Post by radha on Jun 10, 2018 21:30:05 GMT 5.5
OM Sri GURUPYO NAMAHA respectful PRANAMS to Sri kanchi MAHA periva
7.6.18 : ஏனிங்கு நின்றாய் நீ?
எல்லா இடங்களிலும், பெரியவாளின் சிலாமூர்த்தியை, அமர்ந்த கோலத்தில்தான் பார்த்திருக்கிறோம். கும்பகோணத்தில் மாத்திரம், விதிவிலக்காய், நின்ற கோலத்திலே காட்சி தருகிறார் நம் பெரியவா.
பெரியவாளின் நின்ற கோல அழகினைப் பார்த்து ரசிக்கும்போதே, மனதிலே, “இங்கே மட்டும் ஏன் பெரியவா நிக்கறா? “ என்று கேள்வி எழுகிறது.
பழனியில் நிற்கும் பெருமானே! அங்கே நிற்பது போதாது என்று இங்கும் வந்து நிற்கிறாயோ? தில்லையிலே, மானோடு மழு சூடும் பெம்மானே, அங்கு ஆடும் ஆட்டத்தையெல்லாம் விட்டு, இங்கு வந்து எங்களுக்காக நின்றாயோ? பக்தர்கள் கூப்பிட்டால் உடனே ஓட வேண்டும் என்பதற்காக நின்றாயோ? உட்கார்ந்திருந்தால், அடியார்கள் அழைத்தவுடன் எழுந்து ஓடிச்சென்று காப்பாற்ற நேரமாகும் என்றுதான் நின்றாயோ? எங்கள் வினையெல்லாம் தீர்க்கவென்று, உன் அடி நோக, உடல் நோக, “ரெடி” யாக நின்றாயோ?
எதற்காக நீ இங்கே இந்த கோலத்திலே இருக்கிறாயோ – யாம் ஒன்றும் அறியோம். ஆனால், இந்தக் கோலத்தில், நீ நின்ற அந்த அவசரத்தை, நீ நிற்கும் இந்தக் காட்சி அழகைக் காணக் கொடுத்து வைத்திருக்கிறோம்!
பெரியவா சரணம்.
***********************************************************************
பழனியிலே நிற்பவனே! பெம்மானே! பக்தர்களின்
அழுகையினை மாற்றவென வந்திங்கு நின்றனயோ?
மழுவோடு மான் சூடும் நடராஜா, அடியார்கள்
குழுகூவும் குரல்கேட்டு வந்திங்கு நின்றனயோ? (120-1)
சித்தத்தில் உனைவைத்து, விழிநீரால் நீராட்டும்
உத்தமரும் கூப்பிட்டால் ஓடிடவே நின்றனையோ?
குத்துக்காலிட்டமர்ந்த கோலத்தில் இங்கிருந்தால்
வித்தகனே “தூக்கம்வரும்” என்றேதான் நின்றனையோ? (120-2)
அடியார்கள் கூப்பிட்ட நேரத்தில் உடன் ஓட
முடியாது என்றேதான் அமராமல் நின்றனையோ?
முடியாத எம்வினையை அடியோடு தீர்க்க மலர்
அடிநோக உடல்நோக, “ரெடியாக” நின்றனையோ? (120-3)
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
7.6.18 : ஏனிங்கு நின்றாய் நீ?
எல்லா இடங்களிலும், பெரியவாளின் சிலாமூர்த்தியை, அமர்ந்த கோலத்தில்தான் பார்த்திருக்கிறோம். கும்பகோணத்தில் மாத்திரம், விதிவிலக்காய், நின்ற கோலத்திலே காட்சி தருகிறார் நம் பெரியவா.
பெரியவாளின் நின்ற கோல அழகினைப் பார்த்து ரசிக்கும்போதே, மனதிலே, “இங்கே மட்டும் ஏன் பெரியவா நிக்கறா? “ என்று கேள்வி எழுகிறது.
பழனியில் நிற்கும் பெருமானே! அங்கே நிற்பது போதாது என்று இங்கும் வந்து நிற்கிறாயோ? தில்லையிலே, மானோடு மழு சூடும் பெம்மானே, அங்கு ஆடும் ஆட்டத்தையெல்லாம் விட்டு, இங்கு வந்து எங்களுக்காக நின்றாயோ? பக்தர்கள் கூப்பிட்டால் உடனே ஓட வேண்டும் என்பதற்காக நின்றாயோ? உட்கார்ந்திருந்தால், அடியார்கள் அழைத்தவுடன் எழுந்து ஓடிச்சென்று காப்பாற்ற நேரமாகும் என்றுதான் நின்றாயோ? எங்கள் வினையெல்லாம் தீர்க்கவென்று, உன் அடி நோக, உடல் நோக, “ரெடி” யாக நின்றாயோ?
எதற்காக நீ இங்கே இந்த கோலத்திலே இருக்கிறாயோ – யாம் ஒன்றும் அறியோம். ஆனால், இந்தக் கோலத்தில், நீ நின்ற அந்த அவசரத்தை, நீ நிற்கும் இந்தக் காட்சி அழகைக் காணக் கொடுத்து வைத்திருக்கிறோம்!
பெரியவா சரணம்.
***********************************************************************
பழனியிலே நிற்பவனே! பெம்மானே! பக்தர்களின்
அழுகையினை மாற்றவென வந்திங்கு நின்றனயோ?
மழுவோடு மான் சூடும் நடராஜா, அடியார்கள்
குழுகூவும் குரல்கேட்டு வந்திங்கு நின்றனயோ? (120-1)
சித்தத்தில் உனைவைத்து, விழிநீரால் நீராட்டும்
உத்தமரும் கூப்பிட்டால் ஓடிடவே நின்றனையோ?
குத்துக்காலிட்டமர்ந்த கோலத்தில் இங்கிருந்தால்
வித்தகனே “தூக்கம்வரும்” என்றேதான் நின்றனையோ? (120-2)
அடியார்கள் கூப்பிட்ட நேரத்தில் உடன் ஓட
முடியாது என்றேதான் அமராமல் நின்றனையோ?
முடியாத எம்வினையை அடியோடு தீர்க்க மலர்
அடிநோக உடல்நோக, “ரெடியாக” நின்றனையோ? (120-3)
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM