Post by radha on Nov 29, 2015 5:34:39 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA. RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
மகாகவி பாரதியார்
பகவத்கீதை
எளியவுரை
ஐந்தாம் அத்யாயம்
சந்நியாச யோகம்
அர்ஜுனன் சொல்லுகிறான்:
கண்ணா! செய்கைகளின் துறவைப் புகழ்ந்து பேசுகிறாய்; பின்னர் அவற்றுடன் கலப்பதைப் புகழ்கிறாய். இவ்விரண்டில் எதுவொன்று சிறந்ததென்பதை நன்கு நிச்சயப்படுத்தி என்னிடஞ் சொல். 1
ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:
துறவு, கர்ம யோகம் இவ்விரண்டும் உயர்ந்த நலத்தைத் தருவன. இவற்றுள் கர்மத் துறவைக் காட்டிலும் கர்ம யோகம் மேம்பட்டது. 2
பகைத்தலும் விரும்புதலு மில்லாதவனை நித்ய சந்நியாசி என்றுணரக் கடவாய். பெருந் தோளுடையாய், இருமை நீங்கி அவன் எளிதில் பந்தத்தினின்று விடுபடுகிறான். 3
ஸாங்க்யத்தையும் யோகத்தையும் வெவ்வேறென்று சொல்வோர் குழந்தைகள்; பண்டிதர் அங்ஙனம் கூறார். இவற்றுள் யாதேனுமொன்றில் நன்கு நிலைபெற்றோன் இரண்டின் பயனையும் எய்துகிறான். 4
ஸாங்க்யர் பெறும் நிலையையே யோகிகளும் பெறுகிறார்கள். ஸாங்க்யத்தையும் யோகத்தையும் எவன் ஒன்றாகக் காண்பானோ அவனே காட்சி யுடையான். 5
பெருந் தோளாய், யோகமில்லாதவன் சந்நியாம் பெறுதல் கஷ்டம். யோகத்தில் பொருந்திய முனி விரைவில் பிரமத்தை அடைகிறான். 6
யோகத்திலே மருவித் தூய்மையுற்றோன், தன்னைத் தான் வென்றோன், இந்திரியங்களின் மீது வெற்றி கொண்டோன், எல்லா உயிர்களுந் தானே யானவன் - அவன் தொழில் செய்து கொண்டிருப்பினும், அதில் ஒட்டுவதில்லை. 7
உண்மையறிந்த யோகி, ‘நான் எதனையுஞ் செய்வதில்லை’ என்றெண்ணக் கடவான். காண்கினும், கேட்கினும், தீண்டினும், மோப்பினும், உண்பினும், நடப்பினும், உயிர்ப்பினும், உறங்கினும், 8
புலம்பினும், விடுனும், வாங்கினும், இமைகளைத் திறப்பினும், மூடினும், எதிலும் “இந்திரியங்கள் தம்முடைய விஷயங்களில் சலிக்கின்றன” என்று கருதியிருக்கக் கடவான். 9
செய்கைகளை எல்லாம் பிரமத்தில் சார்த்திவிட்டுப் பற்றுதலை நீக்கி எவன் தொழில் செய்கிறானோ, அவன் நீரில் தாமரை இலைபோல், பாபத்தால் தீண்டல் பெறுவதில்லை. 10
யோகிகள் பற்றுதலைக் களைந்து, ஆத்ம சுத்தியின் பொருட்டாக உடம்பாலும், மனத்தாலும், புத்தியாலும், அன்றி வெறுமே இந்திரியங்களாலும் தொழில் செய்வார். 11
யோகத்தில் பொருந்தியவன் கர்மப் பயனைத் துறந்து நிஷ்டைக்குரிய சாந்தியை அடைகிறான். யோகத்தில் இணங்காதோன் விருப்பத்துக்கு வசமாய்ப் பயனிலே பற்றுதல் கொண்டு தளைப்படுகிறான். 12
தன்னை வசங்கொண்ட ஆத்மா, எல்லாக் கர்மங்களையும் மனத்தால் துறந்து, எதனையும் செய்வதுமின்றிச் செய்விப்பதுமின்றி, ஒன்பது வாயில் கொண்ட உடற் கோட்டையில் இன்புற்றிருக்கிறான். 13
செய்கைத் தலைமை, செய்கை, செய்கைப்பயன் பெறுதல் - இவற்றுள் எதனையும் கடவுள் மனிதனுக்குத் தரவில்லை. இயற்கையே இயல் பெறுகிறது. 14
எவனையும் பாபி அல்லது நற்செய்கை உடையோனென்று கடவுள் ஏற்பதில்லை. அஞ்ஞானத்தால் ஞானம் சூழப்பட்டிருக்கிறது. அதனால் ஜந்துக்கள் மயக்க மெய்துகின்றன. 15
அந்த அஞ்ஞானத்தை ஆத்ம ஞானத்தால் அழித்தவர்களுடைய ஞானம் சூர்யனைப் போன்றதாய்ப் பரம்பொருளை ஒளியுறக் காட்டுகிறது. 16
பிரமத்தில் புத்தியை நாட்டி, அதுவே தாமாய், அதில் நிஷ்டை எய்தி, அதில் ஈடுபட்டோர், தம்முடைய பாபங்களெல்லாம் நன்கு கழுவப் பெற்றோராய், மீளாப் பதமடைகிறார்கள். 17
கல்வியும் விநயமும் நன்கு கற்ற பிராமணனிடத்திலும் பசுவினிடத்தும், யானையினிடத்தும், நாயினிடத்தும் நாயைத் தின்னும் புலையனிடத்தும் பண்டிதர் சம பார்வை யுடையோர். 18
மனம் சம நிலையில் நிற்கப்பெற்றோர் இவ்வுலகத்திலேயே இயற்கையை வென்றோராவார். பிரமம் மாசற்றது. சம நிலையுற்றது. ஆதலால் அவர்கள் பிரமத்தில் நிலைபெறுகிறார்கள். 19
விரும்பிய பொருளைப் பெறும்போது களி கொள்ளான்; பிரியமற்றதைப் பெறும்போது துயர்ப்பட மாட்டான்; பிரமஞானி ஸ்திர புத்தி யுடையோனாய், மயக்கம் நீங்கி, பிரமத்தில் நிலைபெறுகிறான். 20
புறத் தீண்டுதல்களில் பற்றுதல் கொள்ளாமல் தனக்குள்ளே இன்பத்தைக் காண்போன் பிரம யோகத்தில் பொருந்தி அழியாத இன்பத்தை எய்துகிறான். 21
புறத் தீண்டுதல்களில் தோன்றும் இன்பங்கள் துன்பத்துக்குக் காரணங்களாம். அவை தொடக்கமும் இறுதியுமுடையன. குந்தி மகனே! அறிவுடையோன் அவற்றில் களி யுறுவதில்லை. 22
சரீரம் நீங்குமுன்னர் இவ்வுலகத்திலேயே விருப்பத்தாலும் சினத்தாலும் விளையும் வேகத்தை எவன் பொறுக்கவல்லானோ அந்த மனிதன் யோகி, அவன் இன்பமுடையோன். 23
தனக்குள்ளே இன்பமுடையவனாய், உள்ளே மகிழ்ச்சி காண்பவனாய், உள்ளே ஒளி பெற்றவனாகிய யோகி, தானே பிரமமாய், பிரம நிர்வாணமடைகிறான். 24
*இருமைகளை வெட்டி விட்டுத் தம்மைத் தாம் கட்டுப்படுத்தி, எல்லா உயிர்களுக்கும் இனியது செய்வதில் மகிழ்ச்சி எய்தும் ரிஷிகள் பாபங்களொழிந்து பிரம நிர்வாண மடைகிறார்கள். (*இருமைகள்: நன்மை; தீமை; குளிர், சூடு; இன்பம், துன்பம் என எல்லாப் பொருள்களையும் பற்றி நிற்கும் இரட்டை நிலைகள்.) 25
விருப்பமும், சினமுந் தவிர்ந்து சித்தத்தைக் கட்டுப்படுத்தி ஆத்ம ஞானிகளாகிய முனிகளுக்கு பிரம நிர்வாணம் அருகிலுள்ளது. 26
புறத் தீண்டுதல்களை அகற்றிப் புருவங்களுக்கிடையே விழிகளை நிறுத்தி மூக்கினுள்ளே இயங்கும் பிராண வாயுவையும் அபான வாயுவையும் சமமாகச் செய்து கொண்டு; 27
புலன்களை, மனத்தை, மதியையும் கட்டி
விடுதலை யிலக்கெனக் கொண்டு
விருப்பமும் அச்சமும் சினமுந் தவிர்ந்தான்
முக்தனே யாவான் முனி. 28
வேள்வியுந் தவமும் *மிசைவோன் யானே;
உலகுகட் கெல்லாம் ஒருபே ரரசன்;
எல்லா உயிர்கட்கு நண்பன் யானென்
றறிவான் அமைதி யறிவான். 29
*மிசைதல் - உண்பது
இங்ஙனம் உபநிஷத்தும் பிரம வித்தையும் யோக சாஸ்த்ரமும் ஸ்ரீகிருஷ்ணார்ஜுன சம்பாஷணையுமாகிய ஸ்ரீமத் பகவத் கீதையில் “சந்நியாச யோகம்” என்ற ஐந்தாம் அத்யாயம் முற்றிற்று.
பாரதியார் இன்னும் விளக்குவார்...
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
மகாகவி பாரதியார்
பகவத்கீதை
எளியவுரை
ஐந்தாம் அத்யாயம்
சந்நியாச யோகம்
அர்ஜுனன் சொல்லுகிறான்:
கண்ணா! செய்கைகளின் துறவைப் புகழ்ந்து பேசுகிறாய்; பின்னர் அவற்றுடன் கலப்பதைப் புகழ்கிறாய். இவ்விரண்டில் எதுவொன்று சிறந்ததென்பதை நன்கு நிச்சயப்படுத்தி என்னிடஞ் சொல். 1
ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:
துறவு, கர்ம யோகம் இவ்விரண்டும் உயர்ந்த நலத்தைத் தருவன. இவற்றுள் கர்மத் துறவைக் காட்டிலும் கர்ம யோகம் மேம்பட்டது. 2
பகைத்தலும் விரும்புதலு மில்லாதவனை நித்ய சந்நியாசி என்றுணரக் கடவாய். பெருந் தோளுடையாய், இருமை நீங்கி அவன் எளிதில் பந்தத்தினின்று விடுபடுகிறான். 3
ஸாங்க்யத்தையும் யோகத்தையும் வெவ்வேறென்று சொல்வோர் குழந்தைகள்; பண்டிதர் அங்ஙனம் கூறார். இவற்றுள் யாதேனுமொன்றில் நன்கு நிலைபெற்றோன் இரண்டின் பயனையும் எய்துகிறான். 4
ஸாங்க்யர் பெறும் நிலையையே யோகிகளும் பெறுகிறார்கள். ஸாங்க்யத்தையும் யோகத்தையும் எவன் ஒன்றாகக் காண்பானோ அவனே காட்சி யுடையான். 5
பெருந் தோளாய், யோகமில்லாதவன் சந்நியாம் பெறுதல் கஷ்டம். யோகத்தில் பொருந்திய முனி விரைவில் பிரமத்தை அடைகிறான். 6
யோகத்திலே மருவித் தூய்மையுற்றோன், தன்னைத் தான் வென்றோன், இந்திரியங்களின் மீது வெற்றி கொண்டோன், எல்லா உயிர்களுந் தானே யானவன் - அவன் தொழில் செய்து கொண்டிருப்பினும், அதில் ஒட்டுவதில்லை. 7
உண்மையறிந்த யோகி, ‘நான் எதனையுஞ் செய்வதில்லை’ என்றெண்ணக் கடவான். காண்கினும், கேட்கினும், தீண்டினும், மோப்பினும், உண்பினும், நடப்பினும், உயிர்ப்பினும், உறங்கினும், 8
புலம்பினும், விடுனும், வாங்கினும், இமைகளைத் திறப்பினும், மூடினும், எதிலும் “இந்திரியங்கள் தம்முடைய விஷயங்களில் சலிக்கின்றன” என்று கருதியிருக்கக் கடவான். 9
செய்கைகளை எல்லாம் பிரமத்தில் சார்த்திவிட்டுப் பற்றுதலை நீக்கி எவன் தொழில் செய்கிறானோ, அவன் நீரில் தாமரை இலைபோல், பாபத்தால் தீண்டல் பெறுவதில்லை. 10
யோகிகள் பற்றுதலைக் களைந்து, ஆத்ம சுத்தியின் பொருட்டாக உடம்பாலும், மனத்தாலும், புத்தியாலும், அன்றி வெறுமே இந்திரியங்களாலும் தொழில் செய்வார். 11
யோகத்தில் பொருந்தியவன் கர்மப் பயனைத் துறந்து நிஷ்டைக்குரிய சாந்தியை அடைகிறான். யோகத்தில் இணங்காதோன் விருப்பத்துக்கு வசமாய்ப் பயனிலே பற்றுதல் கொண்டு தளைப்படுகிறான். 12
தன்னை வசங்கொண்ட ஆத்மா, எல்லாக் கர்மங்களையும் மனத்தால் துறந்து, எதனையும் செய்வதுமின்றிச் செய்விப்பதுமின்றி, ஒன்பது வாயில் கொண்ட உடற் கோட்டையில் இன்புற்றிருக்கிறான். 13
செய்கைத் தலைமை, செய்கை, செய்கைப்பயன் பெறுதல் - இவற்றுள் எதனையும் கடவுள் மனிதனுக்குத் தரவில்லை. இயற்கையே இயல் பெறுகிறது. 14
எவனையும் பாபி அல்லது நற்செய்கை உடையோனென்று கடவுள் ஏற்பதில்லை. அஞ்ஞானத்தால் ஞானம் சூழப்பட்டிருக்கிறது. அதனால் ஜந்துக்கள் மயக்க மெய்துகின்றன. 15
அந்த அஞ்ஞானத்தை ஆத்ம ஞானத்தால் அழித்தவர்களுடைய ஞானம் சூர்யனைப் போன்றதாய்ப் பரம்பொருளை ஒளியுறக் காட்டுகிறது. 16
பிரமத்தில் புத்தியை நாட்டி, அதுவே தாமாய், அதில் நிஷ்டை எய்தி, அதில் ஈடுபட்டோர், தம்முடைய பாபங்களெல்லாம் நன்கு கழுவப் பெற்றோராய், மீளாப் பதமடைகிறார்கள். 17
கல்வியும் விநயமும் நன்கு கற்ற பிராமணனிடத்திலும் பசுவினிடத்தும், யானையினிடத்தும், நாயினிடத்தும் நாயைத் தின்னும் புலையனிடத்தும் பண்டிதர் சம பார்வை யுடையோர். 18
மனம் சம நிலையில் நிற்கப்பெற்றோர் இவ்வுலகத்திலேயே இயற்கையை வென்றோராவார். பிரமம் மாசற்றது. சம நிலையுற்றது. ஆதலால் அவர்கள் பிரமத்தில் நிலைபெறுகிறார்கள். 19
விரும்பிய பொருளைப் பெறும்போது களி கொள்ளான்; பிரியமற்றதைப் பெறும்போது துயர்ப்பட மாட்டான்; பிரமஞானி ஸ்திர புத்தி யுடையோனாய், மயக்கம் நீங்கி, பிரமத்தில் நிலைபெறுகிறான். 20
புறத் தீண்டுதல்களில் பற்றுதல் கொள்ளாமல் தனக்குள்ளே இன்பத்தைக் காண்போன் பிரம யோகத்தில் பொருந்தி அழியாத இன்பத்தை எய்துகிறான். 21
புறத் தீண்டுதல்களில் தோன்றும் இன்பங்கள் துன்பத்துக்குக் காரணங்களாம். அவை தொடக்கமும் இறுதியுமுடையன. குந்தி மகனே! அறிவுடையோன் அவற்றில் களி யுறுவதில்லை. 22
சரீரம் நீங்குமுன்னர் இவ்வுலகத்திலேயே விருப்பத்தாலும் சினத்தாலும் விளையும் வேகத்தை எவன் பொறுக்கவல்லானோ அந்த மனிதன் யோகி, அவன் இன்பமுடையோன். 23
தனக்குள்ளே இன்பமுடையவனாய், உள்ளே மகிழ்ச்சி காண்பவனாய், உள்ளே ஒளி பெற்றவனாகிய யோகி, தானே பிரமமாய், பிரம நிர்வாணமடைகிறான். 24
*இருமைகளை வெட்டி விட்டுத் தம்மைத் தாம் கட்டுப்படுத்தி, எல்லா உயிர்களுக்கும் இனியது செய்வதில் மகிழ்ச்சி எய்தும் ரிஷிகள் பாபங்களொழிந்து பிரம நிர்வாண மடைகிறார்கள். (*இருமைகள்: நன்மை; தீமை; குளிர், சூடு; இன்பம், துன்பம் என எல்லாப் பொருள்களையும் பற்றி நிற்கும் இரட்டை நிலைகள்.) 25
விருப்பமும், சினமுந் தவிர்ந்து சித்தத்தைக் கட்டுப்படுத்தி ஆத்ம ஞானிகளாகிய முனிகளுக்கு பிரம நிர்வாணம் அருகிலுள்ளது. 26
புறத் தீண்டுதல்களை அகற்றிப் புருவங்களுக்கிடையே விழிகளை நிறுத்தி மூக்கினுள்ளே இயங்கும் பிராண வாயுவையும் அபான வாயுவையும் சமமாகச் செய்து கொண்டு; 27
புலன்களை, மனத்தை, மதியையும் கட்டி
விடுதலை யிலக்கெனக் கொண்டு
விருப்பமும் அச்சமும் சினமுந் தவிர்ந்தான்
முக்தனே யாவான் முனி. 28
வேள்வியுந் தவமும் *மிசைவோன் யானே;
உலகுகட் கெல்லாம் ஒருபே ரரசன்;
எல்லா உயிர்கட்கு நண்பன் யானென்
றறிவான் அமைதி யறிவான். 29
*மிசைதல் - உண்பது
இங்ஙனம் உபநிஷத்தும் பிரம வித்தையும் யோக சாஸ்த்ரமும் ஸ்ரீகிருஷ்ணார்ஜுன சம்பாஷணையுமாகிய ஸ்ரீமத் பகவத் கீதையில் “சந்நியாச யோகம்” என்ற ஐந்தாம் அத்யாயம் முற்றிற்று.
பாரதியார் இன்னும் விளக்குவார்...
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM