Post by radha on Nov 3, 2017 20:09:54 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
🍀#அன்னம்_பாலிக்கும்_தில்லைச்_சிற்றம்பலம்🍀
-
🍀"#அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை
என்னம் பாலிக்கு மாறு கண்டு இன்புற
இன்னம் பாலிக்குமோ #இப்பிறவியே."🍀
-
🍀நாம் இறந்த பின்னர் பேரின்ப வீடு அளித்து நமக்கு அருளும் தில்லைச் சிற்றம்பலவன், பொன் அளித்து நம்மை இம்மையிலும் காக்கின்றான். 🍀அத்தகைய சிவபிரானை, மறுபடியும் மறுபடியும் கண்டு களிக்க, எனக்கு மனிதப் பிறவியினை மீண்டும் மீண்டும் அளிப்பாரோ?🍀
-
திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்
-
🍀ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகள் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க உறைவிடம் ஆகும். 🍀உண்ண உணவு அளிக்கும் தில்லைச் சிற்றம்பலவனார், பொன் அளித்து, உடையும் உறைவிடமும் நமக்கு கிடைக்க வழி செய்கின்றார். 🍀இவ்வாறு நமக்கு உதவி செய்யும் ஒருவரை நினைத்தால், நாம் அவரிடத்தில் வைத்துள்ள அன்பு மேலும் மேலும் பெருகுவது இயற்கை தானே. 🍀இந்த செய்தி தான் என் அன்பு ஆலிக்குமாறு என்ற சொற்றொடர் மூலம் உணர்த்தப்படுகின்றது.🍀
-
🍀நாம் இறைவன் மீது வைத்துள்ள அன்பினை மேலும் வளர்க்கும் இறைவனின் தன்மையை நினைத்தால் மனிதப் பிறவி மறுபடியும் வேண்டும் என்று தோன்றுகின்றது என்று கூறுகின்றார்.🍀
-
திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்
-
🍀அன்னம் என்பதற்கு வீட்டின்பம் என்று பொருள் கொண்டு, முக்தி அளிக்கும் சிற்றம்பலம் என்று உணர்த்துவதாகவும் கூறுவார்கள். 🍀தில்லை காண முக்தி என்பது ஆன்றோர் வாக்கு. தில்லை சென்று நடராஜப் பெருமானை வணங்கினால் நமக்கு முக்தி கிடைக்கும் என்று கூறும் அப்பர் பெருமான், 🍀இந்த பிறப்பிலும் சிவபெருமான் நமக்கு செல்வம் அளித்து காப்பாற்றுகின்றார் என்று கூறுகின்றார். 🍀இவ்வாறு இம்மையிலும் செல்வம் அளித்து, மறுமையிலும் அழியாத செல்வமாகிய வீடுபேற்றினை அளிக்கும் சிவபிரான் என்று சொல்வது சுந்தரரின் பதிகம் ஒன்றினை நினைவூட்டுகின்றது. 🍀இந்த பதிகம் புகலூர் தலத்தின் மீது அருளப்பட்டது. (பதிக எண்: 7.34). ஐயுறவு=சந்தேகம், ஐயம்🍀
-
🍀"#தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்கினும் தொண்டர் தருகிலா
பொய்ம்மையாளரைப் பாடதே எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்
இம்மையே தரும் சோறும் கூறையும் ஏத்தலாம் இடர் கெடலுமாம்
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு #இல்லையே."🍀
-
🍀அன்னத்தை சோறு என்றும் அமுதம் என்றும் அழைப்பதுண்டு. ஆனால் இந்த இரு சொற்களும், வீடுபேறு என்ற பொருள் தரும் வகையில் கையாளப் பட்டிருப்பதை நாம் கீழ்க்கண்ட பதிகங்களில் காணலாம். 🍀அன்னம் என்ற சொல்லுக்கு வீடுபேறு என்ற பொருள் உண்டென்பதால், அன்னம் என்ற சொல்லுக்கு இணையான சோறு, அமுதம் என்ற சொற்களும் வீடுபேற்றினை குறிப்பதாக கையாளப்பட்டுள்ளன.🍀
-
திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்
-
🍀அப்பர் பிரான் தனது குறுக்கை வீரட்டானம் பதிகத்தின் ஒரு பாடலில் (பதிக எண்: 4.49) அமுதம் என்ற சொல்லினைப் பயன்படுத்தி, சண்டீசருக்கு வீடுபேறு அளித்ததை குறிப்பிடுகின்றார். 🍀தாபரம்=இறைவனின் திருமேனி, இங்கே இலிங்கத் திருமேனி🍀
-
🍀"#தழைத்ததோர் ஆத்தியின் கீழ் தாபரம் மணலால் கூப்பி
அழைத்து அங்கே ஆவின் பாலை கறந்து கொண்டு ஆட்டக் கண்டு
பிழைத்த தன் தாதை தாளை பெரும் கொடு மழுவால் வீசக்
குழைத்ததோர் அமுதம் ஈந்தார் குறுக்கை #வீரட்டனாரே."🍀
-
🍀மணிவாசகர் தனது தோணோக்கம் பதிகத்தில் சோறு பற்றினவா என்று சண்டீசர் வீடுபேறு அடைந்த செய்தியை குறிப்பிடுகின்றார். 🍀தனது தந்தையின் கால்களை வெட்டியது, பொதுவான கண்ணோட்டத்தில் பாதகமாக கருதப்பட்டாலும், சிவபூஜைக்கு இடையூறு செய்தவனை தண்டித்தது என்பதால் அது தீய செயலாகாது என்று மணிவாசகர் இங்கே உணர்த்துகின்றார். சேதித்தல்=துண்டித்தல்.🍀
-
🍀"#தீதில்லை மாணி சிவகருமம் சிதைத்தானைச்
சாதியும் வேதியன் தாதை தனைத் தாளிரண்டும்
சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழப்
பாதகமே சோறு பற்றினவா #தோணோக்கம்."🍀
-
சிதம்பரத்தில் அன்னதானம் இன்றும் சிறப்பாக நடைபெறுவதை நாம் காணலாம். அப்பர் பிரான் காலத்திலும் சிறப்பான முறையில் அன்னதானம் நடைபெற்று இருக்கவேண்டும் அதனால் தான் அன்னம் பாலிக்கும் என்று இந்தப் பதிகத்தினை தொடங்குகின்றார் என்று நினைக்கத் தோன்றுகின்றது. தினமும் இறைவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் கோயில் தில்லைச் சிற்றம்பலம். ஆதிசங்கரர் இங்கே வந்த போது, அன்ன ஆகர்க்ஷண இயந்திரம் நிறுவியதாக கூறுவார்கள்.
-
🍀"ஈசன் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!"🍀
-
🍀தென்னாடுடைய சிவனே போற்றி!🍀
🍀எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!🍀🍀
-
🍀காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!🍀
🍀கயிலை மலையானே போற்றி! போற்றி!🍀🍀
-
|| ----------- 🍀திருச்சிற்றம்பலம்🍀 ----------- ||
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
🍀#அன்னம்_பாலிக்கும்_தில்லைச்_சிற்றம்பலம்🍀
-
🍀"#அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை
என்னம் பாலிக்கு மாறு கண்டு இன்புற
இன்னம் பாலிக்குமோ #இப்பிறவியே."🍀
-
🍀நாம் இறந்த பின்னர் பேரின்ப வீடு அளித்து நமக்கு அருளும் தில்லைச் சிற்றம்பலவன், பொன் அளித்து நம்மை இம்மையிலும் காக்கின்றான். 🍀அத்தகைய சிவபிரானை, மறுபடியும் மறுபடியும் கண்டு களிக்க, எனக்கு மனிதப் பிறவியினை மீண்டும் மீண்டும் அளிப்பாரோ?🍀
-
திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்
-
🍀ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகள் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க உறைவிடம் ஆகும். 🍀உண்ண உணவு அளிக்கும் தில்லைச் சிற்றம்பலவனார், பொன் அளித்து, உடையும் உறைவிடமும் நமக்கு கிடைக்க வழி செய்கின்றார். 🍀இவ்வாறு நமக்கு உதவி செய்யும் ஒருவரை நினைத்தால், நாம் அவரிடத்தில் வைத்துள்ள அன்பு மேலும் மேலும் பெருகுவது இயற்கை தானே. 🍀இந்த செய்தி தான் என் அன்பு ஆலிக்குமாறு என்ற சொற்றொடர் மூலம் உணர்த்தப்படுகின்றது.🍀
-
🍀நாம் இறைவன் மீது வைத்துள்ள அன்பினை மேலும் வளர்க்கும் இறைவனின் தன்மையை நினைத்தால் மனிதப் பிறவி மறுபடியும் வேண்டும் என்று தோன்றுகின்றது என்று கூறுகின்றார்.🍀
-
திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்
-
🍀அன்னம் என்பதற்கு வீட்டின்பம் என்று பொருள் கொண்டு, முக்தி அளிக்கும் சிற்றம்பலம் என்று உணர்த்துவதாகவும் கூறுவார்கள். 🍀தில்லை காண முக்தி என்பது ஆன்றோர் வாக்கு. தில்லை சென்று நடராஜப் பெருமானை வணங்கினால் நமக்கு முக்தி கிடைக்கும் என்று கூறும் அப்பர் பெருமான், 🍀இந்த பிறப்பிலும் சிவபெருமான் நமக்கு செல்வம் அளித்து காப்பாற்றுகின்றார் என்று கூறுகின்றார். 🍀இவ்வாறு இம்மையிலும் செல்வம் அளித்து, மறுமையிலும் அழியாத செல்வமாகிய வீடுபேற்றினை அளிக்கும் சிவபிரான் என்று சொல்வது சுந்தரரின் பதிகம் ஒன்றினை நினைவூட்டுகின்றது. 🍀இந்த பதிகம் புகலூர் தலத்தின் மீது அருளப்பட்டது. (பதிக எண்: 7.34). ஐயுறவு=சந்தேகம், ஐயம்🍀
-
🍀"#தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்கினும் தொண்டர் தருகிலா
பொய்ம்மையாளரைப் பாடதே எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்
இம்மையே தரும் சோறும் கூறையும் ஏத்தலாம் இடர் கெடலுமாம்
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு #இல்லையே."🍀
-
🍀அன்னத்தை சோறு என்றும் அமுதம் என்றும் அழைப்பதுண்டு. ஆனால் இந்த இரு சொற்களும், வீடுபேறு என்ற பொருள் தரும் வகையில் கையாளப் பட்டிருப்பதை நாம் கீழ்க்கண்ட பதிகங்களில் காணலாம். 🍀அன்னம் என்ற சொல்லுக்கு வீடுபேறு என்ற பொருள் உண்டென்பதால், அன்னம் என்ற சொல்லுக்கு இணையான சோறு, அமுதம் என்ற சொற்களும் வீடுபேற்றினை குறிப்பதாக கையாளப்பட்டுள்ளன.🍀
-
திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்
-
🍀அப்பர் பிரான் தனது குறுக்கை வீரட்டானம் பதிகத்தின் ஒரு பாடலில் (பதிக எண்: 4.49) அமுதம் என்ற சொல்லினைப் பயன்படுத்தி, சண்டீசருக்கு வீடுபேறு அளித்ததை குறிப்பிடுகின்றார். 🍀தாபரம்=இறைவனின் திருமேனி, இங்கே இலிங்கத் திருமேனி🍀
-
🍀"#தழைத்ததோர் ஆத்தியின் கீழ் தாபரம் மணலால் கூப்பி
அழைத்து அங்கே ஆவின் பாலை கறந்து கொண்டு ஆட்டக் கண்டு
பிழைத்த தன் தாதை தாளை பெரும் கொடு மழுவால் வீசக்
குழைத்ததோர் அமுதம் ஈந்தார் குறுக்கை #வீரட்டனாரே."🍀
-
🍀மணிவாசகர் தனது தோணோக்கம் பதிகத்தில் சோறு பற்றினவா என்று சண்டீசர் வீடுபேறு அடைந்த செய்தியை குறிப்பிடுகின்றார். 🍀தனது தந்தையின் கால்களை வெட்டியது, பொதுவான கண்ணோட்டத்தில் பாதகமாக கருதப்பட்டாலும், சிவபூஜைக்கு இடையூறு செய்தவனை தண்டித்தது என்பதால் அது தீய செயலாகாது என்று மணிவாசகர் இங்கே உணர்த்துகின்றார். சேதித்தல்=துண்டித்தல்.🍀
-
🍀"#தீதில்லை மாணி சிவகருமம் சிதைத்தானைச்
சாதியும் வேதியன் தாதை தனைத் தாளிரண்டும்
சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழப்
பாதகமே சோறு பற்றினவா #தோணோக்கம்."🍀
-
சிதம்பரத்தில் அன்னதானம் இன்றும் சிறப்பாக நடைபெறுவதை நாம் காணலாம். அப்பர் பிரான் காலத்திலும் சிறப்பான முறையில் அன்னதானம் நடைபெற்று இருக்கவேண்டும் அதனால் தான் அன்னம் பாலிக்கும் என்று இந்தப் பதிகத்தினை தொடங்குகின்றார் என்று நினைக்கத் தோன்றுகின்றது. தினமும் இறைவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் கோயில் தில்லைச் சிற்றம்பலம். ஆதிசங்கரர் இங்கே வந்த போது, அன்ன ஆகர்க்ஷண இயந்திரம் நிறுவியதாக கூறுவார்கள்.
-
🍀"ஈசன் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!"🍀
-
🍀தென்னாடுடைய சிவனே போற்றி!🍀
🍀எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!🍀🍀
-
🍀காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!🍀
🍀கயிலை மலையானே போற்றி! போற்றி!🍀🍀
-
|| ----------- 🍀திருச்சிற்றம்பலம்🍀 ----------- ||
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM