Post by saidevo on Oct 31, 2015 18:32:13 GMT 5.5
மூவலூர் (மயிலாடுதுறை அடுத்து)
(ஆசிரிய இணைக்குறட்டுறை: மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
ஆசிரிய இணைக்குறட்டுறை அமைப்பு
1. முதலடியும் மூன்றாம் அடியும் அளவடி; இரண்டும் நாலும் சிந்தடி
2. அடிகள் ஒன்று, மூன்றின் வாய்பாடு: மா கூவிளம் கூவிளம் கூவிளம்
3. அடிகள் இரண்டு, நான்கின் வாய்பாடு: மா கூவிளம் கூவிளம்
4. அடிகளின் தொடக்கம் நேரசையில் யெனில் 11/8 எழுத்துகள்;
. . நிரையசை யெனில் 12/9 எழுத்துகள்.
5. அடிதோறும் இரண்டாம் சீர் நேரசையில் தொடங்கும்.
6. அடிதோறும், ஈற்றுச்சீர் தவிர, மற்ற சீர்களில் விளச்சீர் வருமிடத்தில் மாச்சீர் வரலாம்;
. . அங்ஙனம் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்.
7. விளச்சீர் வருமிடத்தில் ஒரோவழி மாங்காய்ச்சீரும் வரும்.
உதாரணம்: சம்பந்தர் தேவாரம் 01.056.01
காரார் கொன்றை கலந்த முடியினர்
சீரார் சிந்தை செலச்செய்தார்
பாரார் நாளும் பரவிய பாற்றுறை
ஆரா ராதி முதல்வரே.
கோவில்
www.shivatemples.com/vt/vt_kovil3/vt124.php
temple.dinamalar.com/ListingMore_search.php?search=மூவலூர்&city=0
www.shaivam.org/siddhanta/sp/spt_v_moovalur.htm
வைப்புப் பதிகம்: அப்பர்:
05.065.08: மூவலூரும் முக் கண்ணனூர் காண்மினே.
www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=5&Song_idField=50650
06.041.09: மூவலூர் மேவினாய் நீயே யென்றும்
www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=6&Song_idField=60410
காப்பு
(அளவியல் நேரிசை வெண்பா)
பொன்னி நதிக்கரையில் புன்னை மரத்தடியில்
தன்னை வழிபட்ட தாண்டவனை - மின்னும்
வரிகளில் மூவலூர் வள்ளலைப் பாடக்
கரிமுகன் கண்ணருளே காப்பு.
பதிகம்
(ஆசிரிய இணைக்குறட்டுறை: மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
மூவர் தானவர் முப்புரம் வான்சுற்ற
தேவர் யாவரும் திண்டாட
ஆர்வன் காப்பை அளித்த மூவலூர்
சேர்வன் தீவினை தீருமே. ... 1
(ஆசிரிய இணைக்குறட்டுறை: மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
அரியே அம்பாம் அயனவர் சாரதி
இருவர்க் கும்செருக் கேறவே
சிரித்தே அத்தனும் செற்றிட மூவலூர்
இருவர் போற்றினர் ஈசனே. ... 2 ... (திருத்திய வடிவம்)
வழிகாட் டும்சிவன் வாழ்வில ருள்செய
விழிகாட் டும்சிவை மங்களம்
இழிபா வம்செல இத்தலம் மூவலூர்
எழில்மே வும்கலை யீசனே. ... 3
(தொடரும்)
(ஆசிரிய இணைக்குறட்டுறை: மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
ஆசிரிய இணைக்குறட்டுறை அமைப்பு
1. முதலடியும் மூன்றாம் அடியும் அளவடி; இரண்டும் நாலும் சிந்தடி
2. அடிகள் ஒன்று, மூன்றின் வாய்பாடு: மா கூவிளம் கூவிளம் கூவிளம்
3. அடிகள் இரண்டு, நான்கின் வாய்பாடு: மா கூவிளம் கூவிளம்
4. அடிகளின் தொடக்கம் நேரசையில் யெனில் 11/8 எழுத்துகள்;
. . நிரையசை யெனில் 12/9 எழுத்துகள்.
5. அடிதோறும் இரண்டாம் சீர் நேரசையில் தொடங்கும்.
6. அடிதோறும், ஈற்றுச்சீர் தவிர, மற்ற சீர்களில் விளச்சீர் வருமிடத்தில் மாச்சீர் வரலாம்;
. . அங்ஙனம் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்.
7. விளச்சீர் வருமிடத்தில் ஒரோவழி மாங்காய்ச்சீரும் வரும்.
உதாரணம்: சம்பந்தர் தேவாரம் 01.056.01
காரார் கொன்றை கலந்த முடியினர்
சீரார் சிந்தை செலச்செய்தார்
பாரார் நாளும் பரவிய பாற்றுறை
ஆரா ராதி முதல்வரே.
கோவில்
www.shivatemples.com/vt/vt_kovil3/vt124.php
temple.dinamalar.com/ListingMore_search.php?search=மூவலூர்&city=0
www.shaivam.org/siddhanta/sp/spt_v_moovalur.htm
வைப்புப் பதிகம்: அப்பர்:
05.065.08: மூவலூரும் முக் கண்ணனூர் காண்மினே.
www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=5&Song_idField=50650
06.041.09: மூவலூர் மேவினாய் நீயே யென்றும்
www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=6&Song_idField=60410
காப்பு
(அளவியல் நேரிசை வெண்பா)
பொன்னி நதிக்கரையில் புன்னை மரத்தடியில்
தன்னை வழிபட்ட தாண்டவனை - மின்னும்
வரிகளில் மூவலூர் வள்ளலைப் பாடக்
கரிமுகன் கண்ணருளே காப்பு.
பதிகம்
(ஆசிரிய இணைக்குறட்டுறை: மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
மூவர் தானவர் முப்புரம் வான்சுற்ற
தேவர் யாவரும் திண்டாட
ஆர்வன் காப்பை அளித்த மூவலூர்
சேர்வன் தீவினை தீருமே. ... 1
(ஆசிரிய இணைக்குறட்டுறை: மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
அரியே அம்பாம் அயனவர் சாரதி
இருவர்க் கும்செருக் கேறவே
சிரித்தே அத்தனும் செற்றிட மூவலூர்
இருவர் போற்றினர் ஈசனே. ... 2 ... (திருத்திய வடிவம்)
வழிகாட் டும்சிவன் வாழ்வில ருள்செய
விழிகாட் டும்சிவை மங்களம்
இழிபா வம்செல இத்தலம் மூவலூர்
எழில்மே வும்கலை யீசனே. ... 3
(தொடரும்)