Post by radha on Jan 30, 2016 12:34:50 GMT 5.5
OMSRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
கிரௌஞ்ச மலையும் மார்பும்
உமா பாலசுப்ரமணியன்
வளைபட்டகை மாதொடு மக்கள் எனும்
தளை பட்டு அழியத் தகுமோ தகுமோ
கிளை பட்டு எழுசூர் உரமும் கிரியும்
தொளைபட்டு உருவத்தொடு வேலவனே!
‘வானோ’ என்று தொடங்கும் முந்தைய கந்தர் அலங்காரப் பாடலில் அருணகிரிநாதர் உண்மைப் பொருள் எது என்று தவித்து ஒவ்வொன்றாக விலக்கி இதுதானோ? இதுதானோ ?நான் அறியவில்லையே? என்று பொருமினார் என்று பார்த்தோம்.
அருணகிரிநாதர் முருகனை மையமாக வைத்து, உலகில் உள்ள தெய்வங்களைப்பற்றிக் கூறி அவர்களின் திருவிளையாடல் பெருமைகளைச் சொல்லி அவர்களைச் சுற்றி வந்து கடைசியில், ஏதோ ஒரு உறவு வைத்து முருகனுடன் இணைத்து விடுவதில் வல்லவர் என்பதைப் பல பாடல்கள் மூலம் நாம் அறியலாம்.
இல்வாழ்வில் இறைபக்தி
அதே போல மனிதன் தன் அன்பைப் பெருக்கி, பல உறவினர்களைத் தம்முடன் சேர்த்துக் கொள்வதற்கு உலகில் பல வாய்ப்புகள் அமைந்துள்ளன. மக்கள், தாயர், மருமக்கள், மாமன், மனைவி, தந்தை, மாமனைச்சி என்று ஒரு பட்டியலே இருக்கும் உறவினர் பலரைத் தொடர்பு படுத்தி, அவர்களிடம் எழும் அன்பைப் பெருக்கிக் கொள்கிறான். அவர்களிடம் செலுத்தும் அன்பு மட்டும் போதாது. உறவினர்களிடம் அன்பைக் காட்டும் ஒருவன் அதே சமயத்தில் இறைவனிடமும் அன்பு பூண வேண்டும். ஆனால் உறவுகளினிடம் வைக்கும் அன்பு , இறைவனிடம் வைக்கும் அன்புக்கு எந்த விதத்திலும் இடையூறாக இருக்கக் கூடாது. மனைவியும், மக்களும் இல்லறத்தை நடத்தத் துணைவர்களாகவும், இறைவன் திருவடியன்பை வளர்க்கும் தோழர்களாகவும் இருக்கவேண்டும்.
“தம் பராக்கற நின்னை உணர்ந்து உருகிப் பொற் பத்மக் கழல்சேர்வார் தம் குழாத்தினில் என்னையும் அன்பொடு வைக்கச் சற்றுக் கருதாதோ?” என்று கூறும் அருணகிநாதர் சொல்லுக்கு இணங்க ஒருவன் அடியார் சேர்க்கையில் சேர்ந்து பழகிவிட்டால் அவனுக்கு சிவபெருமான் திருவருள் எளிதிலே கிடைக்கும் என்பது நிச்சயமாகிவிடுகிறது. தன்னுடைய வீட்டிலுள்ளவர்களையே இறைவன் தொண்டில் ஈடுபடும் அடியவர்களாக ஆக்கிவிட்டால், அவனுடைய வாழ்வு நிச்சயமாக இம்மை மறுமைப் பயன்களை அடைவதற்குத் தகுந்ததாக அமைந்துவிடும் .
அக்காலத்தில் நாயன்மார்கள் இருக்கவில்லையா?
இவ்வாறு இல்லாது, உலகபசு பாச தொந்தம் அதுவாக, உறவுகிளை, தாயர் ,தந்தை, மனை ,பாலர் போன்ற உறவுகளில் திளைத்துவிட்டால், அதனால் மனம் சஞ்சலம் அடைந்து நம் மதிநிலை கெட்டுவிடும், விளைவு?- இறைவன் நெறியில் நிற்பதற்குத் தடைக்கல்லாகிவிடும்.
அருணகிரிநாதர் கதிர்காமத் தலத்தில் பாடிய ஒரு திருப்புகழில்
"மனை மக்கள் சுற்றம் எனும் மாயா
வலையைக் கடக்க அறியாதே
வினையில் செருக்கி அடி நாயேன்
விழலுக்கு இறைத்து விடலாமோ! ”--- என்கிறார்
என் வாழ்க்கை வீணே விழலுக்கு இறைத்த நீர் போல் ஆகிவிடாமல் உன்னைக் கருதி வழிபடவேண்டும் என்ற பொருள் படப் பாடியிருக்கிறார்.
இல்வாழ்வில் இருந்து கொண்டே இறைவனிடம் பக்தி பூண ஒரே வழி நம் சுற்றத்தாரையும் அதில் ஈடுபட வைப்பதுதான். நாம் செய்யத்தகும் அறத்துக்குத் தகுந்த வண்ணம், வாழச் செய்வதால்தான் மனைவிக்கு வாழ்க்கைத் துணை என்ற பெயர் வந்தது. இம்மை வாழ்வும் , மறுமை வாழ்வும் ஒன்றோடொன்று தொடர்புடவைகளாகும். இந்த வாழ்வில் அறம் செய்து வாழ்ந்தால், நாம் இறந்த பிறகும் வரும் வாழ்விலும் இன்பம் உண்டாகும். ஒருவனுடன் இருக்கும் மனைவியும், மக்களும் அறம் செய்வதற்குத் துணையாக இருந்தால், இம்மை மறுமை என்ற இரண்டு வாழ்க்கைக்கும் உதவி செய்தவர்களாகிறார்கள். ஒருகல்லில் இரண்டு மாங்காய் என்று சொல்வது போல, ஒவ்வொருவருக்கும் நன்மை ஏற்படுகிறது.
வளையும் தளையும்
ஒரு பெண்ணின் கையை அழகு படுத்துவது வளை என்ற அணி. வளையை அணிந்த கையைப் பெற்ற மனைவி எப்படித் தன் கைக்கு வளையல்களை அலங்காரமாகப் பெற்றிருக்கிறாளோ அவ்வாறே மனைவியானவள் இல்வாழ்வுக்கு ஏற்றபடி வளைந்து கொடுத்து குடும்பத்திற்கு அணியாக விளங்க வேண்டும் . அப்படி இல்லாவிட்டால் கையில் மாட்டியிருக்கும் விலங்குக்கு ஒப்பாவாள்.வளைக்கும் விலங்குக்கும் ஒரு சிறு வேறுபாடுதான். வளையை அணிந்த கை அழகு பெறும். தான் செய்யும் வேலைகளுக்குத் தடையின்றி உரிமையோடு செய்யும். விலங்கை அணிந்த கை அப்படிச் செய்ய முடியாது. விலங்கும், வளையும் கையில்தான் மாட்டப்பெறுவனவாக இருந்தாலும் விலங்கு, ஒன்றினோடு ஒன்று இணைந்து கையால் ஒரு செயலும் செய்யமுடியாது ஆக்கி விடுகிறது. ஆனால் வளை தனித் தனியாக இயல்பாக இருப்பதினால், செய்யும் தொழிலுக்குத் தடையேதும் உண்டாக்குவதில்லை.
மாதர்கள் வளைபோல் இருத்தல் வேண்டும். விலங்கு எவ்வாறு செய்யும் வேலைக்குத் தளையாக இருக்கிறதோ அவ்வாறு இருத்தல் கூடாது.
“பெண்டாட்டி கால்விலங்கு
பிள்ளையொரு சுள்ளாணி”
என்று ஒரு நாடோடிப் பாடல் தெரிவிக்கிறது.
எல்லா மாதர்களையும் அவ்வாறு சொல்லிவிடமுடியாது. பொல்லாத மாதரையும், மக்களையும் பெற்ற அநுபவத்தில் எழுந்த பாடலே இது. அத்தகைய அநுபவம் நமக்கு அமையக்கூடாது என்று நாம் இறைவனை வேண்டிக்கொள்ள வேண்டும் .
“வளையை அணிந்த கையையுடைய மனைவியோடு மக்கள் எனும் விலங்கு சேர்ந்தமையால் நான் அழியலாமா? இது எனக்கு ஏற்றதாகுமா?” என்று அருணகிரிநாதர் முருகனிடம் முறையிடுகிறார்.
“வளைபட்ட கைம்மாதொடு மக்கள் எனும்
தளைபட்டு அழியத் தகுமோ தகுமோ?”
திருப்புகழில் கிடைக்கும் அரிய செய்திகள்
தமிழ் நாட்டில் முருக வழிபாடு தொன்று தொட்டு இருந்து வருகின்றது, அவனைப் பற்றிய கதைகளும் பலவகையாக வழங்கி வருகின்றன. சங்க நூல்களில் வரும் சில வரலாறுகளுக்குத் தமிழ் கந்தபுராணத்திலோ, வடமொழிக் கந்தபுராணத்திலோ ஆதாரம் காணப்படுவதில்லை.
அருணகிரி நாதர் பாடிய திருப்புகழ் பாக்களில் கந்தபுராணத்திலும் காணக்கிடைக்காத அரிய செய்திகளைப் பார்க்கலாம் . பழைய மரபைப் பின்பற்றியவை சில, அவர்தம் அருள் அநுபவத்தால் உணர்ந்தவை சில என்று நமக்கு விருந்து அளித்திருக்கிறார். சூரனுக்குத் துணையாக நின்ற கிரௌஞ்ச மலையை முருகன் வேலை விட்டுப் பொடியாக்கினான் என்ற செய்தி கந்தபுராணத்தில் இருக்கிறது. கிரௌஞ்ச மலையின் குகைக்குள் புகுந்த தேவர்கள் வழி தெரியாமல் மயங்கினார்கள் என்றும் கூறும்.
பழைய நூல்களில் கிரவுஞ்சகிரியைப் பற்றி உள்ள செய்தி கந்தபுராணத்தில் காணப் பெறவில்லை. சூரன் கிரவுஞ்சமலையைக் கவசம் போல் கொண்டு அதனூடே புகுந்து எங்கும் திரிந்தான் என்றும், முருகப் பெருமான் வேலை ஏவி, கிரவுஞ்ச மலையையும் சூரன் மார்பையும் ஒருங்கே துளைத்தான் என்ற வரலாறே அது.
ஒட்டக்கூத்தர் தாம் இயற்றிய தக்கயாகப் பரணியில் முருகனைப் பற்றிப் பாடுகிறார்.
“ஒரு தோகை மிசையேறி உழல்தரும்
மலைமார்பும் உடனூடறப்
பொருதோகை சுரராச புரமேற
விடு நாளை புகழ் பாடுவோம்” ( தக்க.)
என்பது ஒரு பாட்டு . இதற்கு உரை செய்ய வந்த பழைய உரையாசிரியர்,
“தனக்குப் பகைவனான சூரபன்மனுக்கு மறைவாய் ஓடிவரலான மலையினுடைய மார்பும் சூரமன்மனும் ஒக்க ஒரே காலத்தில் ஊடுருவும்படி வேலேறுபடப் பொருதருளி” என்று எழுதுகிறார், பின்னும்
“எழுமலை கொல்லும் அசனி”
என்ற இடத்தில் ‘கருவிக்கும் மலைகளைக் கொல்லும் உருமேற்றோடுப்பான்” என்று உரையும், ‘கருவம், சூரபன்மாவைக் காக்கின்றோம் என்பது’ என்று விசேஷ உரையும் எழுதிகிறார்.
இவ்வகையில் கிரவுஞ்சம் சூரனுக்கு அரணாகிப் பறந்ததென்றும், அதையும் சூர பதுமனையும் ஒரே காலத்தில் வேலால் துளைத்தான் முருகன் என்பதும் கண்டுகொள்ளலாம்.
இக்கருத்தைத் திருவிளையாடற் புராணத்திலும் ஒரு இடத்தில் பார்க்கலாம்,
அருணகிரிநாதர் திருப்புகழிலும் இக்கருத்தைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
“ஒருதனி வேல் கொண்டு நீள் கிரவுஞ்சமும் நிருதரும் மாவுங்கலோப சிந்துவும் உடைபட மோதும் குமார பங்கய கர வீரா” என்றும்.
“சோதிவேலை எடுத்து அன்று ஓத வேலையில் நிற்கும் சூத தாருவும் வெற்பும் பொரு கோவே” என்றும் .
“திரியும் உம்பர் நீடு கிரி பிளந்து சூரர் செரு அடங்க வேலை விடுவோனே” என்றும்.
அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியிருக்கிறார். இன்னும் பல பாடல்களில் இக்கருத்தைக் காணலாம்.
கந்தர் அநுபூதியில் இந்த வரலாற்றை
"கிளைபட்டெழு சூர் உரமும் கிரியும்
தொளைபட்டுருவத் தொடு வேலவனே!”---என்கிறார்.
சுற்றத்தார் யாவரும் அழிய இறுதியில் சூரனது மார்பும் அவனுக்கு அரணாக இருந்த கிரவுஞ்ச மலையும் தொளைபட்டு அழியும்படியாக விட்ட வேலை உடைய பெருமானே! என்பது இதன் பொருள்.
சூரனுக்கு தாரகாசுரன், சிங்கமுகாசுரன் போன்ற தம்பியர், புதல்வர், பிற சுற்றத்தார் ஆகிய கிளைகள் பல உண்டு. முதலில் முருகப்பெருமான் அந்தக் கிளைகளை வேரோடு களைந்தான். படச் செய்தான். இறுதியில் சூரனைக் கொன்றான். வேற்படையினாலே மலையைப் பொடியாக்கிச் சூரன் மார்பைத் துளைத்தான்.
இப்பொழுது பாடலின் முழுப் பொருளையும் காணலாம் .
“வளையை அணிந்த மாதர், மக்கள் என்னும் கிளைகளால் துன்புறும் எனக்கு, அந்தத் துன்பத்தைப் போக்கி அருள வேண்டும்” என்று வேண்டிக்கொள்ள வந்த அருணகிரியார், அதற்கு ஏற்றத் தகுதியுடையவன் முருகன் என்பதைப் பிற்பாதியில் சொல்கிறார் கிளைகள் படப் பின்புமலையும் படப் பின்பு சூரன் பட வேலை எறிந்தவன் முருகன். அவனே தாரேஷணை, புத்திரேஷணை, தனேஷணை ஆகியவற்றை மாற்றி, ஆசையை விடச் செய்து அகங்காரத்தைப் போக்குவான் என்பதை அறிந்து கூறினார்.
வளைபட்ட கைமாதொடு மக்களெனும்
தளைபட்டு அழியத் தகுமோ தகுமோ
கிளைபட்டு எழு சூர் உரமும் கிரியும்
தொளைபட்டுருவத் தொடு வேலவனே!
SRI KANVHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
கிரௌஞ்ச மலையும் மார்பும்
உமா பாலசுப்ரமணியன்
வளைபட்டகை மாதொடு மக்கள் எனும்
தளை பட்டு அழியத் தகுமோ தகுமோ
கிளை பட்டு எழுசூர் உரமும் கிரியும்
தொளைபட்டு உருவத்தொடு வேலவனே!
‘வானோ’ என்று தொடங்கும் முந்தைய கந்தர் அலங்காரப் பாடலில் அருணகிரிநாதர் உண்மைப் பொருள் எது என்று தவித்து ஒவ்வொன்றாக விலக்கி இதுதானோ? இதுதானோ ?நான் அறியவில்லையே? என்று பொருமினார் என்று பார்த்தோம்.
அருணகிரிநாதர் முருகனை மையமாக வைத்து, உலகில் உள்ள தெய்வங்களைப்பற்றிக் கூறி அவர்களின் திருவிளையாடல் பெருமைகளைச் சொல்லி அவர்களைச் சுற்றி வந்து கடைசியில், ஏதோ ஒரு உறவு வைத்து முருகனுடன் இணைத்து விடுவதில் வல்லவர் என்பதைப் பல பாடல்கள் மூலம் நாம் அறியலாம்.
இல்வாழ்வில் இறைபக்தி
அதே போல மனிதன் தன் அன்பைப் பெருக்கி, பல உறவினர்களைத் தம்முடன் சேர்த்துக் கொள்வதற்கு உலகில் பல வாய்ப்புகள் அமைந்துள்ளன. மக்கள், தாயர், மருமக்கள், மாமன், மனைவி, தந்தை, மாமனைச்சி என்று ஒரு பட்டியலே இருக்கும் உறவினர் பலரைத் தொடர்பு படுத்தி, அவர்களிடம் எழும் அன்பைப் பெருக்கிக் கொள்கிறான். அவர்களிடம் செலுத்தும் அன்பு மட்டும் போதாது. உறவினர்களிடம் அன்பைக் காட்டும் ஒருவன் அதே சமயத்தில் இறைவனிடமும் அன்பு பூண வேண்டும். ஆனால் உறவுகளினிடம் வைக்கும் அன்பு , இறைவனிடம் வைக்கும் அன்புக்கு எந்த விதத்திலும் இடையூறாக இருக்கக் கூடாது. மனைவியும், மக்களும் இல்லறத்தை நடத்தத் துணைவர்களாகவும், இறைவன் திருவடியன்பை வளர்க்கும் தோழர்களாகவும் இருக்கவேண்டும்.
“தம் பராக்கற நின்னை உணர்ந்து உருகிப் பொற் பத்மக் கழல்சேர்வார் தம் குழாத்தினில் என்னையும் அன்பொடு வைக்கச் சற்றுக் கருதாதோ?” என்று கூறும் அருணகிநாதர் சொல்லுக்கு இணங்க ஒருவன் அடியார் சேர்க்கையில் சேர்ந்து பழகிவிட்டால் அவனுக்கு சிவபெருமான் திருவருள் எளிதிலே கிடைக்கும் என்பது நிச்சயமாகிவிடுகிறது. தன்னுடைய வீட்டிலுள்ளவர்களையே இறைவன் தொண்டில் ஈடுபடும் அடியவர்களாக ஆக்கிவிட்டால், அவனுடைய வாழ்வு நிச்சயமாக இம்மை மறுமைப் பயன்களை அடைவதற்குத் தகுந்ததாக அமைந்துவிடும் .
அக்காலத்தில் நாயன்மார்கள் இருக்கவில்லையா?
இவ்வாறு இல்லாது, உலகபசு பாச தொந்தம் அதுவாக, உறவுகிளை, தாயர் ,தந்தை, மனை ,பாலர் போன்ற உறவுகளில் திளைத்துவிட்டால், அதனால் மனம் சஞ்சலம் அடைந்து நம் மதிநிலை கெட்டுவிடும், விளைவு?- இறைவன் நெறியில் நிற்பதற்குத் தடைக்கல்லாகிவிடும்.
அருணகிரிநாதர் கதிர்காமத் தலத்தில் பாடிய ஒரு திருப்புகழில்
"மனை மக்கள் சுற்றம் எனும் மாயா
வலையைக் கடக்க அறியாதே
வினையில் செருக்கி அடி நாயேன்
விழலுக்கு இறைத்து விடலாமோ! ”--- என்கிறார்
என் வாழ்க்கை வீணே விழலுக்கு இறைத்த நீர் போல் ஆகிவிடாமல் உன்னைக் கருதி வழிபடவேண்டும் என்ற பொருள் படப் பாடியிருக்கிறார்.
இல்வாழ்வில் இருந்து கொண்டே இறைவனிடம் பக்தி பூண ஒரே வழி நம் சுற்றத்தாரையும் அதில் ஈடுபட வைப்பதுதான். நாம் செய்யத்தகும் அறத்துக்குத் தகுந்த வண்ணம், வாழச் செய்வதால்தான் மனைவிக்கு வாழ்க்கைத் துணை என்ற பெயர் வந்தது. இம்மை வாழ்வும் , மறுமை வாழ்வும் ஒன்றோடொன்று தொடர்புடவைகளாகும். இந்த வாழ்வில் அறம் செய்து வாழ்ந்தால், நாம் இறந்த பிறகும் வரும் வாழ்விலும் இன்பம் உண்டாகும். ஒருவனுடன் இருக்கும் மனைவியும், மக்களும் அறம் செய்வதற்குத் துணையாக இருந்தால், இம்மை மறுமை என்ற இரண்டு வாழ்க்கைக்கும் உதவி செய்தவர்களாகிறார்கள். ஒருகல்லில் இரண்டு மாங்காய் என்று சொல்வது போல, ஒவ்வொருவருக்கும் நன்மை ஏற்படுகிறது.
வளையும் தளையும்
ஒரு பெண்ணின் கையை அழகு படுத்துவது வளை என்ற அணி. வளையை அணிந்த கையைப் பெற்ற மனைவி எப்படித் தன் கைக்கு வளையல்களை அலங்காரமாகப் பெற்றிருக்கிறாளோ அவ்வாறே மனைவியானவள் இல்வாழ்வுக்கு ஏற்றபடி வளைந்து கொடுத்து குடும்பத்திற்கு அணியாக விளங்க வேண்டும் . அப்படி இல்லாவிட்டால் கையில் மாட்டியிருக்கும் விலங்குக்கு ஒப்பாவாள்.வளைக்கும் விலங்குக்கும் ஒரு சிறு வேறுபாடுதான். வளையை அணிந்த கை அழகு பெறும். தான் செய்யும் வேலைகளுக்குத் தடையின்றி உரிமையோடு செய்யும். விலங்கை அணிந்த கை அப்படிச் செய்ய முடியாது. விலங்கும், வளையும் கையில்தான் மாட்டப்பெறுவனவாக இருந்தாலும் விலங்கு, ஒன்றினோடு ஒன்று இணைந்து கையால் ஒரு செயலும் செய்யமுடியாது ஆக்கி விடுகிறது. ஆனால் வளை தனித் தனியாக இயல்பாக இருப்பதினால், செய்யும் தொழிலுக்குத் தடையேதும் உண்டாக்குவதில்லை.
மாதர்கள் வளைபோல் இருத்தல் வேண்டும். விலங்கு எவ்வாறு செய்யும் வேலைக்குத் தளையாக இருக்கிறதோ அவ்வாறு இருத்தல் கூடாது.
“பெண்டாட்டி கால்விலங்கு
பிள்ளையொரு சுள்ளாணி”
என்று ஒரு நாடோடிப் பாடல் தெரிவிக்கிறது.
எல்லா மாதர்களையும் அவ்வாறு சொல்லிவிடமுடியாது. பொல்லாத மாதரையும், மக்களையும் பெற்ற அநுபவத்தில் எழுந்த பாடலே இது. அத்தகைய அநுபவம் நமக்கு அமையக்கூடாது என்று நாம் இறைவனை வேண்டிக்கொள்ள வேண்டும் .
“வளையை அணிந்த கையையுடைய மனைவியோடு மக்கள் எனும் விலங்கு சேர்ந்தமையால் நான் அழியலாமா? இது எனக்கு ஏற்றதாகுமா?” என்று அருணகிரிநாதர் முருகனிடம் முறையிடுகிறார்.
“வளைபட்ட கைம்மாதொடு மக்கள் எனும்
தளைபட்டு அழியத் தகுமோ தகுமோ?”
திருப்புகழில் கிடைக்கும் அரிய செய்திகள்
தமிழ் நாட்டில் முருக வழிபாடு தொன்று தொட்டு இருந்து வருகின்றது, அவனைப் பற்றிய கதைகளும் பலவகையாக வழங்கி வருகின்றன. சங்க நூல்களில் வரும் சில வரலாறுகளுக்குத் தமிழ் கந்தபுராணத்திலோ, வடமொழிக் கந்தபுராணத்திலோ ஆதாரம் காணப்படுவதில்லை.
அருணகிரி நாதர் பாடிய திருப்புகழ் பாக்களில் கந்தபுராணத்திலும் காணக்கிடைக்காத அரிய செய்திகளைப் பார்க்கலாம் . பழைய மரபைப் பின்பற்றியவை சில, அவர்தம் அருள் அநுபவத்தால் உணர்ந்தவை சில என்று நமக்கு விருந்து அளித்திருக்கிறார். சூரனுக்குத் துணையாக நின்ற கிரௌஞ்ச மலையை முருகன் வேலை விட்டுப் பொடியாக்கினான் என்ற செய்தி கந்தபுராணத்தில் இருக்கிறது. கிரௌஞ்ச மலையின் குகைக்குள் புகுந்த தேவர்கள் வழி தெரியாமல் மயங்கினார்கள் என்றும் கூறும்.
பழைய நூல்களில் கிரவுஞ்சகிரியைப் பற்றி உள்ள செய்தி கந்தபுராணத்தில் காணப் பெறவில்லை. சூரன் கிரவுஞ்சமலையைக் கவசம் போல் கொண்டு அதனூடே புகுந்து எங்கும் திரிந்தான் என்றும், முருகப் பெருமான் வேலை ஏவி, கிரவுஞ்ச மலையையும் சூரன் மார்பையும் ஒருங்கே துளைத்தான் என்ற வரலாறே அது.
ஒட்டக்கூத்தர் தாம் இயற்றிய தக்கயாகப் பரணியில் முருகனைப் பற்றிப் பாடுகிறார்.
“ஒரு தோகை மிசையேறி உழல்தரும்
மலைமார்பும் உடனூடறப்
பொருதோகை சுரராச புரமேற
விடு நாளை புகழ் பாடுவோம்” ( தக்க.)
என்பது ஒரு பாட்டு . இதற்கு உரை செய்ய வந்த பழைய உரையாசிரியர்,
“தனக்குப் பகைவனான சூரபன்மனுக்கு மறைவாய் ஓடிவரலான மலையினுடைய மார்பும் சூரமன்மனும் ஒக்க ஒரே காலத்தில் ஊடுருவும்படி வேலேறுபடப் பொருதருளி” என்று எழுதுகிறார், பின்னும்
“எழுமலை கொல்லும் அசனி”
என்ற இடத்தில் ‘கருவிக்கும் மலைகளைக் கொல்லும் உருமேற்றோடுப்பான்” என்று உரையும், ‘கருவம், சூரபன்மாவைக் காக்கின்றோம் என்பது’ என்று விசேஷ உரையும் எழுதிகிறார்.
இவ்வகையில் கிரவுஞ்சம் சூரனுக்கு அரணாகிப் பறந்ததென்றும், அதையும் சூர பதுமனையும் ஒரே காலத்தில் வேலால் துளைத்தான் முருகன் என்பதும் கண்டுகொள்ளலாம்.
இக்கருத்தைத் திருவிளையாடற் புராணத்திலும் ஒரு இடத்தில் பார்க்கலாம்,
அருணகிரிநாதர் திருப்புகழிலும் இக்கருத்தைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
“ஒருதனி வேல் கொண்டு நீள் கிரவுஞ்சமும் நிருதரும் மாவுங்கலோப சிந்துவும் உடைபட மோதும் குமார பங்கய கர வீரா” என்றும்.
“சோதிவேலை எடுத்து அன்று ஓத வேலையில் நிற்கும் சூத தாருவும் வெற்பும் பொரு கோவே” என்றும் .
“திரியும் உம்பர் நீடு கிரி பிளந்து சூரர் செரு அடங்க வேலை விடுவோனே” என்றும்.
அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியிருக்கிறார். இன்னும் பல பாடல்களில் இக்கருத்தைக் காணலாம்.
கந்தர் அநுபூதியில் இந்த வரலாற்றை
"கிளைபட்டெழு சூர் உரமும் கிரியும்
தொளைபட்டுருவத் தொடு வேலவனே!”---என்கிறார்.
சுற்றத்தார் யாவரும் அழிய இறுதியில் சூரனது மார்பும் அவனுக்கு அரணாக இருந்த கிரவுஞ்ச மலையும் தொளைபட்டு அழியும்படியாக விட்ட வேலை உடைய பெருமானே! என்பது இதன் பொருள்.
சூரனுக்கு தாரகாசுரன், சிங்கமுகாசுரன் போன்ற தம்பியர், புதல்வர், பிற சுற்றத்தார் ஆகிய கிளைகள் பல உண்டு. முதலில் முருகப்பெருமான் அந்தக் கிளைகளை வேரோடு களைந்தான். படச் செய்தான். இறுதியில் சூரனைக் கொன்றான். வேற்படையினாலே மலையைப் பொடியாக்கிச் சூரன் மார்பைத் துளைத்தான்.
இப்பொழுது பாடலின் முழுப் பொருளையும் காணலாம் .
“வளையை அணிந்த மாதர், மக்கள் என்னும் கிளைகளால் துன்புறும் எனக்கு, அந்தத் துன்பத்தைப் போக்கி அருள வேண்டும்” என்று வேண்டிக்கொள்ள வந்த அருணகிரியார், அதற்கு ஏற்றத் தகுதியுடையவன் முருகன் என்பதைப் பிற்பாதியில் சொல்கிறார் கிளைகள் படப் பின்புமலையும் படப் பின்பு சூரன் பட வேலை எறிந்தவன் முருகன். அவனே தாரேஷணை, புத்திரேஷணை, தனேஷணை ஆகியவற்றை மாற்றி, ஆசையை விடச் செய்து அகங்காரத்தைப் போக்குவான் என்பதை அறிந்து கூறினார்.
வளைபட்ட கைமாதொடு மக்களெனும்
தளைபட்டு அழியத் தகுமோ தகுமோ
கிளைபட்டு எழு சூர் உரமும் கிரியும்
தொளைபட்டுருவத் தொடு வேலவனே!
SRI KANVHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM