Post by varagooran on Nov 20, 2015 6:09:19 GMT 5.5
சிகரமான கல்.
(பகவானுக்குத் தெரியும்...யார் யார் எப்படின்னு.
இந்த லோகத்தைப் படைச்சவன் அவன்.
நாம அதுலே ஒரு தூசி.
-தூசிகள் யார் கண்ணையும் உறுத்தப்படாது)
ஸ்ரீ பரமாச்சார்யாள் பாதையிலே..
ஆர்.பொன்னம்மாள்.
தட்டச்சு-வரகூரான்.
19-11-2012 போஸ்ட்-மறுபதிவு
சமீபத்திலே ஒருபக்தர் ரொம்ப
மனத்தாங்கலோடு,"ஸ்வாமி கோவில்ல இருந்தாதான் மதிப்பு; எங்க ஊர்ல திருவிழாவுக்கு
உபயம் செய்தவர் இல்லத்துக்கெல்லாம் ஒரு நாள்,
சேவை செய்தவர் இல்லத்துக்கெல்லாம் ஒரு நாள்னு சேவை சாதிச்சுட்டு வரார்.பணத்துக்காக மனுஷா இப்படி பண்ணலாமா"ன்னு கேட்டார்.
கங்கை எல்லாருக்கும் உபயோகமாகட்டும்னு ஓடிவரா.வழியிலே ஒருத்தர் தன்னோட அழுக்குக் கையைக் கழுவிக்கிறார்.அதுக்காக கங்கை திரும்பி விடுவாளா?
உபயம் பண்ணின செல்வந்தர் வீட்டை அடையறதுக்கு எத்தனை வீதிகள் வழியாப் போகணும்! அந்த வழியிலேஉள்ள வயசானவா எத்தனை பேர் சந்தோஷப்பட்டு பகவானைத் தரிசிப்பா?
கோவில் திருவிழா இதெல்லாம் ஜனங்கள் கூடி நடத்தறகாரியம்.ஸ்வாமி சன்னதியிலே ஒரு விளக்கு மட்டும் எரிஞ்சா திருமுகம் நன்னாத் தெரியுமா? கதை சொல்றது ஒருத்தர்தான்.
ஆனா கூட்டம் இருந்தாதான் கதை சொல்றவருக்கு
உற்சாகமாயிருக்கும்! அங்கங்கே கைதட்டணும்.
உங்க வாக்குப்படி பெருமைக்கான்னு வைச்சுண்டாலும் யார் பணம் செலவழிக்கறேங்கறா? போன ஜன்மாவுல
தனலக்ஷ்மியை திருப்தியா பூஜை பண்ணின
புண்ணியசாலிகள்தான் செல்வந்தனாப் பொறக்கறா.... அதிலேயும் சில பேருக்குத்தான் தான தருமத்தில் ஈடுபாடு இருக்கு.
தஞ்சாவூர்ல பெரிய கோவிலைக் கட்டிக்கொண்டிருந்தபோதுபிரதான சிற்பியிடம் ஒரு கிழவி "என்னிடம் ஒரு கல் இருக்கு
என்னோட உபயமா கோவில் கட்ட வைத்துக் கொள்கிறீர்களா?"என்று கேட்டாள்.
[அவள் வேலை செய்கிறவர்களுக்கெல்லாம்
நீர் மோர் கொடுத்து உதவியவள்]
கும்பாபிஷேகத்துக்கு நாள் குறிச்சாச்சு...ராஜா சந்தோஷமா சிவபெருமான் கிட்டே,"நான் அமைச்சுத் தந்த கோபுர நிழலில் விச்ராந்தியா இருக்கிரா"ன்னு கேட்டான்.
அன்னிக்கி ராத்திரி சொப்பனத்துலே ஸ்வாமி வந்து
"கிழவியம்மா தந்த நிழல்லே ஆனந்தமா இருக்கேன்னார்" ராஜாவுக்கு நித்திரை விலகித்து;தெப்பமா வேர்த்துப் போச்சு.
அடுத்தநாள் சிற்பிகிட்டே போய் "கோபுரம் அமைச்சுதுலே யாராவது கிழவியம்மா உபகாரம் பண்ணினாளான்னுகேட்டான்.ஒரு சின்னக் கல் கொடுத்தா மோர்காரகிழவின்னான்"சிற்பி.
பாட்டியை அடையாளமும் காட்டினான்.
சாஷ்டாங்கமா காலில் விழுந்துட்டான் ராஜா.
பகவானுக்குத் தெரியும்...யார் யார் எப்படின்னு.
இந்த லோகத்தைப் படைச்சவன் அவன்.
நாம அதுலே ஒரு தூசி. தூசிகள் யார் கண்ணையும் உறுத்தப்படாது
(பகவானுக்குத் தெரியும்...யார் யார் எப்படின்னு.
இந்த லோகத்தைப் படைச்சவன் அவன்.
நாம அதுலே ஒரு தூசி.
-தூசிகள் யார் கண்ணையும் உறுத்தப்படாது)
ஸ்ரீ பரமாச்சார்யாள் பாதையிலே..
ஆர்.பொன்னம்மாள்.
தட்டச்சு-வரகூரான்.
19-11-2012 போஸ்ட்-மறுபதிவு
சமீபத்திலே ஒருபக்தர் ரொம்ப
மனத்தாங்கலோடு,"ஸ்வாமி கோவில்ல இருந்தாதான் மதிப்பு; எங்க ஊர்ல திருவிழாவுக்கு
உபயம் செய்தவர் இல்லத்துக்கெல்லாம் ஒரு நாள்,
சேவை செய்தவர் இல்லத்துக்கெல்லாம் ஒரு நாள்னு சேவை சாதிச்சுட்டு வரார்.பணத்துக்காக மனுஷா இப்படி பண்ணலாமா"ன்னு கேட்டார்.
கங்கை எல்லாருக்கும் உபயோகமாகட்டும்னு ஓடிவரா.வழியிலே ஒருத்தர் தன்னோட அழுக்குக் கையைக் கழுவிக்கிறார்.அதுக்காக கங்கை திரும்பி விடுவாளா?
உபயம் பண்ணின செல்வந்தர் வீட்டை அடையறதுக்கு எத்தனை வீதிகள் வழியாப் போகணும்! அந்த வழியிலேஉள்ள வயசானவா எத்தனை பேர் சந்தோஷப்பட்டு பகவானைத் தரிசிப்பா?
கோவில் திருவிழா இதெல்லாம் ஜனங்கள் கூடி நடத்தறகாரியம்.ஸ்வாமி சன்னதியிலே ஒரு விளக்கு மட்டும் எரிஞ்சா திருமுகம் நன்னாத் தெரியுமா? கதை சொல்றது ஒருத்தர்தான்.
ஆனா கூட்டம் இருந்தாதான் கதை சொல்றவருக்கு
உற்சாகமாயிருக்கும்! அங்கங்கே கைதட்டணும்.
உங்க வாக்குப்படி பெருமைக்கான்னு வைச்சுண்டாலும் யார் பணம் செலவழிக்கறேங்கறா? போன ஜன்மாவுல
தனலக்ஷ்மியை திருப்தியா பூஜை பண்ணின
புண்ணியசாலிகள்தான் செல்வந்தனாப் பொறக்கறா.... அதிலேயும் சில பேருக்குத்தான் தான தருமத்தில் ஈடுபாடு இருக்கு.
தஞ்சாவூர்ல பெரிய கோவிலைக் கட்டிக்கொண்டிருந்தபோதுபிரதான சிற்பியிடம் ஒரு கிழவி "என்னிடம் ஒரு கல் இருக்கு
என்னோட உபயமா கோவில் கட்ட வைத்துக் கொள்கிறீர்களா?"என்று கேட்டாள்.
[அவள் வேலை செய்கிறவர்களுக்கெல்லாம்
நீர் மோர் கொடுத்து உதவியவள்]
கும்பாபிஷேகத்துக்கு நாள் குறிச்சாச்சு...ராஜா சந்தோஷமா சிவபெருமான் கிட்டே,"நான் அமைச்சுத் தந்த கோபுர நிழலில் விச்ராந்தியா இருக்கிரா"ன்னு கேட்டான்.
அன்னிக்கி ராத்திரி சொப்பனத்துலே ஸ்வாமி வந்து
"கிழவியம்மா தந்த நிழல்லே ஆனந்தமா இருக்கேன்னார்" ராஜாவுக்கு நித்திரை விலகித்து;தெப்பமா வேர்த்துப் போச்சு.
அடுத்தநாள் சிற்பிகிட்டே போய் "கோபுரம் அமைச்சுதுலே யாராவது கிழவியம்மா உபகாரம் பண்ணினாளான்னுகேட்டான்.ஒரு சின்னக் கல் கொடுத்தா மோர்காரகிழவின்னான்"சிற்பி.
பாட்டியை அடையாளமும் காட்டினான்.
சாஷ்டாங்கமா காலில் விழுந்துட்டான் ராஜா.
பகவானுக்குத் தெரியும்...யார் யார் எப்படின்னு.
இந்த லோகத்தைப் படைச்சவன் அவன்.
நாம அதுலே ஒரு தூசி. தூசிகள் யார் கண்ணையும் உறுத்தப்படாது