Post by radha on Jan 31, 2019 14:14:29 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
தெய்வத்தின் குரல்: ருத்திரனுக்குள்ளும் சதாசிவம் உண்டு
Published : 31 Jan 2019 TAMIL HINDU PAPER
ருத்ரத்தில் இரண்டு இடங்களில் உக்ரபாவத்திலுள்ள ருத்திரனைக் கூப்பிட்டு, “அப்பா, ருத்ரா! உனக்கு எந்த சிவமான மங்களரூபம் உண்டோ – தே சிவாதநூ:” என்று ஸ்பஷ்டமாக வருகிறது.* சாட்சாத் ருத்ரனுக்கேதான் செளம்ய ரூபமும் உண்டு என்பது இங்கே ஐயமறத் தெரிகிறது.
ஒரு சமயத்தில் உக்கிரம், இன்னொரு சமயத்தில் செளம்யம் என்று அவன் மாறி மாறி இருப்பானா என்றால் அப்படியும் இல்லை. வாஸ்தவத்தில் எதுவாகவும் இல்லாத அவன் எப்போதுமே உக்ர ருத்ரனாகவும் இருப்பான், எப்போதுமே செளம்ய சிவனாகவும் இருப்பான். நம் அறிவையும், நம்முடைய லாஜிக்கையும் மீறிய பரமாத்மாவான அவனால் அப்படி இருக்க முடியும்.
அந்த மாதிரி எப்போதுமே சிவமாக அவன் இருப்பதை வைத்து அவனுக்கு ஏற்பட்டதுதான் சதாசிவ நாமா.
மகாவீரன் ரணபூமியில் உக்கிரனாயிருக்கிறான், கிருஹத்தில் செளம்யமாயிருக்கிறான் என்றேன். ஸ்வாமிக்கோ ப்ரபஞ்சமே ரண பூமியாகவும் இருக்கிறது; கிருஹமாகவும் இருக்கிறது! ஒரு பக்கத்தில் சம்ஹார கர்த்தாவாக இருக்கிறான்.! இன்னொரு பக்கத்தில் பரிபாலன கர்த்தாவாக இருக்கிறான்! ஒரே சமயத்தில் இந்த இரண்டு காரியமும் நடக்கிறது. ஒரே சமயத்தில் ஒரு இடத்தில் பூகம்பம், எரிமலை வெடிப்பு உண்டாகி சம்ஹாரமும், இன்னொரு இடத்தில் நல்ல மழை பெய்து பரிபாலனமும் நடக்கிறது!
ஒரே சமயத்தில் ஏதோ இரண்டு தேசங்கள் மோதிக்கொண்டு யுத்தம் செய்கின்றன; வேறே இரண்டு தேசங்கள் சமாதானம் செய்து கொண்டு உறவு கொண்டாடுகின்றன! நாம் இத்தனை கோடி பேர் இருக்கிறோம். நம் அத்தனை பேருக்குள்ளும் அந்த ஒருத்தனேதான் அந்தராத்மாவாக, அந்தர்யாமியாக இருந்துகொண்டு நடத்தி, ஆட்டி வைக்கிறான்.
நம்மில் பலர் நல்லதை நினைத்து, நல்லதைச் செய்து கொண்டு சாந்தமாயிருக்கிறோம்; வேறே பல பேர் கெட்டதை நினைத்து, கெட்டதைச் செய்கிறோம்; இந்த இரண்டு தினுசான காரியமும் ஒரே சமயத்தில் நடக்கிறது என்றால், அப்போது அந்த சர்வாந்தர்யாமி ஒரே சமயத்தில் செளம்யம், உக்ரம் இரண்டுமாக இருக்கிறான் என்று தானே ஆகிறது?
முன்னேயே சொன்னாற்போல அவன் அவனாக மட்டுமே நிஜ ஸ்வரூபத்திலிருக்கிறபோது இந்த இரண்டாகவுமில்லாமல், இரண்டையும் கடந்த ஸ்திதியில் இருக்கிறான். அவனை மாயையினால் நாமாகப் பிரதிபலிப்பதற்கு மூலச் சரக்கான ஈச்வரனாயிருக்கும்போது நல்லது-கெட்டது இரண்டுக்கும் மூலமாக ஒரே போதில் இருக்கிறான். மூலத்திலிருந்து வந்த தனி ஜீவர்களான நாமாகிறபோது ஒவ்வொரு சமயத்தில் நல்லதாகவும், ஒவ்வொரு சமயத்தில் கெட்டதாகவும் இருக்கிறான்!
அப்படியிருப்பதில் எப்போதுமே நல்லதாக இருக்கிறவனைத்தான் சதாசிவனாகச் சொல்லி ஸ்தோத்ரம், தியானம் பண்ணுவது.
“ஏன் எப்போதுமே கோபமாக இருக்கிறவனை ‘சதாருத்ரன்’ என்றும் சொல்லி, அப்படி அவனைப் பூஜை பண்ணப்படாது?” என்றால், நமக்கு அவனிடமிருந்து வேண்டியது செளம்ய பாவம் தானே? நமக்குள் புகுந்து நம்மையும் அவன் மாதிரி அன்புமயமாக்குவதற்கு அதுதானே சகாயம் செய்யும்? அன்பாக இருந்தால்தான் நமக்கு ஆனந்தம். நமக்கு வேண்டியது ஆனந்தம்; ஆனபடியால் அன்பு. ஆகையினாலே அதைத் தருகிறவனை, அதுவே ஸ்வரூபம் என்று சதாசிவனாகத்தானே நாம் வழிபட வேண்டும்?
அடுப்பும் தீபமும் தானே ஏற்றுகிறோம்
நெருப்பு கொளுத்தி பஸ்மீகரம் பண்ணி ரெளத்ரம் காட்டுகிறது; அதுவே சமைத்துப் பக்குவம் பண்ணி உடம்பை வளர்த்துக்கொள்ளவும், படித்து, பாராயணம் பண்ண வெளிச்சம் கொடுத்து நம் உயிரை வளர்த்துக்கொள்ளவும் சிவமாக சகாயம் செய்கிறது. நாம் என்ன செய்கிறோம்? நம்மைக் கொளுத்தியா கொள்கிறோம்? அடுப்பும் தீபமுந்தானே ஏற்றிக்கொள்கிறோம்?
இன்னம் ஒரு படி மேலே போனால் சதாசிவ நாமத்திற்கு இன்னொரு இன்டர்ப்ரடேஷன் (விளக்கம்) சதாருத்ரன் என்று சொல்லாமல் சதாசிவன் என்றே சொல்வதுதான் சரி என்று நியாயம் காட்டும் இன்டர்ப்ரடேஷன்; அதாவது, கெட்டது, உக்ரமானது, ரெளத்ரமானது என்பதுங்கூட அடிப்படையில் நல்லது தான், சிவத்தில் ஜனித்ததுதான் என்று புரிந்து கொள்வது. அதெப்படி?
கர்மத்திலிருந்து விடுவிக்கும் கஷ்டம்
எப்படியென்றால், கெட்டது என்று எதைச் சொல்கிறோம்? எது நமக்குக் கஷ்டத்தைக் கொடுக்கிறதோ அதைத்தான். ஆனால் கஷ்டப்பட்டாலொழிய நம் கர்மா எப்படித் தீரும்? பூர்வத்தில் பண்ணின தப்பு, பாவம் போய் நாம் கர்ம பாசத்திலிருந்து விடுபட்டு, free ஆகணுமென்றால், பண்ணினதற்கெல்லாம் தண்டனையாகக் கஷ்டப்பட்டுத்தான் ஆகணும். ஆகவே, ஸ்வாமி ருத்ரனாக்க் கெடுதி பண்ணி நமக்குக் கஷ்டம் கொடுக்கிறாரென்றால் அது நம்மைக் கர்மாவிலிருந்து விடுவிக்கத்தான்!
அந்த அன்பான நோக்கத்தில்தான் அன்பே உருவான சிவன் ருத்ரனும் ஆயிருப்பது! ருத்ரனாயிருக்கும் போதும் மூல பாவம் அந்த சிவமான அன்புதான். அதாவது, செளம்பமாக வெளிப்படத் தெரிகிற போதில் மாத்திரமில்லாமல் ருத்ரனாக இருக்கிறபோதும், அந்த இரண்டு போதும் என்பதால் எப்போதும், அதாவது சதாவும் அவன் உள்ளுக்குள்ளே சிவனாகத்தான் இருக்கிறான். அதனால் தான் ‘சதாசிவன்’ என்றே சொல்வது. சதாருத்ரன் இல்லை – மயான ருத்ரனாகத் தெரிகிற போதில்கூட உள்ளுக்குள் அப்படியில்லாமல் ‘சிவ’னாக இருக்கிறவன் எப்படி சதா ‘ருத்ர’னாக முடியும்?
இன்னமுங்கூடக் கொஞ்சம் நீட்டிக்கொண்டு போகலாம். கஷ்டம், கெடுதல் என்பது இல்லாவிட்டால் சம்சார வாழ்க்கை அலுத்தே போகாது. இது வேண்டாம் என்ற எண்ணம் ஏற்படவே ஏற்படாது. லோக வாழ்க்கை முழுக்க செளக்யமாகவே இருந்துவிட்டால் இதை விட்டு விடுபட எப்படி நினைப்போம்?
இந்திரிய செளக்யங்களிலேயே திருப்தர்களாக இருந்துகொண்டு இதற்கு அனந்தம் பங்கு (மடங்கு) பெரிசான ஆத்மானந்தத்தைப் பற்றிச் சிந்தையே இல்லாமல், அதற்கு பிரயத்தனமே படாமல்தான் சிற்றின்ப ஜீவிகளாகவே குறுகிக் கொண்டு முடிந்து போவோம். கஷ்டம் இருக்கிறதோ, கொஞ்சத்தில் கொஞ்சமாவது வைராக்யம், லவலேசமாவது மோக்ஷாபிலாஷை நமக்கும் எப்போதாவது வாய்க்கிறது!
அவ்வளவு தூரத்துக்கு ‘சம்சார நிவ்ருத்தி’ என்று போகாவிட்டால்கூட, கஷ்டம் வந்தால்தான் அந்தக் கஷ்டம் நிவ்ருத்தியாகி, இந்த லோகத்தில் செளக்யம் உண்டாவதற்கேயாவது பகவானை நினைத்து ப்ரார்த்தனை பண்ணுகிறோம். குந்திகூட கிருஷ்ண பரமாத்வாவிடம் வரம் கேட்டாள்: “எங்களுக்கு விபத்துகள் வந்துகொண்டே இருக்கட்டும். அப்போதான் ரக்ஷிப்பதற்காக உன்னைக் கூப்பிடுவோம். நீயும் வருவாய். உன்னைத் தரிசித்த அப்புறம் விபத்து நிவாரணத்துக்காக இல்லாமல், ஜன்மா நீக்கம்-சம்சார நிவ்ருத்திக்காகவே வேண்டிக் கொள்கிற புத்தியும் வரும்” என்று! ஆகக்கூடி ருத்ரனாயிருக்கும் போதும் ஸாரபூதத்தில் அவன் அன்புமயமான சிவன்தான்.
இந்தப் பரம ஸத்யத்தை நாம் புரிந்துகொண்டு, எப்போதும் மறக்காமலிருக்க வேண்டுமென்றுதான் அவனுக்கு ‘சதாசிவ’ நாமா கொடுத்து வைத்திருப்பது.
(தெய்வத்தின் குரல் ஏழாம் பாகம்)
SRIMKANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
தெய்வத்தின் குரல்: ருத்திரனுக்குள்ளும் சதாசிவம் உண்டு
Published : 31 Jan 2019 TAMIL HINDU PAPER
ருத்ரத்தில் இரண்டு இடங்களில் உக்ரபாவத்திலுள்ள ருத்திரனைக் கூப்பிட்டு, “அப்பா, ருத்ரா! உனக்கு எந்த சிவமான மங்களரூபம் உண்டோ – தே சிவாதநூ:” என்று ஸ்பஷ்டமாக வருகிறது.* சாட்சாத் ருத்ரனுக்கேதான் செளம்ய ரூபமும் உண்டு என்பது இங்கே ஐயமறத் தெரிகிறது.
ஒரு சமயத்தில் உக்கிரம், இன்னொரு சமயத்தில் செளம்யம் என்று அவன் மாறி மாறி இருப்பானா என்றால் அப்படியும் இல்லை. வாஸ்தவத்தில் எதுவாகவும் இல்லாத அவன் எப்போதுமே உக்ர ருத்ரனாகவும் இருப்பான், எப்போதுமே செளம்ய சிவனாகவும் இருப்பான். நம் அறிவையும், நம்முடைய லாஜிக்கையும் மீறிய பரமாத்மாவான அவனால் அப்படி இருக்க முடியும்.
அந்த மாதிரி எப்போதுமே சிவமாக அவன் இருப்பதை வைத்து அவனுக்கு ஏற்பட்டதுதான் சதாசிவ நாமா.
மகாவீரன் ரணபூமியில் உக்கிரனாயிருக்கிறான், கிருஹத்தில் செளம்யமாயிருக்கிறான் என்றேன். ஸ்வாமிக்கோ ப்ரபஞ்சமே ரண பூமியாகவும் இருக்கிறது; கிருஹமாகவும் இருக்கிறது! ஒரு பக்கத்தில் சம்ஹார கர்த்தாவாக இருக்கிறான்.! இன்னொரு பக்கத்தில் பரிபாலன கர்த்தாவாக இருக்கிறான்! ஒரே சமயத்தில் இந்த இரண்டு காரியமும் நடக்கிறது. ஒரே சமயத்தில் ஒரு இடத்தில் பூகம்பம், எரிமலை வெடிப்பு உண்டாகி சம்ஹாரமும், இன்னொரு இடத்தில் நல்ல மழை பெய்து பரிபாலனமும் நடக்கிறது!
ஒரே சமயத்தில் ஏதோ இரண்டு தேசங்கள் மோதிக்கொண்டு யுத்தம் செய்கின்றன; வேறே இரண்டு தேசங்கள் சமாதானம் செய்து கொண்டு உறவு கொண்டாடுகின்றன! நாம் இத்தனை கோடி பேர் இருக்கிறோம். நம் அத்தனை பேருக்குள்ளும் அந்த ஒருத்தனேதான் அந்தராத்மாவாக, அந்தர்யாமியாக இருந்துகொண்டு நடத்தி, ஆட்டி வைக்கிறான்.
நம்மில் பலர் நல்லதை நினைத்து, நல்லதைச் செய்து கொண்டு சாந்தமாயிருக்கிறோம்; வேறே பல பேர் கெட்டதை நினைத்து, கெட்டதைச் செய்கிறோம்; இந்த இரண்டு தினுசான காரியமும் ஒரே சமயத்தில் நடக்கிறது என்றால், அப்போது அந்த சர்வாந்தர்யாமி ஒரே சமயத்தில் செளம்யம், உக்ரம் இரண்டுமாக இருக்கிறான் என்று தானே ஆகிறது?
முன்னேயே சொன்னாற்போல அவன் அவனாக மட்டுமே நிஜ ஸ்வரூபத்திலிருக்கிறபோது இந்த இரண்டாகவுமில்லாமல், இரண்டையும் கடந்த ஸ்திதியில் இருக்கிறான். அவனை மாயையினால் நாமாகப் பிரதிபலிப்பதற்கு மூலச் சரக்கான ஈச்வரனாயிருக்கும்போது நல்லது-கெட்டது இரண்டுக்கும் மூலமாக ஒரே போதில் இருக்கிறான். மூலத்திலிருந்து வந்த தனி ஜீவர்களான நாமாகிறபோது ஒவ்வொரு சமயத்தில் நல்லதாகவும், ஒவ்வொரு சமயத்தில் கெட்டதாகவும் இருக்கிறான்!
அப்படியிருப்பதில் எப்போதுமே நல்லதாக இருக்கிறவனைத்தான் சதாசிவனாகச் சொல்லி ஸ்தோத்ரம், தியானம் பண்ணுவது.
“ஏன் எப்போதுமே கோபமாக இருக்கிறவனை ‘சதாருத்ரன்’ என்றும் சொல்லி, அப்படி அவனைப் பூஜை பண்ணப்படாது?” என்றால், நமக்கு அவனிடமிருந்து வேண்டியது செளம்ய பாவம் தானே? நமக்குள் புகுந்து நம்மையும் அவன் மாதிரி அன்புமயமாக்குவதற்கு அதுதானே சகாயம் செய்யும்? அன்பாக இருந்தால்தான் நமக்கு ஆனந்தம். நமக்கு வேண்டியது ஆனந்தம்; ஆனபடியால் அன்பு. ஆகையினாலே அதைத் தருகிறவனை, அதுவே ஸ்வரூபம் என்று சதாசிவனாகத்தானே நாம் வழிபட வேண்டும்?
அடுப்பும் தீபமும் தானே ஏற்றுகிறோம்
நெருப்பு கொளுத்தி பஸ்மீகரம் பண்ணி ரெளத்ரம் காட்டுகிறது; அதுவே சமைத்துப் பக்குவம் பண்ணி உடம்பை வளர்த்துக்கொள்ளவும், படித்து, பாராயணம் பண்ண வெளிச்சம் கொடுத்து நம் உயிரை வளர்த்துக்கொள்ளவும் சிவமாக சகாயம் செய்கிறது. நாம் என்ன செய்கிறோம்? நம்மைக் கொளுத்தியா கொள்கிறோம்? அடுப்பும் தீபமுந்தானே ஏற்றிக்கொள்கிறோம்?
இன்னம் ஒரு படி மேலே போனால் சதாசிவ நாமத்திற்கு இன்னொரு இன்டர்ப்ரடேஷன் (விளக்கம்) சதாருத்ரன் என்று சொல்லாமல் சதாசிவன் என்றே சொல்வதுதான் சரி என்று நியாயம் காட்டும் இன்டர்ப்ரடேஷன்; அதாவது, கெட்டது, உக்ரமானது, ரெளத்ரமானது என்பதுங்கூட அடிப்படையில் நல்லது தான், சிவத்தில் ஜனித்ததுதான் என்று புரிந்து கொள்வது. அதெப்படி?
கர்மத்திலிருந்து விடுவிக்கும் கஷ்டம்
எப்படியென்றால், கெட்டது என்று எதைச் சொல்கிறோம்? எது நமக்குக் கஷ்டத்தைக் கொடுக்கிறதோ அதைத்தான். ஆனால் கஷ்டப்பட்டாலொழிய நம் கர்மா எப்படித் தீரும்? பூர்வத்தில் பண்ணின தப்பு, பாவம் போய் நாம் கர்ம பாசத்திலிருந்து விடுபட்டு, free ஆகணுமென்றால், பண்ணினதற்கெல்லாம் தண்டனையாகக் கஷ்டப்பட்டுத்தான் ஆகணும். ஆகவே, ஸ்வாமி ருத்ரனாக்க் கெடுதி பண்ணி நமக்குக் கஷ்டம் கொடுக்கிறாரென்றால் அது நம்மைக் கர்மாவிலிருந்து விடுவிக்கத்தான்!
அந்த அன்பான நோக்கத்தில்தான் அன்பே உருவான சிவன் ருத்ரனும் ஆயிருப்பது! ருத்ரனாயிருக்கும் போதும் மூல பாவம் அந்த சிவமான அன்புதான். அதாவது, செளம்பமாக வெளிப்படத் தெரிகிற போதில் மாத்திரமில்லாமல் ருத்ரனாக இருக்கிறபோதும், அந்த இரண்டு போதும் என்பதால் எப்போதும், அதாவது சதாவும் அவன் உள்ளுக்குள்ளே சிவனாகத்தான் இருக்கிறான். அதனால் தான் ‘சதாசிவன்’ என்றே சொல்வது. சதாருத்ரன் இல்லை – மயான ருத்ரனாகத் தெரிகிற போதில்கூட உள்ளுக்குள் அப்படியில்லாமல் ‘சிவ’னாக இருக்கிறவன் எப்படி சதா ‘ருத்ர’னாக முடியும்?
இன்னமுங்கூடக் கொஞ்சம் நீட்டிக்கொண்டு போகலாம். கஷ்டம், கெடுதல் என்பது இல்லாவிட்டால் சம்சார வாழ்க்கை அலுத்தே போகாது. இது வேண்டாம் என்ற எண்ணம் ஏற்படவே ஏற்படாது. லோக வாழ்க்கை முழுக்க செளக்யமாகவே இருந்துவிட்டால் இதை விட்டு விடுபட எப்படி நினைப்போம்?
இந்திரிய செளக்யங்களிலேயே திருப்தர்களாக இருந்துகொண்டு இதற்கு அனந்தம் பங்கு (மடங்கு) பெரிசான ஆத்மானந்தத்தைப் பற்றிச் சிந்தையே இல்லாமல், அதற்கு பிரயத்தனமே படாமல்தான் சிற்றின்ப ஜீவிகளாகவே குறுகிக் கொண்டு முடிந்து போவோம். கஷ்டம் இருக்கிறதோ, கொஞ்சத்தில் கொஞ்சமாவது வைராக்யம், லவலேசமாவது மோக்ஷாபிலாஷை நமக்கும் எப்போதாவது வாய்க்கிறது!
அவ்வளவு தூரத்துக்கு ‘சம்சார நிவ்ருத்தி’ என்று போகாவிட்டால்கூட, கஷ்டம் வந்தால்தான் அந்தக் கஷ்டம் நிவ்ருத்தியாகி, இந்த லோகத்தில் செளக்யம் உண்டாவதற்கேயாவது பகவானை நினைத்து ப்ரார்த்தனை பண்ணுகிறோம். குந்திகூட கிருஷ்ண பரமாத்வாவிடம் வரம் கேட்டாள்: “எங்களுக்கு விபத்துகள் வந்துகொண்டே இருக்கட்டும். அப்போதான் ரக்ஷிப்பதற்காக உன்னைக் கூப்பிடுவோம். நீயும் வருவாய். உன்னைத் தரிசித்த அப்புறம் விபத்து நிவாரணத்துக்காக இல்லாமல், ஜன்மா நீக்கம்-சம்சார நிவ்ருத்திக்காகவே வேண்டிக் கொள்கிற புத்தியும் வரும்” என்று! ஆகக்கூடி ருத்ரனாயிருக்கும் போதும் ஸாரபூதத்தில் அவன் அன்புமயமான சிவன்தான்.
இந்தப் பரம ஸத்யத்தை நாம் புரிந்துகொண்டு, எப்போதும் மறக்காமலிருக்க வேண்டுமென்றுதான் அவனுக்கு ‘சதாசிவ’ நாமா கொடுத்து வைத்திருப்பது.
(தெய்வத்தின் குரல் ஏழாம் பாகம்)
SRIMKANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM