Post by radha on Aug 28, 2019 9:37:45 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
பெரியவா சரணம்.
கும்பகோணம் மடத்துத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசங்கர மடத்தில் பிரதி மாத அனுஷ மஹோத்ஸவம் நடைபெற்று வருவதையும், ஸ்ரீமஹாபெரியவா விக்ரஹ ப்ரதிஷ்டையையும் (நின்றபடியாக அபய ஹஸ்த திருக்கோலம்) பற்றிய அடியேனின் முந்தைய பதிவுகளிலே படித்திருப்பீர்கள்.
சென்ற சங்கர ஜயந்தி மஹோத்ஸவத்தன்று ஸ்ரீசங்கரமடத்திலே அமைந்துள்ள ஸ்ரீகாஞ்சி காமகோடி மூலாம்னாய ஸர்வஜ்ஞ பீடத்தின் 62, 63 & 64-வது ஆசார்யர்களின் அதிஷ்டான சன்னதியிலே ஸ்ரீமஹாபெரியவா விக்ரஹ மூர்த்திக்கு கண் திறப்பு வைபவம் சிறப்புர நடந்தேறியதையும் பதிவுகளிலே படித்தும் கண்டும் அறிந்திருப்பீர்கள்.
நேற்றைய தினம் ஸ்ரீமஹாபெரியவா விக்ரஹத்துடனாக கும்பகோணம் ஸ்ரீமடத்திலே அனுஷ மஹோத்ஸவங்களை சிறப்புர நடத்திவரும் அன்புச் சகோதரர் Prabu Sarma அவர்கள், அன்பர்கள் சிலருடனாக, ஸ்ரீமஹாபெரியவா விக்ரஹத்தை அழைத்துக் கொண்டு காஞ்சி ஸ்ரீமடத்திற்குச் சென்று ஸ்ரீபெரியவாளிடம் காட்டி அனுக்ரஹம் பெற்று வந்த அற்புதமான நிகழ்வுகளை அடியேனிடம் பகிர்ந்து கொண்டார்கள். என்னே ஓர் ஆனந்த உணர்வு தெரியுமோ?
அதைத்தான் தற்போது உங்கள் அனைவரிடமும் அவர் கூறியபடியாக பகிர முற்படுகின்றேன். ஐயனின் க்ருபையில் அடியேனுக்குக் கிட்டிய ஆனந்த உணர்வுகள் தங்களுக்கும் கிட்ட ப்ரார்த்திக்கின்றேன்.
கும்பகோணத்திலிருந்து கிளம்பி காஞ்சியை அடையும் போது கிட்டத்தட்ட மதிய பொழுதாகி விட்டது. காஞ்சி காமாக்ஷியின் சன்னிதானத்திற்குச் சென்ற போது, அதிகபட்சம் சன்னதி மூடும் தருவாயில் நெருங்கிவிட்டோம். ஐயனின் வருகையை முன்னமே அறிந்தாளோ கருணை பொழியும் ஸ்ரீகாமாக்ஷி அம்பாள்… ஸ்ரீமஹாபெரியவா விக்ரஹத்தைக் கண்டதும் உடனடியாக வழிகள் திறக்கப்பட்டு சன்னதியினுள்ளே நுழைந்து விட்டோம் – அவர் அருளாலே! அன்னை காமாக்ஷியிடத்திலே கும்பகோணம் ஸ்ரீமடத்திலே 2018 மே, 28 – 29 தேதிகளிலே நடைபெறவுள்ள ஸ்ரீமஹாபெரியவா 125-வது ஜயந்தி மஹோத்ஸவ பத்திரிக்கையை சமர்ப்பித்து, ஸ்ரீமஹாபெரியவா விக்ரஹத்திற்கு அங்கு சிறப்பு பூஜைகளுடனாக, அம்பாள் பிரசாதங்களுடனாக காஞ்சி ஸ்ரீமடத்தை அடைந்தோம். நம் கருணாமூர்த்தியான ஸ்ரீபெரியவாள் ஸ்ரீமஹாத்ரிபுரசுந்தரி சமேத ஸ்ரீசந்த்ரமௌளீஸ்வரர்க்கு பூஜை செய்து கொண்டிருந்தார்கள். எனவே நேராக ஸ்ரீமஹாபெரியவா அதிஷ்டானத்திற்குச் சென்றோம்.
அங்கிருந்த அன்பர்கள் ஸ்ரீமஹாபெரியவா விக்ரஹமூர்த்தியை அன்போடு வரவேற்று உடனடியாக அதிஷ்டான சன்னதியிலே இருத்தினார்கள். அன்பொழுக ஒவ்வொருவரும் ஐயனின் அழகினை கிட்டே வந்து ரசித்து இன்புற்றார்கள். கும்பகோணம் ஸ்ரீமடத்திற்கென பிரத்யேகமான முறையிலே இதுகாறும் எவ்விடத்திலும் இல்லாதபடியான ஒரு வகையிலே ஸ்ரீமஹாபெரியவா அமைந்திருப்பது வெகுவான அழகன்றோ! பத்மபீடத்திலே நின்ற திருக்கோலம். சற்றே தலையை உயர்த்தி அடியார்களை நோக்கி கருணையோடு பார்க்கும் பார்வை. திருக்கரத்தினிலே தண்டம். மறுகரமோ அபயஹஸ்தம். திருவாசியின் அழகு வெகு அருமை என அன்பர்கள் அங்கே ஒவ்வொருவரும் தமது உணர்வினைப் பகிர்ந்தனர்.
ஸ்ரீசன்னதியிலே ஸ்ரீமஹாபெரியவா விக்ரஹத்திற்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கு விக்ரஹமூர்த்தி அதிஷ்டான சன்னதியிலேயே இருந்தார்கள். ஜயந்தி மஹோத்ஸவ பத்திரிக்கையை அடியவர் ஒருவர் ஸ்ரீமஹாபெரியவா சன்னிதானத்திலே படித்தார்கள்.
பின்னராக, ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாள் சன்னதியின் வெளிப்புறத்திலே ஸ்ரீமஹாபெரியவா விக்ரஹத்தோடு ஸ்ரீபெரியவாளின் (ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்) வருகைக்கென காத்திருந்தோம். அன்போடு அங்கு வந்த ஸ்ரீபெரியவாளோ அமுதீசனாம் ஐயன் கருணாகரானந்த மூர்த்தியினுடைய விக்ரஹத்தை அங்குலம் அங்குலமாக முகமலர்ச்சியோடு பார்த்துவிட்டு, வெகு நேர்த்தியாக அமைந்திருப்பதனை சுட்டிக்காட்டினார்கள். எந்த ஊரிலே எந்த ஸ்தபதி விக்ரஹத்தை வார்த்தார்கள் என்ற விவரங்களையும், கும்பகோணம் ஸ்ரீசங்கரமடத்திலே நடைபெற்று வருகின்ற ஸத்கார்யங்களைப் பற்றியும் விசாரித்து விட்டு, அன்புடனாக அனுக்ரஹித்தார்கள். அவ்வண்ணமாக கும்பகோணம் ஸ்ரீசங்கரமடத்திலே நிறைய ஹோமங்கள், பிரார்த்தனைகள் நடைபெறவும் ஆக்ஞை அளித்தார்கள். பின்னர் எங்களிடம் விக்ரஹத்தோடு நேராக ஸ்ரீமஹாபெரியவா படித்த திண்டிவனம் பள்ளிக்கும், பாடசாலைகளுக்குச் சென்று அங்கு ஸ்ரீமஹாபெரியவாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்துவிட்டு, விழுப்புரம் ஸ்ரீமஹாபெரியவா அவதார ஸ்தலத்திற்கும் சென்று விட்டு பின்னர் கலவை பெரியவர்கள் அதிஷ்டான சன்னதிக்கும் சென்றுவிட்டு அதன் பின்னராக கும்பகோணம் நோக்கிச் செல்ல ஆக்ஞை அளித்தனர்.
அப்படியாக அங்கிருந்து ஸ்ரீபெரியவர்கள் கொடுத்த கூடை மாம்பழங்களுடனாக நேராக கலவை அதிஷ்டான சன்னதிக்குச் சென்றோம்.
தமது குருநாதர்களான 66 மற்றும் 67வது பீடாசார்யர்களின் அதிஷ்டானத்திற்கு ஸ்ரீமஹாபெரியவா விசேஷ பூஜைகளைச் செய்தார்கள். ஆம்! ஒவ்வொரு பிடி புஷ்பத்தையும் ஸ்ரீமஹாபெரியவா விக்ரஹத்தின் கரங்களிலே தொட்டுவிட்டு வேதமந்திரங்களுடனாக வைதீகர்கள் அதிஷ்டானங்களுக்கு சிறப்பு பூஜைகளைச் செய்தனர். பின்னர் வ்ருத்தஸ்ரமத்திலே விசேஷ பூஜைகள் முடித்து அங்கிருந்தவர்களுக்கு ஸ்ரீசரணர் பிரசாதமாக மாம்பழங்களை அளித்து விட்டு, திண்டிவனம் நோக்கி எங்கள் காரிலே புறப்பட்டோம்.
என்ன ஆச்சர்யம்?!!! திண்டிவன எல்லையிலே “ஜய ஜய சங்கர… ஹர ஹர சங்கர...” பேனர்கள் சஹிதமாக இரு கார்கள் சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டிருக்க, அன்பர்கள் ஸ்ரீமஹாபெரியவா விக்ரஹ வருகைக்கென காத்திருப்பதைக் கண்டோம். அவர்களுடனாக, முன்னமாய் ஒரு வாகனமும், எங்கள் பின்னாலே ஒரு வாகனமுமாக வர ஸ்ரீவரதமூர்த்தியுடனாக நேராக ஐயன் படித்த பள்ளிக்கூடத்திற்குச் சென்றோம். அங்கே வாயிலிலே கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட அன்பர்கள் கைகளிலே பழக்கூடை, பூக்கள் சஹிதமாக சங்கர கோஷங்களுடனாக காத்திருந்தனர். மெய்சிலிர்க்கும்படியானதொரு நிகழ்வல்லவோ! சாக்ஷத் சர்வேஸ்வரனுடனாக அல்லவோ நாங்கள் சென்று கொண்டிருக்கின்றோம். சங்கரா! அந்த பள்ளியிலே ஸ்ரீமஹாபெரியவாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னராக திண்டிவனம் பாடசாலைக்குச் சென்றோம். எங்கு சென்றாலும் பூர்ணகும்ப மரியாதையுடனாக பக்தர்கள் கூட்டம் ஸ்ரீமஹாபெரியவாளை வரவேற்க, ஆனந்தமோ ஆனந்தம். சாமவேத பாடசாலையிலும் ஸ்ரீமஹாபெரியவாளுக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. வேதம் படிக்கும் குழந்தைகளுக்கு ஸ்ரீமஹாபெரியவா தமது ப்ரசாதமாக மாம்பழக் கனிகளை அளித்தார்கள் என்றால் மிகையாகாதே! திண்டிவனத்திலே, வசந்தபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீமஹாபெரியவா சன்னிதானத்திற்கும் சென்று வந்தோம். பின்னராக விழுப்புரத்திலே ஸ்ரீமஹாபெரியவா அவதார ஸ்தலத்திற்குப் பயணம். அங்கேயும் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது.
ஆனந்தமான அனுபவம் எனச் சொன்னால் மிகையாகாது. அப்படியாக ஒரு இனிதான பயணத்தினை அருளினார்கள் நம் ஆசார்யர்கள்.
நம் ஸ்ரீமஹாபெரியவா விக்ரஹ மூர்த்தியோ, தமது ஸமஸ்தானத்திற்குச் சென்றுவிட்டு, தாம் அவதரித்த ஸ்தலம், படித்த பள்ளிக்கூடம், அவருக்கு மிகவும் பிடித்தமான வேதபாடசாலைகளுக்கும் சென்றுவிட்டு, தமது ஆசார்யர்களுக்கு, குருமஹாரத்தினங்களுக்குக் கலவை சன்னதியிலே பூஜைகளை முடித்தல்லவோ கும்பகோணம் ஸ்ரீமடத்திற்கு வருகை தந்துள்ளார்கள்.
வருகிற மே 28, 29 தேதிகளிலே ஸ்ரீமஹாபெரியவாளின் 125-வது ஜயந்தி மஹோத்ஸவத்திலே ஸ்ரீவிக்ரஹ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டு, மாலை திருவீதியுலா வரவுள்ளார்கள் என்பதனையும் மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.
மஹோத்ஸவ பத்திரிக்கையை சாணு புத்திரன் மூலமாக முகனூலிலே அனைவருக்குமாக பகிரவுள்ளோம். அன்பர்கள் அனைவரும் குடும்பத்துடனாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் இயன்றவர்கள் தங்களால் ஆன கைங்கர்யத்தையும் செய்ய வேணுமாகவும் பிரார்த்திக்கொண்டு, விவரங்களுக்கு அடியேனுடைய கைபேசி எண்ணில் +91 9788041880 தொடர்பு கொள்ள வேணுமாயும் வேண்டிக் கொள்கிறேன்.
வணக்கத்துடனாக,
ப்ரபு சர்மா, கும்பகோணம்.
+91 9788041880
இதுகாறும் அன்புச் சோதரர் பிரபு சர்மா அவர்கள் அடியேனிடம் பகிர்ந்து கொண்டதை உங்களிடம் அவர் கூறுவதாகவே பகிரவும் செய்தேன். இது புதிய அனுபவம் தான். வேறொருவர் பகிர்ந்ததை அவர் கூறுவதாகவே எழுதுகையிலே உள்ள அனுபவத்தையும் இன்று நம் உம்மாச்சி அடியேனுக்குக் கிடைக்கச் செய்தருளியுள்ளார்கள்.
இங்கே இத்துடனாக கும்பகோணம் ஸ்ரீசங்கர மடத்தினிலே நடைபெறவுள்ள 125-வது ஜயந்தி மஹோத்ஸவ பத்திரிக்கையைப் பகிர்கின்றேன். அன்பு உறவுகள் இந்த கைங்கர்யத்திலே தம்மை ஈடுபடுத்திக் கொள்ள விழைபவர்கள் திரு பிரபு சர்மா அவர்களை தொலைபேசியிலே தொடர்பு கொண்டு மேற்படி மஹோத்ஸவத்திற்கு தங்கள் கைங்கர்யத்தினைச் செய்யுமாறு வேண்டுகிறேன்.
அடியேனுக்கும் இந்த மஹோத்ஸவத்திலே கலந்து கொள்ள மிகவும் ஏக்கமாகத் தான் உள்ளது. அடியேன் பிறந்த ஊர் கும்பகோணம். சிறுவயதிலே ஏகாந்தமாக ஸ்ரீபெரியவர்களின் அதிஷ்டானத்தினை பிரதக்ஷணம் செய்து, பகவத் பாதாள் தரிசனத்தைச் செய்த ஸ்தலத்திலே ஐயனின் ஜயந்தி மஹோத்ஸவத்திலே கலந்து கொண்டு பிரார்த்திக்க ஆசை தாம். அதுவும் சதசஹஸ்ர காயத்ரீ ஜப யக்ஞத்தின் முதல் நாளல்லவோ! அடியேன் பிறந்த ஊரிலே, அதுவும் நம் குருபீடமான ஸ்ரீசங்கர மடத்தினிலே ஸ்ரீமஹாஸ்வாமிகளின் முன்னமாக அமர்ந்து இந்த ஒரு நூறு நாட்களுக்குத் தொடர்ச்சியாக தினந்தோறும் உலகெங்கிலும் உள்ள ஆன்மீக அன்பர்கள் அனைவருடனுமாக அவரவர்கள் இருக்கும் இடங்களிலேயே ஜபத்தினைச் செய்யவுள்ள மஹாசத்கார்யமான சஹஸ்ரகாயத்ரீ ஜபயக்ஞத்தை ஆரம்பிக்கப் போகிறோம் என நினைக்கையிலே மஹா ஆனந்தம் தானே!
மேலும் அந்த ஜபயக்ஞத்திற்கான மஹாசங்கல்பமும், எல்லோரும் எவ்வித இடையூறுகளுமின்றி ஒரு நூறு நாட்களுக்கான ஜபயக்ஞத்தினைச் சிறப்புர செய்யவல்லதொரு பலம் பெற வேண்டி பிரார்த்தனையும், மஹா அனுஷம் நடைபெறவுள்ள பல்வேறு ஸ்தலங்களிலே நடைபெறவுள்ளதே!
ஜயந்தி மஹோத்ஸவத்திற்கு தங்களால்னியன்ற கைஙர்யத்தைச் செய்ய விருப்பனுள்ளவர்கள் அடியேனிடமிருந்து அவர்களுடைய வங்கிக் கணக்கு விவரத்தைப் பெறருக் கொள்ளலாம் அல்லது திரு பிரபு சர்மா அவர்களை நேரடியாக தொடர்பு கொண்டும் பெற்றுக் கொள்ளலஅம்.என்பதை தாழ்மையோடுந்தெரிவித்துக் கொள்கிறேன்.
மஹோன்னதமான ஜயந்தி மஹித்ஸவத்திலே அடியேனும் நேரில் சென்று பங்கு கொள்ளும் பாக்கியம் வேண்டி ஸ்ரீஉம்மாச்சியை மனதார ப்ரார்த்திக்கின்றேன்.
சர்வம் ஸ்ரீசந்த்ரசேகரம்.
குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை
பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம்
நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.
9940199430
மேற்படி மஹோத்ஸ்வத்திற்கு தங்களால் இயன்ற கைங்கர்யத்தைத் தவறாமல் கீழ்கண்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாமே!
M.RAMACHANDRAN
CUB Savings Bank A/c.no:500101010215841
IFSCode:CIUB0000003
Kumbakonam Town Branch.
பவதி பிக்ஷாந்தேஹி.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
பெரியவா சரணம்.
கும்பகோணம் மடத்துத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசங்கர மடத்தில் பிரதி மாத அனுஷ மஹோத்ஸவம் நடைபெற்று வருவதையும், ஸ்ரீமஹாபெரியவா விக்ரஹ ப்ரதிஷ்டையையும் (நின்றபடியாக அபய ஹஸ்த திருக்கோலம்) பற்றிய அடியேனின் முந்தைய பதிவுகளிலே படித்திருப்பீர்கள்.
சென்ற சங்கர ஜயந்தி மஹோத்ஸவத்தன்று ஸ்ரீசங்கரமடத்திலே அமைந்துள்ள ஸ்ரீகாஞ்சி காமகோடி மூலாம்னாய ஸர்வஜ்ஞ பீடத்தின் 62, 63 & 64-வது ஆசார்யர்களின் அதிஷ்டான சன்னதியிலே ஸ்ரீமஹாபெரியவா விக்ரஹ மூர்த்திக்கு கண் திறப்பு வைபவம் சிறப்புர நடந்தேறியதையும் பதிவுகளிலே படித்தும் கண்டும் அறிந்திருப்பீர்கள்.
நேற்றைய தினம் ஸ்ரீமஹாபெரியவா விக்ரஹத்துடனாக கும்பகோணம் ஸ்ரீமடத்திலே அனுஷ மஹோத்ஸவங்களை சிறப்புர நடத்திவரும் அன்புச் சகோதரர் Prabu Sarma அவர்கள், அன்பர்கள் சிலருடனாக, ஸ்ரீமஹாபெரியவா விக்ரஹத்தை அழைத்துக் கொண்டு காஞ்சி ஸ்ரீமடத்திற்குச் சென்று ஸ்ரீபெரியவாளிடம் காட்டி அனுக்ரஹம் பெற்று வந்த அற்புதமான நிகழ்வுகளை அடியேனிடம் பகிர்ந்து கொண்டார்கள். என்னே ஓர் ஆனந்த உணர்வு தெரியுமோ?
அதைத்தான் தற்போது உங்கள் அனைவரிடமும் அவர் கூறியபடியாக பகிர முற்படுகின்றேன். ஐயனின் க்ருபையில் அடியேனுக்குக் கிட்டிய ஆனந்த உணர்வுகள் தங்களுக்கும் கிட்ட ப்ரார்த்திக்கின்றேன்.
கும்பகோணத்திலிருந்து கிளம்பி காஞ்சியை அடையும் போது கிட்டத்தட்ட மதிய பொழுதாகி விட்டது. காஞ்சி காமாக்ஷியின் சன்னிதானத்திற்குச் சென்ற போது, அதிகபட்சம் சன்னதி மூடும் தருவாயில் நெருங்கிவிட்டோம். ஐயனின் வருகையை முன்னமே அறிந்தாளோ கருணை பொழியும் ஸ்ரீகாமாக்ஷி அம்பாள்… ஸ்ரீமஹாபெரியவா விக்ரஹத்தைக் கண்டதும் உடனடியாக வழிகள் திறக்கப்பட்டு சன்னதியினுள்ளே நுழைந்து விட்டோம் – அவர் அருளாலே! அன்னை காமாக்ஷியிடத்திலே கும்பகோணம் ஸ்ரீமடத்திலே 2018 மே, 28 – 29 தேதிகளிலே நடைபெறவுள்ள ஸ்ரீமஹாபெரியவா 125-வது ஜயந்தி மஹோத்ஸவ பத்திரிக்கையை சமர்ப்பித்து, ஸ்ரீமஹாபெரியவா விக்ரஹத்திற்கு அங்கு சிறப்பு பூஜைகளுடனாக, அம்பாள் பிரசாதங்களுடனாக காஞ்சி ஸ்ரீமடத்தை அடைந்தோம். நம் கருணாமூர்த்தியான ஸ்ரீபெரியவாள் ஸ்ரீமஹாத்ரிபுரசுந்தரி சமேத ஸ்ரீசந்த்ரமௌளீஸ்வரர்க்கு பூஜை செய்து கொண்டிருந்தார்கள். எனவே நேராக ஸ்ரீமஹாபெரியவா அதிஷ்டானத்திற்குச் சென்றோம்.
அங்கிருந்த அன்பர்கள் ஸ்ரீமஹாபெரியவா விக்ரஹமூர்த்தியை அன்போடு வரவேற்று உடனடியாக அதிஷ்டான சன்னதியிலே இருத்தினார்கள். அன்பொழுக ஒவ்வொருவரும் ஐயனின் அழகினை கிட்டே வந்து ரசித்து இன்புற்றார்கள். கும்பகோணம் ஸ்ரீமடத்திற்கென பிரத்யேகமான முறையிலே இதுகாறும் எவ்விடத்திலும் இல்லாதபடியான ஒரு வகையிலே ஸ்ரீமஹாபெரியவா அமைந்திருப்பது வெகுவான அழகன்றோ! பத்மபீடத்திலே நின்ற திருக்கோலம். சற்றே தலையை உயர்த்தி அடியார்களை நோக்கி கருணையோடு பார்க்கும் பார்வை. திருக்கரத்தினிலே தண்டம். மறுகரமோ அபயஹஸ்தம். திருவாசியின் அழகு வெகு அருமை என அன்பர்கள் அங்கே ஒவ்வொருவரும் தமது உணர்வினைப் பகிர்ந்தனர்.
ஸ்ரீசன்னதியிலே ஸ்ரீமஹாபெரியவா விக்ரஹத்திற்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கு விக்ரஹமூர்த்தி அதிஷ்டான சன்னதியிலேயே இருந்தார்கள். ஜயந்தி மஹோத்ஸவ பத்திரிக்கையை அடியவர் ஒருவர் ஸ்ரீமஹாபெரியவா சன்னிதானத்திலே படித்தார்கள்.
பின்னராக, ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாள் சன்னதியின் வெளிப்புறத்திலே ஸ்ரீமஹாபெரியவா விக்ரஹத்தோடு ஸ்ரீபெரியவாளின் (ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்) வருகைக்கென காத்திருந்தோம். அன்போடு அங்கு வந்த ஸ்ரீபெரியவாளோ அமுதீசனாம் ஐயன் கருணாகரானந்த மூர்த்தியினுடைய விக்ரஹத்தை அங்குலம் அங்குலமாக முகமலர்ச்சியோடு பார்த்துவிட்டு, வெகு நேர்த்தியாக அமைந்திருப்பதனை சுட்டிக்காட்டினார்கள். எந்த ஊரிலே எந்த ஸ்தபதி விக்ரஹத்தை வார்த்தார்கள் என்ற விவரங்களையும், கும்பகோணம் ஸ்ரீசங்கரமடத்திலே நடைபெற்று வருகின்ற ஸத்கார்யங்களைப் பற்றியும் விசாரித்து விட்டு, அன்புடனாக அனுக்ரஹித்தார்கள். அவ்வண்ணமாக கும்பகோணம் ஸ்ரீசங்கரமடத்திலே நிறைய ஹோமங்கள், பிரார்த்தனைகள் நடைபெறவும் ஆக்ஞை அளித்தார்கள். பின்னர் எங்களிடம் விக்ரஹத்தோடு நேராக ஸ்ரீமஹாபெரியவா படித்த திண்டிவனம் பள்ளிக்கும், பாடசாலைகளுக்குச் சென்று அங்கு ஸ்ரீமஹாபெரியவாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்துவிட்டு, விழுப்புரம் ஸ்ரீமஹாபெரியவா அவதார ஸ்தலத்திற்கும் சென்று விட்டு பின்னர் கலவை பெரியவர்கள் அதிஷ்டான சன்னதிக்கும் சென்றுவிட்டு அதன் பின்னராக கும்பகோணம் நோக்கிச் செல்ல ஆக்ஞை அளித்தனர்.
அப்படியாக அங்கிருந்து ஸ்ரீபெரியவர்கள் கொடுத்த கூடை மாம்பழங்களுடனாக நேராக கலவை அதிஷ்டான சன்னதிக்குச் சென்றோம்.
தமது குருநாதர்களான 66 மற்றும் 67வது பீடாசார்யர்களின் அதிஷ்டானத்திற்கு ஸ்ரீமஹாபெரியவா விசேஷ பூஜைகளைச் செய்தார்கள். ஆம்! ஒவ்வொரு பிடி புஷ்பத்தையும் ஸ்ரீமஹாபெரியவா விக்ரஹத்தின் கரங்களிலே தொட்டுவிட்டு வேதமந்திரங்களுடனாக வைதீகர்கள் அதிஷ்டானங்களுக்கு சிறப்பு பூஜைகளைச் செய்தனர். பின்னர் வ்ருத்தஸ்ரமத்திலே விசேஷ பூஜைகள் முடித்து அங்கிருந்தவர்களுக்கு ஸ்ரீசரணர் பிரசாதமாக மாம்பழங்களை அளித்து விட்டு, திண்டிவனம் நோக்கி எங்கள் காரிலே புறப்பட்டோம்.
என்ன ஆச்சர்யம்?!!! திண்டிவன எல்லையிலே “ஜய ஜய சங்கர… ஹர ஹர சங்கர...” பேனர்கள் சஹிதமாக இரு கார்கள் சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டிருக்க, அன்பர்கள் ஸ்ரீமஹாபெரியவா விக்ரஹ வருகைக்கென காத்திருப்பதைக் கண்டோம். அவர்களுடனாக, முன்னமாய் ஒரு வாகனமும், எங்கள் பின்னாலே ஒரு வாகனமுமாக வர ஸ்ரீவரதமூர்த்தியுடனாக நேராக ஐயன் படித்த பள்ளிக்கூடத்திற்குச் சென்றோம். அங்கே வாயிலிலே கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட அன்பர்கள் கைகளிலே பழக்கூடை, பூக்கள் சஹிதமாக சங்கர கோஷங்களுடனாக காத்திருந்தனர். மெய்சிலிர்க்கும்படியானதொரு நிகழ்வல்லவோ! சாக்ஷத் சர்வேஸ்வரனுடனாக அல்லவோ நாங்கள் சென்று கொண்டிருக்கின்றோம். சங்கரா! அந்த பள்ளியிலே ஸ்ரீமஹாபெரியவாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னராக திண்டிவனம் பாடசாலைக்குச் சென்றோம். எங்கு சென்றாலும் பூர்ணகும்ப மரியாதையுடனாக பக்தர்கள் கூட்டம் ஸ்ரீமஹாபெரியவாளை வரவேற்க, ஆனந்தமோ ஆனந்தம். சாமவேத பாடசாலையிலும் ஸ்ரீமஹாபெரியவாளுக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. வேதம் படிக்கும் குழந்தைகளுக்கு ஸ்ரீமஹாபெரியவா தமது ப்ரசாதமாக மாம்பழக் கனிகளை அளித்தார்கள் என்றால் மிகையாகாதே! திண்டிவனத்திலே, வசந்தபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீமஹாபெரியவா சன்னிதானத்திற்கும் சென்று வந்தோம். பின்னராக விழுப்புரத்திலே ஸ்ரீமஹாபெரியவா அவதார ஸ்தலத்திற்குப் பயணம். அங்கேயும் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது.
ஆனந்தமான அனுபவம் எனச் சொன்னால் மிகையாகாது. அப்படியாக ஒரு இனிதான பயணத்தினை அருளினார்கள் நம் ஆசார்யர்கள்.
நம் ஸ்ரீமஹாபெரியவா விக்ரஹ மூர்த்தியோ, தமது ஸமஸ்தானத்திற்குச் சென்றுவிட்டு, தாம் அவதரித்த ஸ்தலம், படித்த பள்ளிக்கூடம், அவருக்கு மிகவும் பிடித்தமான வேதபாடசாலைகளுக்கும் சென்றுவிட்டு, தமது ஆசார்யர்களுக்கு, குருமஹாரத்தினங்களுக்குக் கலவை சன்னதியிலே பூஜைகளை முடித்தல்லவோ கும்பகோணம் ஸ்ரீமடத்திற்கு வருகை தந்துள்ளார்கள்.
வருகிற மே 28, 29 தேதிகளிலே ஸ்ரீமஹாபெரியவாளின் 125-வது ஜயந்தி மஹோத்ஸவத்திலே ஸ்ரீவிக்ரஹ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டு, மாலை திருவீதியுலா வரவுள்ளார்கள் என்பதனையும் மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.
மஹோத்ஸவ பத்திரிக்கையை சாணு புத்திரன் மூலமாக முகனூலிலே அனைவருக்குமாக பகிரவுள்ளோம். அன்பர்கள் அனைவரும் குடும்பத்துடனாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் இயன்றவர்கள் தங்களால் ஆன கைங்கர்யத்தையும் செய்ய வேணுமாகவும் பிரார்த்திக்கொண்டு, விவரங்களுக்கு அடியேனுடைய கைபேசி எண்ணில் +91 9788041880 தொடர்பு கொள்ள வேணுமாயும் வேண்டிக் கொள்கிறேன்.
வணக்கத்துடனாக,
ப்ரபு சர்மா, கும்பகோணம்.
+91 9788041880
இதுகாறும் அன்புச் சோதரர் பிரபு சர்மா அவர்கள் அடியேனிடம் பகிர்ந்து கொண்டதை உங்களிடம் அவர் கூறுவதாகவே பகிரவும் செய்தேன். இது புதிய அனுபவம் தான். வேறொருவர் பகிர்ந்ததை அவர் கூறுவதாகவே எழுதுகையிலே உள்ள அனுபவத்தையும் இன்று நம் உம்மாச்சி அடியேனுக்குக் கிடைக்கச் செய்தருளியுள்ளார்கள்.
இங்கே இத்துடனாக கும்பகோணம் ஸ்ரீசங்கர மடத்தினிலே நடைபெறவுள்ள 125-வது ஜயந்தி மஹோத்ஸவ பத்திரிக்கையைப் பகிர்கின்றேன். அன்பு உறவுகள் இந்த கைங்கர்யத்திலே தம்மை ஈடுபடுத்திக் கொள்ள விழைபவர்கள் திரு பிரபு சர்மா அவர்களை தொலைபேசியிலே தொடர்பு கொண்டு மேற்படி மஹோத்ஸவத்திற்கு தங்கள் கைங்கர்யத்தினைச் செய்யுமாறு வேண்டுகிறேன்.
அடியேனுக்கும் இந்த மஹோத்ஸவத்திலே கலந்து கொள்ள மிகவும் ஏக்கமாகத் தான் உள்ளது. அடியேன் பிறந்த ஊர் கும்பகோணம். சிறுவயதிலே ஏகாந்தமாக ஸ்ரீபெரியவர்களின் அதிஷ்டானத்தினை பிரதக்ஷணம் செய்து, பகவத் பாதாள் தரிசனத்தைச் செய்த ஸ்தலத்திலே ஐயனின் ஜயந்தி மஹோத்ஸவத்திலே கலந்து கொண்டு பிரார்த்திக்க ஆசை தாம். அதுவும் சதசஹஸ்ர காயத்ரீ ஜப யக்ஞத்தின் முதல் நாளல்லவோ! அடியேன் பிறந்த ஊரிலே, அதுவும் நம் குருபீடமான ஸ்ரீசங்கர மடத்தினிலே ஸ்ரீமஹாஸ்வாமிகளின் முன்னமாக அமர்ந்து இந்த ஒரு நூறு நாட்களுக்குத் தொடர்ச்சியாக தினந்தோறும் உலகெங்கிலும் உள்ள ஆன்மீக அன்பர்கள் அனைவருடனுமாக அவரவர்கள் இருக்கும் இடங்களிலேயே ஜபத்தினைச் செய்யவுள்ள மஹாசத்கார்யமான சஹஸ்ரகாயத்ரீ ஜபயக்ஞத்தை ஆரம்பிக்கப் போகிறோம் என நினைக்கையிலே மஹா ஆனந்தம் தானே!
மேலும் அந்த ஜபயக்ஞத்திற்கான மஹாசங்கல்பமும், எல்லோரும் எவ்வித இடையூறுகளுமின்றி ஒரு நூறு நாட்களுக்கான ஜபயக்ஞத்தினைச் சிறப்புர செய்யவல்லதொரு பலம் பெற வேண்டி பிரார்த்தனையும், மஹா அனுஷம் நடைபெறவுள்ள பல்வேறு ஸ்தலங்களிலே நடைபெறவுள்ளதே!
ஜயந்தி மஹோத்ஸவத்திற்கு தங்களால்னியன்ற கைஙர்யத்தைச் செய்ய விருப்பனுள்ளவர்கள் அடியேனிடமிருந்து அவர்களுடைய வங்கிக் கணக்கு விவரத்தைப் பெறருக் கொள்ளலாம் அல்லது திரு பிரபு சர்மா அவர்களை நேரடியாக தொடர்பு கொண்டும் பெற்றுக் கொள்ளலஅம்.என்பதை தாழ்மையோடுந்தெரிவித்துக் கொள்கிறேன்.
மஹோன்னதமான ஜயந்தி மஹித்ஸவத்திலே அடியேனும் நேரில் சென்று பங்கு கொள்ளும் பாக்கியம் வேண்டி ஸ்ரீஉம்மாச்சியை மனதார ப்ரார்த்திக்கின்றேன்.
சர்வம் ஸ்ரீசந்த்ரசேகரம்.
குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை
பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம்
நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.
9940199430
மேற்படி மஹோத்ஸ்வத்திற்கு தங்களால் இயன்ற கைங்கர்யத்தைத் தவறாமல் கீழ்கண்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாமே!
M.RAMACHANDRAN
CUB Savings Bank A/c.no:500101010215841
IFSCode:CIUB0000003
Kumbakonam Town Branch.
பவதி பிக்ஷாந்தேஹி.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM