|
Post by saidevo on Apr 15, 2017 19:16:28 GMT 5.5
ஆன்மீகச் செய்திக் கவிதைகள்
0002. திருவையாற்று ஐங்கரன் (நேரிசை வெண்பா) (பிள்ளையார்: திருவையாறு பிரசன்ன கணபதி)
சித்திரை 01, ஹேவிளம்பி வருடம் 01 சித் 5118: 14 Apr 2017 திருவையாறு பிரசன்ன மஹாகணபதி பூஜை.
ஐயாற்றுப் பிள்ளையார் ஆலயப் பூசையில் மெய்யடியார் ஏரம்பன் மெய்வழியே - பொய்விலகக் காணவரும் ஆண்டுமுதற் காட்சி உளம்நிறைத்தே ஊணற்றுப் போகும் உறவு.
[ஊண் = ஆன்மாவின் இன்பதுன்ப நுகர்வு]
15/04/2017
*****
0003. விழுப்புரம் ஆஞ்சநேயர் (கலிவிருத்தம்) (அனுமன்: விழுப்புரம் ஆஞ்சநேயர்)
சித்திரை 01, ஹேவிளம்பி வருடம் 01 சித் 5118: 14 Apr 2017 விழுப்புரம் ஶ்ரீஆஞ்சநேய லக்ஷதீபம்
விழுப்பம் அருளும் விழுப்புரம் அனுமன் விழவில் பத்துநாள் வீதி யுலா-பால் முழுக்கு மாலை முகிழ்நூ றாயிரம் விளக்கும் தெப்பமும் வினையறக் காண்பமே.
15/04/2017
*****
0004. வேளூர் வைத்தியர் (கலித்துறை) (சிவன்: வேளூர் வைத்தியநாதர்)
சித்திரை 01, ஹேவிளம்பி வருடம் 01 சித் 5118: 14 Apr 2017 வேளூர் ஶ்ரீவைத்தியநாத சுவாமிக்கு சீதளகும்பம் ஆரம்பம்
வெய்யில் தாளா வைத்ய நாதர் மெய்விழச் செய்தார் தண்ணீர் சீராய் வேளூர் திருத்தலம் தையல் அருகில் தாந்தோன் றியிவர் எவ்வணம் மெய்யில் தாரை வீழக் கோவில் மேவினரோ? ... 1
வாதுளை மனத்தினர் வாக்குளை வாயினர் மாந்தரெனத் தாதளை வண்டுகள் தன்வயம் இழந்திடும் தலமதிலே மாதுளம் கொண்டவன் வளர்மதிச் சென்னியன் மனமுறையச் சீதள நீர்விழும் தெரிசனத் தால்வினை சிதறிடுமே. ... 2
15/04/2017
*****
|
|
|
Post by saidevo on Apr 16, 2017 10:58:54 GMT 5.5
0005. தோணியப்பர் காப்பு (கலிவிருத்தம்) (சிவன்: சீர்காழி தோணியப்பர்)
சித்திரை 01, ஹேவிளம்பி வருடம் 01 சித் 5118: 14 Apr 2017 சீர்காழி ஶ்ரீஉமமஹேஸ்வரருக்கு உச்சிக்காலத்தில் புனுகுகாப்பு
புனுகுக் காப்பால் உச்சிப் பொழுதில் தனுவின் மெருகை தரிசனம் செய்யப் பனுவல் போற்றும் பரமன் கடைக்கண் அனுக்கிர கத்தால் ஆட்கொள் வானே. ... 1
[தனு = உடல்]
தோணி யப்பர் துணையென் றானால் ஆணிப் பொன்னாய் அகம்பொலி வுறுமே ஊணின் தாக்கம் உள்ளம் குன்றப் பேணும் நெறிகளில் பிழையறுந் திடுமே. ... 2
[ஊண் = ஆன்மாவின் இன்பதுன்ப நுகர்வு] 15/04/2017
*****
|
|
|
Post by saidevo on May 4, 2017 11:40:28 GMT 5.5
0006. கச்சியப்பர் பஞ்சாங்க படனம் (கலிவிருத்தம்) (சிவன்: காஞ்சி ஏகாம்பரர்)
சித்திரை 01, ஹேவிளம்பி வருடம் 01 சித் 5118: 14 Apr 2017 காஞ்சிபுரம் ஶ்ரீஏக்ம்பரநாதர் திருக்கோவில் பஞ்சாங்க படனம்
நோய்-களை யோகம் நோவிலா நலமிக வாய்ச்செயும் திதியே வாகைகொள் கரணம் ஆயுளை வளர்க்கும் வாரமே பாவத்தைத் தீய்க்குமீன் அஞ்சுநூல் தினம்படிப் பதாலே.
[வாகை = வெற்றி; மீன் = நட்சத்திரம்; அஞ்சுநூல் = பஞ்சாங்கம்]
(தரவு கொச்சகக் கலிப்பா) கச்சியப்பர் கோவிலவர் காலடியில் வைத்தடியார் இச்சையுறும் புத்தாண்டில் இனிநேரும் பலன்சொற்கள் அச்சடித்த பனுவலதாம் பஞ்சாங்க படனத்தில் பிச்சரவர் தண்ணளியைப் பெற்றிடவே போற்றுவரே.
15/04/2017
*****
|
|