Post by radha on Jan 31, 2018 6:03:19 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
தைப்பூச நன்னாளான இன்று, முருகனை நினைத்து, இதை படிப்போருக்கு வாழ்வில் நன்மை பெருகும்.
* குன்றுதோறும் குடிகொண்ட முருகப் பெருமானே! சிவனின் நெற்றிக் கண்ணில் அவதரித்த சிவபாலனே! வடிவேலனே! கார்த்திகைப் பெண்களின் அரவணைப்பில் வளர்ந்த கார்த்திகேயனே! அகத்தியருக்கு உபதேசித்த குருநாதனே! உன் திருவடியைத் தஞ்சம் என வந்து விட்டோம்.
* ஆறுபடை வீட்டில் அமர்ந்திருக்கும் அண்ணலே! பழநி தண்டாயுதபாணியே! திருத்தணியில் வாழும் தணிகாசலனே! தமிழில் வைதாரையும், வாழ வைக்கும் கருணைக் கடலே! சிக்கல் சிங்கார வேலவனே! மயில் வாகனனே! சேவல் கொடி ஏந்தியவனே! உன் சன்னிதியில்
அடைக்கலம் புகுந்து விட்டோம். நீயே அருள்புரிய வேண்டும்.
* சூரனை அழித்து தேவர்களைக் காத்தவனே! தேவசேனாபதியே! தெய்வானை மணவாளனே! அருணகிரிநாதருக்கு அருள்புரிந்தவனே!
ஆறுமுகனே! பன்னிரு கைகளால் வாரி வழங்கும் வள்ளல் பெருமானே! திருமாலின் மருமகனே! ஆனை முகனின் தம்பியே! குழந்தை தெய்வமே! எங்களுக்கு வாழ்வில் ஆரோக்கியம்,
செல்வ வளத்தையும் தந்தருள்வாயாக.
* பார்வதி பெற்ற பாலகனே! கந்தனே! கடம்பனே! கதிர் வேலவனே! சிவ சுப்பிரமணியனே! செந்துார் முருகனே! குறிஞ்சி ஆண்டவனே!
அவ்வைக்கு கனி கொடுத்தவனே! மயிலேறிய மாணிக்கமே! முத்துக் குமரனே! சுவாமி நாதனே! சரவண பவனே! சண்முகனே! தாயினும் சிறந்த தயாபரனே! வாழ்வில் குறுக்கிடும்
துன்பங்களைப் போக்கி வெற்றியைத் தருவாயாக.
* வேதம் போற்றும் வித்தகனே! குகப் பெருமானே! வள்ளி மணவாளனே! தவ முனிவர்கள் உள்ளத்தில் வாழும் தவசீலனே! சிரகிரியில் வாழ்பவனே! காங்கேயனே! கண் கண்ட தெய்வமே! கலியுக
வரதனே! திருப்புகழின் நாயகனே! தமிழ்க் கடவுளே! வாழ்வில் எல்லா வளமும் பெற்று, நாங்கள் இன்பமுடன் வாழ வரம் தருவாயாக.
இப்படியும் ஒரு பக்தர்
'பொன்னை விரும்பும் பூமியிலே.... என்னை விரும்பும் ஓருயிரே' என்றொரு பாடல் உண்டு. அந்த பாடலின் கருத்தை பரிபாடலில் கடுவெயின் இளநாகனார் என்னும் புலவர், அந்த காலத்திலேயே பாடியிருக்கிறார். அவர் கேட்கும் வரத்தை பாருங்கள்.
''முருகா... நாங்கள் உன்னிடம் பொன்னோ, பொருளோ, சுகமோ கேட்கவில்லை. உன் மீது என்றும் மாறாத அன்பும், அருளும் வேண்டுகிறோம். கடம்ப மலர் மாலை சூடியவனே! எப்போதும் உன் திருவடியை வணங்கும் பாக்கியம் தர வேண்டும்'' என்கிறார். அன்பு செலுத்தும் அனைவருக்கும் தன்னையே தரும் வள்ளலாக முருகன் விளங்குகிறார்.
தைப்பூச திருத்தலம்
கயிலாயத்தில் பார்வதிக்கு சிவன், பிரணவ மந்திரத்தை உபதேசித்தார். அதை முருகன் மறைவாக இருந்து கேட்டதால், அவருக்கு பாவம் உண்டானது. அதை போக்க, பூலோகம் வந்து தவத்தில் ஆழ்ந்தார். அவருக்கு சிவனும், பார்வதியும் ரிஷப வாகனத்தில் தைப்பூசத்தன்று காட்சியளித்தனர்.இந்த சிவனுக்கு, திருப்பரங்குன்றத்தில் சிவாலயம் அமைக்கப்பட்டது. இதை, 'மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்' என்பர். இதை தரிசித்த பின்னரே, திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என, திருப்பரங்கிரி புராணம் கூறுகிறது. திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் உள்ள இக்கோவிலில் வழிபட, அறியாமல் செய்த பாவம் தீரும்.
பூலோக சிந்தாமணி
பழநியில் நடக்கும் தைப்பூச விழாவில், காவடி வழிபாடு சிறப்பானது. காவடி சுமக்கும் பக்தர்கள், மார்கழி முதல் தேதி மாலை அணிந்து, தைப்பூசம் வரை விரதம் மேற்கொள்வர். பூசத்திற்கு சிலநாள் முன்னதாக, பாத யாத்திரையாக புறப்படுவர். அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை,
காவடியில் சுமந்து செல்வர். தைப்பூச விரதமிருந்தால், விருப்பம் எளிதில் நிறைவேறும் என்பர். விரும்பியதை தரும் தேவலோக சிந்தாமணி போல, பூலோக சிந்தாமணியாக, பழநி முருகன் விளங்குவதாக அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார்.
உப்பை நம்பவில்லை!உன்னையே நம்புகிறேன்
முருகன் அடியாரான பாம்பன் சுவாமி, சென்னையில்வாழ்ந்தார். ஒருநாள் அவர் சாலையில் நடந்து செல்லும் போது, குதிரை வண்டி மீது மோதி கால் எலும்பு முறிந்தது. அவர் உண்ணும் உணவில் உப்பு சேர்ப்பதில்லை என்பதை அறிந்த மருத்துவர்கள், உப்பு சத்து குறைபாடு இருப்பதால், எலும்பு மீண்டும் ஒன்று சேர வாய்ப்பு இல்லை என தெரிவித்தனர்.படுக்கையில் கிடந்த பாம்பன் சுவாமிகள், 'முருகா...! நான் உப்பை நம்பவில்லை. உன்னையே நம்புகிறேன்' என, தான் எழுதிய சண்முக கவசத்தை பாடி வந்தார். நாளடைவில் மருத்துவர்களே
வியக்கும் விதத்தில், அவரது எலும்பு முறிவு குணமானது. 'எந்த கடவுளும் கந்தக் கடவுளுக்கு மிஞ்சாது' என்பது பாம்பன் சுவாமியின் அருள்வாக்கு. நோயால் அவதிப்படுவோர் குணம் பெற,
48 நாள் சண்முக கவசத்தை பக்தியுடன் படிப்பர்.
நினைச்சுப் பார்த்தா... பெருமை புரியும்!
“அப்பன் இரந்துண்ணி; ஆத்தாள் மலைநீலிஒப்பறிய மாமன் உறிதிருடி- சப்பைக்கால்அண்ணன் பெருவயிறன் ஆறுமுகத்தானுக்கு இங்குஎண்ணுங்கால் பெருமை இவை” என, முருகனைப் பற்றி ஒரு பாடல் இருக்கிறது. இதைப் பாடியவர் காளமேகப் புலவர்.தந்தையாகிய சிவன், பிச்சையேற்று பிழைப்பவர். அன்னை பார்வதியோ மலையில் பிறந்த கோபக்காரி. ஒப்பில்லாத மாமன் திருமால், உறியில் வெண்ணெய் திருடுபவர். சப்பைக் கால் கொண்ட அண்ணன்
விநாயகர் பெருவயிறு கொண்டவர். இவர்களே ஆறுமுகனின் பெருமை மிக்க உறவினர்கள்.கேலி செய்வது போல தெரிந்தாலும், ஆழ்ந்து படித்தால் இதன் உண்மையான பொருள் புரியும். பக்தர்களிடம் உள்ள தீய குணங்களை சிவன், தன் திருவோட்டில் பிச்சையாக ஏற்கிறார். தீமையை எதிர்க்கும் போது, பார்வதி கொடிய நீலியாக கோபம் கொள்கிறாள்.
வெண்ணெய் திருடுவது போல, நல்லவர் உள்ளத்தை கொள்ளை கொள்பவராக திருமால் இருக்கிறார். அண்டங்களை வயிற்றில் தாங்கி நிற்பதால், விநாயகர் பெருவயிறு கொண்டவராக விளங்குகிறார். வஞ்சப் புகழ்ச்சி அணியில் அமைந்த பாடல் இது.
பரிசளித்த முருகன்
சூரபத்மனின் கொடுமை தாங்காத தேவர்களை காப்பதற்காக, முருகன் படை வீரர்களுடன் புறப்பட்டார். சூரபத்மனின் இருப்பிடமான வீரமகேந்திரபுரத்தை நோக்கி வரும் வழியில், விந்தியமலை பகுதியில், சூரபத்மனின் தம்பியான தாரகாசுரன் குறுக்கிட்டான். போர் மூண்டது. வெற்றி பெற்ற முருகன், தாரகாசுரனை கொல்ல மனமில்லாமல், அவனை யானையாக மாற்றினார். அந்த யானையை, தன் தம்பியான ஹரிஹரபுத்திரன் என்னும் சாஸ்தாவுக்கு அன்பு பரிசாக கொடுத்தார். அதையே, அய்யப்பன் வாகனமாக ஏற்றார்.
ஆறுபடை வீட்டு வள்ளல்
ஆறுபடை வீடுகளை நாடி வருவோருக்கு, வரங்களை வாரி வழங்கும் வள்ளலாக முருகன் இருக்கிறார்.
திருப்பரங்குன்றம் - செல்வம் பெருகும்
திருச்செந்துார் - தைரியம் உண்டாகும்
பழனி - புண்ணியம் பெருகும்
சுவாமிமலை - நல்ல புத்தி, ஞானம் கிடைக்கும்
திருத்தணி - மணவாழ்வு சிறக்கும்
சோலைமலை - விருப்பம் நிறைவேறும்
கதிர்காமம் கதிரேசன்
முருகனின் திருத்தலங்களில், கதிர்காமத்திற்கு சிறப்பிடம் உண்டு. இப்பெருமான், 'கதிரேசன்' என்று அன்புடன் அனைவராலும் போற்றப்படுகிறான். இத்தலம் இலங்கையில், கொழும்பில் இருந்து, 230 கி.மீ.,யில் அமைந்துள்ளது.
இங்கு கருவறையில், எவ்வடிவில் இறைவன் இருக்கிறான் என்பது சிதம்பர ரகசியமாகவே உள்ளது. சன்னதியின் திருக்கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் தரையில், மயில் மீது இரு தேவியருடன் அமர்ந்திருக்கும் முருகனின் உருவம் உள்ளது. இதைப்போன்று மேலும் பல திரைச்சீலைகள் உள்ளன. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இப்பெருமானின் சன்னதி திறந்து வைக்கப்
படுகிறது. மற்ற காலங்களில் திரையிட்டே பூஜை நடத்தப்படுகிறது.இங்கு ஆடி மாத உற்சவம் மிகவும் பிரபலமானது. ஆடி அமாவாசையன்று ஆரம்பித்து, ஆடி பவுர்ணமியில் தீர்த்தவாரி நடைபெறும். நாள்தோறும் யானை மீது ஊர்வலமாக ஒரு பெட்டி எடுத்துச் செல்லப்படும். அந்த
பெட்டிக்குள் முருகனுக்குரிய எந்திரம் இருக்கிறது. இக்கோவிலின் பின்னால் உள்ள அரசமரத்தை சிங்களர்கள் வழிபடுகின்றனர். தமிழ் மக்களும், சிங்களர்களும் இணைந்து வழிபடுவது மத ஒற்றுமைக்கு வழி வகுப்பதாக அமைந்துள்ளது.
12 கைகளில் இருப்பது என்ன?
முருகனின் வலப்புற ஆறு கைகளில் ஒன்று அபய கரம் - வந்தவர்களைப் பாதுகாப்பது. மற்ற ஐந்து கைகளில் சேவற்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல்
ஆகியவை இருக்கும். ஆறு இடப்புற கைகளில் ஒன்று வரத கரம் - கேட்டதைக் கொடுப்பது. மற்ற ஐந்து கைகளில் தாமரை, மணி, மழு, தண்டாயுதம்,
வில் ஆகியவை இருக்கும்.
நவரத்தின தாய்மார்கள்
முருகனின் படைத் தளபதிகள் ஒன்பது பேர். இவர்களுக்கு தலைவர் வீரபாகு. நவரத்தின தாய்மார்கள் ஆளுக்கொருவராக, ஒன்பது குழந்தைகளை பெற்றார். அவர்கள், நவ வீரர்கள் எனப்பட்டனர்.இவர்களில், மாணிக்கவல்லியின் மகன் வீரபாகு, முத்துவல்லியின் மகன் வீரகேசரி, புஷ்பராகவல்லியின் மகன் வீரமகேந்திரர், கோமேதகவல்லியின் மகன் வீரமகேஸ்வரர், வைடூரியவல்லியின் மகன் வீரபுரந்தரர், வைரவல்லியின் மகன் வீரராக்கதர், மரகதவல்லியின் மகன் வீரமார்த்தாண்டர், பவளவல்லியின் மகன் வீராந்தகர், நீலவல்லியின் மகன் வீரதீரர் எனப்பட்டனர்.
ஆறுமுகனின் அடியவர்கள்
ஆறுமுகனான முருகனருள் பெற்றவர்கள் அவ்வையார், அகத்தியர், அருணகிரிநாதர் என, எண்ணிக்கையில் அடங்காது. அவர்களே நமக்கு குருவாக இருந்து குருவருளையும், முருகனின்
திருவருளையும் தந்தருள்கின்றனர்.
அகத்தியர்
முருகன் அருள் பெற்ற அடியார்களில்முதன்மையானவர் அகத்தியர். செந்தமிழ் நாடான இப்பகுதியை அகத்திய முனிவரே முருகனிடம் பெற்று, பாண்டிய மன்னனுக்கு கொடுத்ததாக,
திருநெல்வேலி தலபுராணம் கூறுகிறது. பொதிகை மலையில், முருகனிடம் உபதேசம் பெற்று, அகத்தியம் என்னும் இலக்கணத்தை எழுதியதாக கூறுவர்.
நக்கீரர்
கடைச்சங்கப் புலவராக, மதுரையில் இருந்து தமிழ் வளர்த்த புலவர் நக்கீரர். முருகன் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர். திருப்பரங்குன்றத்தில், பூதங்களிடம் சிக்கிக் குகையில் கிடந்த போது,
முருகனே காப்பாற்றி அருள்புரிந்தார். முருகனின் ஆறுபடை வீடுகளை சிறப்பித்து போற்றும் திருமுருகாற்றுப்படையை எழுதினார்.
அவ்வையார்
முருகனை வழிபட்ட பெண் அடியவர்களில், அவ்வையார் குறிப்பிடத்தக்கவர். பசு மேய்க்கும் பாலகனாக வந்த முருகன் இவரிடம், 'பாட்டி, சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?' என்று கேட்டு ஞானத்தை அருளினார் என்பர். இவர் பாடிய இனியது, புதியது, அரியது, பெரியது ஆகிய பாடல்கள் தம் சிந்தைக்கு விருந்தளிப்பவை.
குமரகுருபரர்
திருச்செந்துார் அருகில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த இவர், 5 வயது வரை பேசும் திறனற்றவராக இருந்தார். முருகனருளால் பேசும் ஆற்றல் பெற்று, கந்தர் கலிவெண்பாவை பாடி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். முருகன் மீது இவர் பாடிய முத்துக்குமாரசு வாமி பிள்ளைத்தமிழ் புகழ் பெற்றது. காசியில் மடம் ஒன்றை நிறுவினார்.
தேவராய சுவாமிகள்
பட்டி, தொட்டிகளில் எல்லாம், முருகனுக்குரிய பாராயண நுாலாகத் திகழும் கந்தசஷ்டி கவசத்தைப் பாடியவர் தேவராய சுவாமிகள். முருகனுக்குரிய பீஜ மந்திரங்களை சூட்சுமமாகத் தெரிவிக்கும் நுால் இதுவாகும். சென்னிமலை முருகனின் மீது பாடப்பட்ட இந்நுால், கவசம் போல பாதுகாக்கும் சக்தி கொண்டது.
ராமலிங்க வள்ளலார்'
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை' என, கடவுளை கருணை வடிவில் கண்டு போற்றியவர் வள்ளலார். சிறுவனாக இருக்கும் போது கண்ணாடியின் முன் தியானம் செய்த போது, மயில்வாகனத்தில் முருகன் இவருக்கு காட்சியளித்தார். கந்த கோட்டத்து முருகனிடம் இவர் கேட்கும் வரங்கள், நம் அனைவருக்கும் தேவையானவை என்றால் மிகையில்லை.
பாம்பன் சுவாமிகள்
குமரகுருதாச சுவாமிகள் என்னும் இவர், ராமேஸ்வரம் அருகிலுள்ள பாம்பனில் வாழ்ந்ததால், 'பாம்பன் சுவாமிகள்' எனப்பட்டார். முருகன் மீது, 6,666 பாடல்கள் பாடினார்.
முருகனருளால் அற்புதம் நிகழ்த்திய இவர், சமீப காலத்தில் வாழ்ந்தவராவார். இவர் பாடிய சண்முக கவசம் பாராயண நுாலாக திகழ்கிறது. தமிழ் உயிர், மெய் எழுத்துக்கள் முப்பதையும் முதல் எழுத்தாக கொண்டு அமைந்த நுால் இது. பஞ்சாமிர்த வண்ணம் என்னும் பாடலால் முருகனுக்கு
அபிஷேகம் செய்தவர் இவர்.
வடபழனியில் தங்க ரத புறப்பாடு
முருகன் கோவில்களில், தைப்பூச திருவிழா களை கட்டி உள்ளது. பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.தைப்பூசம், முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழா. ஆண்டுதோறும் தை மாதம், பூச நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் கூடி வரும் நாளில், முருகனுக்கு எடுக்கப்படும் விழா தைபூசம். அன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.தை பூசத்தன்று, முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு, ஒரு விழாவாக, பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது. சிவபெருமான், உமாதேவியுடன் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள், தைப்
பூசம் என்பர்.தமிழக முருகன் கோவில்களில், பூச நட்சத்திரம், பவுர்ணமி அன்று; பூச நட்சத்திரம் பிறப்பை கணக்கிட்டு; சந்திரகிரஹணம்
வருவதால், அடுத்த நாள் என பிரித்து, தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது.கந்தக்கோட்டம், குன்றத்துார் முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், குரோம்பேட்டை, குமரன் குன்றம் கோவில், சைதாப்பேட்டை, காரணீசுவரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும், இன்று தைப்பூச விழா நடக்கிறது.விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோவில், காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் முருகன் கோவில், குமரக்கோட்டம், வல்லக்கோட்டை உள்ளிட்ட பல கோவில்களிலும், தைப்பூசம் களை கட்டியுள்ளது.சென்னை, வடபழனியாண்டவர் கோவிலில், தைப்பூச திருவிழா, நேற்று இரவு துவங்கி, கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், பால் குடம், காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.தைப்பூச பால் காவடி சபை சார்பில், இரண்டு நாட்கள் விழா, விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இன்று காலை, 6:00 மணிக்கு, காவடிகளுக்கு அபிஷேக அலங்காரம் நடக்கிறது.
காலை, 7:00 மணி முதல், மிளகாய் சாந்து அபிஷேகம்; தகட்டில், கடப்பாரை உருவுதல்; மார் மீது கல் உரல் வைத்து மஞ்சள் இடித்தல் போன்ற நிகழ்வுகள் நடக்க உள்ளன.
நாளை வடபழனி ஆண்டவருக்கு சந்தனக்காப்பு, இரும்பர் அபிஷேகம், தங்க ரத புறப்பாடு நடக்கிறது.
கந்த கோட்டத்தில் தைப்பூச விழா துவக்கம்
கந்த கோட்டம் ஸ்ரீ கந்த சுவாமி கோவிலில் இன்று, தைப்பூச விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.சென்னை, பாரிமுனை, கந்த கோட்டத்தில், ஸ்ரீ கந்த சுவாமி கோவில் உள்ளது. தைப்பூசம் என்பது, முருகனுக்கு உகந்த நாள். இங்கு ஆண்டுதோறும் தை மாதம், பூச நட்சத்திரமும் பவுர்ணமி திதியும் கூடி வரும் நாளில், முருகனுக்கு தைப்பூச விழா கொண்டாடப்பட்டு
வருகிறது.அதன்படி, கந்தகோட்டம், ஸ்ரீ கந்த சுவாமி கோவிலில், இன்று காலை, 6:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்படுகிறது. வள்ளலாளர் மற்றும் உற்சவருக்கு அபிஷேக, ஆராதனை
உள்ளிட்டவை நடக்க உள்ளன. மாலையில், முருகப்பெருமான் தேரில் எழுந்தருளி, வீதி உலாவும் நடைபெறுகிறது. பின், பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மேலும், பழனி ஆண்டவருக்கு சவுடல் விமானமும், உற்சவருக்கு தங்கத் தொட்டியும், துவஜா அவரோகணம் ஆகியவை நடைபெறுகின்றன. இன்று, சந்திர கிரகணத்தை ஒட்டி, மாலை, 4:00 மணிக்கு, கோவில் நடை சாத்தப்பட்டு, இரவு, 9:31 மணிக்கு திறக்கப்பட
உள்ளது.விழா ஏற்பாடுகளை, செயல் அலுவலர் சக்திவேல், உதவி ஆணையர் அன்னக்கொடி ஆகியோர் செய்து வருகின்றனர்.
சித்தர் பீடத்தில் தைப்பூச ஜோதி
மேல்மருவத்துார்: ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தைப்பூச ஜோதி விழா, இன்று துவங்குகிறது.மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தைப்பூச விழா, இன்று நடக்கிறது. அதிகாலை, 3:00 மணிக்கு, மங்கள இசையுடன், கோவில் நடை திறக்கப்பட உள்ளது.
அதிகாலை, 3:30 மணிக்கு, ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை, 4:00 மணிக்கு, கோ பூஜையுடன், தைப்பூச ஜோதி விழாவும் துவங்குகிறது. பங்காரு அடிகளார் தலைமை வகிக்கிறார்.கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் நீதிபதிகள், உயர் அதிகாரிகள், பல நாடுகளைச் சேர்ந்த, ஏராளமான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்கின்றனர்.
இதன் ஏற்பாடுகளை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் செய்கின்றனர்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் உற்சவம்
பெருநகர், பிரம்மபுரீஸ்வரர் கோவிலில், தைப்பூச விழாவையொட்டி, அறுபத்து மூன்று நாயன்மார்களின் மகா உற்சவம், நேற்று நடந்தது.காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த பெருநகரில், பட்டுவதனாம்பிகை உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் தைப்பூச விழா, கடந்த, 20ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஒன்பது நாட்களாக, பல்வேறு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 27ல், திருக்கல்யாணமும், 28ல் ரதோற்சவமும் நடந்தது.
நேற்று காலை, 11:00 மணிக்கு, பட்டுவதனாம்பிகை உடனுறை பிரம்மபுரீஸ்வரருடன், 63 நாயன்மார்கள், அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்ந்து, முக்கிய தெருக்களில் வீதியுலா வந்தனர்.
சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், தீபம் ஏற்றி வழிபட்டனர்.
குமரன்குன்றத்தில் தைப்பூச நிகழ்ச்சிகள்
குமரன்குன்றம் முருகன் கோவிலில், தைப்பூச நாளான இன்று, பால்குடம், பால் காவடி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.சென்னை, குரோம்பேட்டை அடுத்த குமரன்குன்றத்தில் உள்ள முருகன் கோவிலில் இன்று, தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. காலை, 9:00 மணிக்கு, விநாயகர் பூஜை, 9:30 மணிக்கு பால்குடம் மற்றும் பால் காவடிகள், குமரன் குன்றம் அருணகிரிநாதர் அரங்கத்திலிருந்து புறப்பட்டு, மலையை சுற்றி கிரிவலம் வந்து, கோவிலை
சென்றடையும். காலை, 11:00 மணிக்கு, பால்குடம் மற்றும் பால் காவடி ஆகியவற்றால், மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மதியம், 12:00 மணிக்கு, தீபாராதனையும் அதை தொடர்ந்து, அன்னதானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதில், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், ராதா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர்.
திருத்தணியில் குதிரை வாகனத்தில் உற்சவர் உலா
திருத்தணி முருகன் கோவிலில், இன்று, தைப்பூச திருவிழாவையொட்டி, உற்சவர் முருகப்பெருமான், குதிரை வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு
அருள்பாலிக்கிறார்.திருத்தணி முருகன் கோவிலில், தைப்பூச திருவிழா இன்று நடைபெறுகிறது. விழாவையொட்டி, அதிகாலை, 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
தொடர்ந்து, மூலவருக்கு தங்க கிரீடம், தங்கவேல், பச்சை மாணிக்க மரகத கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது.
காலை, 10:00 மணிக்கு, காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு விபூதி, பால், பன்னீர், இளநீர் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற வற்றால் அபிஷேகம் நடக்கிறது.
பகல், 12:00 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, மாடவீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து, உற்சவருக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.தமிழகம், ஆந்திரா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து வழிபடுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தைப்பூச திருநாளில் வடலுாரில் தீபம்
அருட் குழந்தையாக அவதரித்த ராமலிங்கர், சிறு வயதிலேயே சிதம்பர தரிசனம் செய்து, திருவருளை வெளிப்படுத்தினார்.சிறுவயதிற்கு உரிய குறும்பு தனத்துடன் விளங்கிய அவர், தனது அண்ணியின் அரவணைப்பில் கட்டுப்பட்டு, தியான வாழ்க்கை வாழத் துவங்கினார். அதில், முருகப் பெருமானின் தரிசனம் பெற்ற ராமலிங்கர், இறை வாழ்க்கை வாழ்வதற்கே தன்னை இறைவன் படைத்துள்ளதை உணர்ந்தார்.
ஆண்டவனின் அருள்வேண்டி, பல கோவில்களுக்கு சென்று வழிபட்டார். பள்ளி செல்லாமல் நுால்களை படிக்க ஆரம்பித்தார். உயர் மறைகள் படித்தார். அவற்றில் மெய்ப்பொருள் தேடிப் பெற்றார். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் எனும் பாடல் மூலம், பசி, நோய், ஏழ்மை, ஆதரவற்றவர் ஆகியோரை கண்டு, உள்ளம் துடித்தது உணர முடிகிறது.
மற்றொரு புறம், மக்கள் அறியாமையால், கருப்பன், காளி, மாரி என கும்பிட்டு, கூத்தாடுவதை கண்டு வருந்தினார். பல சமய வழிபாட்டு சச்சரவுகள் பெருகி வருவதை கண்டு மனம் நொந்தார்.
அரியும், சிவனும் ஒண்ணு... அறியாதார் வாயில் மண்ணு என, உரைத்தவர் அவர். பொங்குபல சமயமெனும் நதிகளெல்லாம் எனும் பாடல் மூலம், எல்லா சமயங்களும் ஒரே கடவுளை அடைய வழி தேடுகின்றன என்பதை விளக்கினார்.நமச்சிவாயம் எனும் மந்திரத்தை மனதில் நிறுத்தினார். அருட்பெரும் ஜோதியே, நம் இறைவன் என்பதை உணர்த்தினார். மாணிக்கவாசகர் சிவத்தை அடைந்ததை, பாடலாக
வடித்துள்ளார்.அருட்பெரும்ஜோதியான ஆண்டவரை அடைவதற்கு, உரிய நெறியான சமரச சன்மார்க்க நெறிகளையும் படைத்தார் ராமலிங்கர். இதற்காக, வடலுாரில், தர்மசாலை, சத்திய ஞான சபையையும் நிறுவினார்.
1872ம் ஆண்டு, ஜன., 25ம் தேதி, தைப்பூச திருநாளில், வடலுாரில் தீப ஒளி ஏற்றி, திருவருட்பிரகாச வள்ளலாராகப் போற்றப்பட்டார். ராமலிங்க அடிகளார், தான் பெற்ற இறை அனுபவங்களை, 'திருவருட்பா அகவல்' என்ற நுாலாக படைத்தார்.
மேட்டுக்குப்பம், சித்திவளாகத் திருவறையில் தங்கிய ராமலிங்க அடிகளார், சில நாட்கள் தனிமையில் தியானித்திருப்பதும், வெளிவந்து சில நாட்கள், மக்களை ஆசிர்வதிப்பதுமாக இருந்தார்.
இந்த மண்ணுலகில், அவதரித்த பெரியவர்கள் வாழ்க்கையுடன் ஒப்பிட முடியாத, மரணமில்லா பெருவாழ்வு வாழ்ந்த, திரு அருட்பிரகாச வள்ளல் பெருமான், கடைசியாக, 'கடைவிரித்தேன் கண்டுகொள்வார் யாருமில்லை' என, கவலையுற்றே மறைந்தார்.
ச.கணபதிசாத்துார், விருதுநகர் மாவட்டம்.-நமது நிருபர் -
SRI KANCHIMMAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
DINAMALAR
தைப்பூச நன்னாளான இன்று, முருகனை நினைத்து, இதை படிப்போருக்கு வாழ்வில் நன்மை பெருகும்.
* குன்றுதோறும் குடிகொண்ட முருகப் பெருமானே! சிவனின் நெற்றிக் கண்ணில் அவதரித்த சிவபாலனே! வடிவேலனே! கார்த்திகைப் பெண்களின் அரவணைப்பில் வளர்ந்த கார்த்திகேயனே! அகத்தியருக்கு உபதேசித்த குருநாதனே! உன் திருவடியைத் தஞ்சம் என வந்து விட்டோம்.
* ஆறுபடை வீட்டில் அமர்ந்திருக்கும் அண்ணலே! பழநி தண்டாயுதபாணியே! திருத்தணியில் வாழும் தணிகாசலனே! தமிழில் வைதாரையும், வாழ வைக்கும் கருணைக் கடலே! சிக்கல் சிங்கார வேலவனே! மயில் வாகனனே! சேவல் கொடி ஏந்தியவனே! உன் சன்னிதியில்
அடைக்கலம் புகுந்து விட்டோம். நீயே அருள்புரிய வேண்டும்.
* சூரனை அழித்து தேவர்களைக் காத்தவனே! தேவசேனாபதியே! தெய்வானை மணவாளனே! அருணகிரிநாதருக்கு அருள்புரிந்தவனே!
ஆறுமுகனே! பன்னிரு கைகளால் வாரி வழங்கும் வள்ளல் பெருமானே! திருமாலின் மருமகனே! ஆனை முகனின் தம்பியே! குழந்தை தெய்வமே! எங்களுக்கு வாழ்வில் ஆரோக்கியம்,
செல்வ வளத்தையும் தந்தருள்வாயாக.
* பார்வதி பெற்ற பாலகனே! கந்தனே! கடம்பனே! கதிர் வேலவனே! சிவ சுப்பிரமணியனே! செந்துார் முருகனே! குறிஞ்சி ஆண்டவனே!
அவ்வைக்கு கனி கொடுத்தவனே! மயிலேறிய மாணிக்கமே! முத்துக் குமரனே! சுவாமி நாதனே! சரவண பவனே! சண்முகனே! தாயினும் சிறந்த தயாபரனே! வாழ்வில் குறுக்கிடும்
துன்பங்களைப் போக்கி வெற்றியைத் தருவாயாக.
* வேதம் போற்றும் வித்தகனே! குகப் பெருமானே! வள்ளி மணவாளனே! தவ முனிவர்கள் உள்ளத்தில் வாழும் தவசீலனே! சிரகிரியில் வாழ்பவனே! காங்கேயனே! கண் கண்ட தெய்வமே! கலியுக
வரதனே! திருப்புகழின் நாயகனே! தமிழ்க் கடவுளே! வாழ்வில் எல்லா வளமும் பெற்று, நாங்கள் இன்பமுடன் வாழ வரம் தருவாயாக.
இப்படியும் ஒரு பக்தர்
'பொன்னை விரும்பும் பூமியிலே.... என்னை விரும்பும் ஓருயிரே' என்றொரு பாடல் உண்டு. அந்த பாடலின் கருத்தை பரிபாடலில் கடுவெயின் இளநாகனார் என்னும் புலவர், அந்த காலத்திலேயே பாடியிருக்கிறார். அவர் கேட்கும் வரத்தை பாருங்கள்.
''முருகா... நாங்கள் உன்னிடம் பொன்னோ, பொருளோ, சுகமோ கேட்கவில்லை. உன் மீது என்றும் மாறாத அன்பும், அருளும் வேண்டுகிறோம். கடம்ப மலர் மாலை சூடியவனே! எப்போதும் உன் திருவடியை வணங்கும் பாக்கியம் தர வேண்டும்'' என்கிறார். அன்பு செலுத்தும் அனைவருக்கும் தன்னையே தரும் வள்ளலாக முருகன் விளங்குகிறார்.
தைப்பூச திருத்தலம்
கயிலாயத்தில் பார்வதிக்கு சிவன், பிரணவ மந்திரத்தை உபதேசித்தார். அதை முருகன் மறைவாக இருந்து கேட்டதால், அவருக்கு பாவம் உண்டானது. அதை போக்க, பூலோகம் வந்து தவத்தில் ஆழ்ந்தார். அவருக்கு சிவனும், பார்வதியும் ரிஷப வாகனத்தில் தைப்பூசத்தன்று காட்சியளித்தனர்.இந்த சிவனுக்கு, திருப்பரங்குன்றத்தில் சிவாலயம் அமைக்கப்பட்டது. இதை, 'மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்' என்பர். இதை தரிசித்த பின்னரே, திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என, திருப்பரங்கிரி புராணம் கூறுகிறது. திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் உள்ள இக்கோவிலில் வழிபட, அறியாமல் செய்த பாவம் தீரும்.
பூலோக சிந்தாமணி
பழநியில் நடக்கும் தைப்பூச விழாவில், காவடி வழிபாடு சிறப்பானது. காவடி சுமக்கும் பக்தர்கள், மார்கழி முதல் தேதி மாலை அணிந்து, தைப்பூசம் வரை விரதம் மேற்கொள்வர். பூசத்திற்கு சிலநாள் முன்னதாக, பாத யாத்திரையாக புறப்படுவர். அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை,
காவடியில் சுமந்து செல்வர். தைப்பூச விரதமிருந்தால், விருப்பம் எளிதில் நிறைவேறும் என்பர். விரும்பியதை தரும் தேவலோக சிந்தாமணி போல, பூலோக சிந்தாமணியாக, பழநி முருகன் விளங்குவதாக அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார்.
உப்பை நம்பவில்லை!உன்னையே நம்புகிறேன்
முருகன் அடியாரான பாம்பன் சுவாமி, சென்னையில்வாழ்ந்தார். ஒருநாள் அவர் சாலையில் நடந்து செல்லும் போது, குதிரை வண்டி மீது மோதி கால் எலும்பு முறிந்தது. அவர் உண்ணும் உணவில் உப்பு சேர்ப்பதில்லை என்பதை அறிந்த மருத்துவர்கள், உப்பு சத்து குறைபாடு இருப்பதால், எலும்பு மீண்டும் ஒன்று சேர வாய்ப்பு இல்லை என தெரிவித்தனர்.படுக்கையில் கிடந்த பாம்பன் சுவாமிகள், 'முருகா...! நான் உப்பை நம்பவில்லை. உன்னையே நம்புகிறேன்' என, தான் எழுதிய சண்முக கவசத்தை பாடி வந்தார். நாளடைவில் மருத்துவர்களே
வியக்கும் விதத்தில், அவரது எலும்பு முறிவு குணமானது. 'எந்த கடவுளும் கந்தக் கடவுளுக்கு மிஞ்சாது' என்பது பாம்பன் சுவாமியின் அருள்வாக்கு. நோயால் அவதிப்படுவோர் குணம் பெற,
48 நாள் சண்முக கவசத்தை பக்தியுடன் படிப்பர்.
நினைச்சுப் பார்த்தா... பெருமை புரியும்!
“அப்பன் இரந்துண்ணி; ஆத்தாள் மலைநீலிஒப்பறிய மாமன் உறிதிருடி- சப்பைக்கால்அண்ணன் பெருவயிறன் ஆறுமுகத்தானுக்கு இங்குஎண்ணுங்கால் பெருமை இவை” என, முருகனைப் பற்றி ஒரு பாடல் இருக்கிறது. இதைப் பாடியவர் காளமேகப் புலவர்.தந்தையாகிய சிவன், பிச்சையேற்று பிழைப்பவர். அன்னை பார்வதியோ மலையில் பிறந்த கோபக்காரி. ஒப்பில்லாத மாமன் திருமால், உறியில் வெண்ணெய் திருடுபவர். சப்பைக் கால் கொண்ட அண்ணன்
விநாயகர் பெருவயிறு கொண்டவர். இவர்களே ஆறுமுகனின் பெருமை மிக்க உறவினர்கள்.கேலி செய்வது போல தெரிந்தாலும், ஆழ்ந்து படித்தால் இதன் உண்மையான பொருள் புரியும். பக்தர்களிடம் உள்ள தீய குணங்களை சிவன், தன் திருவோட்டில் பிச்சையாக ஏற்கிறார். தீமையை எதிர்க்கும் போது, பார்வதி கொடிய நீலியாக கோபம் கொள்கிறாள்.
வெண்ணெய் திருடுவது போல, நல்லவர் உள்ளத்தை கொள்ளை கொள்பவராக திருமால் இருக்கிறார். அண்டங்களை வயிற்றில் தாங்கி நிற்பதால், விநாயகர் பெருவயிறு கொண்டவராக விளங்குகிறார். வஞ்சப் புகழ்ச்சி அணியில் அமைந்த பாடல் இது.
பரிசளித்த முருகன்
சூரபத்மனின் கொடுமை தாங்காத தேவர்களை காப்பதற்காக, முருகன் படை வீரர்களுடன் புறப்பட்டார். சூரபத்மனின் இருப்பிடமான வீரமகேந்திரபுரத்தை நோக்கி வரும் வழியில், விந்தியமலை பகுதியில், சூரபத்மனின் தம்பியான தாரகாசுரன் குறுக்கிட்டான். போர் மூண்டது. வெற்றி பெற்ற முருகன், தாரகாசுரனை கொல்ல மனமில்லாமல், அவனை யானையாக மாற்றினார். அந்த யானையை, தன் தம்பியான ஹரிஹரபுத்திரன் என்னும் சாஸ்தாவுக்கு அன்பு பரிசாக கொடுத்தார். அதையே, அய்யப்பன் வாகனமாக ஏற்றார்.
ஆறுபடை வீட்டு வள்ளல்
ஆறுபடை வீடுகளை நாடி வருவோருக்கு, வரங்களை வாரி வழங்கும் வள்ளலாக முருகன் இருக்கிறார்.
திருப்பரங்குன்றம் - செல்வம் பெருகும்
திருச்செந்துார் - தைரியம் உண்டாகும்
பழனி - புண்ணியம் பெருகும்
சுவாமிமலை - நல்ல புத்தி, ஞானம் கிடைக்கும்
திருத்தணி - மணவாழ்வு சிறக்கும்
சோலைமலை - விருப்பம் நிறைவேறும்
கதிர்காமம் கதிரேசன்
முருகனின் திருத்தலங்களில், கதிர்காமத்திற்கு சிறப்பிடம் உண்டு. இப்பெருமான், 'கதிரேசன்' என்று அன்புடன் அனைவராலும் போற்றப்படுகிறான். இத்தலம் இலங்கையில், கொழும்பில் இருந்து, 230 கி.மீ.,யில் அமைந்துள்ளது.
இங்கு கருவறையில், எவ்வடிவில் இறைவன் இருக்கிறான் என்பது சிதம்பர ரகசியமாகவே உள்ளது. சன்னதியின் திருக்கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் தரையில், மயில் மீது இரு தேவியருடன் அமர்ந்திருக்கும் முருகனின் உருவம் உள்ளது. இதைப்போன்று மேலும் பல திரைச்சீலைகள் உள்ளன. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இப்பெருமானின் சன்னதி திறந்து வைக்கப்
படுகிறது. மற்ற காலங்களில் திரையிட்டே பூஜை நடத்தப்படுகிறது.இங்கு ஆடி மாத உற்சவம் மிகவும் பிரபலமானது. ஆடி அமாவாசையன்று ஆரம்பித்து, ஆடி பவுர்ணமியில் தீர்த்தவாரி நடைபெறும். நாள்தோறும் யானை மீது ஊர்வலமாக ஒரு பெட்டி எடுத்துச் செல்லப்படும். அந்த
பெட்டிக்குள் முருகனுக்குரிய எந்திரம் இருக்கிறது. இக்கோவிலின் பின்னால் உள்ள அரசமரத்தை சிங்களர்கள் வழிபடுகின்றனர். தமிழ் மக்களும், சிங்களர்களும் இணைந்து வழிபடுவது மத ஒற்றுமைக்கு வழி வகுப்பதாக அமைந்துள்ளது.
12 கைகளில் இருப்பது என்ன?
முருகனின் வலப்புற ஆறு கைகளில் ஒன்று அபய கரம் - வந்தவர்களைப் பாதுகாப்பது. மற்ற ஐந்து கைகளில் சேவற்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல்
ஆகியவை இருக்கும். ஆறு இடப்புற கைகளில் ஒன்று வரத கரம் - கேட்டதைக் கொடுப்பது. மற்ற ஐந்து கைகளில் தாமரை, மணி, மழு, தண்டாயுதம்,
வில் ஆகியவை இருக்கும்.
நவரத்தின தாய்மார்கள்
முருகனின் படைத் தளபதிகள் ஒன்பது பேர். இவர்களுக்கு தலைவர் வீரபாகு. நவரத்தின தாய்மார்கள் ஆளுக்கொருவராக, ஒன்பது குழந்தைகளை பெற்றார். அவர்கள், நவ வீரர்கள் எனப்பட்டனர்.இவர்களில், மாணிக்கவல்லியின் மகன் வீரபாகு, முத்துவல்லியின் மகன் வீரகேசரி, புஷ்பராகவல்லியின் மகன் வீரமகேந்திரர், கோமேதகவல்லியின் மகன் வீரமகேஸ்வரர், வைடூரியவல்லியின் மகன் வீரபுரந்தரர், வைரவல்லியின் மகன் வீரராக்கதர், மரகதவல்லியின் மகன் வீரமார்த்தாண்டர், பவளவல்லியின் மகன் வீராந்தகர், நீலவல்லியின் மகன் வீரதீரர் எனப்பட்டனர்.
ஆறுமுகனின் அடியவர்கள்
ஆறுமுகனான முருகனருள் பெற்றவர்கள் அவ்வையார், அகத்தியர், அருணகிரிநாதர் என, எண்ணிக்கையில் அடங்காது. அவர்களே நமக்கு குருவாக இருந்து குருவருளையும், முருகனின்
திருவருளையும் தந்தருள்கின்றனர்.
அகத்தியர்
முருகன் அருள் பெற்ற அடியார்களில்முதன்மையானவர் அகத்தியர். செந்தமிழ் நாடான இப்பகுதியை அகத்திய முனிவரே முருகனிடம் பெற்று, பாண்டிய மன்னனுக்கு கொடுத்ததாக,
திருநெல்வேலி தலபுராணம் கூறுகிறது. பொதிகை மலையில், முருகனிடம் உபதேசம் பெற்று, அகத்தியம் என்னும் இலக்கணத்தை எழுதியதாக கூறுவர்.
நக்கீரர்
கடைச்சங்கப் புலவராக, மதுரையில் இருந்து தமிழ் வளர்த்த புலவர் நக்கீரர். முருகன் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர். திருப்பரங்குன்றத்தில், பூதங்களிடம் சிக்கிக் குகையில் கிடந்த போது,
முருகனே காப்பாற்றி அருள்புரிந்தார். முருகனின் ஆறுபடை வீடுகளை சிறப்பித்து போற்றும் திருமுருகாற்றுப்படையை எழுதினார்.
அவ்வையார்
முருகனை வழிபட்ட பெண் அடியவர்களில், அவ்வையார் குறிப்பிடத்தக்கவர். பசு மேய்க்கும் பாலகனாக வந்த முருகன் இவரிடம், 'பாட்டி, சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?' என்று கேட்டு ஞானத்தை அருளினார் என்பர். இவர் பாடிய இனியது, புதியது, அரியது, பெரியது ஆகிய பாடல்கள் தம் சிந்தைக்கு விருந்தளிப்பவை.
குமரகுருபரர்
திருச்செந்துார் அருகில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த இவர், 5 வயது வரை பேசும் திறனற்றவராக இருந்தார். முருகனருளால் பேசும் ஆற்றல் பெற்று, கந்தர் கலிவெண்பாவை பாடி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். முருகன் மீது இவர் பாடிய முத்துக்குமாரசு வாமி பிள்ளைத்தமிழ் புகழ் பெற்றது. காசியில் மடம் ஒன்றை நிறுவினார்.
தேவராய சுவாமிகள்
பட்டி, தொட்டிகளில் எல்லாம், முருகனுக்குரிய பாராயண நுாலாகத் திகழும் கந்தசஷ்டி கவசத்தைப் பாடியவர் தேவராய சுவாமிகள். முருகனுக்குரிய பீஜ மந்திரங்களை சூட்சுமமாகத் தெரிவிக்கும் நுால் இதுவாகும். சென்னிமலை முருகனின் மீது பாடப்பட்ட இந்நுால், கவசம் போல பாதுகாக்கும் சக்தி கொண்டது.
ராமலிங்க வள்ளலார்'
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை' என, கடவுளை கருணை வடிவில் கண்டு போற்றியவர் வள்ளலார். சிறுவனாக இருக்கும் போது கண்ணாடியின் முன் தியானம் செய்த போது, மயில்வாகனத்தில் முருகன் இவருக்கு காட்சியளித்தார். கந்த கோட்டத்து முருகனிடம் இவர் கேட்கும் வரங்கள், நம் அனைவருக்கும் தேவையானவை என்றால் மிகையில்லை.
பாம்பன் சுவாமிகள்
குமரகுருதாச சுவாமிகள் என்னும் இவர், ராமேஸ்வரம் அருகிலுள்ள பாம்பனில் வாழ்ந்ததால், 'பாம்பன் சுவாமிகள்' எனப்பட்டார். முருகன் மீது, 6,666 பாடல்கள் பாடினார்.
முருகனருளால் அற்புதம் நிகழ்த்திய இவர், சமீப காலத்தில் வாழ்ந்தவராவார். இவர் பாடிய சண்முக கவசம் பாராயண நுாலாக திகழ்கிறது. தமிழ் உயிர், மெய் எழுத்துக்கள் முப்பதையும் முதல் எழுத்தாக கொண்டு அமைந்த நுால் இது. பஞ்சாமிர்த வண்ணம் என்னும் பாடலால் முருகனுக்கு
அபிஷேகம் செய்தவர் இவர்.
வடபழனியில் தங்க ரத புறப்பாடு
முருகன் கோவில்களில், தைப்பூச திருவிழா களை கட்டி உள்ளது. பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.தைப்பூசம், முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழா. ஆண்டுதோறும் தை மாதம், பூச நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் கூடி வரும் நாளில், முருகனுக்கு எடுக்கப்படும் விழா தைபூசம். அன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.தை பூசத்தன்று, முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு, ஒரு விழாவாக, பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது. சிவபெருமான், உமாதேவியுடன் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள், தைப்
பூசம் என்பர்.தமிழக முருகன் கோவில்களில், பூச நட்சத்திரம், பவுர்ணமி அன்று; பூச நட்சத்திரம் பிறப்பை கணக்கிட்டு; சந்திரகிரஹணம்
வருவதால், அடுத்த நாள் என பிரித்து, தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது.கந்தக்கோட்டம், குன்றத்துார் முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், குரோம்பேட்டை, குமரன் குன்றம் கோவில், சைதாப்பேட்டை, காரணீசுவரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும், இன்று தைப்பூச விழா நடக்கிறது.விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோவில், காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் முருகன் கோவில், குமரக்கோட்டம், வல்லக்கோட்டை உள்ளிட்ட பல கோவில்களிலும், தைப்பூசம் களை கட்டியுள்ளது.சென்னை, வடபழனியாண்டவர் கோவிலில், தைப்பூச திருவிழா, நேற்று இரவு துவங்கி, கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், பால் குடம், காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.தைப்பூச பால் காவடி சபை சார்பில், இரண்டு நாட்கள் விழா, விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இன்று காலை, 6:00 மணிக்கு, காவடிகளுக்கு அபிஷேக அலங்காரம் நடக்கிறது.
காலை, 7:00 மணி முதல், மிளகாய் சாந்து அபிஷேகம்; தகட்டில், கடப்பாரை உருவுதல்; மார் மீது கல் உரல் வைத்து மஞ்சள் இடித்தல் போன்ற நிகழ்வுகள் நடக்க உள்ளன.
நாளை வடபழனி ஆண்டவருக்கு சந்தனக்காப்பு, இரும்பர் அபிஷேகம், தங்க ரத புறப்பாடு நடக்கிறது.
கந்த கோட்டத்தில் தைப்பூச விழா துவக்கம்
கந்த கோட்டம் ஸ்ரீ கந்த சுவாமி கோவிலில் இன்று, தைப்பூச விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.சென்னை, பாரிமுனை, கந்த கோட்டத்தில், ஸ்ரீ கந்த சுவாமி கோவில் உள்ளது. தைப்பூசம் என்பது, முருகனுக்கு உகந்த நாள். இங்கு ஆண்டுதோறும் தை மாதம், பூச நட்சத்திரமும் பவுர்ணமி திதியும் கூடி வரும் நாளில், முருகனுக்கு தைப்பூச விழா கொண்டாடப்பட்டு
வருகிறது.அதன்படி, கந்தகோட்டம், ஸ்ரீ கந்த சுவாமி கோவிலில், இன்று காலை, 6:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்படுகிறது. வள்ளலாளர் மற்றும் உற்சவருக்கு அபிஷேக, ஆராதனை
உள்ளிட்டவை நடக்க உள்ளன. மாலையில், முருகப்பெருமான் தேரில் எழுந்தருளி, வீதி உலாவும் நடைபெறுகிறது. பின், பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மேலும், பழனி ஆண்டவருக்கு சவுடல் விமானமும், உற்சவருக்கு தங்கத் தொட்டியும், துவஜா அவரோகணம் ஆகியவை நடைபெறுகின்றன. இன்று, சந்திர கிரகணத்தை ஒட்டி, மாலை, 4:00 மணிக்கு, கோவில் நடை சாத்தப்பட்டு, இரவு, 9:31 மணிக்கு திறக்கப்பட
உள்ளது.விழா ஏற்பாடுகளை, செயல் அலுவலர் சக்திவேல், உதவி ஆணையர் அன்னக்கொடி ஆகியோர் செய்து வருகின்றனர்.
சித்தர் பீடத்தில் தைப்பூச ஜோதி
மேல்மருவத்துார்: ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தைப்பூச ஜோதி விழா, இன்று துவங்குகிறது.மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தைப்பூச விழா, இன்று நடக்கிறது. அதிகாலை, 3:00 மணிக்கு, மங்கள இசையுடன், கோவில் நடை திறக்கப்பட உள்ளது.
அதிகாலை, 3:30 மணிக்கு, ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை, 4:00 மணிக்கு, கோ பூஜையுடன், தைப்பூச ஜோதி விழாவும் துவங்குகிறது. பங்காரு அடிகளார் தலைமை வகிக்கிறார்.கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் நீதிபதிகள், உயர் அதிகாரிகள், பல நாடுகளைச் சேர்ந்த, ஏராளமான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்கின்றனர்.
இதன் ஏற்பாடுகளை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் செய்கின்றனர்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் உற்சவம்
பெருநகர், பிரம்மபுரீஸ்வரர் கோவிலில், தைப்பூச விழாவையொட்டி, அறுபத்து மூன்று நாயன்மார்களின் மகா உற்சவம், நேற்று நடந்தது.காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த பெருநகரில், பட்டுவதனாம்பிகை உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் தைப்பூச விழா, கடந்த, 20ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஒன்பது நாட்களாக, பல்வேறு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 27ல், திருக்கல்யாணமும், 28ல் ரதோற்சவமும் நடந்தது.
நேற்று காலை, 11:00 மணிக்கு, பட்டுவதனாம்பிகை உடனுறை பிரம்மபுரீஸ்வரருடன், 63 நாயன்மார்கள், அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்ந்து, முக்கிய தெருக்களில் வீதியுலா வந்தனர்.
சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், தீபம் ஏற்றி வழிபட்டனர்.
குமரன்குன்றத்தில் தைப்பூச நிகழ்ச்சிகள்
குமரன்குன்றம் முருகன் கோவிலில், தைப்பூச நாளான இன்று, பால்குடம், பால் காவடி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.சென்னை, குரோம்பேட்டை அடுத்த குமரன்குன்றத்தில் உள்ள முருகன் கோவிலில் இன்று, தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. காலை, 9:00 மணிக்கு, விநாயகர் பூஜை, 9:30 மணிக்கு பால்குடம் மற்றும் பால் காவடிகள், குமரன் குன்றம் அருணகிரிநாதர் அரங்கத்திலிருந்து புறப்பட்டு, மலையை சுற்றி கிரிவலம் வந்து, கோவிலை
சென்றடையும். காலை, 11:00 மணிக்கு, பால்குடம் மற்றும் பால் காவடி ஆகியவற்றால், மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மதியம், 12:00 மணிக்கு, தீபாராதனையும் அதை தொடர்ந்து, அன்னதானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதில், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், ராதா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர்.
திருத்தணியில் குதிரை வாகனத்தில் உற்சவர் உலா
திருத்தணி முருகன் கோவிலில், இன்று, தைப்பூச திருவிழாவையொட்டி, உற்சவர் முருகப்பெருமான், குதிரை வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு
அருள்பாலிக்கிறார்.திருத்தணி முருகன் கோவிலில், தைப்பூச திருவிழா இன்று நடைபெறுகிறது. விழாவையொட்டி, அதிகாலை, 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
தொடர்ந்து, மூலவருக்கு தங்க கிரீடம், தங்கவேல், பச்சை மாணிக்க மரகத கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது.
காலை, 10:00 மணிக்கு, காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு விபூதி, பால், பன்னீர், இளநீர் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற வற்றால் அபிஷேகம் நடக்கிறது.
பகல், 12:00 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, மாடவீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து, உற்சவருக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.தமிழகம், ஆந்திரா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து வழிபடுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தைப்பூச திருநாளில் வடலுாரில் தீபம்
அருட் குழந்தையாக அவதரித்த ராமலிங்கர், சிறு வயதிலேயே சிதம்பர தரிசனம் செய்து, திருவருளை வெளிப்படுத்தினார்.சிறுவயதிற்கு உரிய குறும்பு தனத்துடன் விளங்கிய அவர், தனது அண்ணியின் அரவணைப்பில் கட்டுப்பட்டு, தியான வாழ்க்கை வாழத் துவங்கினார். அதில், முருகப் பெருமானின் தரிசனம் பெற்ற ராமலிங்கர், இறை வாழ்க்கை வாழ்வதற்கே தன்னை இறைவன் படைத்துள்ளதை உணர்ந்தார்.
ஆண்டவனின் அருள்வேண்டி, பல கோவில்களுக்கு சென்று வழிபட்டார். பள்ளி செல்லாமல் நுால்களை படிக்க ஆரம்பித்தார். உயர் மறைகள் படித்தார். அவற்றில் மெய்ப்பொருள் தேடிப் பெற்றார். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் எனும் பாடல் மூலம், பசி, நோய், ஏழ்மை, ஆதரவற்றவர் ஆகியோரை கண்டு, உள்ளம் துடித்தது உணர முடிகிறது.
மற்றொரு புறம், மக்கள் அறியாமையால், கருப்பன், காளி, மாரி என கும்பிட்டு, கூத்தாடுவதை கண்டு வருந்தினார். பல சமய வழிபாட்டு சச்சரவுகள் பெருகி வருவதை கண்டு மனம் நொந்தார்.
அரியும், சிவனும் ஒண்ணு... அறியாதார் வாயில் மண்ணு என, உரைத்தவர் அவர். பொங்குபல சமயமெனும் நதிகளெல்லாம் எனும் பாடல் மூலம், எல்லா சமயங்களும் ஒரே கடவுளை அடைய வழி தேடுகின்றன என்பதை விளக்கினார்.நமச்சிவாயம் எனும் மந்திரத்தை மனதில் நிறுத்தினார். அருட்பெரும் ஜோதியே, நம் இறைவன் என்பதை உணர்த்தினார். மாணிக்கவாசகர் சிவத்தை அடைந்ததை, பாடலாக
வடித்துள்ளார்.அருட்பெரும்ஜோதியான ஆண்டவரை அடைவதற்கு, உரிய நெறியான சமரச சன்மார்க்க நெறிகளையும் படைத்தார் ராமலிங்கர். இதற்காக, வடலுாரில், தர்மசாலை, சத்திய ஞான சபையையும் நிறுவினார்.
1872ம் ஆண்டு, ஜன., 25ம் தேதி, தைப்பூச திருநாளில், வடலுாரில் தீப ஒளி ஏற்றி, திருவருட்பிரகாச வள்ளலாராகப் போற்றப்பட்டார். ராமலிங்க அடிகளார், தான் பெற்ற இறை அனுபவங்களை, 'திருவருட்பா அகவல்' என்ற நுாலாக படைத்தார்.
மேட்டுக்குப்பம், சித்திவளாகத் திருவறையில் தங்கிய ராமலிங்க அடிகளார், சில நாட்கள் தனிமையில் தியானித்திருப்பதும், வெளிவந்து சில நாட்கள், மக்களை ஆசிர்வதிப்பதுமாக இருந்தார்.
இந்த மண்ணுலகில், அவதரித்த பெரியவர்கள் வாழ்க்கையுடன் ஒப்பிட முடியாத, மரணமில்லா பெருவாழ்வு வாழ்ந்த, திரு அருட்பிரகாச வள்ளல் பெருமான், கடைசியாக, 'கடைவிரித்தேன் கண்டுகொள்வார் யாருமில்லை' என, கவலையுற்றே மறைந்தார்.
ச.கணபதிசாத்துார், விருதுநகர் மாவட்டம்.-நமது நிருபர் -
SRI KANCHIMMAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
DINAMALAR