Post by radha on May 4, 2019 15:15:48 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
2.காஞ்சிப்பெரியவரைச் சந்திக்க வருமாறு சீடர் மூலம் எனக்கு அழைப்பு வந்தது. அறையில் அமர்ந்திருந்த சுவாமிகளை தரிசித்ததும், மின்சாரம் உடம்பில் பாய்வது போல உணர்ந்தேன். ஆதிசங்கரர் தனது குருநாதரை சந்தித்த குகை பற்றிய விஷயங்களை விவரித்தேன். சிறிது நேரம் கண்மூடி தியானித்த அவர், ''நீ பார்த்த குகைக்கு, நர்மதை நதிக்கரையில் இருந்து நீண்ட துாரம் இருப்பதாகச் சொல்கிறாய். உண்மையில் அந்த குகை நதிக்கரையை ஒட்டியே இருந்தது. நதிநீர் வருவதற்கான வசதியும் அதில் இருந்தது.
ஸ்வரூபானந்த சரஸ்வதி சுவாமி மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதால், அவரிடம் ஆலோசித்தால் உனக்கு தெளிவு கிடைக்கும்'' என்றார்.
திருப்பி விடப்பட்ட பந்து போல ஸ்வரூபானந்த சுவாமியை சந்தித்தேன். ஆராய்ச்சியை தொடர அவர் ஊக்கப்படுத்தினார். அப்பகுதியிலுள்ள குகைகளை ஒன்றுவிடாமல் பார்த்தேன். எங்கும் புலி, ஓநாய், மலைப்பாம்புகளே என்னை வரவேற்றன. ஒருகட்டத்தில் மனம் மிகவும் சோர்ந்தது. இதற்கிடையில் தற்செயலாக ஒருநாள் சங்கர நாராயண சாஸ்திரி எழுதிய 'சங்கரர் காலம்' என்னும் ஆங்கிலப் புத்தகம் கிடைத்தது. குருநாதரான கோவிந்த பகவத்பாதரை, ஆதிசங்கரர் சந்தித்த குகை ஜோதிர்லிங்கத் தலமான ஓம்காரேஷ்வரர் கோயிலுக்கு அருகில் இருப்பதாக அதில் ஒரு குறிப்பு இருந்தது.
உற்சாகமுடன் ஓம்காரேஷ்வர் புறப்பட்டேன். அங்கு பல குகைகள் இருந்தாலும், குறிப்பிட்ட குகையில் மட்டும் நர்மதை நதிநீர் வருவதற்கு சுரங்கம் இருப்பதைக் கண்டு அதிசயித்தேன். ஓங்காரேஷ்வர் கோயில் கருவறைக்குச் செல்லும் சுரங்க பாதை ஒன்றும் அங்கிருந்தது. அங்கிருந்த பக்தர்கள் இந்த குகையை 'காளி மந்திர்' என அழைத்தனர்.
ஓம்காரேஷ்வர் கோயிலை ஒட்டிய பகுதியில் மேற்கு நோக்கியதாக குகை இருந்தது. ஆதிசங்கரர் தீட்சை பெற்ற இடத்தில் மண்டபம் இருந்தது. இதை கட்டியவர் உஜ்ஜயினி மன்னர் ஹர்ஷ விக்ரமாதித்தன்.
துவாரகா பீடாதிபதி அபிநவ சச்சிதானந்த சுவாமி, ஸ்வரூபானந்த சுவாமி இருவரும் குகையை பார்வையிட்டு, எனது கருத்து சரியானது என தெரிவித்தனர். ஆனாலும் காஞ்சிப்பெரியவரின் அங்கீகாரம் கிடைக்கவில்லையே என வருந்தினேன்.
இந்த சமயத்தில் கர்நாடக மாநிலம் ஹம்பியில் காஞ்சிப்பெரியவர் முகாமிட்டிருப்பதாக கேள்விப்பட்டு சென்றேன். அங்கே எனக்கு குழப்பம் காத்திருந்தது.
தொடரும்
ஜபல்பூர் நாகராஜசர்மா
கர்நாடக மாநிலம் ஹம்பி விருபாட்சர் கோயிலில் தங்கியிருந்தார் காஞ்சிப்பெரியவர். குகை பற்றி விபரங்களை என்னிடம் கேட்டறிந்தார். பின்னர் எனது குறிப்புகள், புத்தகங்களை பெற்றுக் கொண்டு, ''எல்லாம் சரி தான்! நீ சொல்வதும் உண்மையான குகை இல்லை என்றால் என்ன செய்வதாக உத்தேசம்?'' என்றார்.
என் முயற்சி வீணாகி விட்டதே என்று என் மனம் குழப்பத்தில் ஆழ்ந்தது. நாக்கு குழறியது. ''சுவாமி! இந்த குகையும் இல்லாவிட்டால் நர்மதை நதிக்கரையில் ஆதிசங்கரர் தீட்சை பெற்றார் என 2500 ஆண்டுகளாக நாம் சொல்லும் விஷயம் பொய்யாகி விடும். குருவைத் தேடி ஆதிசங்கரர் நர்மதைக்கு வந்திருக்கவே மாட்டார்.'' என்றேன்.
''சரி! நீ சொல்லும் குகை தான் குருநாதரை சங்கரர் சந்தித்தது என்பதற்கு பிரமாணம் இருக்கிறதா?'' எனக் கேட்டார்.
இதற்கு பின் நர்மதை மலைப்பகுதியை விட்டு சமவெளியில் பாய்கிறது. அங்கு குகைகளே இல்லை. தாங்கள் தெரிவித்தபடி நதிநீர் வர சுரங்கமும் இங்கிருக்கிறது.'' என்றேன்.
''சரி. இப்போதே தீர்மானம் செய்திடலாம்'' என்று தியானத்தில் ஆழ்ந்தார்.
பொறுமை இழந்து நா குழறியபடி பேசியதை எண்ணி மனம் வருந்தியது.
அரை மணி நேரத்திற்குப் பின், கண் திறந்த காஞ்சிப்பெரியவர் என் முடிவை ஏற்கும்விதமாக வாய் விட்டு சிரித்தார்.
ஏழு ஆண்டுகள் பட்டபாடு வீண் போகவில்லை என கண்ணீருடன் பெரியவரை வணங்கினேன்.
இதன் பின், காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி, ஓம்காரேஷ்வர் வந்தார். குகையை செப்பனிட்டு புதுப்பிக்க போபாலில்
'காஞ்சி காமகோடி சேவா டிரஸ்ட்' நிறுவி திருப்பணிகள் செய்தார். 1987 ஏப்.21 சங்கர ஜெயந்தியன்று 'குகை மந்திர்' என்னும் பெயரில் இக்கோயில் திறக்கப்பட்டது மத்தியபிரதேச முன்னாள் முதல்வர்
அர்ஜுன்சிங் வருகை புரிந்தார். முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் குகையை பார்வையிட்டதோடு, ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து என்னை பாராட்டினார்.
மத்திய பிரதேசத்திலுள்ள 'மாந்தாதா ஓம்காரேஷ்வர்' கோயிலுக்கு ஒருமுறையாவது செல்லுங்கள். ஆதிசங்கரரின் அருளால் பிறவிப்பயன் பெறுங்கள்.
* இந்தவுர் (அ) கண்ட்வா ரயில் நிலையத்தில் இருந்து 77 கி.மீ., துாரம். பேருந்துகளிலும் செல்லலாம்
* கண்ட்வா - ஆஜ்மீர் ரயிலில் சென்று 'ஓம்காரேஷ்வர் ரோடு' ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 13 கி.மீ.,
கட்டுரையாளரின் அலைபேசி : 80223 31447
-முற்றும்
ஜபல்பூர் நாகராஜசர்மா
2.காஞ்சிப்பெரியவரைச் சந்திக்க வருமாறு சீடர் மூலம் எனக்கு அழைப்பு வந்தது. அறையில் அமர்ந்திருந்த சுவாமிகளை தரிசித்ததும், மின்சாரம் உடம்பில் பாய்வது போல உணர்ந்தேன். ஆதிசங்கரர் தனது குருநாதரை சந்தித்த குகை பற்றிய விஷயங்களை விவரித்தேன். சிறிது நேரம் கண்மூடி தியானித்த அவர், ''நீ பார்த்த குகைக்கு, நர்மதை நதிக்கரையில் இருந்து நீண்ட துாரம் இருப்பதாகச் சொல்கிறாய். உண்மையில் அந்த குகை நதிக்கரையை ஒட்டியே இருந்தது. நதிநீர் வருவதற்கான வசதியும் அதில் இருந்தது.
ஸ்வரூபானந்த சரஸ்வதி சுவாமி மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதால், அவரிடம் ஆலோசித்தால் உனக்கு தெளிவு கிடைக்கும்'' என்றார்.
திருப்பி விடப்பட்ட பந்து போல ஸ்வரூபானந்த சுவாமியை சந்தித்தேன். ஆராய்ச்சியை தொடர அவர் ஊக்கப்படுத்தினார். அப்பகுதியிலுள்ள குகைகளை ஒன்றுவிடாமல் பார்த்தேன். எங்கும் புலி, ஓநாய், மலைப்பாம்புகளே என்னை வரவேற்றன. ஒருகட்டத்தில் மனம் மிகவும் சோர்ந்தது. இதற்கிடையில் தற்செயலாக ஒருநாள் சங்கர நாராயண சாஸ்திரி எழுதிய 'சங்கரர் காலம்' என்னும் ஆங்கிலப் புத்தகம் கிடைத்தது. குருநாதரான கோவிந்த பகவத்பாதரை, ஆதிசங்கரர் சந்தித்த குகை ஜோதிர்லிங்கத் தலமான ஓம்காரேஷ்வரர் கோயிலுக்கு அருகில் இருப்பதாக அதில் ஒரு குறிப்பு இருந்தது.
உற்சாகமுடன் ஓம்காரேஷ்வர் புறப்பட்டேன். அங்கு பல குகைகள் இருந்தாலும், குறிப்பிட்ட குகையில் மட்டும் நர்மதை நதிநீர் வருவதற்கு சுரங்கம் இருப்பதைக் கண்டு அதிசயித்தேன். ஓங்காரேஷ்வர் கோயில் கருவறைக்குச் செல்லும் சுரங்க பாதை ஒன்றும் அங்கிருந்தது. அங்கிருந்த பக்தர்கள் இந்த குகையை 'காளி மந்திர்' என அழைத்தனர்.
ஓம்காரேஷ்வர் கோயிலை ஒட்டிய பகுதியில் மேற்கு நோக்கியதாக குகை இருந்தது. ஆதிசங்கரர் தீட்சை பெற்ற இடத்தில் மண்டபம் இருந்தது. இதை கட்டியவர் உஜ்ஜயினி மன்னர் ஹர்ஷ விக்ரமாதித்தன்.
துவாரகா பீடாதிபதி அபிநவ சச்சிதானந்த சுவாமி, ஸ்வரூபானந்த சுவாமி இருவரும் குகையை பார்வையிட்டு, எனது கருத்து சரியானது என தெரிவித்தனர். ஆனாலும் காஞ்சிப்பெரியவரின் அங்கீகாரம் கிடைக்கவில்லையே என வருந்தினேன்.
இந்த சமயத்தில் கர்நாடக மாநிலம் ஹம்பியில் காஞ்சிப்பெரியவர் முகாமிட்டிருப்பதாக கேள்விப்பட்டு சென்றேன். அங்கே எனக்கு குழப்பம் காத்திருந்தது.
தொடரும்
ஜபல்பூர் நாகராஜசர்மா
கர்நாடக மாநிலம் ஹம்பி விருபாட்சர் கோயிலில் தங்கியிருந்தார் காஞ்சிப்பெரியவர். குகை பற்றி விபரங்களை என்னிடம் கேட்டறிந்தார். பின்னர் எனது குறிப்புகள், புத்தகங்களை பெற்றுக் கொண்டு, ''எல்லாம் சரி தான்! நீ சொல்வதும் உண்மையான குகை இல்லை என்றால் என்ன செய்வதாக உத்தேசம்?'' என்றார்.
என் முயற்சி வீணாகி விட்டதே என்று என் மனம் குழப்பத்தில் ஆழ்ந்தது. நாக்கு குழறியது. ''சுவாமி! இந்த குகையும் இல்லாவிட்டால் நர்மதை நதிக்கரையில் ஆதிசங்கரர் தீட்சை பெற்றார் என 2500 ஆண்டுகளாக நாம் சொல்லும் விஷயம் பொய்யாகி விடும். குருவைத் தேடி ஆதிசங்கரர் நர்மதைக்கு வந்திருக்கவே மாட்டார்.'' என்றேன்.
''சரி! நீ சொல்லும் குகை தான் குருநாதரை சங்கரர் சந்தித்தது என்பதற்கு பிரமாணம் இருக்கிறதா?'' எனக் கேட்டார்.
இதற்கு பின் நர்மதை மலைப்பகுதியை விட்டு சமவெளியில் பாய்கிறது. அங்கு குகைகளே இல்லை. தாங்கள் தெரிவித்தபடி நதிநீர் வர சுரங்கமும் இங்கிருக்கிறது.'' என்றேன்.
''சரி. இப்போதே தீர்மானம் செய்திடலாம்'' என்று தியானத்தில் ஆழ்ந்தார்.
பொறுமை இழந்து நா குழறியபடி பேசியதை எண்ணி மனம் வருந்தியது.
அரை மணி நேரத்திற்குப் பின், கண் திறந்த காஞ்சிப்பெரியவர் என் முடிவை ஏற்கும்விதமாக வாய் விட்டு சிரித்தார்.
ஏழு ஆண்டுகள் பட்டபாடு வீண் போகவில்லை என கண்ணீருடன் பெரியவரை வணங்கினேன்.
இதன் பின், காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி, ஓம்காரேஷ்வர் வந்தார். குகையை செப்பனிட்டு புதுப்பிக்க போபாலில்
'காஞ்சி காமகோடி சேவா டிரஸ்ட்' நிறுவி திருப்பணிகள் செய்தார். 1987 ஏப்.21 சங்கர ஜெயந்தியன்று 'குகை மந்திர்' என்னும் பெயரில் இக்கோயில் திறக்கப்பட்டது மத்தியபிரதேச முன்னாள் முதல்வர்
அர்ஜுன்சிங் வருகை புரிந்தார். முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் குகையை பார்வையிட்டதோடு, ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து என்னை பாராட்டினார்.
மத்திய பிரதேசத்திலுள்ள 'மாந்தாதா ஓம்காரேஷ்வர்' கோயிலுக்கு ஒருமுறையாவது செல்லுங்கள். ஆதிசங்கரரின் அருளால் பிறவிப்பயன் பெறுங்கள்.
* இந்தவுர் (அ) கண்ட்வா ரயில் நிலையத்தில் இருந்து 77 கி.மீ., துாரம். பேருந்துகளிலும் செல்லலாம்
* கண்ட்வா - ஆஜ்மீர் ரயிலில் சென்று 'ஓம்காரேஷ்வர் ரோடு' ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 13 கி.மீ.,
கட்டுரையாளரின் அலைபேசி : 80223 31447
-முற்றும்
ஜபல்பூர் நாகராஜசர்மா