Post by hemalathak on Jun 24, 2012 22:01:13 GMT 5.5
சரி இந்த இடத்தில் ஆசாரியாள் பக்தியை இப்படி வர்ணித்து ( define ) இருந்தாலும், அவரே தம் மடங்களில் எல்லாம் விஸிதாரமாக சந்திரமௌலீஸ்வர பூஜையை வைத்திருக்கிறார். அரூபமான ஆத்ம தத்துவத்தை முடிவான லக்ஷியமாக அவர் சொல்லியிருந்தாலும், அவரே உறுவத்தோடு இருக்கப்பட்ட தெய்வங்களின் உபாஸனைகளையும் நிலைப்படுத்தி ஷண்மத ஸ்தாபகர் என்று விருது பெற்றிருக்கிறார். க்ஷேத்திரம் க்ஷேத்திரமாகப் போய் அங்கங்கே உள்ள மூர்த்திகளில் ஸ்தோத்திரம் பண்ணியிருக்கிறார். இதை எல்லாம் பார்த்தால் லோகரீதியில் நாம் சொல்கிற பக்தியும் ஆசாரியார்கள் விசேஷமாக அங்கீகரித்த விஷயமே என்று தெரிகிறது.
சாதாரணமாக ஞானம் ரொம்ப உசத்தி, ஆத்ம விசாரம், தியானம், யோகம் இதெல்லாம் உசத்தி; பக்தி பூஜை, க்ஷேத்திரம் எல்லாம் அதைவிடத் தாழ்த்தி; இந்த பக்தியை விடவும்கூடப் பல தினுசான ஆசாரங்கள், அநுஷ்டானங்கள், வைதிக கர்மங்கள் எல்லாம் மூடநம்பிக்கை (superstition) , பக்தி சமாசாரமெல்லாம் வெறும் உணர்ச்சி (sentimental) தியானம் ( meditation ) , யோகம் (Yoga) , ஆத்ம விசாரம் (Self-inquity) இதுகள்தான் ஆத்ம சம்பந்தமானவை ( spiritual ) என்கிற பேச்சு இப்போது ஜாஸ்தி.
ஆனால், ஆத்ம ஸ்வரூபத்திலேயே கரைந்து ஒரு காரியமும், ஒரு எண்ணமும் இல்லாமல் இருக்கிற அத்வைதத்தை நிலைநாட்டிய ஆசாரியாள் ஞான மார்கத்தைச் சொன்னவர் என்றாலும்கூட, அவர் மனசை வைத்துக் கொண்டு செய்கிற பக்தி, காரிய ரூபமான வைதிக கர்மாநுஷ்டானங்கள் எல்லாவற்றையுமே அங்கீகரித்திருக்கிறார். ஏன் இப்படி செய்திருக்கிறார் என்றால் இந்தப் பிரபஞாசத்தில் மாட்டிக் கொண்டிருக்கிற நாம் இத்தனை பேருக்கும் சித்தம் ஒயாமல் ஒடிக்கொண்டேதான் இருக்கிறது. க்ஷண காலம்கூட அது நிற்க மாட்டேன் என்கிறது. நேராக, இதோ இப்பொழுதே மனதை நிறுத்திவிட்டு, ஒரு காரியமும் இல்லை என்று பண்ணிக்கொண்டு விடலாம் என்று யத்தனம் செய்து பார்த்தாலும் நடக்க மாட்டேன் என்கிறது. எண்ணங்கள் பாட்டுக்கு நாலா திசையும் ஒடிக் கொண்டேதான் இருக்கின்றன. நம்முடைய பாசங்கள், துவேஷங்கள், துக்கங்கள், பயங்கள், ஸந்தோஷங்கள் எல்லாம் மாறிமாறி வந்து மோதி அலைக்கழித்துக் கொண்டேதான் இருக்கின்றன. இவற்றையட்டி இந்தக் காரியத்தைப் பண்ண வேண்டும். அந்தக் காரியத்தைப் பண்ணவேண்டும் என்கிற திட்டங்களும் ஒயாமல் போட்டப்படிதான் இருக்கிறோம். ஆகக்கூடி, அப்படியே சித்தத்தை நிறுத்திவிட்டு ஆத்மாவில் முழுகிப்போ என்று சொல்லிவிடுவதினால் மட்டும் அந்த மாதிரி ஆகிற நிலையே வாஸ்தவத்தில் சாதித்துக் கொள்ள முடியவில்லை
சாதாரணமாக ஞானம் ரொம்ப உசத்தி, ஆத்ம விசாரம், தியானம், யோகம் இதெல்லாம் உசத்தி; பக்தி பூஜை, க்ஷேத்திரம் எல்லாம் அதைவிடத் தாழ்த்தி; இந்த பக்தியை விடவும்கூடப் பல தினுசான ஆசாரங்கள், அநுஷ்டானங்கள், வைதிக கர்மங்கள் எல்லாம் மூடநம்பிக்கை (superstition) , பக்தி சமாசாரமெல்லாம் வெறும் உணர்ச்சி (sentimental) தியானம் ( meditation ) , யோகம் (Yoga) , ஆத்ம விசாரம் (Self-inquity) இதுகள்தான் ஆத்ம சம்பந்தமானவை ( spiritual ) என்கிற பேச்சு இப்போது ஜாஸ்தி.
ஆனால், ஆத்ம ஸ்வரூபத்திலேயே கரைந்து ஒரு காரியமும், ஒரு எண்ணமும் இல்லாமல் இருக்கிற அத்வைதத்தை நிலைநாட்டிய ஆசாரியாள் ஞான மார்கத்தைச் சொன்னவர் என்றாலும்கூட, அவர் மனசை வைத்துக் கொண்டு செய்கிற பக்தி, காரிய ரூபமான வைதிக கர்மாநுஷ்டானங்கள் எல்லாவற்றையுமே அங்கீகரித்திருக்கிறார். ஏன் இப்படி செய்திருக்கிறார் என்றால் இந்தப் பிரபஞாசத்தில் மாட்டிக் கொண்டிருக்கிற நாம் இத்தனை பேருக்கும் சித்தம் ஒயாமல் ஒடிக்கொண்டேதான் இருக்கிறது. க்ஷண காலம்கூட அது நிற்க மாட்டேன் என்கிறது. நேராக, இதோ இப்பொழுதே மனதை நிறுத்திவிட்டு, ஒரு காரியமும் இல்லை என்று பண்ணிக்கொண்டு விடலாம் என்று யத்தனம் செய்து பார்த்தாலும் நடக்க மாட்டேன் என்கிறது. எண்ணங்கள் பாட்டுக்கு நாலா திசையும் ஒடிக் கொண்டேதான் இருக்கின்றன. நம்முடைய பாசங்கள், துவேஷங்கள், துக்கங்கள், பயங்கள், ஸந்தோஷங்கள் எல்லாம் மாறிமாறி வந்து மோதி அலைக்கழித்துக் கொண்டேதான் இருக்கின்றன. இவற்றையட்டி இந்தக் காரியத்தைப் பண்ண வேண்டும். அந்தக் காரியத்தைப் பண்ணவேண்டும் என்கிற திட்டங்களும் ஒயாமல் போட்டப்படிதான் இருக்கிறோம். ஆகக்கூடி, அப்படியே சித்தத்தை நிறுத்திவிட்டு ஆத்மாவில் முழுகிப்போ என்று சொல்லிவிடுவதினால் மட்டும் அந்த மாதிரி ஆகிற நிலையே வாஸ்தவத்தில் சாதித்துக் கொள்ள முடியவில்லை