Post by hemalathak on Jun 30, 2012 21:25:26 GMT 5.5
அத்வைதாம்ருத வர்ஷிநீம் பகவதீம் அஷ்டா டஷத்யாய்நிநீம்
அம்பத்வாம் அனுசந்ததாமீ பகவத் கீதே பவேத் வேஷிநீம் .
ஜகாத் உத்ஹார சங்கல்பாத் குருவாசோ விநிஸ்ர்தே
அத்வைதானந்தா நிலையே தெய்வ வாணீ நமோஸ்துதே .
ஸ்ரீ மஹா பெரியவ திருவடிகள் சரணம்
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
அத்வைதம்
அத்வைதமும் அணு விஞ்ஞானமும்
மனித வாழ்வு உள்ள வரையில் ஆசை உண்டு. துன்பம் உண்டு. பயம் உண்டு. இவற்றிலிருந்து விடுபடுவதே மோக்ஷம். அத்வைத அநுபவத்தால்தான் பாசமும், பனிவும், துன்பமும், பயமும், துவேஷமும் நிவிருத்தியாகி மோக்ஷ ஆனந்தத்தை இங்கேயே அநுபவிக்க முடியும். நமக்கு அந்நியமாக இன்னொரு வஸ்து உள்ள போதுதான் அதனால் துன்பம், அதனிடம் ஆசை அல்லது பயம், அதன்மீது
துவேஷம் இவை உண்டாக்க முடியும். இன்னொன்றே இல்லை. காண்பன எல்லாம் ஒரே பரமாத்மா - என்ற அத்வைத ஞானம் அநுபவமாக வந்துவிட்டால், அப்புறம் ஆசையும், பயமும் கோபமும், துயரமும் ஏற்பட வழி ஏது? தேளும் பாம்பும் இப்போது நமக்குத் துன்பம் தருகின்றன. நாமே தேளாகவும், பாம்பாகவும் இருந்தால் இந்தத் துன்பம் இராது அல்லவா! எல்லாம் நாமே என்ற உணர்வு வந்து விட்டால், எப்போதும் ஸ்வபாவமான ஆனந்தம்தான் இருக்கும். அதுதான் மோக்ஷ நிலை. சரீரம் நசித்துப் செத்துப்போன பின்தான் மோக்ஷம் என்று எங்கேயோ ஒரிடத்துக்குப் போக வேண்டும் என்பதில்லை. அனைத்தும் ஒன்றே என்ற அத்வைத ஞானம் ஸித்தித்தால் இங்கேயே இப்பொழுதே மோக்ஷத்தில் இருப்போம்.
அனைத்தும் ஒன்று என்பது எப்படிச் சரியாகும். இத்தனை மாறுபட்டுள்ள நானாவித வஸ்துக்களைப் பிரத்தியக்ஷமாகப் பார்க்கிறோமே. என்று தோன்றலாம். ஒன்று, நாம் பிரத்தியக்ஷமாகப் காண்பது சத்தியமாக இருக்கவேண்டும். அல்லது வேதாந்தம் சொல்லுவதும், ஞானிகளின் அநுபவுமான அத்வைதம் சத்தியமாக இருக்க வேண்டும்.
சத்தியமாக இருப்பது எதுவோ அது மாறாத சாந்தியும் ஆனந்தமும் நிறைவும் தர வேண்டும். நம் பிரத்யக்ஷ வாழ்க்கையில் இந்தச் சாந்தியும் ஆனந்தமும் நிறைவும் இல்லையே. வேதாந்தம் சொல்கிற அத்வைதத்தில்தானே அவை இருக்கின்றன. அதை அநுபவிக்கும் ஞானிகள்தான் மற்ற ஜனங்களுக்கு உள்ள துன்பமும், சஞ்சலமும் இல்லாமல் எப்பொழுதும் சாந்தியாக, எப்பொழுதும் திருப்தியாக, எப்பொழுதும் ஆனந்தமாக நிறைந்திருக்கிறார்கள். இதிலிருந்தே எல்லாம் ஒன்று என்ற ஆத்வைதமே சத்தியம் என்றாகிறதல்லவா. சொப்பனத்தில் எத்தனையோ வஸ்துக்களைப் பார்கிறோமே. நாம் விழித்துக் கொண்டவுடன் அவை எல்லாம் என்ன ஆயின. சொப்பனம் கண்ட ஒருத்தன் மட்டும்தானே எஞ்சி நிற்கிறான். அப்படியே இந்த லோகமெல்லாமும் ஒரு சொப்பனம் தான். மாயை நீங்கி ஞான நிலையில் விழித்துக் கொண்டால், அப்போது ஒரே பரமாத்மா மட்டுமே எஞ்சி நிற்பதை அநுபவிக்க முடியும்.
அம்பத்வாம் அனுசந்ததாமீ பகவத் கீதே பவேத் வேஷிநீம் .
ஜகாத் உத்ஹார சங்கல்பாத் குருவாசோ விநிஸ்ர்தே
அத்வைதானந்தா நிலையே தெய்வ வாணீ நமோஸ்துதே .
ஸ்ரீ மஹா பெரியவ திருவடிகள் சரணம்
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
அத்வைதம்
அத்வைதமும் அணு விஞ்ஞானமும்
மனித வாழ்வு உள்ள வரையில் ஆசை உண்டு. துன்பம் உண்டு. பயம் உண்டு. இவற்றிலிருந்து விடுபடுவதே மோக்ஷம். அத்வைத அநுபவத்தால்தான் பாசமும், பனிவும், துன்பமும், பயமும், துவேஷமும் நிவிருத்தியாகி மோக்ஷ ஆனந்தத்தை இங்கேயே அநுபவிக்க முடியும். நமக்கு அந்நியமாக இன்னொரு வஸ்து உள்ள போதுதான் அதனால் துன்பம், அதனிடம் ஆசை அல்லது பயம், அதன்மீது
துவேஷம் இவை உண்டாக்க முடியும். இன்னொன்றே இல்லை. காண்பன எல்லாம் ஒரே பரமாத்மா - என்ற அத்வைத ஞானம் அநுபவமாக வந்துவிட்டால், அப்புறம் ஆசையும், பயமும் கோபமும், துயரமும் ஏற்பட வழி ஏது? தேளும் பாம்பும் இப்போது நமக்குத் துன்பம் தருகின்றன. நாமே தேளாகவும், பாம்பாகவும் இருந்தால் இந்தத் துன்பம் இராது அல்லவா! எல்லாம் நாமே என்ற உணர்வு வந்து விட்டால், எப்போதும் ஸ்வபாவமான ஆனந்தம்தான் இருக்கும். அதுதான் மோக்ஷ நிலை. சரீரம் நசித்துப் செத்துப்போன பின்தான் மோக்ஷம் என்று எங்கேயோ ஒரிடத்துக்குப் போக வேண்டும் என்பதில்லை. அனைத்தும் ஒன்றே என்ற அத்வைத ஞானம் ஸித்தித்தால் இங்கேயே இப்பொழுதே மோக்ஷத்தில் இருப்போம்.
அனைத்தும் ஒன்று என்பது எப்படிச் சரியாகும். இத்தனை மாறுபட்டுள்ள நானாவித வஸ்துக்களைப் பிரத்தியக்ஷமாகப் பார்க்கிறோமே. என்று தோன்றலாம். ஒன்று, நாம் பிரத்தியக்ஷமாகப் காண்பது சத்தியமாக இருக்கவேண்டும். அல்லது வேதாந்தம் சொல்லுவதும், ஞானிகளின் அநுபவுமான அத்வைதம் சத்தியமாக இருக்க வேண்டும்.
சத்தியமாக இருப்பது எதுவோ அது மாறாத சாந்தியும் ஆனந்தமும் நிறைவும் தர வேண்டும். நம் பிரத்யக்ஷ வாழ்க்கையில் இந்தச் சாந்தியும் ஆனந்தமும் நிறைவும் இல்லையே. வேதாந்தம் சொல்கிற அத்வைதத்தில்தானே அவை இருக்கின்றன. அதை அநுபவிக்கும் ஞானிகள்தான் மற்ற ஜனங்களுக்கு உள்ள துன்பமும், சஞ்சலமும் இல்லாமல் எப்பொழுதும் சாந்தியாக, எப்பொழுதும் திருப்தியாக, எப்பொழுதும் ஆனந்தமாக நிறைந்திருக்கிறார்கள். இதிலிருந்தே எல்லாம் ஒன்று என்ற ஆத்வைதமே சத்தியம் என்றாகிறதல்லவா. சொப்பனத்தில் எத்தனையோ வஸ்துக்களைப் பார்கிறோமே. நாம் விழித்துக் கொண்டவுடன் அவை எல்லாம் என்ன ஆயின. சொப்பனம் கண்ட ஒருத்தன் மட்டும்தானே எஞ்சி நிற்கிறான். அப்படியே இந்த லோகமெல்லாமும் ஒரு சொப்பனம் தான். மாயை நீங்கி ஞான நிலையில் விழித்துக் கொண்டால், அப்போது ஒரே பரமாத்மா மட்டுமே எஞ்சி நிற்பதை அநுபவிக்க முடியும்.