Post by radha on Jul 31, 2018 8:43:09 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
௳
ஶ்ரீ காஞ்சீ காமகோடி பீடம்
பிக்ஷாவந்தனத்தின் முக்கியத்துவம்
மனிதப் பிறவியின் உண்மைப் பயனாவது அறத்தைக் கடைபிடித்து அதன் மூலம் உலகாயத பயனான பொருள் மற்றும் இன்பத்தையும் நுகர்ந்து ஆனால் இறுதியில் அதற்கும் அப்பாற்பட்ட சாசுவதமான பேரின்பத்தை அடைவதே. இதற்கு ஆனால் அஞ்ஞானத்தால் கட்டுண்டிருக்கும் ஜீவர்களாகிய நமக்கு சரியான வழி தெரிவதில்லை. ஆகவே நமக்கு வழிகாட்ட குரு என்ற ஒருவர் வேண்டியிருக்கிறார். தமக்கொரு பயனையும் எதிர்பாராத அவருக்கு நாம் என்ன கைம்மாறு செய்யவியலும்?
குருவிற்கோ இறைவனுக்கோ (உண்மையில் இருவரும் ஒருவரே!) நாம் செய்யக்கூடியது ஒன்றுமில்லை எனலாம். இருப்பினும்
पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति। तदहं भक्त्युपहृतम् अश्नामि प्रयतात्मनः॥
என்று பகவான் கீதையிலும்
யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை
என்று திருமூலரும் கூறியபடி பக்தியுடன் ஒரு சிறிய எளிய இலை, பூ, பழம், நீர் இவற்றை ஸமர்ப்பணம் செய்தால் குழந்தை அளிப்பதைக் கண்டே பெற்றோர் மகிழ்வது போல் அதைக் கண்டே அவர் மகிழ்கிறார். இதையே “தேவர்கள் உண்ணவோ பருகவோ செய்வதில்லை, இதையே அம்ருதமாகக் கண்டு மகிழ்கிறார்கள்” என்று சாந்தோக்ய உபநிஷத் சொல்கிறது.
மேலும் ப்ரஹ்மசாரிகள், யதிகள் இவர்களைப் போஷிப்பது க்ருஹஸ்தனின் தலையாய கடமையாக ஆகையால் க்ருஹஸ்தனே அவர்களுக்கு ஆச்ரயம் என்று மநு ஸ்ம்ருதியில் பெருமையாகச் சொல்லப்படுகிறது. அதிலும் சிறப்பாக யதியின் பஞ்ச ப்ராணன்களே அக்னிஹோத்ரிகளின் ஐந்து அக்னிகளுக்கு ஸமம் என்று சொல்லுகிறது போதாயந ஸ்ம்ருதி. அனைத்து க்ருஹஸ்தர்களும் செய்ய வேண்டியதாகிய அக்னிஹோத்ரத்தை இன்று செய்வது மிகக்கடினமாக உள்ள நிலையில் ஒரு யதிக்கு பிக்ஷை ஸமர்ப்பிப்பதை அக்னிஹோத்ரத்திற்கு ஸமமாக இந்த ஸ்ம்ருதி காட்டுகிறது.
பரிசுத்தமான சித்தமுடையோர்களின் மனதில் ஒருவரைக் குறித்து “இவருக்கு நல்லது உண்டாகட்டும்” என்ற எண்ணம் ஏற்பட்டால் அது ஸத்யமாகும் என்பதால் மேன்மையை விரும்புபவன் அத்தகைய ஞானிகளைப் பூஜிக்க வேண்டும் என்று முண்டக உபநிஷத் சொல்லுகிறது. தன் பாக்கியத்தினால் ஒரு யதிக்கு பிக்ஷை செய்விக்கும் வாய்ப்பு இருந்தும் அதைச் செய்யாமல் இருந்தால் மற்ற ஹோமம் தானம் முதலியவை அனைத்தும் பயனில்லை என்று அத்ரி ஸ்ம்ருதி கூறுகிறது.
இஃதனைத்திலிருந்தும் யதிகளுக்கு பிக்ஷை செய்விப்பதன் முக்கியத்துவம் தெரிகிறது.
அதிலும் ஜகத்குரு பீடமானது ஆதி ஆசார்யாள் நமது க்ஷேமத்தை மட்டுமே உத்தேசித்து ஏற்படுத்தியதாகும். “ஆத்ம ஞானத்தை அடைய பூமியையே த்யாகம் செய்யலாம்” என்றிருக்க தமது மோக்ஷம் மட்டும் வேண்டுமாகில் நமது குருநாதர் ஒரு ஏகாந்த ஸந்ந்யாஸியாக இருக்கலாமே! அப்படியின்றி இத்தனை பூஜை, மடம், ஸ்தாபனம் இருப்பதன் ஒரே காரணம் நம்மெல்லோரையும் வழிநடத்திச் செய்யவேண்டியிருப்பதே அன்றோ!
அத்தகைய மடம் சீராக செயல்படுவதற்கு நமது பலவித ஒத்துழைப்பையும் அவசியம். உண்மையில் மடம் என்பது குருவின் வழிகாட்டுதலின் பேரில் செயல்படும் அனைத்து சிஷ்யர்களாகிய நாமும் சேர்ந்து தான்! ஆகவே மடம் என்ற ஸ்தாபனத்தை நடத்துவதில் நாமும் பங்கு கொண்டு, குருநாதரின் வழிகாட்டுதலின் பேரில் தர்ம ஸம்ரக்ஷணத்தில் ஈடுபட்டு, குருநாதருக்கும் நமது க்ருதஜ்ஞதையைத் தெரிவிக்கும் ஓர் அரிய உயர்ந்த ஸம்ப்ரதாயமே பிக்ஷாவந்தனம் என்பது. குருவுக்கு பிக்ஷையை ஸமர்ப்பித்து வந்தனம் செய்து அவரது ஆஜ்ஞையைப் பின்பற்றுவதே பிக்ஷாவந்தனம்.
நமது க்ருஹங்களில் சுப காரியங்கள் நடக்கும்பொழுது சந்த்ரமௌளீச்வர ஸம்பாவனை என்பதாக ஶ்ரீமடத்திற்கு த்ரவ்ய ஸமர்ப்பணம் செய்யும் வழக்கம் உண்டு. ப்ரயாண வசதிகள் குறைவாக இருந்த காலத்தில் குடும்ப உபாத்யாயர் மூலம் சேர்ப்பிப்பதாக இருந்தது. இன்றோ நேராகச் சென்று தரிசனம் பெற்று குருவின் கடாக்ஷத்தைப் பெறவும் முடியுமே!
ஆகவே பிக்ஷாவந்தனம் என்ற இந்த உயர்வான ஸம்ப்ரதாயத்தைப் பின்பற்றி நாம் அனைவரும் ச்ரேயஸ்ஸை அடைவோமாக!
Thanks and credits to Shriramana Sharma
பிக்ஷா வந்தனம்
இந்த சாதுர்மாஸ்ய காலகட்டத்தில் நல்லடியார்கள் பலர் பிக்ஷாவந்தனம் பலவற்றில் பங்குகொண்டு நம் ஸ்ரீ மடத்துக்கும் நம் யதிவரர்களுக்கும் மரியாதை செலுத்தி, அவர்கள் அன்புக்கும் அருளுக்கும் பாத்திரம் ஆகி வருகிறோம்....
அண்ணா ஸ்ரீ ரா க அவர்கள் கைவண்ணத்தில் உருவாகிய “மைத்ரீம் பஜத” புத்தகத்தில் இந்த பகுதி கண்களில் பட்டது.
தங்களனைவருடனும் பகிர தூண்டியது...
பூஜை முடிவில் அன்றைக்கு பிக்ஷை செய்பவர்கள் பிக்ஷாவந்தனம் செய்து கொள்வார்கள். மடத்து யானையின் தலையில் பிக்ஷை செய்பவர் பூர்ண கும்பத்தையும், அவரது மனைவி தேன் கிண்ணம் பதிந்த நாட்டுச் சர்க்கரைத் தட்டையும் வைத்தெடுத்து ஸ்ரீ சரணர் முன்பு சமர்ப்பிப்பார்கள். வெள்ளிக்காசுகளாக மாற்றப்பட்ட பிக்ஷைக்குரிய நிதியையும், மற்றும் பழங்கள், புஷ்பங்கள், காய்கறிகள், திராட்சை, முந்திரி போன்ற மற்ற திரவியங்களையும் பிக்ஷை செய்வோரின் உறவினரும் நண்பர்களும் எடுத்து வந்து குருநாதனின் முன்பு சமர்ப்பிப்பார்கள். ஆசாரியருக்கு பிக்ஷை செய்து வைப்பதாக சொல்லாமல் சந்திர மௌலீச்வர பூஜைக்கு உபஹாரம் செய்வதாகவே கூறுவது சில வருடங்களாக மடத்தில் ஏற்பட்டுள்ள வழக்கம். யதி தர்மத்தை அவ்வளவு அப்பழுக்கின்றி பின்பற்றுகிறார் குருநாதன். பணமும் காசும் பழமும் பூவும் துறவிக்கு எதற்கு? ஈஸ்வரனுடைய பூஜாரியாகவே இவற்றை அவர் ஏற்கிறார்!
Source:- AMRITHA VAHINI
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
௳
ஶ்ரீ காஞ்சீ காமகோடி பீடம்
பிக்ஷாவந்தனத்தின் முக்கியத்துவம்
மனிதப் பிறவியின் உண்மைப் பயனாவது அறத்தைக் கடைபிடித்து அதன் மூலம் உலகாயத பயனான பொருள் மற்றும் இன்பத்தையும் நுகர்ந்து ஆனால் இறுதியில் அதற்கும் அப்பாற்பட்ட சாசுவதமான பேரின்பத்தை அடைவதே. இதற்கு ஆனால் அஞ்ஞானத்தால் கட்டுண்டிருக்கும் ஜீவர்களாகிய நமக்கு சரியான வழி தெரிவதில்லை. ஆகவே நமக்கு வழிகாட்ட குரு என்ற ஒருவர் வேண்டியிருக்கிறார். தமக்கொரு பயனையும் எதிர்பாராத அவருக்கு நாம் என்ன கைம்மாறு செய்யவியலும்?
குருவிற்கோ இறைவனுக்கோ (உண்மையில் இருவரும் ஒருவரே!) நாம் செய்யக்கூடியது ஒன்றுமில்லை எனலாம். இருப்பினும்
पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति। तदहं भक्त्युपहृतम् अश्नामि प्रयतात्मनः॥
என்று பகவான் கீதையிலும்
யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை
என்று திருமூலரும் கூறியபடி பக்தியுடன் ஒரு சிறிய எளிய இலை, பூ, பழம், நீர் இவற்றை ஸமர்ப்பணம் செய்தால் குழந்தை அளிப்பதைக் கண்டே பெற்றோர் மகிழ்வது போல் அதைக் கண்டே அவர் மகிழ்கிறார். இதையே “தேவர்கள் உண்ணவோ பருகவோ செய்வதில்லை, இதையே அம்ருதமாகக் கண்டு மகிழ்கிறார்கள்” என்று சாந்தோக்ய உபநிஷத் சொல்கிறது.
மேலும் ப்ரஹ்மசாரிகள், யதிகள் இவர்களைப் போஷிப்பது க்ருஹஸ்தனின் தலையாய கடமையாக ஆகையால் க்ருஹஸ்தனே அவர்களுக்கு ஆச்ரயம் என்று மநு ஸ்ம்ருதியில் பெருமையாகச் சொல்லப்படுகிறது. அதிலும் சிறப்பாக யதியின் பஞ்ச ப்ராணன்களே அக்னிஹோத்ரிகளின் ஐந்து அக்னிகளுக்கு ஸமம் என்று சொல்லுகிறது போதாயந ஸ்ம்ருதி. அனைத்து க்ருஹஸ்தர்களும் செய்ய வேண்டியதாகிய அக்னிஹோத்ரத்தை இன்று செய்வது மிகக்கடினமாக உள்ள நிலையில் ஒரு யதிக்கு பிக்ஷை ஸமர்ப்பிப்பதை அக்னிஹோத்ரத்திற்கு ஸமமாக இந்த ஸ்ம்ருதி காட்டுகிறது.
பரிசுத்தமான சித்தமுடையோர்களின் மனதில் ஒருவரைக் குறித்து “இவருக்கு நல்லது உண்டாகட்டும்” என்ற எண்ணம் ஏற்பட்டால் அது ஸத்யமாகும் என்பதால் மேன்மையை விரும்புபவன் அத்தகைய ஞானிகளைப் பூஜிக்க வேண்டும் என்று முண்டக உபநிஷத் சொல்லுகிறது. தன் பாக்கியத்தினால் ஒரு யதிக்கு பிக்ஷை செய்விக்கும் வாய்ப்பு இருந்தும் அதைச் செய்யாமல் இருந்தால் மற்ற ஹோமம் தானம் முதலியவை அனைத்தும் பயனில்லை என்று அத்ரி ஸ்ம்ருதி கூறுகிறது.
இஃதனைத்திலிருந்தும் யதிகளுக்கு பிக்ஷை செய்விப்பதன் முக்கியத்துவம் தெரிகிறது.
அதிலும் ஜகத்குரு பீடமானது ஆதி ஆசார்யாள் நமது க்ஷேமத்தை மட்டுமே உத்தேசித்து ஏற்படுத்தியதாகும். “ஆத்ம ஞானத்தை அடைய பூமியையே த்யாகம் செய்யலாம்” என்றிருக்க தமது மோக்ஷம் மட்டும் வேண்டுமாகில் நமது குருநாதர் ஒரு ஏகாந்த ஸந்ந்யாஸியாக இருக்கலாமே! அப்படியின்றி இத்தனை பூஜை, மடம், ஸ்தாபனம் இருப்பதன் ஒரே காரணம் நம்மெல்லோரையும் வழிநடத்திச் செய்யவேண்டியிருப்பதே அன்றோ!
அத்தகைய மடம் சீராக செயல்படுவதற்கு நமது பலவித ஒத்துழைப்பையும் அவசியம். உண்மையில் மடம் என்பது குருவின் வழிகாட்டுதலின் பேரில் செயல்படும் அனைத்து சிஷ்யர்களாகிய நாமும் சேர்ந்து தான்! ஆகவே மடம் என்ற ஸ்தாபனத்தை நடத்துவதில் நாமும் பங்கு கொண்டு, குருநாதரின் வழிகாட்டுதலின் பேரில் தர்ம ஸம்ரக்ஷணத்தில் ஈடுபட்டு, குருநாதருக்கும் நமது க்ருதஜ்ஞதையைத் தெரிவிக்கும் ஓர் அரிய உயர்ந்த ஸம்ப்ரதாயமே பிக்ஷாவந்தனம் என்பது. குருவுக்கு பிக்ஷையை ஸமர்ப்பித்து வந்தனம் செய்து அவரது ஆஜ்ஞையைப் பின்பற்றுவதே பிக்ஷாவந்தனம்.
நமது க்ருஹங்களில் சுப காரியங்கள் நடக்கும்பொழுது சந்த்ரமௌளீச்வர ஸம்பாவனை என்பதாக ஶ்ரீமடத்திற்கு த்ரவ்ய ஸமர்ப்பணம் செய்யும் வழக்கம் உண்டு. ப்ரயாண வசதிகள் குறைவாக இருந்த காலத்தில் குடும்ப உபாத்யாயர் மூலம் சேர்ப்பிப்பதாக இருந்தது. இன்றோ நேராகச் சென்று தரிசனம் பெற்று குருவின் கடாக்ஷத்தைப் பெறவும் முடியுமே!
ஆகவே பிக்ஷாவந்தனம் என்ற இந்த உயர்வான ஸம்ப்ரதாயத்தைப் பின்பற்றி நாம் அனைவரும் ச்ரேயஸ்ஸை அடைவோமாக!
Thanks and credits to Shriramana Sharma
பிக்ஷா வந்தனம்
இந்த சாதுர்மாஸ்ய காலகட்டத்தில் நல்லடியார்கள் பலர் பிக்ஷாவந்தனம் பலவற்றில் பங்குகொண்டு நம் ஸ்ரீ மடத்துக்கும் நம் யதிவரர்களுக்கும் மரியாதை செலுத்தி, அவர்கள் அன்புக்கும் அருளுக்கும் பாத்திரம் ஆகி வருகிறோம்....
அண்ணா ஸ்ரீ ரா க அவர்கள் கைவண்ணத்தில் உருவாகிய “மைத்ரீம் பஜத” புத்தகத்தில் இந்த பகுதி கண்களில் பட்டது.
தங்களனைவருடனும் பகிர தூண்டியது...
பூஜை முடிவில் அன்றைக்கு பிக்ஷை செய்பவர்கள் பிக்ஷாவந்தனம் செய்து கொள்வார்கள். மடத்து யானையின் தலையில் பிக்ஷை செய்பவர் பூர்ண கும்பத்தையும், அவரது மனைவி தேன் கிண்ணம் பதிந்த நாட்டுச் சர்க்கரைத் தட்டையும் வைத்தெடுத்து ஸ்ரீ சரணர் முன்பு சமர்ப்பிப்பார்கள். வெள்ளிக்காசுகளாக மாற்றப்பட்ட பிக்ஷைக்குரிய நிதியையும், மற்றும் பழங்கள், புஷ்பங்கள், காய்கறிகள், திராட்சை, முந்திரி போன்ற மற்ற திரவியங்களையும் பிக்ஷை செய்வோரின் உறவினரும் நண்பர்களும் எடுத்து வந்து குருநாதனின் முன்பு சமர்ப்பிப்பார்கள். ஆசாரியருக்கு பிக்ஷை செய்து வைப்பதாக சொல்லாமல் சந்திர மௌலீச்வர பூஜைக்கு உபஹாரம் செய்வதாகவே கூறுவது சில வருடங்களாக மடத்தில் ஏற்பட்டுள்ள வழக்கம். யதி தர்மத்தை அவ்வளவு அப்பழுக்கின்றி பின்பற்றுகிறார் குருநாதன். பணமும் காசும் பழமும் பூவும் துறவிக்கு எதற்கு? ஈஸ்வரனுடைய பூஜாரியாகவே இவற்றை அவர் ஏற்கிறார்!
Source:- AMRITHA VAHINI
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM