Post by radha on Feb 6, 2016 6:09:29 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
அன்னை அபிராமி அருள்பெற்ற அருளாளர்!
By - ரஞ்சனா பால சுப்ரமணியன்
First Published : 05 February 2016 12:00 AM IST
உலகுக்கெல்லாம் தாயான அன்னை அபிராமி நிகழ்த்திய திருவிளையாடல்கள் பல. அபிராமி என்றாலே மிகுந்த அழகுடையவள் என்பது பொருள். தன் பக்தனுக்காக காலத்தையே மாற்றிய வரலாற்றை இங்கு காண்போம்:
சோழவள நாட்டின் காவிரிக்கரையில் உள்ள சிவாலயங்களில் ஒன்று திருக்கடையூர் அபிராமிவல்லி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயம். கிட்டத்தட்ட முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர், அந்த ஆலயத்தின் அர்ச்சகரான அமிர்தலிங்க ஐயர் என்பவருக்கு தோன்றியவர் சுப்பிரமணியன். தந்தையிடமிருந்து சங்கீதப் பயிற்சியையும், தேவி உபாசனையும் கற்றுக் கொண்ட அவர், அதன் மூலம் இளமை முதலே ஸ்ரீ அபிராமி அம்மையின்பால் தனிப்பற்றும், பக்தியும் பூண்டு வழிபட்டு வந்தார். எப்பொழுதும் அவர் அபிராமி சந்நிதியிலேயே இருந்து அன்னையின் பேரன்பிலேயே திளைத்து வந்தார். தம் உள்ளத்தே அன்னையின்பால் தோன்றும் அன்பின் விளைவாக பல துதிகளைத் தாமே இயற்றிப் பாடி வந்தார்.
யோக முறையில் அம்பிகையைத் துதித்து வந்த அவர் சரியை, கிரியை என்பவற்றைக் கடந்து யோகநிலையின் ஆதார பீடங்களில் யாமளை திருக்கோலத்தைக் கண்ணாரக் கண்டு இன்புற்று இடைப்பட்ட கிரந்திகளை எல்லாம் தாண்டிச் சென்று ஸஹஸ்ராரத்தில் ஒளிரும் ஒளிமயமான லலிதையின் திருவருளைப் பரிபூரணமாய் உணர்ந்து அந்த ஆனந்தத்தில் திளைத்து இன்புற்று இருந்தார். ஆனால் உலகத்தவருக்கு அவருடைய ஆனந்த நிலையும், அதன் காரணமும் புரியாமல் போனது.
அன்று தை மாத அமாவாசை நாள் -
திருக்கடையூர் அபிராமி அம்மன் கோயிலில் தரிசனம் செய்ய வந்திருந்தார் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர். கோயிலுக்குள் நுழைந்த மன்னருக்கு பக்தர்கள் மரியாதை நிமித்தம் ஒதுங்கி வழிவிட, அபிராமி திருச்சந்நிதியில் இருந்த அபிராமி பட்டர் மட்டும் அரசரைக் கண்டு கொள்ளவில்லை. அவர் அபிராமி அம்மனை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடியே, புறவுலக நினைவின்றி, அவளது தெய்வீக நினைவுகளிலேயே மூழ்கியிருந்தார்.
சாக்த வழிபாட்டில் ஆழ்நிலை செல்லும்போது புருவமத்தியில் ஓர் ஒளிப்பிழம்பு தோன்றும். பூரணச் சந்திரமண்டலமாக இது தோன்றும். சாக்தர்களுக்குப் பெüர்ணமி வழிபாடு மிகவும் முக்கியமானது. அன்று இரவு, வானத்தில் தோன்றியிருக்கும் சந்திரபிம்பத்தில் அம்பிகையை மானசீகமாக ஆவாஹனம்செய்து மானஸ பூஜையை நிகழ்த்துவது மரபு. அபிராமி பட்டரின் தியானத்தில் அந்த சந்திரமண்டலம் சாட்சாத் அம்பிகையாக ஜொலித்துக்கொண்டிருந்தது.
அப்பொழுது அங்கு வந்த மன்னர், தான் வந்ததைக்கூட கவனியாதிருந்த அவரிடம், "யார் நீ?' என்று கேட்க, நினைவு திரும்பிய பட்டர், தான் அந்த கோயிலில் பஞ்சாங்கம் பார்ப்பவன் என்று கூறினார்.
உடனே மன்னர், "அப்படியென்றால், இன்று என்ன திதி?' என்று கேட்டார்.
அன்னை அபிராமி அம்மனின் பேரொளி முகத்தையே வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்த அவருடைய மனதில் இன்னமும் அன்னையின் போரொளி நீங்கவில்லை. இன்னமும் பிரகாசமாக அவள் ஜொலித்துக் கொண்டிருந்தாள். அதையே மானசீகமாக தரிசனம் செய்து கொண்டிருந்த அவர், அன்றைய தினம் அமாவாசை என்பதை மறந்து, இன்று "நிறைந்த
பெüர்ணமி நாள்' என்று கூறி விட்டார்.
அந்த எதிர்மறையான பதிலைக் கேட்ட மன்னனின் கோபம் மேலும் அதிகமானது. "இன்று இரவு முழு நிலவு தோன்றாவிட்டால் நீர் அக்னி குண்டத்தில் ஏற்றப்படுவீர்' என்று எச்சரிக்க, அப்பொழுதும் தன் நினைவுகளிலிருந்து மீளாத பட்டர், மன்னரிடம், அன்று பெüர்ணமி தான் என்றும் முழு நிலவு தோன்றும் என்றும் உறுதி கூறினார்.
மன்னர் கோபத்துடன் வெளியேற, அருகில் இருந்தவர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு நிலைமையை விளக்கினர். அப்பொழுதுதான் அவருக்கு அன்றைய தினம் அமாவாசை என்பது தெரிந்தது. அன்னை அபிராமவல்லியின் அழகு பொங்கும் பொன் முகத்தை நீண்டநேரம் பார்த்த மதி மயக்கத்தில் தவறாக கூறி விட்டோமே என்று எண்ணி வருந்திய அபிராமி
பட்டர், "நாம் நாமாக ஏதும் சொல்லவில்லை. ஆக்ஞா சக்கரத்தில் அம்பிகை எழுந்தருளியிருக்கும் போது வந்த சொற்கள் அவை. நானும் அறியேன் } அவளும் பொய் சொல்லாள். அவளுடைய லீலையை யார் அறிவார். எல்லாம் அவள் செயல்' என்று தனக்குத் தானே ஆறுதல் கூறிக் கொண்ட அவர், தன்னை அபிராமி கைவிட மாட்டாள் என்று உறுதியாக நம்பினார்.
மாலை மங்கியது. இரவு நெருங்கியது. மன்னரின் ஆணைப்படி, பெரிய அக்னி குண்டம் அமைக்கப்பட்டு, அதன் மேல் 100 கயிறு பிரிகளைக் கொண்ட உறி அமைக்கப்பட்டது. இரவு துவங்கியதும் அபிராமி பட்டரை அக்னிக்குண்டத்தில் ஏற்றினர். கீழே நெருப்பு பற்றவைக்கப்பட்டது.
"நீயே கதி என்று உன்மேல் பக்தி கொண்டிருந்த எனக்கு கிடைத்த சோதனையா இது, இதற்கெல்லாம் நான் கலங்கமாட்டேன். என்றும் நீயே கதி' என்று அன்னை அபிராமிவல்லியை புகழ்ந்து உரியில் இருந்தவண்ணம் அந்தாதி பாட ஆரம்பித்தார். மக்கள் எல்லோரும் கூடி இதனை பார்த்துக் கொண்டிருக்க, தீயின் வெப்பத்தால் ஒவ்வொரு கயிறாக அறுபட்டுக் கொண்டே வந்தது. பட்டர் கலங்கவில்லை.
தனது 79-ஆம் பாடலைப் பாடும்போது, அம்பிகையின் திருவிழி திறந்தது. பக்தனைக் காக்க திருவுளம் கொண்டாள். தன்னுடைய காதில் அணிந்திருந்த ஸ்ரீசக்ர ரூபமாகிய தாடங்கம் என்னும் திருத்தோட்டினை எடுத்து விண்ணில் வீசினாள். அது பூரண சந்திரனாக மாறி விண்ணில் பிரகாசித்தது. பெüர்ணமி நிலவை விட அதிக ஒளியை கொட்டியது.
அன்னையின் முகமண்டலமே பூரண சந்திரன் போல் ஜொலிக்க, அவள் காதின் தாடங்கம் மற்றொரு பூரணசந்திரனாக விளங்க, அந்த அமாவாசை இருளானது. அனைவரின் மனத்து அறியாமை இருட்டையும் போக்கி அனைவரையும் பேரானந்தப் பேரின்பத்தில் ஆழ்த்தியது. அவரது பக்தியின் சிறப்பை உலகத்திற்கு தெரியுமாறு செய்தாள் அம்பிகை. தனக்காக அமாவாசையை பெüர்ணமியாக்கிய அன்னை அபிராமி வல்லியை கைகூப்பி வணங்கி ஆனந்த கண்ணீர் வடித்தார் அபிராமிபட்டர்.
அபிராமி பட்டரின் பெருமையை உணர்ந்து கொண்ட மன்னன் அவரை அக்னி குண்டத்திலிருந்து இறக்கி, அவரைப் பணிந்து மன்னிப்பு வேண்டினார். அபிராமி அம்மன் சந்நிதிக்குச் சென்ற அபிராமிபட்டர், தொடர்ந்து அந்தாதியை பாடிக் கொண்டே வந்தார். மொத்தம் 102 பாடல்களை பாடி முடித்தார்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
DINAMANI
அன்னை அபிராமி அருள்பெற்ற அருளாளர்!
By - ரஞ்சனா பால சுப்ரமணியன்
First Published : 05 February 2016 12:00 AM IST
உலகுக்கெல்லாம் தாயான அன்னை அபிராமி நிகழ்த்திய திருவிளையாடல்கள் பல. அபிராமி என்றாலே மிகுந்த அழகுடையவள் என்பது பொருள். தன் பக்தனுக்காக காலத்தையே மாற்றிய வரலாற்றை இங்கு காண்போம்:
சோழவள நாட்டின் காவிரிக்கரையில் உள்ள சிவாலயங்களில் ஒன்று திருக்கடையூர் அபிராமிவல்லி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயம். கிட்டத்தட்ட முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர், அந்த ஆலயத்தின் அர்ச்சகரான அமிர்தலிங்க ஐயர் என்பவருக்கு தோன்றியவர் சுப்பிரமணியன். தந்தையிடமிருந்து சங்கீதப் பயிற்சியையும், தேவி உபாசனையும் கற்றுக் கொண்ட அவர், அதன் மூலம் இளமை முதலே ஸ்ரீ அபிராமி அம்மையின்பால் தனிப்பற்றும், பக்தியும் பூண்டு வழிபட்டு வந்தார். எப்பொழுதும் அவர் அபிராமி சந்நிதியிலேயே இருந்து அன்னையின் பேரன்பிலேயே திளைத்து வந்தார். தம் உள்ளத்தே அன்னையின்பால் தோன்றும் அன்பின் விளைவாக பல துதிகளைத் தாமே இயற்றிப் பாடி வந்தார்.
யோக முறையில் அம்பிகையைத் துதித்து வந்த அவர் சரியை, கிரியை என்பவற்றைக் கடந்து யோகநிலையின் ஆதார பீடங்களில் யாமளை திருக்கோலத்தைக் கண்ணாரக் கண்டு இன்புற்று இடைப்பட்ட கிரந்திகளை எல்லாம் தாண்டிச் சென்று ஸஹஸ்ராரத்தில் ஒளிரும் ஒளிமயமான லலிதையின் திருவருளைப் பரிபூரணமாய் உணர்ந்து அந்த ஆனந்தத்தில் திளைத்து இன்புற்று இருந்தார். ஆனால் உலகத்தவருக்கு அவருடைய ஆனந்த நிலையும், அதன் காரணமும் புரியாமல் போனது.
அன்று தை மாத அமாவாசை நாள் -
திருக்கடையூர் அபிராமி அம்மன் கோயிலில் தரிசனம் செய்ய வந்திருந்தார் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர். கோயிலுக்குள் நுழைந்த மன்னருக்கு பக்தர்கள் மரியாதை நிமித்தம் ஒதுங்கி வழிவிட, அபிராமி திருச்சந்நிதியில் இருந்த அபிராமி பட்டர் மட்டும் அரசரைக் கண்டு கொள்ளவில்லை. அவர் அபிராமி அம்மனை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடியே, புறவுலக நினைவின்றி, அவளது தெய்வீக நினைவுகளிலேயே மூழ்கியிருந்தார்.
சாக்த வழிபாட்டில் ஆழ்நிலை செல்லும்போது புருவமத்தியில் ஓர் ஒளிப்பிழம்பு தோன்றும். பூரணச் சந்திரமண்டலமாக இது தோன்றும். சாக்தர்களுக்குப் பெüர்ணமி வழிபாடு மிகவும் முக்கியமானது. அன்று இரவு, வானத்தில் தோன்றியிருக்கும் சந்திரபிம்பத்தில் அம்பிகையை மானசீகமாக ஆவாஹனம்செய்து மானஸ பூஜையை நிகழ்த்துவது மரபு. அபிராமி பட்டரின் தியானத்தில் அந்த சந்திரமண்டலம் சாட்சாத் அம்பிகையாக ஜொலித்துக்கொண்டிருந்தது.
அப்பொழுது அங்கு வந்த மன்னர், தான் வந்ததைக்கூட கவனியாதிருந்த அவரிடம், "யார் நீ?' என்று கேட்க, நினைவு திரும்பிய பட்டர், தான் அந்த கோயிலில் பஞ்சாங்கம் பார்ப்பவன் என்று கூறினார்.
உடனே மன்னர், "அப்படியென்றால், இன்று என்ன திதி?' என்று கேட்டார்.
அன்னை அபிராமி அம்மனின் பேரொளி முகத்தையே வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்த அவருடைய மனதில் இன்னமும் அன்னையின் போரொளி நீங்கவில்லை. இன்னமும் பிரகாசமாக அவள் ஜொலித்துக் கொண்டிருந்தாள். அதையே மானசீகமாக தரிசனம் செய்து கொண்டிருந்த அவர், அன்றைய தினம் அமாவாசை என்பதை மறந்து, இன்று "நிறைந்த
பெüர்ணமி நாள்' என்று கூறி விட்டார்.
அந்த எதிர்மறையான பதிலைக் கேட்ட மன்னனின் கோபம் மேலும் அதிகமானது. "இன்று இரவு முழு நிலவு தோன்றாவிட்டால் நீர் அக்னி குண்டத்தில் ஏற்றப்படுவீர்' என்று எச்சரிக்க, அப்பொழுதும் தன் நினைவுகளிலிருந்து மீளாத பட்டர், மன்னரிடம், அன்று பெüர்ணமி தான் என்றும் முழு நிலவு தோன்றும் என்றும் உறுதி கூறினார்.
மன்னர் கோபத்துடன் வெளியேற, அருகில் இருந்தவர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு நிலைமையை விளக்கினர். அப்பொழுதுதான் அவருக்கு அன்றைய தினம் அமாவாசை என்பது தெரிந்தது. அன்னை அபிராமவல்லியின் அழகு பொங்கும் பொன் முகத்தை நீண்டநேரம் பார்த்த மதி மயக்கத்தில் தவறாக கூறி விட்டோமே என்று எண்ணி வருந்திய அபிராமி
பட்டர், "நாம் நாமாக ஏதும் சொல்லவில்லை. ஆக்ஞா சக்கரத்தில் அம்பிகை எழுந்தருளியிருக்கும் போது வந்த சொற்கள் அவை. நானும் அறியேன் } அவளும் பொய் சொல்லாள். அவளுடைய லீலையை யார் அறிவார். எல்லாம் அவள் செயல்' என்று தனக்குத் தானே ஆறுதல் கூறிக் கொண்ட அவர், தன்னை அபிராமி கைவிட மாட்டாள் என்று உறுதியாக நம்பினார்.
மாலை மங்கியது. இரவு நெருங்கியது. மன்னரின் ஆணைப்படி, பெரிய அக்னி குண்டம் அமைக்கப்பட்டு, அதன் மேல் 100 கயிறு பிரிகளைக் கொண்ட உறி அமைக்கப்பட்டது. இரவு துவங்கியதும் அபிராமி பட்டரை அக்னிக்குண்டத்தில் ஏற்றினர். கீழே நெருப்பு பற்றவைக்கப்பட்டது.
"நீயே கதி என்று உன்மேல் பக்தி கொண்டிருந்த எனக்கு கிடைத்த சோதனையா இது, இதற்கெல்லாம் நான் கலங்கமாட்டேன். என்றும் நீயே கதி' என்று அன்னை அபிராமிவல்லியை புகழ்ந்து உரியில் இருந்தவண்ணம் அந்தாதி பாட ஆரம்பித்தார். மக்கள் எல்லோரும் கூடி இதனை பார்த்துக் கொண்டிருக்க, தீயின் வெப்பத்தால் ஒவ்வொரு கயிறாக அறுபட்டுக் கொண்டே வந்தது. பட்டர் கலங்கவில்லை.
தனது 79-ஆம் பாடலைப் பாடும்போது, அம்பிகையின் திருவிழி திறந்தது. பக்தனைக் காக்க திருவுளம் கொண்டாள். தன்னுடைய காதில் அணிந்திருந்த ஸ்ரீசக்ர ரூபமாகிய தாடங்கம் என்னும் திருத்தோட்டினை எடுத்து விண்ணில் வீசினாள். அது பூரண சந்திரனாக மாறி விண்ணில் பிரகாசித்தது. பெüர்ணமி நிலவை விட அதிக ஒளியை கொட்டியது.
அன்னையின் முகமண்டலமே பூரண சந்திரன் போல் ஜொலிக்க, அவள் காதின் தாடங்கம் மற்றொரு பூரணசந்திரனாக விளங்க, அந்த அமாவாசை இருளானது. அனைவரின் மனத்து அறியாமை இருட்டையும் போக்கி அனைவரையும் பேரானந்தப் பேரின்பத்தில் ஆழ்த்தியது. அவரது பக்தியின் சிறப்பை உலகத்திற்கு தெரியுமாறு செய்தாள் அம்பிகை. தனக்காக அமாவாசையை பெüர்ணமியாக்கிய அன்னை அபிராமி வல்லியை கைகூப்பி வணங்கி ஆனந்த கண்ணீர் வடித்தார் அபிராமிபட்டர்.
அபிராமி பட்டரின் பெருமையை உணர்ந்து கொண்ட மன்னன் அவரை அக்னி குண்டத்திலிருந்து இறக்கி, அவரைப் பணிந்து மன்னிப்பு வேண்டினார். அபிராமி அம்மன் சந்நிதிக்குச் சென்ற அபிராமிபட்டர், தொடர்ந்து அந்தாதியை பாடிக் கொண்டே வந்தார். மொத்தம் 102 பாடல்களை பாடி முடித்தார்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
DINAMANI