|
Post by radha on Jun 5, 2012 2:39:41 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAM TO SRI KANCHI MAHA PERIVA
எங்கும் மகிழ்ச்சி பரவட்டும்!
* எப்படியாவது அடைய வேண்டும் என்று ஆசை அதிகரிக்கும்போது தர்ம நியாய உணர்வைப் புறக்கணித்து விடுகிறோம். * நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நம் விருப்பு, வெறுப்பையே பிரதிபலிக்கிறது. இதனால் தான் மேலும் மேலும் பாவம் நம்மை வந்து சேருகிறது. * எதில் ஈடுபட்டாலும் அதில் நிதானத்தோடு செயல்பட்டால் மனதில் அமைதி நிலைக்கும். * குழந்தைகளுக்கு கல்வி என்ற மருந்தை விட அடக்கம் என்ற பத்தியம் முக்கியம். * மனிதனிடம் ஒழுக்கம் நிலைபெற்றுவிட்டால், ஒவ்வொரு செயலிலும் நேர்த்தியும் அழகும் மிளிரத் தொடங்கிவிடும். * மனமும், உடலும் எப்போதும் ஒன்று சேர்ந்து இயங்க வேண்டும். அப்போது தான் ஒருவன் வாழ்வில் முன்னேற்றம் பெற முடியும். * துன்பம் யாருக்கு ஏற்பட்டாலும் வலிந்து சென்று நம்மால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டும். * நாம் எங்கே போனாலும் மகிழ்ச்சியை பரவச் செய்ய வேண்டும். மனதில் மகிழ்ச்சி இருந்தால் அது முகத்தையும் பிரகாசிக்கச் செய்யும். - காஞ்சிப்பெரியவர்
Sri Kanchi Maha Periva Thiruvadigal Charanam
|
|
|
Post by krsiyer on Jun 6, 2012 11:37:32 GMT 5.5
Great wordings ! thanks for sharing jaya jaya sankara, hara hara sankara !
|
|