Post by radha on Feb 11, 2018 17:39:14 GMT 5.5
OM Sri GURUPYO NAMAHA respectful PRANAMS to Sri kanchi MAHA periva
OM Nama SHIVAYA OM Nama SHIVAYA OM NAMA SHIVAYA
1.
உலகமே சிவம்
பிப்ரவரி 09,2018,
நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் பஞ்சபூதங்கள். பிரபஞ்சம் என்பதற்கு 'கடவுளுக்கு சம்பந்தமான ஐந்து' என பொருள். 'பிரபஞ்சம் என்பது பஞ்சபூதங்களின் சேர்க்கை என்றும், கடவுளே பஞ்சபூதங்கள்' என்றும் உபநிஷதம் கூறுகிறது. இயற்கையும் இறைவனும் ஒன்றே என்ற அடிப்படையில் இந்த ஐந்திற்கும் சிவலிங்கம் வடித்து பஞ்சபூத தலங்களை உருவாக்கினர். அவையே காஞ்சிபுரம், திருவாரூர் (மண்), திருவானைக்காவல் (நீர்), திருவண்ணாமலை( அக்னி), காளஹஸ்தி (வாயு), சிதம்பரம் (ஆகாயம்)ஆகியவை.
2.
சிவபூஜை செய்த சிவன்
பிப்ரவரி 09,2018,
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் அனைவரும் சிவபூஜை செய்த தலங்கள் பல உள்ளன. இதுபோல, சிவன் தன்னைத் தானே பூஜை செய்து வழிபட்ட தலமாக இம்மையில் நன்மை தருவார் கோயில் மதுரையில் உள்ளது. இங்கு மூலவர் சிவலிங்க வடிவில் இருக்கிறார். அவருக்கு பின்புறம் சிவன், பார்வதி சிலைகள் உள்ளன. மதுரையில் சிவபெருமான் 'சுந்தர பாண்டியர்' என்னும் பெயரில் மன்னராக இருக்கிறார். பாண்டிய அரசர்கள் ஆட்சி பீடத்தில் அமரும் போது சிவபூஜை செய்வது வழக்கம். மதுரை மன்னரான சிவன் பட்டாபிஷேகம் நடக்கும் ஆவணி மூல நட்சத்திர நாளில், சிவன் நேரில் எழுந்தருளி பூஜை
3.
பாதுகாப்பான பயணத்திற்கு....
பிப்ரவரி 09,2018,
நால்வழிச்சாலையில் குறித்த இடத்திற்கு சுலபமாகவும், விரைவாகவும் செல்வது போல, பிறவிப்பயணத்தை எளிதில் கடக்க சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் நால்வரும் வழிகாட்டியுள்ளனர். இவர்கள் பாடிய தேவாரம், திருவாசகம்பாடுவதாலும், ஐந்தெழுத்து மந்திரமான 'நமசிவாய' 'சிவாயநம' என்பதை சொல்வதாலும் வாழ்க்கைப் பயணம் பாதுகாப்பாக அமையும். அவ்வையார், 'சிவாயநம என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒரு நாளும்இல்லை'' என கூறி உள்ளார்.
4.
VILVAM ( BHILVAM ) -
வில்வம் லட்சுமி வாசம் செய்யும் இடம். வில்வ இலையால் சிவனை பூஜிக்க மோட்சம் கிடைக்கும். இதற்கு 'நிர்மால்ய தோஷம்' கிடையாது. அதாவது, ஒருமுறை பயன்படுத்திய வில்வத்தை நீரில் கழுவி மீண்டும் பயன்படுத்தலாம். மூன்று வில்வ இலைகள் சேர்ந்திருப்பதை 'வில்வ தளம்' என்பர். இதனைக் கொண்டு சிவனை பூஜிப்பது சிறப்பு. அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வில்வம் பறிக்க கூடாது.
5.
SHIVALAYA VAZHIPADU
முதலில் விநாயகரை வணங்கி, பின் நந்தீஸ்வரரை வழிபட்டு கருவறைக்கு செல்ல வேண்டும். அங்கு சுவாமி, அம்மன், பரிவார தெய்வங்களை வழிபட்டு கோயிலை சுற்றி வர வேண்டும். பின் பைரவர் சன்னதியில் வழிபாட்டை முடித்து, கொடிமரத்தின் முன் தரையில் விழுந்து வணங்க வேண்டும். பின் சிறிது நேரம் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து தியானம் செய்ய வேண்டும்.
6.
சிவனுக்கு பிடித்த 'ஆலம்'
பிப்ரவரி 09,2018,
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலை கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் வலியைப் பொறுத்து கொள்ள முடியாமல் விஷம் கக்கியது. அப்போது கடலில் இருந்தும் விஷம் வெளிப்பட்டது. இரு விஷங்களும் ஒன்று சேர்ந்தன. அதை சிவன் சாப்பிட்டு தேவர்களைக் காத்தார். 'ஆலம்' என்பதற்கு விஷம் என பொருள். இருவிஷங்கள் இணைந்தால் அதனை 'ஆலாலம்' என்று குறிப்பிட்டனர். இதுவே பேச்சு வழக்கில் 'ஆலகாலம்' என்று திரிந்துவிட்டது. இந்த விஷத்தை அருந்தி தேவர்களை காத்ததால் 'ஆலால சுந்தரா! அற்புத சுந்தரா!' என்று சிவனை
தினமலர்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
OM Nama SHIVAYA OM Nama SHIVAYA OM NAMA SHIVAYA
1.
உலகமே சிவம்
பிப்ரவரி 09,2018,
நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் பஞ்சபூதங்கள். பிரபஞ்சம் என்பதற்கு 'கடவுளுக்கு சம்பந்தமான ஐந்து' என பொருள். 'பிரபஞ்சம் என்பது பஞ்சபூதங்களின் சேர்க்கை என்றும், கடவுளே பஞ்சபூதங்கள்' என்றும் உபநிஷதம் கூறுகிறது. இயற்கையும் இறைவனும் ஒன்றே என்ற அடிப்படையில் இந்த ஐந்திற்கும் சிவலிங்கம் வடித்து பஞ்சபூத தலங்களை உருவாக்கினர். அவையே காஞ்சிபுரம், திருவாரூர் (மண்), திருவானைக்காவல் (நீர்), திருவண்ணாமலை( அக்னி), காளஹஸ்தி (வாயு), சிதம்பரம் (ஆகாயம்)ஆகியவை.
2.
சிவபூஜை செய்த சிவன்
பிப்ரவரி 09,2018,
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் அனைவரும் சிவபூஜை செய்த தலங்கள் பல உள்ளன. இதுபோல, சிவன் தன்னைத் தானே பூஜை செய்து வழிபட்ட தலமாக இம்மையில் நன்மை தருவார் கோயில் மதுரையில் உள்ளது. இங்கு மூலவர் சிவலிங்க வடிவில் இருக்கிறார். அவருக்கு பின்புறம் சிவன், பார்வதி சிலைகள் உள்ளன. மதுரையில் சிவபெருமான் 'சுந்தர பாண்டியர்' என்னும் பெயரில் மன்னராக இருக்கிறார். பாண்டிய அரசர்கள் ஆட்சி பீடத்தில் அமரும் போது சிவபூஜை செய்வது வழக்கம். மதுரை மன்னரான சிவன் பட்டாபிஷேகம் நடக்கும் ஆவணி மூல நட்சத்திர நாளில், சிவன் நேரில் எழுந்தருளி பூஜை
3.
பாதுகாப்பான பயணத்திற்கு....
பிப்ரவரி 09,2018,
நால்வழிச்சாலையில் குறித்த இடத்திற்கு சுலபமாகவும், விரைவாகவும் செல்வது போல, பிறவிப்பயணத்தை எளிதில் கடக்க சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் நால்வரும் வழிகாட்டியுள்ளனர். இவர்கள் பாடிய தேவாரம், திருவாசகம்பாடுவதாலும், ஐந்தெழுத்து மந்திரமான 'நமசிவாய' 'சிவாயநம' என்பதை சொல்வதாலும் வாழ்க்கைப் பயணம் பாதுகாப்பாக அமையும். அவ்வையார், 'சிவாயநம என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒரு நாளும்இல்லை'' என கூறி உள்ளார்.
4.
VILVAM ( BHILVAM ) -
வில்வம் லட்சுமி வாசம் செய்யும் இடம். வில்வ இலையால் சிவனை பூஜிக்க மோட்சம் கிடைக்கும். இதற்கு 'நிர்மால்ய தோஷம்' கிடையாது. அதாவது, ஒருமுறை பயன்படுத்திய வில்வத்தை நீரில் கழுவி மீண்டும் பயன்படுத்தலாம். மூன்று வில்வ இலைகள் சேர்ந்திருப்பதை 'வில்வ தளம்' என்பர். இதனைக் கொண்டு சிவனை பூஜிப்பது சிறப்பு. அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வில்வம் பறிக்க கூடாது.
5.
SHIVALAYA VAZHIPADU
முதலில் விநாயகரை வணங்கி, பின் நந்தீஸ்வரரை வழிபட்டு கருவறைக்கு செல்ல வேண்டும். அங்கு சுவாமி, அம்மன், பரிவார தெய்வங்களை வழிபட்டு கோயிலை சுற்றி வர வேண்டும். பின் பைரவர் சன்னதியில் வழிபாட்டை முடித்து, கொடிமரத்தின் முன் தரையில் விழுந்து வணங்க வேண்டும். பின் சிறிது நேரம் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து தியானம் செய்ய வேண்டும்.
6.
சிவனுக்கு பிடித்த 'ஆலம்'
பிப்ரவரி 09,2018,
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலை கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் வலியைப் பொறுத்து கொள்ள முடியாமல் விஷம் கக்கியது. அப்போது கடலில் இருந்தும் விஷம் வெளிப்பட்டது. இரு விஷங்களும் ஒன்று சேர்ந்தன. அதை சிவன் சாப்பிட்டு தேவர்களைக் காத்தார். 'ஆலம்' என்பதற்கு விஷம் என பொருள். இருவிஷங்கள் இணைந்தால் அதனை 'ஆலாலம்' என்று குறிப்பிட்டனர். இதுவே பேச்சு வழக்கில் 'ஆலகாலம்' என்று திரிந்துவிட்டது. இந்த விஷத்தை அருந்தி தேவர்களை காத்ததால் 'ஆலால சுந்தரா! அற்புத சுந்தரா!' என்று சிவனை
தினமலர்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM