Post by radha on Dec 2, 2015 0:59:26 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHAERIVA
* மனதை அடக்கி இருந்தாலும், எப்படியோ ஆசைப்புயல் புகுந்து மனிதனுடைய அடக்க சக்தியை வேரோடு பறித்து விடுகிறது. அவன் தன்னுடைய மனதிடத்தை அந்த புயலுக்கு பறிகொடுத்து விடாமல் இருக்க வேண்டுமானால், என்னை உறுதியாக பற்றிக் கொள்ள வேண்டும்.
* மனம் மகிழ்வோடு இருத்தலும், சாந்தமான போக்கும், மவுனமும், மனதை அடக்கி ஆளுதலும், உள்ளத்தூய்மையும் என்ற இவையெல்லாம் நம் மனதுக்குள்ளேயே உள்ளது.
* விரும்பியதை அடைந்து விட்டால் வரம்பின்றி மகிழக்கூடாது. அதுபோல் துன்பம் வரும்போது ஒரேயடியாக மனம் கலங்கவும் கூடாது. மன உறுதியுடன் தெய்வ நிலையில் நிற்க வேண்டும்.
* பட்டினியாகக் கிடந்தால் உடல் சக்தியற்று அடங்கிப் போகும். ஆனால், நினைத்ததை அடைய வேண்டும் என்ற ஆசை மட்டும் அடங்கவே செய்யாது. கடவுளை நேரடியாகக் காண வேண்டும் என்னும் அளவுக்கு தியானப் பயிற்சி எடுத்தால் தான் இது அடங்கும்.
* கோபத்தால் நினைவு தடுமாறுகிறது. நினைவு தடுமாறுகையில் புத்தி குழம்புகிறது. புத்தி குழம்பியவன் இறந்தவனுக்கு சமமாகிறான்.
* பொருட்களைப் பற்றி சிந்தித்தால் அவற்றின் மீது பற்று உண்டாகிறது. பற்றிலிருந்து ஆசை உண்டாகிறது. ஆசையிலிருந்து அடங்கா மோகம் உண்டாகிறது. மோகத்தால் சிந்தை கெடுகிறது. சிந்தை கெட்டால் லட்சியம் மறைந்துபோகிறது. அப்போது மனிதன் அழிந்து விடுகிறான்.
* தானம் அளிப்பதை கடமையாகக் கருத வேண்டும். இடம், தகுதி, காலம் ஆகியவற்றைக் கவனித்து, திரும்பத் தர இயலாத ஒருவனுக்கு அளிக்கும் தானமே சாத்வீக தானத்தை நீங்கள் செய்யுங்கள்.
* மிகுதியாக உண்பது, சாப்பிடாமலே இருப்பது, அதிகமாக உறங்குவது, மிகுதியாக விழித்திருப்பது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
* பசுவின் பால், அதன் சரீரம் முழுவதும் ரத்தத்தில் கலந்து பரவி உள்ளதென்றாலும், மடியிலேயே சுரக்கிறது. அதுபோல் ஈஸ்வரன் உலகில் எங்கும் இருக்கிறான். எனினும் தியானம் செய்தால் தான் மனதில் எழுந்தருள்வான்.
* மவுனமாக இருப்பதே, நல்ல செயல்களைச் செய்வதற்கு சாதகமான சந்தர்ப்பங்களை உண்டுபண்ணக் கூடியதாகும்.
* மரணமும் பிறப்பும் பெரியதொரு விஷயங்கள் எனக்கருதி குழம்பிப் போக வேண்டாம். மரணம் என்பது, உயிரானது வேறு ஒரு தேகத்தை சென்றடையும் நிகழ்வுதான். உயிருக்கு சாவு என்பது இல்லை.
* ஆறுகள் தினமும் கடலுக்குள் வந்து பாய்கின்றன. ஆனாலும், கடல்நீர் அதிகரிப்பதும் இல்லை. குறைவதும் இல்லை. அதுபோல், நிலையான மனதுடன் இருப்பவனே பரிபூரண ஞானி.
* ஐம்பொறிகள் வழியாக ஒருவனது ஆன்மாவுக்குள் ஆசை வெள்ளம் வந்து பாயும் என்றாலும், நிலையான மனம் இருந்து விட்டால் வாழ்வில் அமைதி உண்டாகும்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
* மனதை அடக்கி இருந்தாலும், எப்படியோ ஆசைப்புயல் புகுந்து மனிதனுடைய அடக்க சக்தியை வேரோடு பறித்து விடுகிறது. அவன் தன்னுடைய மனதிடத்தை அந்த புயலுக்கு பறிகொடுத்து விடாமல் இருக்க வேண்டுமானால், என்னை உறுதியாக பற்றிக் கொள்ள வேண்டும்.
* மனம் மகிழ்வோடு இருத்தலும், சாந்தமான போக்கும், மவுனமும், மனதை அடக்கி ஆளுதலும், உள்ளத்தூய்மையும் என்ற இவையெல்லாம் நம் மனதுக்குள்ளேயே உள்ளது.
* விரும்பியதை அடைந்து விட்டால் வரம்பின்றி மகிழக்கூடாது. அதுபோல் துன்பம் வரும்போது ஒரேயடியாக மனம் கலங்கவும் கூடாது. மன உறுதியுடன் தெய்வ நிலையில் நிற்க வேண்டும்.
* பட்டினியாகக் கிடந்தால் உடல் சக்தியற்று அடங்கிப் போகும். ஆனால், நினைத்ததை அடைய வேண்டும் என்ற ஆசை மட்டும் அடங்கவே செய்யாது. கடவுளை நேரடியாகக் காண வேண்டும் என்னும் அளவுக்கு தியானப் பயிற்சி எடுத்தால் தான் இது அடங்கும்.
* கோபத்தால் நினைவு தடுமாறுகிறது. நினைவு தடுமாறுகையில் புத்தி குழம்புகிறது. புத்தி குழம்பியவன் இறந்தவனுக்கு சமமாகிறான்.
* பொருட்களைப் பற்றி சிந்தித்தால் அவற்றின் மீது பற்று உண்டாகிறது. பற்றிலிருந்து ஆசை உண்டாகிறது. ஆசையிலிருந்து அடங்கா மோகம் உண்டாகிறது. மோகத்தால் சிந்தை கெடுகிறது. சிந்தை கெட்டால் லட்சியம் மறைந்துபோகிறது. அப்போது மனிதன் அழிந்து விடுகிறான்.
* தானம் அளிப்பதை கடமையாகக் கருத வேண்டும். இடம், தகுதி, காலம் ஆகியவற்றைக் கவனித்து, திரும்பத் தர இயலாத ஒருவனுக்கு அளிக்கும் தானமே சாத்வீக தானத்தை நீங்கள் செய்யுங்கள்.
* மிகுதியாக உண்பது, சாப்பிடாமலே இருப்பது, அதிகமாக உறங்குவது, மிகுதியாக விழித்திருப்பது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
* பசுவின் பால், அதன் சரீரம் முழுவதும் ரத்தத்தில் கலந்து பரவி உள்ளதென்றாலும், மடியிலேயே சுரக்கிறது. அதுபோல் ஈஸ்வரன் உலகில் எங்கும் இருக்கிறான். எனினும் தியானம் செய்தால் தான் மனதில் எழுந்தருள்வான்.
* மவுனமாக இருப்பதே, நல்ல செயல்களைச் செய்வதற்கு சாதகமான சந்தர்ப்பங்களை உண்டுபண்ணக் கூடியதாகும்.
* மரணமும் பிறப்பும் பெரியதொரு விஷயங்கள் எனக்கருதி குழம்பிப் போக வேண்டாம். மரணம் என்பது, உயிரானது வேறு ஒரு தேகத்தை சென்றடையும் நிகழ்வுதான். உயிருக்கு சாவு என்பது இல்லை.
* ஆறுகள் தினமும் கடலுக்குள் வந்து பாய்கின்றன. ஆனாலும், கடல்நீர் அதிகரிப்பதும் இல்லை. குறைவதும் இல்லை. அதுபோல், நிலையான மனதுடன் இருப்பவனே பரிபூரண ஞானி.
* ஐம்பொறிகள் வழியாக ஒருவனது ஆன்மாவுக்குள் ஆசை வெள்ளம் வந்து பாயும் என்றாலும், நிலையான மனம் இருந்து விட்டால் வாழ்வில் அமைதி உண்டாகும்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM