|
Post by Sumi on Oct 22, 2012 13:50:09 GMT 5.5
Author: Shri S Sitharaman Source: Maha Periyavaalin Darisana Anubhavangal - Part 5நான் சட்ட கல்லூரியில் பயின்று தேர்ச்சி பெற்றேன். மேலும் ஒரு துறையில் சிறப்பு கல்வி பெறுவதற்காக, அதற்கான இரண்டாண்டு படிப்பில் சேர்ந்திருந்தேன் . அப்போது, அக்கௌன்டன்ட் ஜெனரல் அலுவலகத்திலிருந்து பணி நியமனம் உத்தரவு வந்தது . நல்ல வேலை. பணியில் சேரலாம் . ஆனால், சட்ட துறையில் சிரப்புகல்வி பெறுவது என்பது கனவாக போய்விடும்! குழப்பம். பக்தர்களின் குழப்பதை தீற்பதற்காகதானே ஒரு மகான் காஞ்சியில் காத்துகொண்டிருகிறார்! சலோ, காஞ்சிபுரம் ! பெரியவாளிடம் என் பிரச்சனையை விவரிதேன். "இப்பொது, இரண்டு தொழில்களில் நிறைய பொய் சொல்ல வேண்டிருகிறது. ஒன்று, வக்கீல்; மற்றது சார்ட்டர்டு அக்கௌன்டன்ட்! "சூரியன், உன் ஜாதகத்தில் உச்சத்தில் இருக்கிறான். அதனால், உனக்கு பொய் சொல்ல வராது! ஏ.ஜி ஆபீஸ் வேலையில் சேர்ந்துவிடு". எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சூரியன் உச்சத்தில் இருகிறானாமே? என் ஜாதகத்தை பெரியவா பார்த்ததே இல்லையே!
|
|
|
Post by raksankar on Oct 22, 2012 17:55:15 GMT 5.5
Fantastic episode...
|
|
|
Post by padhu on Sept 4, 2016 0:13:51 GMT 5.5
Mahaperiya knows everything. He is nadamadum deivam.
|
|