Post by radha on Nov 2, 2017 12:42:06 GMT 5.5
POM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
அன்னாபிஷேகம் 03.11.2017
இந்து மதம் பல வகையான தானங்கள் தருமஙகள் செய்ய மக்களை ஊக்குவிக்கிறது. அப்படிச் செய்யப் படும் தானத்தில் அன்னதானமே மிக உயர்ந்ததாகச் சொல்லப்படுகிறது.
உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோரே என்று தமிழ் இலக்கியங்களும் அன்னதானத்தைப் போற்றுகின்றது. அதனால்தான் கோயில்களில் நடைபெறும் விழாக்களில் அன்னதானம் செய்வதை நாம் வழக்கமாக வைத்திருக்கிறோம் அன்னம் என்பது பாரம்பரியத்தில் மிக உயர்ந்த நிலையில் உள்ளது. உலகத்தையே காத்தருளும் ஈசனுக்கு அந்த அன்னத்தாலேயே அபிஷேகம் செய்வதே அன்னாபிஷேகம் ஆகும்.
அன்னாபிஷேகம் செய்வது ஏன்?
எளிமையாகப் பார்க்கப் போனால் மழை பெய்யச் செய்து நிலத்தை செழுமையாக்கிய இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஐப்பசி மாதப் பௌர்ணமி அன்று இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது என்று கூறிவிடலாம். ஆனால் இதன் உள்ளார்த்த தத்துவங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றை பார்ப்போம்.
ஈசனாகிய சிவன் பிம்ப ரூபமாக இருக்கிறார். அவரது பக்தர்களாகிய நாம் அனைவரும் அவரது பிரதி பிம்ப ரூபமே! தினமும் உணவு உண்டு நாம் பிரதி பிம்பத்தை திருப்தி செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் பிம்பம் திருப்தியானால் மட்டுமே பிரதி பிம்பத்தால் இயங்க முடியும் அதற்காகத்தான் பிம்பமாகிய சிவபெருமானக்கு அன்னாபிஷேகம் ஐப்பசி மாதம் நடைபெறுகிறது ஏன் ஐப்பசி மாதம் அப்போதுதான் ஆடிப்பட்டத்தில் விதைக்கப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்குத் தயாராக இருக்கும் பருவம். புதிதாக விளைந்த நெல்லைக் குத்தி அதிலிருந்து பெறப்படும் அரிசியைக் கொண்டு அன்னாபிஷேகம் செய்வதே வழக்கம் அதுவே சிறப்பு.
பஞ்ச பூதங்களும் இறைவனுள் அடக்கம் என்னும் மற்றொரு தத்துவத்தை விளக்கவும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. ஈசனால் உண்டாக்கப்பட்ட ஐம்பூதங்களின் உதவியால்தான் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. எப்படி? நீராலும், மண்ணாலும் ஆகாயத்தாலும் உருவான அரிசி நெருப்பாலும் காற்றாலும் சாதமாக்கப்படுகிறது. இப்படி ஐம்பூதங்களும் சேர்ந்து உருவான அந்த அன்னமானது அவற்றைப் படைத்த இறைவனுக்கே போய்ச் சேர்கிறது. அதே போல இறைவனால் படைக்கப்பட்ட ஜீவாத்மாவும் ஒரு நாளில் இறைவனையே சென்றடையும். அப்படிச் சென்றடைய வேண்டுமானால் ஐம்பூதங்களால் அரிசி பக்குவப்படுவது போல இறை நாம ஜபத்தாலும் பக்தியாலும் நம் மனது பக்குவப்பட வேண்டும் என்பதையே அன்னாபிஷேகம் சூட்மமாக உணர்த்துகிறது.
அன்னாபிஷேகம் எப்படிச் செய்யப்படுகிறது?
அன்னாபிஷேகத்தில் சுத்த அன்னமே பிரதானம் என்றாலும் தற்காலத்தில் அலங்காரங்கள் செய்ய வேண்டி வெறும் அன்னத்தை மாத்திரம் அபிஷேகம் செய்யாமல் கூடவே காய்கறிகள், சிலவகைப் பழங்கள், உளுந்து வடை ஆகியவற்றையும் அபிஷேகம் செய்யப்படுகின்றன. மருந்து மருந்தே உணவு என்னும் கொள்கை கொண்ட நம் முன்னோர்கள் சரி விகித உணவை ஆண்டவனுக்குச் செய்யும் அன்னாபிஷேகத்திலேயே உணர்த்தி விடுகிறார்கள். உடலுக்குத் தேவையான அத்தனை சத்துகளும் அன்னாபிஷேகப் பொருட்களின் நிறைந்திருப்பதைப் பார்க்கலாம்.
ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்று சந்திரன் தனது 16 கிரகங்களையும் விரித்து அழகு தவழக் காட்சி தருவார். அதனால் அன்றைய தினம் சந்திரசூடேஸ்வரருக்கு சிறப்பானதாகக் கருதப்படுகிறது. எனவேதான் அன்றைய தினமே அன்னாபிஷேகத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக பெறப்பட்ட அரிசியில் நிறைய தண்ணீர் ஊற்றி அதனை வடித்துக் கொள்கிறார்கள் கூடவே தேவையான காய்கறிகள், பழங்கள்,வடை போன்றவற்றைத் தயாராக வைத்துக் கொள்வார்கள்.
பலவகையான பொருட்களால் அபிஷேகப் பிரியரான சிவனுக்கு அன்றைய தினம் திருமுழுக்காட்டு செய்யப்படுகிறது. பால், தேன், இளநீர், மாவு, சந்தனம், தயிர் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்து முடித்த பிறகு நிறைவாக அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. மொத்தமாக அன்னத்தை திருமுழுக்கா்டடு போலச் செய்யாமல் அதனை அழகாக ஈசனது லிங்க மேனியை அலங்கரிக்கும்படி செய்கிறார்கள். வடித்த அன்னத்தை ஆவுடையிலிருந்து சிவலிங்க உச்சிவரை அலஙகரிக்கிறார்கள். பழங்கள், காய்கறிகள் மற்றும் வடை உள்ளிட்ட பிறவும் அலங்கரிக்கப்பயன்படுத்தப்படுகிறது. இந்த அபிஷேகம் முடிந்த பின் தீப தூப ஆராதனைகள் நடைபெற்று ஒரு நாழிகை அப்படியே காட்சி அளிப்பார் அன்னபூரணி நாயகர், இரவு சுமார் 7.30 அளவில் அலங்காரம் கலைக்கப்பட்டு மீண்டும் தீப தூபங்கள் காட்டியபின் அன்னாபிஷேகம் நிறைவு பெறும்.
பிரசாதம்: எந்த பூஜை ஆராதனைகள் என்றாலும் பிரசாதம் மிகவும் முக்கியம். அதிலும் இதில் அன்னமே அபிஷேகம் செய்யப்படுகிறது. அப்படி இருக்கும் போது இதன் பிரசாதம் சக்தி மிகுந்ததாகவும் சிறப்பானதாகவும் இருப்பதில் வியப்பே இல்லை. அன்னாபிஷேகப் பிரசாதத்தை விநியோகிப்பதிலும் ஒருமுறை இருக்கிறது. பாண லிங்கத்தின் மேல் உள்ள அன்னமானது மிகுந்த வீரியம் உடையது.ஆகவே அதனை பிரசாதமாக அளிக்கமாட்டார்கள். அவற்றை நீரில் வாழ் உயிரினங்களுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் சேர்ப்பதற்காக நீர்நிலைகளில் சேர்த்து விடுவார்கள். அன்பே சிவம் என்று போற்றப்படும் ஜீவகாருண்யத்தின் உச்ச நிலை இது. மக்கள் மட்டுமே இறைவனது அருளுக்குப் பாத்திரமாகாமல் அவரால் படைக்கப்பட்ட மீன், தவளை, புழு கூட பிரசாதத்தை உண்டு மோட்சம் பெற வேண்டும் என்ற அன்பின் உயர்வு நிலை இதற்குக் காரணம்.
ஆவுடை மற்றும் இதர பாகங்களிலிருந்து அன்னம் தயிர் சேர்த்து குளுமையாக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்தப் பிரசாதத்தை உண்டால் கோடி நன்மை கிடைக்கும் என்பது ஐதிகம். செல்வம் வேண்டுவோர், ஆரோக்கியம் வேண்டுவோர் என கேட்டவர்க்கு கேட்ட பலனைத் தரக்கூடியது இந்தப் பிரசாத அன்னம். அதிலும் மக்கட் பேறு வாய்க்காதவர்களுக்கு சிறந்த வரப்பிரசாதமாக அமைகிறது. அன்னாபிஷேகப் பிரசாதம் இதனை உண்டால் கட்டாயம் குழந்தைப் பேறு வாய்க்கும். அதே போல அன்னாபிஷேகத்துக்குப் பொருட்கள் கொடுத்து கைங்கர்யம் செய்பவர்களுக்கு வாழ்வில் தோல்வி பயமே வராது. மனநிம்மதி, நிறைவு, ஆரோக்கியம் போன்ற பதினாறு வகையான யோகங்களும் அவர்களை வந்து சேரும் என்பது ஐதிகம்.
அன்னாபிஷேகச் சிறப்புகள்: சிவலிங்க வடிவம் என்பது பல தத்துவங்களை உள்ளடக்கிய வடிவம். இதன் நீள் வட்டம் பிரபஞ்சத்தின் அளவற்ற தன்மையைக் குறிக்கிறது. அதோடு கோள்கள் சூரியனைச் சுற்றும் பாதையையும் குறிக்கிறது. அதே போல அரிசியும் நீள் வட்ட வடிவம் கொண்டதாகும். அன்னாபிஷேகம் செய்யப்படும் ஒவ்வொரு பருக்கைச் சாதமும் அரிசியும் ஒர சிவலிங்கத்தைக் குறிக்கும். அதனால்தான் அன்னாபிஷேகத்தை தரிசித்தால் கோடி சிவலிங்கத்தை தரிசித்த பலனும், புண்ணியமும் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று ஒரு பழமொழி உண்டு. அதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா? சோறு, அதாவது அன்னாபிஷேகத்தைக் கண்டவர்கள் நேராக சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்பதே இதன் மறைபொருள். அத்தனை பெருமை மிக்கது அன்னாபிஷேகம்.
இந்த ஆண்டு ஐப்பசி மாதப் பௌர்ணமி நவம்பர் மாதம் 3ம் தேதி வௌ்ளிக் கிழமை வருகிறது. அன்றைய தினம் நாம் அனைவரும் நம்மால் இயன்ற பொருளை அன்னாபிஷேகத்துக்குக் காணிக்கையாக கொடுத்து அண்ணலை அன்னாபிஷேகக் கோலத்தில் தரிசித்து அனைத்துப் பேறுகளும் பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்.
- ஸ்ரீஜா வெங்கடேஷ்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
அன்னாபிஷேகம் 03.11.2017
இந்து மதம் பல வகையான தானங்கள் தருமஙகள் செய்ய மக்களை ஊக்குவிக்கிறது. அப்படிச் செய்யப் படும் தானத்தில் அன்னதானமே மிக உயர்ந்ததாகச் சொல்லப்படுகிறது.
உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோரே என்று தமிழ் இலக்கியங்களும் அன்னதானத்தைப் போற்றுகின்றது. அதனால்தான் கோயில்களில் நடைபெறும் விழாக்களில் அன்னதானம் செய்வதை நாம் வழக்கமாக வைத்திருக்கிறோம் அன்னம் என்பது பாரம்பரியத்தில் மிக உயர்ந்த நிலையில் உள்ளது. உலகத்தையே காத்தருளும் ஈசனுக்கு அந்த அன்னத்தாலேயே அபிஷேகம் செய்வதே அன்னாபிஷேகம் ஆகும்.
அன்னாபிஷேகம் செய்வது ஏன்?
எளிமையாகப் பார்க்கப் போனால் மழை பெய்யச் செய்து நிலத்தை செழுமையாக்கிய இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஐப்பசி மாதப் பௌர்ணமி அன்று இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது என்று கூறிவிடலாம். ஆனால் இதன் உள்ளார்த்த தத்துவங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றை பார்ப்போம்.
ஈசனாகிய சிவன் பிம்ப ரூபமாக இருக்கிறார். அவரது பக்தர்களாகிய நாம் அனைவரும் அவரது பிரதி பிம்ப ரூபமே! தினமும் உணவு உண்டு நாம் பிரதி பிம்பத்தை திருப்தி செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் பிம்பம் திருப்தியானால் மட்டுமே பிரதி பிம்பத்தால் இயங்க முடியும் அதற்காகத்தான் பிம்பமாகிய சிவபெருமானக்கு அன்னாபிஷேகம் ஐப்பசி மாதம் நடைபெறுகிறது ஏன் ஐப்பசி மாதம் அப்போதுதான் ஆடிப்பட்டத்தில் விதைக்கப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்குத் தயாராக இருக்கும் பருவம். புதிதாக விளைந்த நெல்லைக் குத்தி அதிலிருந்து பெறப்படும் அரிசியைக் கொண்டு அன்னாபிஷேகம் செய்வதே வழக்கம் அதுவே சிறப்பு.
பஞ்ச பூதங்களும் இறைவனுள் அடக்கம் என்னும் மற்றொரு தத்துவத்தை விளக்கவும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. ஈசனால் உண்டாக்கப்பட்ட ஐம்பூதங்களின் உதவியால்தான் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. எப்படி? நீராலும், மண்ணாலும் ஆகாயத்தாலும் உருவான அரிசி நெருப்பாலும் காற்றாலும் சாதமாக்கப்படுகிறது. இப்படி ஐம்பூதங்களும் சேர்ந்து உருவான அந்த அன்னமானது அவற்றைப் படைத்த இறைவனுக்கே போய்ச் சேர்கிறது. அதே போல இறைவனால் படைக்கப்பட்ட ஜீவாத்மாவும் ஒரு நாளில் இறைவனையே சென்றடையும். அப்படிச் சென்றடைய வேண்டுமானால் ஐம்பூதங்களால் அரிசி பக்குவப்படுவது போல இறை நாம ஜபத்தாலும் பக்தியாலும் நம் மனது பக்குவப்பட வேண்டும் என்பதையே அன்னாபிஷேகம் சூட்மமாக உணர்த்துகிறது.
அன்னாபிஷேகம் எப்படிச் செய்யப்படுகிறது?
அன்னாபிஷேகத்தில் சுத்த அன்னமே பிரதானம் என்றாலும் தற்காலத்தில் அலங்காரங்கள் செய்ய வேண்டி வெறும் அன்னத்தை மாத்திரம் அபிஷேகம் செய்யாமல் கூடவே காய்கறிகள், சிலவகைப் பழங்கள், உளுந்து வடை ஆகியவற்றையும் அபிஷேகம் செய்யப்படுகின்றன. மருந்து மருந்தே உணவு என்னும் கொள்கை கொண்ட நம் முன்னோர்கள் சரி விகித உணவை ஆண்டவனுக்குச் செய்யும் அன்னாபிஷேகத்திலேயே உணர்த்தி விடுகிறார்கள். உடலுக்குத் தேவையான அத்தனை சத்துகளும் அன்னாபிஷேகப் பொருட்களின் நிறைந்திருப்பதைப் பார்க்கலாம்.
ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்று சந்திரன் தனது 16 கிரகங்களையும் விரித்து அழகு தவழக் காட்சி தருவார். அதனால் அன்றைய தினம் சந்திரசூடேஸ்வரருக்கு சிறப்பானதாகக் கருதப்படுகிறது. எனவேதான் அன்றைய தினமே அன்னாபிஷேகத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக பெறப்பட்ட அரிசியில் நிறைய தண்ணீர் ஊற்றி அதனை வடித்துக் கொள்கிறார்கள் கூடவே தேவையான காய்கறிகள், பழங்கள்,வடை போன்றவற்றைத் தயாராக வைத்துக் கொள்வார்கள்.
பலவகையான பொருட்களால் அபிஷேகப் பிரியரான சிவனுக்கு அன்றைய தினம் திருமுழுக்காட்டு செய்யப்படுகிறது. பால், தேன், இளநீர், மாவு, சந்தனம், தயிர் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்து முடித்த பிறகு நிறைவாக அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. மொத்தமாக அன்னத்தை திருமுழுக்கா்டடு போலச் செய்யாமல் அதனை அழகாக ஈசனது லிங்க மேனியை அலங்கரிக்கும்படி செய்கிறார்கள். வடித்த அன்னத்தை ஆவுடையிலிருந்து சிவலிங்க உச்சிவரை அலஙகரிக்கிறார்கள். பழங்கள், காய்கறிகள் மற்றும் வடை உள்ளிட்ட பிறவும் அலங்கரிக்கப்பயன்படுத்தப்படுகிறது. இந்த அபிஷேகம் முடிந்த பின் தீப தூப ஆராதனைகள் நடைபெற்று ஒரு நாழிகை அப்படியே காட்சி அளிப்பார் அன்னபூரணி நாயகர், இரவு சுமார் 7.30 அளவில் அலங்காரம் கலைக்கப்பட்டு மீண்டும் தீப தூபங்கள் காட்டியபின் அன்னாபிஷேகம் நிறைவு பெறும்.
பிரசாதம்: எந்த பூஜை ஆராதனைகள் என்றாலும் பிரசாதம் மிகவும் முக்கியம். அதிலும் இதில் அன்னமே அபிஷேகம் செய்யப்படுகிறது. அப்படி இருக்கும் போது இதன் பிரசாதம் சக்தி மிகுந்ததாகவும் சிறப்பானதாகவும் இருப்பதில் வியப்பே இல்லை. அன்னாபிஷேகப் பிரசாதத்தை விநியோகிப்பதிலும் ஒருமுறை இருக்கிறது. பாண லிங்கத்தின் மேல் உள்ள அன்னமானது மிகுந்த வீரியம் உடையது.ஆகவே அதனை பிரசாதமாக அளிக்கமாட்டார்கள். அவற்றை நீரில் வாழ் உயிரினங்களுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் சேர்ப்பதற்காக நீர்நிலைகளில் சேர்த்து விடுவார்கள். அன்பே சிவம் என்று போற்றப்படும் ஜீவகாருண்யத்தின் உச்ச நிலை இது. மக்கள் மட்டுமே இறைவனது அருளுக்குப் பாத்திரமாகாமல் அவரால் படைக்கப்பட்ட மீன், தவளை, புழு கூட பிரசாதத்தை உண்டு மோட்சம் பெற வேண்டும் என்ற அன்பின் உயர்வு நிலை இதற்குக் காரணம்.
ஆவுடை மற்றும் இதர பாகங்களிலிருந்து அன்னம் தயிர் சேர்த்து குளுமையாக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்தப் பிரசாதத்தை உண்டால் கோடி நன்மை கிடைக்கும் என்பது ஐதிகம். செல்வம் வேண்டுவோர், ஆரோக்கியம் வேண்டுவோர் என கேட்டவர்க்கு கேட்ட பலனைத் தரக்கூடியது இந்தப் பிரசாத அன்னம். அதிலும் மக்கட் பேறு வாய்க்காதவர்களுக்கு சிறந்த வரப்பிரசாதமாக அமைகிறது. அன்னாபிஷேகப் பிரசாதம் இதனை உண்டால் கட்டாயம் குழந்தைப் பேறு வாய்க்கும். அதே போல அன்னாபிஷேகத்துக்குப் பொருட்கள் கொடுத்து கைங்கர்யம் செய்பவர்களுக்கு வாழ்வில் தோல்வி பயமே வராது. மனநிம்மதி, நிறைவு, ஆரோக்கியம் போன்ற பதினாறு வகையான யோகங்களும் அவர்களை வந்து சேரும் என்பது ஐதிகம்.
அன்னாபிஷேகச் சிறப்புகள்: சிவலிங்க வடிவம் என்பது பல தத்துவங்களை உள்ளடக்கிய வடிவம். இதன் நீள் வட்டம் பிரபஞ்சத்தின் அளவற்ற தன்மையைக் குறிக்கிறது. அதோடு கோள்கள் சூரியனைச் சுற்றும் பாதையையும் குறிக்கிறது. அதே போல அரிசியும் நீள் வட்ட வடிவம் கொண்டதாகும். அன்னாபிஷேகம் செய்யப்படும் ஒவ்வொரு பருக்கைச் சாதமும் அரிசியும் ஒர சிவலிங்கத்தைக் குறிக்கும். அதனால்தான் அன்னாபிஷேகத்தை தரிசித்தால் கோடி சிவலிங்கத்தை தரிசித்த பலனும், புண்ணியமும் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று ஒரு பழமொழி உண்டு. அதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா? சோறு, அதாவது அன்னாபிஷேகத்தைக் கண்டவர்கள் நேராக சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்பதே இதன் மறைபொருள். அத்தனை பெருமை மிக்கது அன்னாபிஷேகம்.
இந்த ஆண்டு ஐப்பசி மாதப் பௌர்ணமி நவம்பர் மாதம் 3ம் தேதி வௌ்ளிக் கிழமை வருகிறது. அன்றைய தினம் நாம் அனைவரும் நம்மால் இயன்ற பொருளை அன்னாபிஷேகத்துக்குக் காணிக்கையாக கொடுத்து அண்ணலை அன்னாபிஷேகக் கோலத்தில் தரிசித்து அனைத்துப் பேறுகளும் பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்.
- ஸ்ரீஜா வெங்கடேஷ்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM