Post by varagooran on Mar 6, 2019 7:04:14 GMT 5.5
"சங்கராசாரியாருக்குத் தினமும் கீரை கேக்கிறதாம்!'
(என்னை யார் திட்டினாலும்,கொட்டினாலும் பரவாயில்லை. என்னைத் திட்டறவா 'சங்கராச்சார்யார்'-ங்கிற பேரைச்
சொல்லி-ன்னா திட்டுவா? என்னாலே பகவத்பாதாள் பேருக்குத் திட்டு கிடைக்கிற மாதிரி ஆக்கலாமா?")
.
தொகுத்தவர்-ரா. கணபதி.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
(முன்பு படித்த கட்டுரை இன்னும் சற்று விரிவாக) (இதன் பின் பகுதி அதி ஸ்வாரஸ்யம்)
ஒரு பிரம்மசாரி பிக்ஷையில் ஏதோ ஒரு கீரையைப் பக்குவம் செய்து வைத்திருந்தான்.நல்ல கீரையாக இருந்ததால் சற்று அதிக அளவிலேயே வைத்திருந்தான்,
பெரியவாள் அவ்வளவையும் அமுது செய்திருக்கிறார்கள் இதைப் பார்த்துச் சந்தோஷித்த பிரம்மசாரிக்கு 'அபிமானம்' வந்து விட்டது.
மறுநாளும் அதை நிறையத் தயாரித்து பிக்ஷையில் சேர்த்திருந்தான்.அன்றும் அதனைப் பெரியவாள் உட்கொண்டிருந்தார்கள். மூன்றாம் நாளும் கீரை தொடர்ந்தது. அன்று பெரியவாள் பிக்ஷை முடித்தபின்,"மூன்று நாளாகக் கீரை" என்றார்கள்.
பெரியவாள் ஷொட்டுக் கொடுப்பதாக மகிழ்ந்தான் பிரம்மசாரி."பெரியவா ருசிச்சுச் சாப்பிடறதாகத் தெரிஞ்சதாலேதான் இன்னிக்கும் பண்ணினேன்" என்று சொல்லிவிட்டான்.
அதில் பிடித்த அனர்த்தம்தான் இந்தக் கடும் உபவாஸம்!
.
அறியாத்தனத்தால் செய்த காரியத்துக்காக அழுத பிரம்மசாரியிடம் ஸி.எஸ்.வி, "சரி, இங்கே அழறதை ரெண்டு பேருமாப் போய் பெரியவாகிட்டேயே அழுது உபவாஸத்தை முடிக்கச் சொல்லி முறையிடுவோம்" என்றார்.
ஆனால் பெரியவாள் இவர்களை அழவிடவில்லை. பிரம்மசாரியிடம் அன்பு மயமாகச் சொன்னார்;
"உங்கிட்ட என்ன தப்பப்பா? உங்கிட்ட கோவிச்சுண்டு நான் உபவாஸம் இல்லை. எனக்கு ஜிஹ்வா சாபல்யம் (நாவுச் சபலம்) போகலை என்கிற மாதிரி நான் நடந்துண்டா,அதுக்கு என்னை நான தண்டிச்சுக்கத்தானே வேணும்?"
மானேஜரைப் பார்த்துச் சொன்னார்;
"இந்த மாதிரி நான் ஒரு ஷாக்-ட்ரீட்மென்ட் தராட்டா, இவன் நித்யமும் இந்தக் கீரைக்காக யாரிடமாவது சொல்லி ஏற்பாடு பண்ண வேண்டியிருக்கும். பக்தாளும் சந்தோஷமாப் போட்டி போட்டுண்டு கொண்டு வந்து கொடுப்பா.
ஆனா, வேறே தினுசான ஜனங்களும் இருக்கத்தானே செய்வா? அவா இதைக் கேள்விப்பட்டுட்டு, "சங்கராசாரியாருக்குத் தினமும் கீரை கேக்கிறதாம்!'னு சொல்லுவா.
என்னை யார் திட்டினாலும்,கொட்டினாலும் பரவாயில்லை. என்னைத் திட்டறவா 'சங்கராச்சார்யார்'-ங்கிற பேரைச் சொல்லி-ன்னா திட்டுவா? என்னாலே பகவத்பாதாள் பேருக்குத்திட்டு கிடைக்கிற மாதிரி ஆக்கலாமா?"
(என்னை யார் திட்டினாலும்,கொட்டினாலும் பரவாயில்லை. என்னைத் திட்டறவா 'சங்கராச்சார்யார்'-ங்கிற பேரைச்
சொல்லி-ன்னா திட்டுவா? என்னாலே பகவத்பாதாள் பேருக்குத் திட்டு கிடைக்கிற மாதிரி ஆக்கலாமா?")
.
தொகுத்தவர்-ரா. கணபதி.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
(முன்பு படித்த கட்டுரை இன்னும் சற்று விரிவாக) (இதன் பின் பகுதி அதி ஸ்வாரஸ்யம்)
ஒரு பிரம்மசாரி பிக்ஷையில் ஏதோ ஒரு கீரையைப் பக்குவம் செய்து வைத்திருந்தான்.நல்ல கீரையாக இருந்ததால் சற்று அதிக அளவிலேயே வைத்திருந்தான்,
பெரியவாள் அவ்வளவையும் அமுது செய்திருக்கிறார்கள் இதைப் பார்த்துச் சந்தோஷித்த பிரம்மசாரிக்கு 'அபிமானம்' வந்து விட்டது.
மறுநாளும் அதை நிறையத் தயாரித்து பிக்ஷையில் சேர்த்திருந்தான்.அன்றும் அதனைப் பெரியவாள் உட்கொண்டிருந்தார்கள். மூன்றாம் நாளும் கீரை தொடர்ந்தது. அன்று பெரியவாள் பிக்ஷை முடித்தபின்,"மூன்று நாளாகக் கீரை" என்றார்கள்.
பெரியவாள் ஷொட்டுக் கொடுப்பதாக மகிழ்ந்தான் பிரம்மசாரி."பெரியவா ருசிச்சுச் சாப்பிடறதாகத் தெரிஞ்சதாலேதான் இன்னிக்கும் பண்ணினேன்" என்று சொல்லிவிட்டான்.
அதில் பிடித்த அனர்த்தம்தான் இந்தக் கடும் உபவாஸம்!
.
அறியாத்தனத்தால் செய்த காரியத்துக்காக அழுத பிரம்மசாரியிடம் ஸி.எஸ்.வி, "சரி, இங்கே அழறதை ரெண்டு பேருமாப் போய் பெரியவாகிட்டேயே அழுது உபவாஸத்தை முடிக்கச் சொல்லி முறையிடுவோம்" என்றார்.
ஆனால் பெரியவாள் இவர்களை அழவிடவில்லை. பிரம்மசாரியிடம் அன்பு மயமாகச் சொன்னார்;
"உங்கிட்ட என்ன தப்பப்பா? உங்கிட்ட கோவிச்சுண்டு நான் உபவாஸம் இல்லை. எனக்கு ஜிஹ்வா சாபல்யம் (நாவுச் சபலம்) போகலை என்கிற மாதிரி நான் நடந்துண்டா,அதுக்கு என்னை நான தண்டிச்சுக்கத்தானே வேணும்?"
மானேஜரைப் பார்த்துச் சொன்னார்;
"இந்த மாதிரி நான் ஒரு ஷாக்-ட்ரீட்மென்ட் தராட்டா, இவன் நித்யமும் இந்தக் கீரைக்காக யாரிடமாவது சொல்லி ஏற்பாடு பண்ண வேண்டியிருக்கும். பக்தாளும் சந்தோஷமாப் போட்டி போட்டுண்டு கொண்டு வந்து கொடுப்பா.
ஆனா, வேறே தினுசான ஜனங்களும் இருக்கத்தானே செய்வா? அவா இதைக் கேள்விப்பட்டுட்டு, "சங்கராசாரியாருக்குத் தினமும் கீரை கேக்கிறதாம்!'னு சொல்லுவா.
என்னை யார் திட்டினாலும்,கொட்டினாலும் பரவாயில்லை. என்னைத் திட்டறவா 'சங்கராச்சார்யார்'-ங்கிற பேரைச் சொல்லி-ன்னா திட்டுவா? என்னாலே பகவத்பாதாள் பேருக்குத்திட்டு கிடைக்கிற மாதிரி ஆக்கலாமா?"