Post by radha on Jun 8, 2019 12:21:29 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
CHURNING CURD FOR BUTTER
பெரியவா சரணம்
ஒரு முறை பக்தர் ஒருவர் பெரியவா விடம், "சுவாமி! குழந்தைகளுக்கு பக்தியில் நாட்டம் வருவதில்லையே.... காலம் போகப் போகத் தான் பக்தியின் ருசி புரியத் தொடங்கும்.. வாழ்வில் வரும் அனுபவங்களைப் பொறுத்து, அவர்களின் மனம் கடவுளை நாடத் தொடங்கும்..
அது வரை பொறுமையுடன் இருக்கத் தானே வேண்டும்? வலுக்கட்டாயமாக பக்திப் பயிரை விதைத்தால் பலன் கிடைக்குமா? என்று கேட்டார்..
சுவாமிகள் கனிவுடன், "உன் வீட்டில் தயிர் கடைந்து வெண்ணெய் எடுப்பதுண்டா?" என்று கேட்டார்.
பக்தர், " தினமும் தயிர்ப் பானையில் மத்தை வைத்து, கயிறு கட்டி இழுத்துக் கடைவார்களே..." என்றார்..
"எந்த வேளையில் கடைவார்கள்... காலையிலா, மத்தியானமா?"
"அதிகாலையில் தான் சுவாமி"
" மத்தியானம், அல்லது சாயந்திரம் கடைவதில்லையே ஏன்?"
பதில் தெரியாமல் திகைத்தார் பக்தர்..
" அதிகாலை சுபமான வேளை. அந் நேரத்தில் வெயில் ஏறாததால் சுற்றுப்புறம் குளிர்ச்சியாக இருக்கும்.. அப்போது கடைந்தால் வெண்ணெய் பந்தாக திரளும்.. உருகாமல் கெட்டியாகவும் இருக்கும்.. சூரியன் வானில் உக்கிரமாகி விட்டால் போச்சு.. வெண்ணெய் திரளாமல், கடையக் கடைய உருகி விடும்... " என்று கூறி நிறுத்திய பெரியவா
மேலும் தொடர்ந்தார், " அது போல, வயதான காலத்தில் மனதில் பல சிந்தனைகளும் அலை மோதும். அப்போது பக்தி என்னும் வெண்ணெய் திரள்வது கடினம். குழந்தைகளின் மனம் குளிர்ச்சியானது.. அதில் காம, குரோத சிந்தனை இருக்காது.. அப்போது கடவுள் சிந்தனை என்னும் மத்தால் கடைய, பக்தி எனும் வெண்ணெய் சுலபமாகத் திரளும்.. "
" இதனால், பெற்றோர் வாரம் ஒரு முறையாவது கோயிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.. இந்தப் பழக்கம் அவர்களுக்கு தக்க பாதுகாப்பு அளிக்கும்.. துன்பம் வந்தாலும் கடவுள் அருளால் அது நம்மை பாதிக்காது என்ற சிந்தனை உருவாகும்..
அதனால் பக்திக்கு ஏற்ற வயது இளமைப் பருவம் தான்.. புரிகிறதா? " என்று கனிவாகக் கூறினார் பெரியவா..
பக்தரும் இதயம் கனிந்து, கண்ணீர் மல்க பெரியவா பாதம் பணிந்து நமஸ்கரித்தார்..
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
CHURNING CURD FOR BUTTER
பெரியவா சரணம்
ஒரு முறை பக்தர் ஒருவர் பெரியவா விடம், "சுவாமி! குழந்தைகளுக்கு பக்தியில் நாட்டம் வருவதில்லையே.... காலம் போகப் போகத் தான் பக்தியின் ருசி புரியத் தொடங்கும்.. வாழ்வில் வரும் அனுபவங்களைப் பொறுத்து, அவர்களின் மனம் கடவுளை நாடத் தொடங்கும்..
அது வரை பொறுமையுடன் இருக்கத் தானே வேண்டும்? வலுக்கட்டாயமாக பக்திப் பயிரை விதைத்தால் பலன் கிடைக்குமா? என்று கேட்டார்..
சுவாமிகள் கனிவுடன், "உன் வீட்டில் தயிர் கடைந்து வெண்ணெய் எடுப்பதுண்டா?" என்று கேட்டார்.
பக்தர், " தினமும் தயிர்ப் பானையில் மத்தை வைத்து, கயிறு கட்டி இழுத்துக் கடைவார்களே..." என்றார்..
"எந்த வேளையில் கடைவார்கள்... காலையிலா, மத்தியானமா?"
"அதிகாலையில் தான் சுவாமி"
" மத்தியானம், அல்லது சாயந்திரம் கடைவதில்லையே ஏன்?"
பதில் தெரியாமல் திகைத்தார் பக்தர்..
" அதிகாலை சுபமான வேளை. அந் நேரத்தில் வெயில் ஏறாததால் சுற்றுப்புறம் குளிர்ச்சியாக இருக்கும்.. அப்போது கடைந்தால் வெண்ணெய் பந்தாக திரளும்.. உருகாமல் கெட்டியாகவும் இருக்கும்.. சூரியன் வானில் உக்கிரமாகி விட்டால் போச்சு.. வெண்ணெய் திரளாமல், கடையக் கடைய உருகி விடும்... " என்று கூறி நிறுத்திய பெரியவா
மேலும் தொடர்ந்தார், " அது போல, வயதான காலத்தில் மனதில் பல சிந்தனைகளும் அலை மோதும். அப்போது பக்தி என்னும் வெண்ணெய் திரள்வது கடினம். குழந்தைகளின் மனம் குளிர்ச்சியானது.. அதில் காம, குரோத சிந்தனை இருக்காது.. அப்போது கடவுள் சிந்தனை என்னும் மத்தால் கடைய, பக்தி எனும் வெண்ணெய் சுலபமாகத் திரளும்.. "
" இதனால், பெற்றோர் வாரம் ஒரு முறையாவது கோயிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.. இந்தப் பழக்கம் அவர்களுக்கு தக்க பாதுகாப்பு அளிக்கும்.. துன்பம் வந்தாலும் கடவுள் அருளால் அது நம்மை பாதிக்காது என்ற சிந்தனை உருவாகும்..
அதனால் பக்திக்கு ஏற்ற வயது இளமைப் பருவம் தான்.. புரிகிறதா? " என்று கனிவாகக் கூறினார் பெரியவா..
பக்தரும் இதயம் கனிந்து, கண்ணீர் மல்க பெரியவா பாதம் பணிந்து நமஸ்கரித்தார்..
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM