|
Deleted
Deleted Member
Posts: 0
|
Post by Deleted on Dec 15, 2019 6:37:53 GMT 5.5
maha periyavar saranam hara hara shankara jaya jaya shankara
|
|
|
Post by padhu on Dec 15, 2019 20:01:34 GMT 5.5
மஹா பெரியவா பாதம் சரணம்.
|
|