Post by radha on Nov 26, 2018 1:01:26 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
பெரியவா கும்பகோணம் ஸ்ரீ காஞ்சி மடத்தில் முகாமிட்டிருந்தார்... அங்கு வெகு விமரிசையாக வியாச பூஜை நடந்து கொண்டிருந்தது..
ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் பூஜை முடிந்து, எல்லா பக்தர் களும் பெரியவா தரிசிக்க முட்டி மோதிக் கொண்டிருந்தனர்.. அவரின் திருக் கரங்களால் அபிஷேகத் தீர்த்தம் வழங்கிக் கொண்டிருந்தார்...
வரிசையில் பக்தர்கள் வர, அதில் ஒரு பக்தரின் முறை வந்தது.. பிரசாதம் தரும் போது மகான் அவரை நிமிர்ந்து பார்த்தார்...
பிறகு அவரிடம், "நாளை நீ வேத பாராயணத்துக்குச் சீக்கிரம் வந்துடு.." என்று சொன்னார்... மகானின் உத்தரவுக்கு மறுப்பேது?
அவரும் மறுநாள் காலையில் மகான் இட்ட கட்டளைப்படியே வேத விற்பன்னர்களின் அந்தப் பாராயண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்..
பாராயணம் நடந்து கொண்டிருக்கும் வேளை, அந்த நேரத்தில் பெரியவா திடீர் விஜயம் செய்தார்.. வழக்கமாக இப்படி அவர் வருவதில்லை..
முதல் நாள் தன்னிடம் அநுக்கிரஹம் பெற்ற குறிப்பிட்ட அந்த பக்தர், மனமுருகிப் பாராயணம் செய்வதைக் கவனித்தார்..
வேத மந்திரங்களைச் சொல்லும் போது, அந்த பக்தருக்கு மட்டும் அவ்வப்போது மூச்சடைத்தது.. சற்றுத் தடுமாறியவாறே கஷ்டத்துடன் ஸ்லோகங்களைச் சொல்லி வந்தார் அவர்..
அவருக்கு தொண்டையிலோ அல்லது சுவாசப் பையிலோ ஏதோ கோளாறு இருக்கிறது என்பதை மகான் உணர்ந்தார்..
வேத பாராயணம் முடிந்து எல்லோருக்கும் பிரசாதம் வழங்கும் நேரத்தில் அந்த பக்தரை மட்டும் தனிப்பட்ட முறையில் கூப்பிட்டு கொஞ்சம் காத்திருக்கச் சொன்னார்..
பக்தருக்கு மனதில் கவலை.. 'தனது பாராயணத்தில் பெரியவா ஏதோ குறை கண்டு பிடித்திருக்கிறார்.. அதைச் சுட்டிக்காட்டிக் கண்டிக்கத் தான் இருக்கச் சொல்லியிருக்கிறார்' என்று சஞ்சலத்துடனே காணப்பட்டார்..
சிறிது நேரத்தில் அங்கே ஒரு வைத்தியர் வந்தார்.. மகானின் உத்தரவுப்படி , அந்த பக்தரை வைத்தியர் நன்றாகப் பரிசோதித்தார்..
பிறகு அவரைத் தனது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பல சோதனைகளை நடத்திய பின், அந்த பக்தருக்கு இதய நோய் இருப்பது தெரிய வந்தது.. அதனால் தான் பாராயணத்தின் போது மூச்சுத் திணறல்!
பெரியவா கட்டளைப்படி, பக்தருக்கு நல்ல வைத்தியம் செய்யப்பட்டு அறுவை சிகிச்சையில்லாமல் குணப்படுத்தினார் வைத்தியர்..
சில நாட்களுக்குப் பிறகு, அந்த பக்தர் பெரியவா தரிசிக்க வந்தார்.. " இப்போது நீ கொஞ்ச நேரம் வேத பாராயணம் செய்" என்று அவருக்கு கட்டளையிட்டார் மகான்..
எந்த விதமான தடங்கலும் இல்லாமல் வேத பாராயணம் செய்தார் அவர்..
வரவிருந்த பெரும் தீங்கிலிருந்து காப்பாற்றி அருளிய மகானை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார் பக்தர்...
தாயினும் சாலப் பரிந்த தயாளன்!
பெரியவா சரணம் சரணம்!
ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!
ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்🙏🙏
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
பெரியவா கும்பகோணம் ஸ்ரீ காஞ்சி மடத்தில் முகாமிட்டிருந்தார்... அங்கு வெகு விமரிசையாக வியாச பூஜை நடந்து கொண்டிருந்தது..
ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் பூஜை முடிந்து, எல்லா பக்தர் களும் பெரியவா தரிசிக்க முட்டி மோதிக் கொண்டிருந்தனர்.. அவரின் திருக் கரங்களால் அபிஷேகத் தீர்த்தம் வழங்கிக் கொண்டிருந்தார்...
வரிசையில் பக்தர்கள் வர, அதில் ஒரு பக்தரின் முறை வந்தது.. பிரசாதம் தரும் போது மகான் அவரை நிமிர்ந்து பார்த்தார்...
பிறகு அவரிடம், "நாளை நீ வேத பாராயணத்துக்குச் சீக்கிரம் வந்துடு.." என்று சொன்னார்... மகானின் உத்தரவுக்கு மறுப்பேது?
அவரும் மறுநாள் காலையில் மகான் இட்ட கட்டளைப்படியே வேத விற்பன்னர்களின் அந்தப் பாராயண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்..
பாராயணம் நடந்து கொண்டிருக்கும் வேளை, அந்த நேரத்தில் பெரியவா திடீர் விஜயம் செய்தார்.. வழக்கமாக இப்படி அவர் வருவதில்லை..
முதல் நாள் தன்னிடம் அநுக்கிரஹம் பெற்ற குறிப்பிட்ட அந்த பக்தர், மனமுருகிப் பாராயணம் செய்வதைக் கவனித்தார்..
வேத மந்திரங்களைச் சொல்லும் போது, அந்த பக்தருக்கு மட்டும் அவ்வப்போது மூச்சடைத்தது.. சற்றுத் தடுமாறியவாறே கஷ்டத்துடன் ஸ்லோகங்களைச் சொல்லி வந்தார் அவர்..
அவருக்கு தொண்டையிலோ அல்லது சுவாசப் பையிலோ ஏதோ கோளாறு இருக்கிறது என்பதை மகான் உணர்ந்தார்..
வேத பாராயணம் முடிந்து எல்லோருக்கும் பிரசாதம் வழங்கும் நேரத்தில் அந்த பக்தரை மட்டும் தனிப்பட்ட முறையில் கூப்பிட்டு கொஞ்சம் காத்திருக்கச் சொன்னார்..
பக்தருக்கு மனதில் கவலை.. 'தனது பாராயணத்தில் பெரியவா ஏதோ குறை கண்டு பிடித்திருக்கிறார்.. அதைச் சுட்டிக்காட்டிக் கண்டிக்கத் தான் இருக்கச் சொல்லியிருக்கிறார்' என்று சஞ்சலத்துடனே காணப்பட்டார்..
சிறிது நேரத்தில் அங்கே ஒரு வைத்தியர் வந்தார்.. மகானின் உத்தரவுப்படி , அந்த பக்தரை வைத்தியர் நன்றாகப் பரிசோதித்தார்..
பிறகு அவரைத் தனது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பல சோதனைகளை நடத்திய பின், அந்த பக்தருக்கு இதய நோய் இருப்பது தெரிய வந்தது.. அதனால் தான் பாராயணத்தின் போது மூச்சுத் திணறல்!
பெரியவா கட்டளைப்படி, பக்தருக்கு நல்ல வைத்தியம் செய்யப்பட்டு அறுவை சிகிச்சையில்லாமல் குணப்படுத்தினார் வைத்தியர்..
சில நாட்களுக்குப் பிறகு, அந்த பக்தர் பெரியவா தரிசிக்க வந்தார்.. " இப்போது நீ கொஞ்ச நேரம் வேத பாராயணம் செய்" என்று அவருக்கு கட்டளையிட்டார் மகான்..
எந்த விதமான தடங்கலும் இல்லாமல் வேத பாராயணம் செய்தார் அவர்..
வரவிருந்த பெரும் தீங்கிலிருந்து காப்பாற்றி அருளிய மகானை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார் பக்தர்...
தாயினும் சாலப் பரிந்த தயாளன்!
பெரியவா சரணம் சரணம்!
ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!
ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்🙏🙏
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM